கன்னட கூலி தமிழில் வருகிறது

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : கன்னடத்தில் ரிலீசான 'கூலி', தமிழில் 'கொருக்குப்பேட்டை கூலி' பெயரில் டப் ஆகிறது. ராஜஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் பி.அஜெய்குமார் தயாரிக்கிறார். சுதீப், மம்தா, கிஷோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.எல்.ரவி. இசை, அனூப் சீலின். வசனம்: டி.எஸ்.ஆர்.முருகன், சி.சரவன். இயக்கம், பி.என்.சத்யா. படம் பற்றி அவர் கூறும்போது, ''கூலிப்படைக்கு தலைமை தாங்கி, பணத்துக்காக கொலை செய்யும் தாதா சுதீப், மம்தாவின் காதல் வலையில் சிக்குகிறார். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று புரிந்துகொண்ட அவர், கத்தியை போட்டுவிட்டு, காதலியை மணக்கப் போராடுகிறார். அது நிறைவேறியதா என்பது கதை'' என்றார்.


 

Post a Comment