விஜய் உதவியை பெறும் நிலையில் இல்லை.. வசதியாகவே இருக்கிறோம்! - மேஜர் முகுந்த் குடும்பத்தினர்

சென்னை: எங்களுக்கு உதவுவதாக விஜய் சொல்லவும் இல்லை, அவர் உதவியைப் பெறும் நிலையிலும் நாங்கள் இல்லை என்று கூறியுள்ளனர் மறைந்த மேஜர் முகுந்த் குடும்பத்தினர்.

சமீபத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்தின் குடும்பம், அவரது பிரிவின் சோகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட முகுந்தின் மகள் அர்ஷேவிற்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்குமென்று விஜய்க்கு தெரிவித்தார்களாம்.

நாட்டின் எலையில் சண்டையிட்டு நாட்டைக் காப்பாற்றிய ரியல் ஹீரோவான மேஜரின் குழந்தையை நேரில் சென்று பார்த்துவிட்டு, அவருடன் ஒரு நாளைச் செலவிட்டார் விஜய்.

அர்ஷேவை விஜய் சந்தித்துவிட்டு வந்த பிறகு, அர்ஷாவின் படிப்புச் செலவை விஜய் ஏற்றுக்கொண்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது. ஒன்இந்தியா உள்பட சில தளங்களிலும் அந்தத் தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவல் குறித்து விஜய் தரப்பிலிருந்து எந்தவித விளக்கங்களும் வெளிவரவில்லை. அதே நேரம் மேஜர் முகுந்த் சார்பில் இந்த தகவலில் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

விஜய் உதவியை பெறும் நிலையில் இல்லை.. வசதியாகவே இருக்கிறோம்! - மேஜர் முகுந்த் குடும்பத்தினர்

மேஜர் முகுந்தின் ஃபேஸ்புக் பகத்தில், "அர்ஷே விஜய் ரசிகை என்பதையறிந்து, அக்‌ஷராவை படப்பிடிப்பிற்கு அழைத்துச் சென்றார் விஜய்.

ஒரு நாள் முழுவதும் விஜய்யுடன் இருந்த அர்ஷேவிற்கு அந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்தது. இதற்காக விஜய்க்கு மேஜர் முகுந்தின் குடும்பத்தினர் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

விஜய் அர்ஷேவை வெளியில் அழைத்துச் சென்றாரே தவிர எவ்வித உதவியும் செய்தவதாகச் சொல்லவில்லை. முகுந்தின் குடும்பத்தினரும், முகுந்தின் பெயரால் எந்த உதவியும் பெறக் கூடாது என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளனர். இந்த விளக்கம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மனம் தெலுங்குப் படத்தைப் பாராட்டிய கமல்!

கடந்த வாரம் வெளியான மனம் தெலுங்குப் படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளார் கமல் ஹாஸன்.

மறைந்த ஏ நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, மருமகள் அமலா, பேரன்கள் நாக சைதன்யா, அகில் என குடும்பமே நடித்த படம் இந்த மனம். சமந்தா, ஸ்ரேயாவும் நடித்துள்ளனர்.

மனம் தெலுங்குப் படத்தைப் பாராட்டிய கமல்!

தெலுங்கில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள இந்தப் படம் தமிழகத்தில் ஒரு வாரத்தில் ரூ 63 லட்சத்தை தியேட்டர் வசூலாகப் பெற்றுள்ளது.

விக்ரம் குமார் இயக்கிய இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார் கமல்ஹாஸன்.

பின்னர் படம் குறித்து அவர் குறிப்பிடுகையில், "நான் நாகேஸ்வரராவின் ரசிகன். இந்தப் படம் பார்த்ததும் எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டன. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டேன். நாகேஸ்வரரராவுக்கு மிகச் சிறந்த முறையில் அஞ்சலி செலுத்திய நாகார்ஜூனா குடும்பத்தைப் பாராட்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மஞ்சு வாரியருக்கு குவியும் புதுப்பட வாய்ப்புகள்.. தமிழில் சூர்யாவுடன் நடிக்க அழைப்பு!

கணவர் திலீப்பிடமிருந்து பிரிந்து வந்த பிறகு நடிகை மஞ்சு வாரியருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

தமிழில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவும் அவரைக் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைப் பெற்ற பிறகு பிரிந்து, விவாகரத்துக்கும் மனுச் செய்துவிட்டார்.

மஞ்சு வாரியருக்கு குவியும் புதுப்பட வாய்ப்புகள்.. தமிழில் சூர்யாவுடன் நடிக்க அழைப்பு!

இப்போது மஞ்சு வாரியர் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான மலையாளப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து மஞ்சு வாரியருக்கு மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஏராளமான வாய்ப்புகள் வந்துள்ளன. நாகார்ஜூனா, நானி போன்றவர்களுடன் ஜோடியாக நடிக்க அழைப்பு வந்துள்ளதாம்.

தமிழிலோ, நடிகர் சூர்யாவுடன் நடிக்கக் கேட்டுள்ளார்களாம்.

மலையாளத்தில் மோகன் லால் உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க பேச்சு நடந்து வருகிறதாம்.

 

மம்மூட்டி ஜோடியாக மீண்டும் லட்சுமி ராய்!

சம்பளம் கூடக் குறைய இருந்தாலும் மலையாளப் பட வாய்ப்புகள் வந்தால் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள் சீனியர் நடிகைகள். காரணம், எப்போதும் பிஸியாக இருக்கலாம்... அதிர்ஷ்டமிருந்தால் அவார்டும் கிடைக்கலாம் அல்லவா!

தமிழில் இப்போதைக்கு ஓரிரு படங்களை மட்டுமே வைத்துள்ள லட்சுமி ராய்க்கு, மீண்டும் ஒரு மலையாள வாய்ப்பு. இந்த முறையும் மலையாளத்தின் முதல் நிலை நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். படத்தின் தலைப்பு ராஜாதி ராஜா.

