இசைப்பள்ளி திறந்தார் ஜேம்ஸ் வசந்தன்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், 'அகடமி ஆல்ப் மியூசிக் ஸ்கூல்' என்ற இசைப் பள்ளியை தொடங்கியுள்ளார். பாலமுரளிகிருஷ்ணா, இதை திறந்து வைத்தார். பிறகு நிருபர்களிடம் ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது: முறைப்படி சங்கீதம் கற்றவர்கள்தான் பாட முடியும் என்ற நிலை இருந்தது. என்றாலும், இசையார்வம் உள்ள யாரும் சங்கீதம் கற்கலாம், பாடலாம். நம்மால் சினிமாவில் பாட முடியுமா என்று நினைப்பவர்கள், குறைந்தபட்ச இசை அறிவையாவது வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு வழிகாட்டும் விதமாக இந்தப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சினிமாவில் பாடுவதற்கு மட்டுமின்றி, அனைத்துவிதமான சங்கீதமும் கற்றுத்தர, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நான் இசையமைக்கும் படங்களில் புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவேன்.

 

Post a Comment