புலி படத்துக்கு கடைசி நேரத்தில் ரூ 5 கோடி சொந்த உத்தரவாதம் கொடுத்து வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.
புலி படம் கடைசி நேரத்தில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது. வருமான வரித் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனைதான் இந்தப் படம் வெளியாவதில் ஏற்பட்ட தாமதத்துக்குக் காரணம் கூறப்பட்டது.
ஆனால் உண்மையில், நிதிச் சிக்கல் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுதான் படத்தை உரிய நேரத்தில் வெளியாகாமல் தடுத்துவிட்டன.
இன்று காலை 8 மணி வரை படம் வெளியாகுமா இல்லையா என்ற கேள்விகள் நிலவியதால், தமிழ் திரையுலகப் பிரமுகர்கள் ஜெமினி லேபில் குவிந்தனர். தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி சிவா முன் நின்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் நிலைமையின் தீவிரம் அறிந்து நடிகர் விஜய்யே நேரில் வந்து தன் சொந்தப் பணம் ரூ 5 கோடியை உறுதியாகக் கொடுத்து படத்தை வெளியிட வழி செய்தார்.
அவர் மட்டும் இந்தப் பணத்தைத் தராமலிருந்தால் இன்று புலி வெளியாகியிருக்காது என்கிறார்கள் திரையுலகினர்.
Post a Comment