மம்மூட்டி ஜோடியாக மீண்டும் லட்சுமி ராய்!

இந்த செய்தியை உறுதி செய்த லட்சுமிராய், மலையாளத்தில் தாங்கள் இருவரும் அதிர்ஷ்ட ஜோடியாகக் கருதப்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கதைப்படி முதலில் மம்மூட்டியின் காதலியாகவும் பின்னர் மனைவியாகவும் வருகிறாராம் லட்சுமி ராய். சில காட்சிகளில் மம்முட்டியையே ஓரம்கட்டும் அளவுக்கு இவர் பாத்திரம் உள்ளதாம்.

தமிழில் இப்போது இரும்புக் குதிரை என்ற படத்தில் நடித்து வருகிறார் லட்சுமி ராய்.

 

விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம்

சினிமாவில் பிஆர்ஓ என்பவர் யார்... ஒரு படம் அல்லது நட்சத்திரம் அல்லது தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்களை பத்திரிகையாளர்களிடம் சொல்லி, அவற்றை வெளியில் பிரபலப்படுத்துபவர்.

அந்த வகையியில் தமிழ் சினிமாவில் நடிகர்- இயக்குநர் பார்த்திபனை விட பலே பிஆர்ஓவைப் பார்க்க முடியாது. அவருக்கு அவரே மிகப் பெரிய பிஆர்ஓதான். அவருக்கும் அவர் படத்துக்கும் எந்த முறையில் விளம்பரம் தேடலாம் என்பதற்கு பெரிய யோசனைக் கிடங்கே வைத்திருக்கிறார் போலும்!

இந்த வாரம் முழுக்க ஏதோ ஒரு வகையில் மீடியாவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் இசை வெளியீடு.. தொடர்ந்து பிரஸ் மீட்.

விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம்

தொடர்ந்து வந்த நாட்களில் இயக்குநர் அமரர் மணிவண்ணனை அவமதித்துவிட்டார் எனப் புகார். மணிவண்ணன் அறிமுகப்படுத்திய எடிட்டர் சுதர்சனை, தான்தான் முறையாக அறிமுகப்படுத்துவதாக அழைப்பிதழில் அவர் தண்டோரா போட, மணிவண்ணன் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொந்தளித்துவிட்டார்.

அதற்கு பார்த்திபன் அளித்த விளக்கத்தை சுரேஷ் காமாட்சி ஏற்றுக் கொண்டாரா.. அல்லது இன்னும் கோபப்பட்டிருப்பாரா? என்பது அவரைக் கேட்டால்தான் தெரியும்.

இதோ பார்த்திபன் விளக்கம்..

விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம்

அடுத்த பிரச்சினை ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் சத்யராஜ் வேடத்துக்கு பார்த்திபனைத்தான் முதலில் அழைத்தார்களாம். அப்போது ஷங்கரிடம், 'விஜய் வேஸ்ட்..அவருக்கு நடிப்பு வராது. சூர்யாவை நடிக்க வையுங்கள்.. ஆமீர்கான் வேடத்துக்கு பர்பெக்டாக இருப்பார்,' என்று பார்த்திபன் சொன்னதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதாம்.

அதற்கு விளக்கம் அளிப்பதாகக் கூறிக் கொண்டு, ஏதோ ஆயா வடைசுட்ட கதை என்றெல்லாம் எழுதி ஒரு அறிக்கை விட்டுள்ளார்.

இதோ அந்த இரண்டாவது அறிக்கை...

விஜய்க்கு நடிக்கவே வராதுன்னு சொன்னேனா...? - பார்த்திபன் விளக்கம்

விளைவு.. நிகில் அனுப்பிய படத்தின் பிரஸ் ரிலீஸையும் தாண்டி, கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஏதோ ஒரு வகையில் தினசரி பார்த்திபன் செய்தியைத்தான் போட்டுக் கொண்டிருக்கிறது மீடியா.

இப்போ சொல்லுங்க... பார்த்திபன் பெரிய பிஆர்ஓதானே!

குறிப்பு: பார்த்திபன் சார்.. உங்க அறிக்கையின் நக்கல் தொனி யாருக்கும் புரியாமலில்லை... அதற்காக விளக்க அறிக்கைகளைக் கூட கிறுக்கல்கள் மாதிரியே பிழைகளோடு எழுதுவதைத் தவிருங்களேன்!

 

லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய கேஎஸ் ரவிக்குமார்.. ரஜினி கேக் ஊட்டினார்!

மைசூர்: இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தன் பிறந்த நாளை மைசூரில் லிங்கா படப்பிடிப்பில் ரஜினியுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

ரவிக்குமாருக்கு ரஜினி பிறந்த நாள் கேக் ஊட்டி வாழ்த்துச் சொன்னார்.

கோச்சடையானுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் லிங்கா. விடுதலைக்கு முந்தைய இந்தியாவை கதைக் களமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடர்ந்து நடந்து வருகிறது.

லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய கேஎஸ் ரவிக்குமார்.. ரஜினி கேக் ஊட்டினார்!

நேற்று இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரின் பிறந்த நாள். ஆனால் படப்பிடிப்பு தொடர்ந்தது. நேற்று மாலை படப்பிடிப்பு முடிந்ததும், பெரிய கேக் வரவழைத்து, கேஎஸ் ரவிக்குமாரை வெட்டச் சொல்லி பிறந்த நாள் கொண்டாட வைத்தார் ரஜினி.

படக் குழுவினர் பிறந்த நாள் பாடல் பாட கே எஸ் ரவிக்குமார் கேக் வெட்டினார். முதல் துண்டை எடுத்து கேஎஸ் ரவிக்குமாருக்கு ஊட்டினார் ரஜினி.

லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய கேஎஸ் ரவிக்குமார்.. ரஜினி கேக் ஊட்டினார்!  

இந்த பிறந்த நாளை தன்னுடைய வாழ்க்கையின் மறக்க முடியாத நாள் என்று குறிப்பிட்டுள்ளார் கே எஸ் ரவிக்குமார்.

அவர் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்த நாள். நம்மை விரும்பும், அக்கறையாகப் பார்த்துக் கொள்ளும் அன்பு உள்ளங்கள் இல்லாமல் பிறந்த நாள் முழுமையடையாது. இந்தப் பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக்கிய லிங்கா குழுவினருக்கு நன்றி.

இந்த நாளை என் வாழ்வின் மிகப் பெரிய நாளாக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி. ராக்லைன் வெங்கடேஷுடன் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி," என்று குறிப்பிட்டுள்ளார் கேஎஸ் ரவிக்குமார்.

 

கோச்சடையான் ஹிட்டானதில் மகிழ்ச்சி.. புதிய வாய்ப்புக்குக் காத்திருக்கிறேன்! - தீபிகா

மும்பை: கோச்சடையான் படம் பெரிய ஹிட்டானதில் மகிழ்ச்சி. ஆனால் முழுக்க முழுக்க லைவ் ஆக்ஷனில் ரஜினியுடன் தமிழ்ப் படம் நடிக்கக் காத்திருக்கிறேன் என்றார் நடிகை தீபிகா படுகோன்.

தீபிகா படுகோனே தமிழில் அறிமுகமான முதல் படம் கோச்சடையான். அதற்கு முன் அவர் ராணா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அந்தப் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாரான கோச்சடையான் படத்தில் நடிக்க வைக்கப்பட்டார்.

கோச்சடையான் ஹிட்டானதில் மகிழ்ச்சி.. புதிய வாய்ப்புக்குக் காத்திருக்கிறேன்! - தீபிகா

படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழாவுக்கு மட்டும் வந்தார். இந்தி, தெலுங்கு விழாக்களில் கலந்து கொள்ளவில்லை.

கோச்சடையான் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் படத்தில் தீபிகா படுகோன் உருவம் சரியாக வரவில்லை என்று மீடியா விமர்சனங்களில் குறிப்பிட்டிருந்தனர். தீபிகா ரசிகர்களுக்கும் இது ஏமாற்றமாக இருந்ததாக தகவல் வெளியானது.

ஆனால் இதுகுறித்து தீபிகாவிடம் கேட்டபோது, "எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அனிமேஷனில் இந்த அளவு கொண்டு வருவதே பெரிய விஷயம்தான்.

காரணம், ஹாலிவுட் அனிமேஷன் படங்களில், உயிரோடு உள்ள ஒரு பெரிய நடிகர் நடிகையை யாரும் அனிமேட் செய்ததில்லை. அதனால் நமக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கோச்சடையானில் நடித்த ரஜினி சார், நான் உள்ளிட்ட மற்ற அனைவரும் வாழும் பாத்திரங்கள். எங்களின் அனிமேஷன் உருவத்தோடு நிஜ உருவத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதால்தான் இந்தப் பிரச்சினை. எனக்கு அது புரிகிறது. சவுந்தர்யா அருமையான முயற்சியை எடுத்துள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார்.

இன்னொரு படத்தில் லைவ் ஆக்ஷனில் ரஜினி ஜோடியாக நடிக்கும் நாளை எதிர்ப்பார்க்கிறேன்," என்றார்.

 

அனுமதியில்லாமல் அஜீத் படப்பிடிப்பு... இயக்குநரை விட்டுவிட்டு லைட்பாயைக் கைது செய்த போலீஸ்!

சென்னை: அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக அஜீத் படக்குழுவைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை விட்டுவிட்டனர்.

அனுமதியில்லாமல் அஜீத் படப்பிடிப்பு...  இயக்குநரை விட்டுவிட்டு லைட்பாயைக் கைது செய்த போலீஸ்!

வீரம்' படத்துக்கு பின் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜீத். இன்னமும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தில், அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையைச் சுற்றிலும் நடக்கிறது.

பாலவாக்கத்தில் உள்ள வி.ஜ.பி. லேஅவுட் காலனியில் கடந்த சில நாட்களாக அஜீத் படப்பிடிப்பு நடந்தது. பெரும்பாலும் இரவில்தான் படப்பிடிப்பு.

ஷூட்டிங்குக்காக சாலையில் நிறைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதிக வெளிச்சம் பொருந்திய விளக்குகளை வைத்து படப்பிடிப்பை நடத்தினர்.

இரைச்சல் மற்றும் அதிக வெளிச்சத்தால் அப்பகுதி மக்கள் எரிச்சல் அடைந்தார்கள். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் மேல்தட்டு மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர். எதற்கெடுத்தாலும் போலீஸுக்குப் போகிறவர்கள் அல்லது ஆங்கிலுப் பத்திரிகைகளின் லெட்டர் டு த எடிட்டர் பகுதியின் பங்களிப்பாளர்கள்.

எனவே படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, நீலாங்கரை போலீசிலும் புகார் கொடுத்தனர்.

போலீசார் நேரில் சென்று படப்பிடிப்பு குழுவினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறாதது தெரிய வந்தது. இதையடுத்து படப்பிடிப்பை போலீசார் நிறுத்தினர்.

அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக தயாரிப்பு மேலாளர் பிரேம், லைட் பாய் ரமேஷ் மற்றும் உதவியாளர் ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். படத்தின் தயாரிப்பாளர் ரத்னத்தையோ, இயக்குநர் கவுதம் மேனனையோ ஒரு கேள்வி கூட கேட்கவில்லை போலீசார்!

