மும்பை: மழைகாலத்தில் மழையில் ஜாலியாக நனையுமாறு பாலிவுட் நடிகை சன்னி லியோன் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் மழைகாலம் துவங்கிவிட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையை ரசித்த காலமும், மழையில் நனைந்து ஆடிப்பாடிய காலமும் கிட்டத்தட்ட மலையேறிவிட்டது. காலையில் மழை வந்தால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் போது தான் இந்த மழை பெய்ய வேண்டுமா என்று மக்கள் அலுத்துக் கொள்கிறார்கள்.
மாலையில் மழை பெய்தால் வீட்டுக்கு கிளம்பும்போது தான் இந்த மழை பெய்ய வேண்டுமா என்று முணுமுணுக்கிறார்கள். இந்நிலையில் தான் மழைகாலத்தில் என்ன செய்ய வேண்டும் என பாலிவுட் நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பாத்டப்பில் படுத்துக் கொண்டு கூறுகையில்,
என்னைப் போன்று அனைவரும் மழைகாலத்தை ரசியுங்கள். ஹேப்பி மழைகாலம் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment