விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'பில்லா' ரீமேக்கிற்குப் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு பெயர் முடிவாகவில்லை. ஏ.எம்.ரத்னம் வழங்கும் ஸ்ரீசத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.ரகுராம் தயாரிக்கிறார்.
அஜீத், ஆர்யா இணைந்து நடிக்கின்றனர். நயன்தாரா, டாப்ஸி ஹீரோயின்கள். கதை, திரைக்கதையை சுபா, விஷ்ணுவர்தன் எழுதுகின்றனர். ஒளிப்பதிவு, பி.எஸ்.வினோத். இசை, யுவன்சங்கர்ராஜா. வசனம், சுபா. வரும் 31ம் தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. விஷ்ணுவர்தன் கூறுகையில், 'கதைக்குப் பொருத்தமான டைட்டில் தேடுகிறேன். தற்போது லொகேஷன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளேன். ஷூட்டிங் தொடங்கிய பிறகு மற்ற விவரங்களை சொல்கிறேன்' என்றார்.


 

Post a Comment