 

நடிகர் ஷாருக்குக்கு மம்தா பானர்ஜி கொடுத்த “மீன்வறுவல்” விருந்து

நடிகர் ஷாருக்குக்கு மம்தா பானர்ஜி கொடுத்த “மீன்வறுவல்” விருந்து

கொல்கத்தா: கொல்கத்தா அணியின் வெற்றியை தொடர்து மம்தா பானர்ஜியை சந்தித்த ஷாருக்கான் அவரது வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்டுள்ளார் இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக.

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளராக இருக்கிறார். இந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதையடுத்து ஷாருக்கான் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வீட்டுக்கு சென்றார். அங்கு மம்தாவை சந்தித்து பேசினார். அப்போது, ஷாருக்கானுக்கு இறுதி போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற வாழ்த்து கூறினார்.

பின்னர், ஷாருக்கானுக்கு மம்தா பானர்ஜி விருந்து கொடுத்தார். பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட வறுவல் மீனை சாப்பிட கொடுத்தார். விருந்து குறித்து ஷாருக்கான் டுவிட்டரில் கூறும்போது, ‘‘மம்தா பானர்ஜி வீட்டில் மீன்வறுவல் சாப்பிட்டது இனிமையாக இருந்தது'' என்று கூறியுள்ளார்.

மேலும், மம்தா பானர்ஜி பேஸ் புக்கில், ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி போட்டியில் வெல்ல வேண்டும். அதற்காக என் வாழ்த்துக்கள்'' என்று கூறியுள்ளார்.

 

'0 29'... வரப்போகுது அடுத்த அனிமேஷன் படம்!

எண்கள் எனப்படும் நம்பர்களுக்கு உருவம் மட்டுமல்ல.. உணர்ச்சிகளும் உண்டு என்பதைச் சொல்ல வரும் அனிமேஷன் படம் '0 29'.

பூஜ்யம் முதல் 9 வரையிலான எண்களுக்கு உருவம் கொடுத்து, அவற்றை காமெடிப் பாத்திரங்களாக படத்தில் உலவிட்டிருக்கிறார் படத்தின் இயக்குநர் நிஷா.

'0 29'... வரப்போகுது அடுத்த அனிமேஷன் படம்!

நிஷா கூறுகையில், "குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் பெரியோர்களும் பார்த்து மகிழும் படமாக இதன் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. உலகிலேயே முதன் முறையாக எண்களை கொண்டு உருவாகப் பட்ட முதல் படம் இந்த '0 2 9' தான்," என்கிறார்.

'0 29'... வரப்போகுது அடுத்த அனிமேஷன் படம்!

இதில் 2-ம் எண்ணுக்கும் 7-ம் எண்ணுக்குமிடையே காதல் எல்லாம் உண்டாம். அப்ப டூயட்டும் இருந்தாகணுமே!

டிஎப்எஸ்எஸ் மீடியா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் ரமேஷ் இசையமைக்கிறார். மிராக்கில் பீட்டர் அனிமேஷன் செய்துள்ளார்.

 

அமெரிக்காவில் கோச்சடையான் கட்டணம் பாதியாகக் குறைப்பு!

வாசிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவில் 104 அரங்குகளில் தமிழில் வெளியான ரஜினியின் கோச்சடையான், புதன்கிழமை வரை 535 ஆயிரம் டாலர்களை வசூல் செய்து, அதிக வசூல் செய்த தமிழ் சினிமாக்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இரண்டாவது வாரத்தில் 58 திரையரங்குகளில் தமிழ்ப் படம் தொடர்கிறது.

அமெரிக்காவில் கோச்சடையான் கட்டணம் பாதியாகக் குறைப்பு!

இந்த இரண்டாவது வாரத்தில் டிக்கெட் விலையை ஹாலிவுட் பட டிக்கெட் அளவுக்கு குறைத்துள்ளார்கள். பொதுவாக தமிழ்த் திரைப்படங்களுக்கு ஹாலிவுட் பட டிக்கெட் விலையை விட அதிக அளவில் வசூலிக்கப்படும். ரஜினி படத்திற்கு இன்னும் கூடுதல் விலை வைப்பார்கள்.

அமெரிக்க வினியோகிஸ்தர்களான அட்மஸ் நிறுவனத்திற்கு, ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் விலையைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்ததையடுத்து வெள்ளிக்கிழமை மே 30ம் தேதி முதல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்கள்.

குழந்தைகளையும் சேர்த்து ஒரு குடும்பத்தில் சராசரியாக 4 பேர் என்பதால், இந்த விலைக் குறைப்பு பெருமளவில் பலனுடையாதாக இருக்கும். கடந்த வாரத்தை விட, பகல் காட்சிகள் பாதி விலையிலும், மாலை, இரவுக் காட்சிகள் 30 முதல் 50 சதவீதம் குறைவாகவும் இருக்கும்.

'அனைத்து தமிழ்க் குடும்பங்களுக்கும் கோச்சடையான் 3D அனுபவத்தை பெரிய திரையில் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விலைக்குறைப்பு செய்துள்ளதாக' அட்மஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு பதிப்பான விக்ரமசிம்ஹா அமெரிக்கா முழுவதும் 11 தியேட்டர்களில் இரண்டாம் வாரம் திரையிடப்படுகிறது.

அமெரிக்காவில் இதுவரை திரையிடப்பட்ட தமிழ்ப் படங்களில் அதிக வசூல் செய்தவை, எந்திரன், விஸ்வரூபம், சிவாஜி, தசாவதாரம். இந்த நான்கு படங்களுக்கும் அடுத்து கோச்சடையான் அதிக வசூல் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தை குசேலன் பெறுகிறது.

 

தனுஷின் இந்திப் படத்துக்கு தலைப்பு என்ன தெரியுமா?

தனுஷ் நடிக்கும் புதிய இந்திப் படத்துக்கு ஷமிதாப் என தலைப்பு சூட்டியுள்ளார் இயக்குநர் பால்கி.

ராஞ்ஜனாவுக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் புதிய இந்திப் படம் இது. அமிதாப் பச்சன் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அக்ஷரா ஹாஸன் தனுஷுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

தனுஷின் இந்திப் படத்துக்கு தலைப்பு என்ன தெரியுமா?

இசையமைப்பவர் இளையராஜா.

படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டாலும், இதற்கு தலைப்பு மட்டும் வைக்காமல் இருந்தனர்.

இப்போது படத்துக்கு ஷமிதாப் என தலைப்பு வைத்துள்ளனர்.

இதுகுறித்து இயக்கநர் பால்கி கூறுகையில், "இந்தப் படத்துக்கு ஷமிதாப் என்று தலைப்பு சூட்டியுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அமிதாப் - தனுஷ் - அக்ஷரா கூட்டணி மிகச்சிறப்பாக வந்துள்ளது," என்றார்.

அமிதாப் பச்சன் கூறுகையில், "இந்தப் படத்தின் தலைப்புக்கும் என் பெயருக்கும் சம்பந்தமில்லை. ஏன் இப்படி ஒரு தலைப்பு வைத்துள்ளார்கள் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்," என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தின் கதை சுவாரஸ்யமானது. பேச முடியாத ஒருவன் பெரிய நட்சத்திரமாக விரும்புவதுதான் கதையின் ஒன்லைன்!

 

ஹாலிவுட் பட பிரிமியரில் பிராட் பிட் முகத்தில் குத்துவிட்ட இளைஞர்

லாஸ் ஏஞ்சல்ஸ்: மாலெபிசியன்ட் என்ற படத்தின் பிரிமியர் ஷோ பார்க்க வந்த நடிகர் பிராட் பிட் முகத்தில் திடீரென குத்துவிட்டார் ஒரு இளைஞர். அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பிராட் பிட்டின் 'பார்ட்னர்' ஏஞ்சலீனா ஜோலி நடித்த மாலெபிசியன்ட் படத்தின் சிறப்புக் காட்சி, ஹாலிவுட்டில் உள்ள எல் கேபிடன் திரையரங்கில் புதன்கிழமை மாலை நடந்தது.

ஹாலிவுட் பட பிரிமியரில் பிராட் பிட் முகத்தில் குத்துவிட்ட இளைஞர்

இந்தக் காட்சிக்கு பிராட் பிட்டும், ஏஞ்சலீனாவும் ஜோடியாக வந்தனர். இருவரிடமும் ஆட்டோகிராப் வாங்க வந்திருந்த ரசிகர்கள் முயன்றனர்.

அப்போது அந்த கூட்டத்திலிருந்த ஒரு இளைஞர் திடீரென தடுப்பு வளையத்தைத் தாண்டி குதித்து பிராட் பிட் முன்பு நின்றார். என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் பிராட் பிட் முகத்தில் பலமாகக் குத்துவிட்டார். நிலை தடுமாறிப் போனார் பிராட் பிட்.

அதற்குள் போலீசார் விரைந்து வந்து அந்த இளைஞரைக் கைது செய்தனர். 25 வயதான அவர் பெயர் விடாலி செடூயிக். இவர் சில தினங்களுக்கு முன்பு நடந்த கேன்ஸ் விழாவில் ஹவ் டு ட்ரெயின் யுவர் ட்ராகன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு வந்த நடிகை அமெரிக்கா பெர்ராராவின் கவுனுக்குள் நுழைய முயன்று போலீல் பிடிபட்டவர் என்பது பின்னர் தெரியவந்தது.

 

கோச்சடையான் வசூல்... 5 நாளில் ரூ 51 கோடி!

கோச்சடையான் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இதில் முதல் 5 நாட்களுக்கான கலெக்ஷன் ரிப்போர்ட் கிடைத்துள்ளது. இதுவரை தியேட்டர்கள் மூலம் ரூ 51 கோடியை வசூலித்துள்ளது இந்தப் படம்.

இதன் மூலம் படத்தின் மொத்த வருவாய் ரூ 100 கோடியைத் தாண்டியது.

மேலும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் ரூ 50 கோடியைத் தாண்டிய முதல் படம் கோச்சடையான்தான்.

கோச்சடையான் வசூல்... 5 நாளில் ரூ 51 கோடி!

ரஜினி, தீபிகா படுகோன் நடிக்க, சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் கடந்த 23-ம் தேதி உலகெங்கும் வெளியானது. 6 மொழிகளில், 3000-க்கும் அதிகமான அரங்குகளில் படம் வெளியானது. முதலில் 6000 அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டவர்கள், பின்னர் கடைசி நேர நெருக்கடி காரணமாக அதில் பாதி அளவு தியேட்டர்களில்தான் வெளியிட்டனர். வெளிநாடுகளில் எக்ஸ் மேன் படம் ரிலீசானதால், கோச்சடையானுக்கு அதிக அரங்குகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது.

படம் வெளியான பிறகு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக தமிழில் பெரும் வெற்றி பெற்றுள்ளது இந்தப் படம்.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் 42 கோடியை வசூலித்த கோச்சடையான், அடுத்த இரு தினங்களில் மேலும் 9 கோடியை வசூலித்துள்ளது. இவை வார நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் ரூ 15 கோடியும், உள்நாட்டில் ரூ 36 கோடியையும் ஈட்டியுள்ளது இந்தப் படம்.

இன்றிலிருந்து வார விடுமுறை தினங்கள் என்பதால் வசூல் மேலும் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இந்தப் படத்தின் வசூல் தொகை விவரம்:

அமெரிக்கா: ரூ 2.56 கோடி

மலேசியா: ரூ 1.12 கோடி

பிரிட்டன் (அயர்லாந்து உள்பட) : ரூ 80 லட்சம்

ஆஸ்திரேலியா: 65 லட்சம்

 

இயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன்! - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்

சென்னை: இயக்குனர் மணிவண்ணனை அவமதித்துவிட்டார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் என கண்டனம் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அமரர் மணிவண்ணன் இயக்கிய 50 வது படம் அமைதிப்படை 2. இந்தப் படத்தைத் தயாரித்தவர் வி ஹவுஸ் சுரேஷ் காமாட்சி. தற்போது கங்காரு என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.

இயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன்! - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்

இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

மறைந்த அய்யா மணிவண்ணன் அவர்கள் இயக்கிய நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ (அமைதிப்படை இரண்டாம் பாகம்) படத்தின் எடிட்டராக சுதர்சன் என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்போது கிரீன் பார்க்கில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை அறிமுகப்படுத்திப் பேசியும் உள்ளார்.

அமைதிப்படையைத் தொடர்ந்து தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார் சுதர்சன்.

இப்பொழுது பார்த்திபன், தான் இயக்கி வெளிவர இருக்கும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழில் மணிவண்ணன் அறிமுகப்படுத்திய எடிட்டர் சுதர்சனை, தான் 'முறையாக' அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் மணிவண்ணன் அய்யா முறையாக அறிமுகப்படுத்தவில்லையா?

இயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன்! - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்

50 படம் இயக்கிய மணிவண்ணன் அறிமுகப்படுத்திய ஒரு தொழில்நுட்ப கலைஞனை மீண்டும் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்று அழிப்பிதழில் அச்சிட்டிருப்பது மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை முறை தவறி அறிமுகப்படுத்திவிட்டதாக குறிப்பிடுகிறது.

இது பார்த்திபனின் முறையற்ற செயல். பெருமைக்காக மாவிடிப்பதில் பார்த்திபனை மிஞ்ச ஆள் இல்லை. ஓதுவது வேதம்: இடிப்பது பிள்ளையார் கோயில் என்பதாகத்தான் இருக்கும் அவர் நடத்தை போலும். வெளியில் தன்னை ஒரு அறிவாளியாகவும், மனிதாபிமானமுள்ளவராகவும் காட்டிக்கொள்ளும் பார்த்திபனுக்கு ஏன் இந்த வேலை? இது முழுக்க முழுக்க அவரது கசட்டு எண்ணத்தைத்தான் காட்டுகிறது. அதை இந்த 'முறையாக' என்ற ஒரு வார்த்தை காட்டிக் கொடுத்துவிட்டதே.

இன்றைய காலகட்டத்தில் 50 படங்களை இயக்குவது என்பது சாமானியமான விஷயம் அல்ல... எவ்வளவு பெரிய சாதனை? மணிவண்ணன் தனது 50 வது படத்தில் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞனை... இயக்குவதில் 20 படத்தைக் கூடத் எட்டாத பார்த்திபன் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்பது முறையா?

அடுத்தவரின் அறிமுகத்தை தனது அறிமுகம் என பறைசாற்றி கொள்வது முறையா?

தைரியம் இருந்தால் ஒரு உதவி படத் தொகுப்பாளரை அவர் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே படத் தொகுப்பாளராக வேலை செய்து அனுபவம் வாய்ந்த ஒருவரை, தான் 'முறையாக' அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறுவது மறைந்த இயக்குநர் மணிவண்ணன் அவர்களை அவமானப்படுத்துவதாகும். இதை எங்கள் நிறுவனம் கடுமையாகக் கண்டிக்கிறது. பார்த்திபன் தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்.

தாம் எதையாவது புதுமையாக செய்கிறோம், எழுதுகிறோம் என்பதற்காக இந்த விஷயத்தையும் சாதாரணமாக அல்லது புதுமைக் கிறுக்குகளில் இதையும் ஒன்றாக எடுத்துக்கொண்டாரோ என்னவோ? ஆனால் அந்த புதுமைக் கிறுக்கு, படிக்கும் வாசகர்களையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் பிடிக்காமல் இருந்தால் சரிதான்!!

-இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

 

சரவணன் என்கிற சூர்யா... எதற்கு இப்படி தலைப்பு வைக்கணும்.. பிறகு மல்லுக் கட்டணும்!!

சரவணன் என்கிற சூர்யா... இப்படி ஒரு தலைப்பில் படமெடுத்திருக்கும் ஒரு புது இயக்குநர், இப்போது அதை வெளியிட முடியவில்லை என்று உதவி கேட்டு பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலைக்குக் காரணம், அந்தப் பெயர் நடிகர் சூர்யாவைக் குறிப்பதாக இருப்பதுதான். சூர்யாவின் நிஜப் பெயர் சரவணன் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியுமோ...

சரவணன் என்கிற சூர்யா... எதற்கு இப்படி தலைப்பு வைக்கணும்.. பிறகு மல்லுக் கட்டணும்!!

தமிழ் சினிமாவில் ஒரு பொது விதி இருக்கிறது.. உயிரோடு உள்ள எந்த கலைஞரின் பெயரையும் தலைப்பாக வைக்க வேண்டும் என்றால், அவர்களின் ஆட்சேபணை இல்லா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பிறகுதான் அந்தத் தலைப்புக்கே அனுமதி தரப்படும்.

இப்படி ஒரு தலைப்பு வைத்தால், நிச்சயம் அது நடிகர் சூர்யாவைக் குறிக்கும் என்பது தெரிந்தும், ஆரம்பத்திலேயே அவர்களிடம் அனுமதி கேட்காமல், படத்தை எடுத்து முடித்துவிட்டு, அதை வெளியிட சிவகுமார் குடும்பம் தடையாக உள்ளது என்ற ரீதியில் அறிக்கை வெளியிடுவது பப்ளிசிட்டிக்கு வேண்டுமானால் உதவலாம். படத்துக்கு உதவாது.

