போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம்- திருமுருகன் காந்தி

|

சென்னை: கத்தி மற்றும் புலிப்பார்வை போன்ற படங்களுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம் என்று மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

புலிப்பார்வை படத்தின் இசை வெளியீட்டு விழாவில், எதிர்க்குரல் எழுப்பிய மாணவர்களை நாம் தமிழர் கட்சி மற்றும் ஐஜேகே கட்சியினர் தாக்கி ரவுடித்தனம் செய்தனர்.

இரும்புத் தடிகளைக் கொண்டு அடித்து காயம் ஏற்படுத்தினர். இதில் 12 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

மேடையில் சீமான் மற்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை வைத்துக் கொண்டே இந்த வன்முறையை அரங்கேற்றினர்.

இந்த தாக்குதலுக்கு தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் இப்போது கண்டனம் வெளியிட்டுள்ளார். அவரது கண்டனம்:

"ஈழ விடுதலை அரசியலுக்கு விரோதமான, இந்திய பார்ப்பனிய அரசின் 'விடுதலைப் புலிகள் எதிர்ப்பு அவதூறு பிரச்சாரத்திற்கு' துணை செய்யும் திரைப்படமாக அமைந்திருந்த "புலிப்பார்வை" எனும் மூன்றாம்தர திரைப்படைப்பிற்கு ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பினை பதிவு செய்த மாணவ தோழர்கள் மிக மோசமாக தாக்கப்பட்ட்தை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம்."

 

Post a Comment