ஜோதிடர்கள் அட்வைஸ் காரணமாக, இப்போது மஞ்சள் நிற ஆடைக்கு தாவியுள்ளார் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா.
மனைவியை விவாகரத்து செய்தது, நயன்தாராவுடன் காதல் முறிந்தது என ஏகப்பட்ட பிரச்சினைகளை தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்தவர் பிரபுதேவா.
இப்போது மகன்கள்தான் தனது உலகம் என்றும், சினிமாதான் மூச்சு என்றும் கூறிவருகிறார்.
விவாகரத்து செய்த முதல் மனைவியுடனும் சமரசமாகப் போய்விட்டார் பிரபுதேவா. தான் இப்போது வசிக்கும் மும்பை குடியிருப்புக்கே மனைவி ரம்லத் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்றுவசிப்பதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்ல, குடும்பத்திலும் மனதிலும் அமைதி நிலவ மஞ்சள் ஆடையை அணியும்படி ஜோதிடர் ஒருவர் பரிந்துரைத்தாராம்.
அதன்படி இப்போது மஞ்சள் உடையை அணிய ஆரம்பித்துள்ளார் பிரபுதேவா. வெளியில் செல்லும்போதுகூட மஞ்சள் உடையில்தான் காணப்படுகிறார்.
Post a Comment