இந்தப் பிரச்சினையில் சூர்யா தரப்பில் நியாயம் உள்ளது. காரணம், தன் பெயரை பயன்படுத்தி படம் எடுத்திருப்பவர் ஏற்கெனவே தன்னை சினிமாவில் நிரூபித்தவராக இருந்தால் கூட, அவர் அனுமதிக்க தயங்க மாட்டார். இந்த ராஜா சுப்பையாவோ புதியவர். எப்படி எடுத்திருப்பார்... தன் பெயரைக் கெடுத்திருப்பாரோ, மோசமான காட்சிகளை வைத்திருப்பாரோ என, முதல் நிலை நடிகரான சூர்யா யோசிப்பதில் தவறு இல்லையே!

அதுவும் ஒரு நடிகனைப் பற்றி கதை இது. அதே பெயரில் மிகப் பிரபலமாக இருக்கும் சூர்யா எப்படி இதை அனுமதிப்பார் என யோசிக்காமல் எதற்கு இப்படி தலைப்பு வைக்க வேண்டும்.. பிறகு மல்லுக்கட்ட வேண்டும்!

தலைப்பும் படமும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பிரபலமாக இருப்பவரின் பயன்படுத்துவது வழக்கம்தான், ஆனால் அவர்கள் அனுமதிக்கும் பட்சத்தில்.

புதிதாக ஆர்வத்துடன் படம் பண்ண வந்தால் மட்டும்போதாது.. சில அடிப்படை விஷயங்களையும் புரிந்து கொண்டால் மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும் ராஜா சுப்பையாக்கள்!

இன்னொன்று, இதுபோன்ற பிரச்சினைகள் எழாமலிருக்க ஒரு வழி... பிரபலங்களின் பெரைப் பயன்படுத்தி படத் தலைப்பைப் பதிய வரும்போதே, ஆட்சேபணை இல்லா சான்றுடன்தான் வரவேண்டும் என ஒரு புதிய கட்டுப்பாட்டை தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர் அல்லது கில்டு விதிக்க வேண்டும்!

 

மூடநம்பிக்கைக்கு எதிராக முண்டா தட்டும் முண்டாசுப்பட்டி!

தென் மாவட்டங்களில் இப்போதும் சில பழக்கங்கள் உண்டு.. வீட்டுக்கு கதவு வைத்தால் சாமி குத்தம்... படுக்க கட்டில் பயன்படுத்தினால் குற்றம்... இப்படி சில பழக்கங்கள்.

அதுபோல.. போட்டோ எடுத்துக் கொண்டால் மரணம் நேரும் என்றும் சில ஊர்களில் நம்பிக்கை உண்டு.

அந்த நம்பிக்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்துள்ளனர். அதுதான் முண்டாசுப்பட்டி.

மூடநம்பிக்கைக்கு எதிராக முண்டா தட்டும் முண்டாசுப்பட்டி!

இந்தப் படத்தில் விஷ்ணு நாயகனாவும் நந்திதா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ராம் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது.

படம் குறித்து இயக்குநர் ராம் கூறுகையில், "முண்டாசுப்பட்டி என்னும் கற்பனையான கிராமத்தில் 1947-ம் ஆண்டு ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவத்தில் இருந்து அக்கிராம மக்கள் யாரும் புகைப்படம் எடுப்பதில்லை. அப்படி புகைப்படம் எடுத்தால் இறந்து விடுவோம் என்ற மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

புகைப்படக் கலைஞனாக இருக்கும் விஷ்ணு, தன் உதவியாளர் காளியுடன் அந்த கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள ஒருவரை புகைப்படம் எடுக்கிறான். அந்த புகைப்படத்தால் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக, நாயகனை அந்த கிராமத்திலேயே மக்கள் சிறை வைக்கிறார்கள். அதற்குப்பின் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு நாயகன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே முண்டாசுப்பட்டி படத்தின் கதை.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவைக்கு அருகில் மற்றும் சந்தியமங்கலம் பகுதிகளில் எடுத்தோம்.

இப்படத்தின் கதை 1980களில் நடப்பதால் அவ்வூரில் உள்ள வீடுகளை அதற்கு ஏற்றார்போல் மாற்றினோம். இப்படம் மூட நம்பிக்கையை சாடுகிற படமாக இருக்காது. மூட நம்பிக்கையால் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக சொல்லும்.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் ஜூன் மாதம் 13-ம் தேதி வெளியாகும்," என்றார்.

இந்தப் படமும் ஒரு குறும்படத்திலிருந்துதான் உருவாகியுள்ளது. நாளைய இயக்குநர்கள் போட்டிக்காக தான் எடுத்த 9 நிமிட படத்தைத்தான், இரண்டரை மணி நேரப் படமாக மாற்றியுள்ளார் ராம். இதற்கு முன் யாரிடமும் இவர் உதவியாளராகப் பணியாற்றியதில்லையாம்!

 

அரையாண்டில் செஞ்சுரி அடிக்கும் தமிழ் சினிமா!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழில் வெளியான சினிமாக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த மே 30-ம் தேதிக்குள் தமிழில் வெளியான, வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 80. ஜூன் மாத இறுதிக்குள் இது 100-ஐத் தொடவிருக்கிறது.

கோடம்பாக்கத்தில் இது புதிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.

அரையாண்டில் செஞ்சுரி அடிக்கும் தமிழ் சினிமா!

இன்றைய தேதிக்கு சினிமா நன்றாக ஒடுகிறதோ இல்லையோ.. படமெடுக்க வரும் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை தாறு மாறாக உயர்ந்து வருகிறது. லாபம் கிடைக்காவிட்டாலும், சினிமாவுக்கே உரிய கவர்ச்சி, பலரையும் தயாரிப்பாளராக்குகிறது.

அப்படி படம் தயாரிக்க வந்துள்ள திடீர் தயாரிப்பாளர்களால் இன்று 350 படங்கள் தயாரிப்பில் உள்ளன.

