நடிக்க வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே சர்ச்சைக்குரிய நடிகனாகிவிட்ட பாபி சிம்ஹா, அடுத்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
நேரம், ஜிகிர்தண்டா போன்ற படங்களின் மூலம் பாப்புலரான பாபி சிம்ஹா, இப்போது பாம்புச் சட்டை, உறுமீன், இறைவி, மசாலா படம், கோ 2 போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அடுத்து படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.
அசால்ட் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ள பாபி, தன் நண்பர் சதீஷுடன் சேர்ந்து வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தைத் தயாரிக்கிறார்.
ஜிகிர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா நடித்த பாத்திரத்தின் பெயர் அசால்ட் சேது. அதே பெயரில் படக் கம்பெனி ஆரம்பித்திருக்கிறார்!
Post a Comment