அப்பாவாகப்போகும் சந்தோஷத்தில் மிதக்கிறார் இயக்குநர் செல்வராகவன். அவரது மனைவி கீதாஞ்சலி இப்போது கர்ப்பமாகியுள்ளார்.
செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் கடந்த ஜூலையில் திருமணம் நடந்தது. இப்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார் கீதாஞ்சலி.
முதல் குழந்தை பிறக்கும் சந்தோஷத்தில் உள்ளனர் தம்பதிகள் இருவரும். நேற்று நடந்த 'மயக்கம் என்ன' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான், இந்த விஷயம் வெளியில் தெரிய வந்தது.
இப்போது மயக்கம் என்ன படத்தின் வெளியீட்டுப் பணிகளில் பிஸியாக உள்ளனர் செல்வராகவனும் கீதாஞ்சலியும் (மனைவி மட்டுமல்ல, இப்போது செல்வாவின் உதவி இயக்குநரும் கூட!). படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு மனைவியை ஓய்வெடுக்குமாறு கூறியுள்ளாராம் செல்வராகவன்.
மயக்கம் என்ன படத்துக்குப் பின் 'இரண்டாம் உலகம்' உள்பட இரு படங்களை இயக்குகிறார் செல்வராகவன் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் கடந்த ஜூலையில் திருமணம் நடந்தது. இப்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார் கீதாஞ்சலி.
முதல் குழந்தை பிறக்கும் சந்தோஷத்தில் உள்ளனர் தம்பதிகள் இருவரும். நேற்று நடந்த 'மயக்கம் என்ன' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான், இந்த விஷயம் வெளியில் தெரிய வந்தது.
இப்போது மயக்கம் என்ன படத்தின் வெளியீட்டுப் பணிகளில் பிஸியாக உள்ளனர் செல்வராகவனும் கீதாஞ்சலியும் (மனைவி மட்டுமல்ல, இப்போது செல்வாவின் உதவி இயக்குநரும் கூட!). படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு மனைவியை ஓய்வெடுக்குமாறு கூறியுள்ளாராம் செல்வராகவன்.
மயக்கம் என்ன படத்துக்குப் பின் 'இரண்டாம் உலகம்' உள்பட இரு படங்களை இயக்குகிறார் செல்வராகவன் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment