பிரபுதேவா இயக்கத்தில் ஸ்ருதி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : பிரபுதேவா இயக்கும் இந்திப் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார்.
'ரவுடி ரத்தோர்' படத்தின் மெகா ஹிட்டுக்குப் பிறகு அடுத்தும் இந்தி படம் இயக்குகிறார் பிரபு தேவா. அடுத்த மாதம் தொடங்கப்போகும் இந்தப் படத்தில், இந்தி படத் தயாரிப்பாளர் குமார் தவ்ரானியின் மகன் கிரிஷ் ஹீரோ. அவர் ஜோடியாக நடிக்க புதுமுகங்களைத் தேடி வந்தனர். இப்போது ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுபற்றி பிரபுதேவா கூறும்போது, ''இந்த கேரக்டருக்கு ஸ்ருதி பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்ததால் அவரை நடிக்கக் கேட்டோம். சம்மதித்துள்ளார். இது இனிமையான காதல் கதை. கமர்சியலாக இருக்கும்'' என்றார். தொடர்ந்து மூன்று படங்களை இயக்கப் போகும் பிரபுதேவா, இப்போது மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு ஸ்ரீதேவியின் பங்களாவில் வசிக்கிறார்.


 

Post a Comment