சென்னை: புதிதாக வரும் இயக்குனர்கள் முதலில் 4 முதல் 5 ஹிட் படங்கள் கொடுத்த பிறகே அஜீத் குமார் போன்ற பெரிய நட்சத்திரங்களை அணுக வேண்டும் என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் புதுமுகமாக கோலிவுட்டுக்கு வந்தபோது அவருக்கு வாய்ப்பளித்தவர் அஜீத் குமார். அவர்கள் சேர்ந்த தீனா படம் இருவருக்குமே நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் முருகதாஸ் அஜீத்துடன் மீண்டும் சேர ஆவலாக உள்ளார்.
அஜீத் குமார் வளர்ந்து வந்தபோது புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்ததுபோன்று தற்போதும் செய்ய வேண்டுமா என்று முருகதாஸிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,
புதிதாக வரும் இயக்குனர்கள் முதலில் 4, 5 ஹிட் படங்களை கொடுத்து தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அதன் பிறகு தான் அஜீத் போன்ற பெரிய நடிகர்களை அவர்கள் அணுகலாம் என்றார்.
அஜீத் குமார் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இயக்குனர்களான எஸ்.ஜே. சூர்யா, முருகதாஸ், ஏ.எல்.விஜய் ஆகியோரின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ comments + 1 comments
Really super ARM.By selvam Chandigarh.
Post a Comment