மும்பை: உடன் சேர்ந்து வாழ துணை தேடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார் 63 வயதாகும், பாலிவுட்டின் முன்னாள் கவர்ச்சி நடிகை ஜீனத் அமன்.
பாலிவுட்டில் பலாத்கார சீன் எடுக்க வேண்டும் என்றால் எங்கே ஜீனத் அமன் என்றுதான் தேடுவார்கள் 1980களில். மிக ஆபாசமான பாலியல் பலாத்கார காட்சிகளில் நடித்தும், கவர்ச்சி நடனம் ஆடியும் பலரது தூக்கத்தை கெடுத்தவர் ஜீனத் அமன். 1985ம் ஆண்டு, மசார் கான் என்பவரை திருமணம் செய்து இரு ஆண் குழந்தைகளுக்கு தாயானார். இந்நிலையில் 1998ம் ஆண்டு மசார்கான் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். இதன்பிறகு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இம்மாதம் 19ம்தேதி ஜீனத் அமான் தனது 63வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஜீனத் அமன் புதிய வாழ்க்கை துணையை தேடுவதாக கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில் "எனது இரு மகன்களும் படித்து முடித்து நல்ல நிலைக்கு வந்துவிட்டனர். இப்போது அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் பக்குவம் கிடைத்துவிட்டது. இனிமேல் எனது வாழ்க்கையை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
எனது இதயத்தில் தற்போது யாரும் இல்லை என்றபோதிலும், யாரையாவது ஒருவரை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில்தான் உள்ளேன். காதலுக்கும், திருமணத்திற்கும் நான் தயாராக உள்ளேன். உலகில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். காதல் இன்னும் உலகில் உள்ளது என்றும் நினைக்கிறேன். இவ்வாறு ஜீனத் அமன் தெரிவித்தார்.
Post a Comment