சென்னை: ஏஜ் படம் மூலம் மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்துள்ளார் சூரிய நடிகரின் மனைவி.
திருமணத்திற்கு முன்பு தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்த போது, சூப்பர் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை இந்த நடிகைக்கு உண்டு. நடிகையின் ஓவர் ஆக்டிங் நடிப்பிற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்த நிலையில், திருமணத்திற்குப் பின் மீண்டும் ஏஜ் படத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏகத்திற்கும் வரவேற்பு கிடைத்ததில் நடிகை குஷியோ குஷி.
ஆனால், அம்மணியின் மனதிற்குள் சிறிய வருத்தம் உள்ளதாம். அதாவது, தான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், திறமையான நடிகை எனப் பெயர் வாங்கிக் கொடுத்தது ஏஜ் படமும், லாங்குவேஜ் படமும் என்பது தான் அது.
லகலக படத்தில் கூட தான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்ததாக அவரே ஒப்புக் கொள்கிறார்.
எனவே, இனி நடிக்கும் படங்களில் மிகுந்த கவனமாக ஓவர் ஆக்டிங் இல்லாமல் நடிக்க வேண்டும், அத்தகைய கதைகளாக தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் முடிவெடுத்துள்ளாராம்.
எப்டியோ நீங்க திரும்ப நடிச்சாலே போதும் மேடம்...
Post a Comment