நீயா, நானா?: நடிகர், இயக்குனர் இடையே வெடித்த ஈகோ பிரச்சனை

|

சென்னை: பெரிய இடத்து மாப்பிள்ளை நடிகருக்கும், பெயரில் சந்தோஷத்தை வைத்திருக்கும் இயக்குனருக்கும் இடையே ஈகோ பிரச்சனையாம்.

பெயரில் சந்தோஷத்தை வைத்திருக்கும் இயக்குனர் பெரிய இடத்து மாப்பிள்ளைான அந்த நடிகரை தனது படத்தில் ஹீரோவாக்கினார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகையை நடிக்க வைத்தார். படப்பிடிப்பு முடிந்து இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றுவிட்டது.

படப்பிடிப்பு நடக்கையில் நடிகருக்கும், இயக்குனருக்கும் இடையே ஈகோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அது மெல்ல மெல்ல வளர்ந்து இருவரும் நேரடியாக மோதிக் கொள்ளாத குறையாக உள்ளதாம். இதை மனதில் வைத்துக் கொண்டு நடிகர் படப்பிடிப்பில் ஓவர் சேட்டை செய்தாராம்.

ஹீரோவின் சேட்டையால் கடுப்பான இயக்குனர் தன் படத்தில் நடித்துள்ள முன்னாள் ஹீரோவை போகும் இடங்களில் எல்லாம் புகழ்ந்து பேசுகிறாராம். இதனால் ஹீரோ இயக்குனர் மீது செம கடுப்பில் உள்ளாராம்.

அவர்களின் ஈகோ பிரச்சனையை தீர்க்க தயாரிப்பு தரப்பு முயற்சி செய்து வருகிறதாம்.

 

Post a Comment