யானைப் பசி எனக்கு... யாராச்சும் சாப்பாடு தந்தா அவங்களை ரொம்பப் பிடிக்கும்... "தர்ஸ்டி" திரிஷா!

|

சென்னை: நடிகை திரிஷா ரொம்ப வெளிப்படையானவர். மனசில் பட்டதை பட்டென்று சொல்லும் வழக்கம் உளளவர். இப்போது டிவிட்டரில் தனக்கு யாரையெல்லாம் ரொம்பப் பிடிக்கும் என்பதையும் வெளிப்படையாக, அதேசமயம் கலகலப்பாக சொல்லியுள்ளார்.

டிவிட்டரில் அவர் போட்டுள்ள ஒரு லேட்டஸ்ட் டிவிட்டில், எனக்கு சாப்பாடுன்னா ரொம்பப் பிடிக்கும். அதுவும் எனக்காக சமைத்துத் தருபவர்களை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். எனக்காக சாப்பாடு அனுப்புபவர்கள், என்னுடன் சேர்ந்து சாப்பிடுபவர்களை ரொம்பப் பிடிக்கும்.

எனக்கு யானைப் பசி...உணவுக்கு அஞ்சலி.. சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ்வோம் என்று கூறியுள்ளார் திரிஷா.

திருமணம் நின்று போனது, மீண்டும் காதலிப்பதாக வந்த தகவல்களால் பாதிக்கப்படாமல் வழக்கம் போல தனது பணிகளில் சுறுசுறுப்பாக இருக்கிறார் திரிஷா.

தற்போது கமல்ஹாசனுடன் தூங்காவனம் படத்தில் நடித்து வருகிறார் திரிஷா என்பது நினைவிருக்கலாம்.

 

Post a Comment