ஆனந்த விகடன் வழக்கு: த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்துக்கு இடைக்கால தடை

|

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை வெளியிட உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் தயாரிப்பாளர் சி.ஜெ.ஜெயக்குமார், ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.75 லட்சம் வரை பாக்கி தர வேண்டியிருக்கிறது. சி.ஜெ.ஜெயக்குமார் தந்த காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டது.

Interim stay on Trisha Illana Nayanthara

இந்நிலையில், பணம் வேண்டியும், தன் பணத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை வெளியிடவோ, விற்கவோ கூடாது எனவும், ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 4.6.2015-க்குள் கடன் தொகையைச் செலுத்த சி.ஜெ.ஜெயக்குமார் உறுதியளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் ஜப்தி செய்யப்படும் எனவும் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.

Interim stay on Trisha Illana Nayanthara

இன்று 4.6.2015 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. கடன் தொகைக்கு சி.ஜெ.ஜெயக்குமார் உரிய உறுதியளிக்கவில்லை. எனவே, இரண்டு வாரத்திற்குள் ரூ.75 லட்சம் பாக்கிக்கு ஈடாக சொத்து தரவேண்டும் என்றும், 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை வெளியிட தடைவிதித்தும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக வழக்கறிஞர் என்.ரமேஷ் வாதிட்டார்.

 

Post a Comment