பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனாவுக்கும் தொழிலதிபர் சு்தர் பாபுல் ராஜூக்கும் இன்று சென்னையில் திருமணம் நடந்தது.
'தை பிறந்தாச்சு' படத்தின் மூலம் அறிமுகமாகி, ஏராளமான தமிழ்ப் படங்களில் ஆடிக் கலக்கியவர் பாபிலோனா. மலையாளம், கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
சுந்தர் பாபுல் ராஜ் என்ற தொழிலதிபருடன் நெருக்கமாக இருந்த பாபிலோனா, அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தார்.
சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று காலை 211 மணிக்கு வடபழனியில் ஹோட்டல் ஒன்றில் கிறிஸ்தவ முறைப்படி பாபிலோனா - சுந்தர் பாபுல் ராஜ் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
மணமக்களை அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன், நடிகர் செந்தில், தயாரிப்பாளர் ருக்மாங்கதன், கவிதா ஸ்ரீ, அனுஷா உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்தினர்.
Post a Comment