வாரத்துக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து படங்களாவது வெளியாகின்றன. கோச்சடையான் மாதிரி பெரிய படம் வரும்போது மட்டும் வாரத்துக்கு ஒன்றாக மாறிவிடுகிறது இந்த எண்ணிக்கை.

வரும் மே 30ம் தேதி, அதாவது நாளை மட்டுமே 5 புதிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

தவிர ஜூன் மாதம் மட்டும் 15 முதல் 18 புதிய படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன.

ஆக அரையாண்டுக்குள் செஞ்சுரி அடித்து சாதனைப் படைக்கவிருக்கிறது தமிழ் சினிமா.

இவற்றில் எத்தனை வெற்றிப் படங்கள் என்று மட்டும் கேட்டுடாதீங்க!

 

சென்னை தூர்தர்ஷனில் முதன் முறையாக மெகா தொடர் 'வாழ்வே தாயம்'!

சென்னை: தொலைக்காட்சி தொடங்கப்பட்டு சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை மெகா தொடர் எதையும் தூர்தர்ஷன் ஒளிபரப்பியதில்லை.

பெரும்பாலும் 13 வாரத் தொடர், அதுவும் வார விடுமுறை நாட்களில் மட்டுமே ஒலிபரப்பப்பட்டு வந்திருக்கிறது.

சென்னை தூர்தர்ஷனில் முதன் முறையாக மெகா தொடர் 'வாழ்வே தாயம்'!

இப்போது முதல் முறையாக "வாழ்வே தாயம்" என்ற மெகா தொடரை சென்னை தொலைக்காட்சி தயாரித்து வழங்குகிறது.

ஜூன் 2 ஆம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது.

சென்னை தூர்தர்ஷனில் முதன் முறையாக மெகா தொடர் 'வாழ்வே தாயம்'!

இது ஒரு நகைச்சுவைத் தொடர். இதில் பாண்டு, மதன்பாப், நித்யா, காத்தாடி ராமமூர்த்தி, ஷோபனா, சத்யஜித், கிரீஸ், நிஷா, சித்ரா, கீர்த்தி சுந்தர், கார்த்திக், பாபி ஆகியோர் நடிக்கிறார்கள்.

காதல் மதியின் பாடல் வரிகளுக்கு ஜான்பீட்டர் இசையமைக்கிறார்.

இந்தத் தொடரை எழுதி இயக்குபவர் ரதீஸ். இவர் முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவியின் சகோதரர். ரதீஸ் ஏற்கெனவே பல தொடர்களை சென்னைத் தொலைக்காட்சிக்காக எழுதி இயக்கி இருக்கிறார். அத்தனை தொடர்களுமே விருதுகளைப் பெற்றிருக்கிறது.

அகில இந்திய அளவில் தூர்தர்ஷனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக இவரது தொடர்கள் தேசிய விருது பெற்றுருக்கிறது. இவர் விரைவில் பிரபல நட்சத்திரங்களை வைத்து திரைப்படம் ஒன்றையும் இயக்கப் போகிறாராம்.

 

சட்டைக் காலரைப் பிடித்து பிரகாஷ் ராஜும், விமான பயணியும் சண்டை.. டெல்லியில்!

டெல்லி: டெல்லியிலிருந்து சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் வந்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், சக பயணி ஒருவருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு விட்டது. இந்த மோதல் கைகலப்பாகி இருவரும் ஒருவரை ஒருவர் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உள்ளே புகுந்து இருவரையும் விலக்கி விட்டு அமைதிப்படுத்தியதால் மோதல் தவிர்க்கப்பட்டது.

படப்பிடிப்புக்காக விமானம் மூலம் டெல்லி வந்தார் பிரகாஷ் ராஜ். படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் வந்திருந்தார். ஏர் இந்தியா நிறுவன கவுண்டரில் பயணிகளோடு பயணியாக வரிசையில் நின்றிருந்தார்.

சட்டைக் காலரைப் பிடித்து பிரகாஷ் ராஜும், விமான பயணியும் சண்டை.. டெல்லியில்!

அப்போது அவருக்குப் பின்னால் இருந்த ஒரு பயணி, பிரகாஷ் ராஜ் மீது விழுந்துள்ளார். இதில் பிரகாஷ் கீழே விழப் பார்த்தார். சுதாரித்து சமாளித்து நின்ற அவர் கோபத்துடன் அவரிடம் சரியாக நிற்க முடியாதா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பயணி ஏதோ சொல்ல கோபமாகிப் போன பிரகாஷ் ராஜ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அந்த பயணி பிரகாஷ் ராஜிடம் கடுமையாகப் பேசியுள்ளார். பதிலுக்கு பிரகாஷ் ராஜும் சத்தம் போட்டுள்ளார். இது ஒரு கட்டத்தில் கடுமையான சண்டையாக மாறியது. பிரகாஷ் ராஜ் கோபத்தில் அந்த பயணியின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துள்ளார். அவரும் பிரகாஷ் சட்டைக் காலரைப் பிடிக்க அங்கு ரசாபாசமான சூழல் ஏற்பட்டது.

இருவரும் அடித்துக் கொள்ளும் நிலை ஏற்படவே அங்கிருந்தவர்கள் இருவரையும் கஷ்டப்பட்டு விலக்கி விட்டு அமைதிப்படுத்தினர். இந்த திடீர் சண்டையால் அங்கு சலசலப்பு ஏற்பட்டு விட்டது.

ஏன் இந்த சண்டை தீவிரமானது என்பது தெரியவில்லை.!

 

கார் விபத்தில் சிக்கிய தொழிலதிபருக்கு உதவிய மிஸ்டர் பீன்... மீட்புக்குழுவினர் பாராட்டு

கார் விபத்தில் சிக்கிய தொழிலதிபருக்கு உதவிய மிஸ்டர் பீன்... மீட்புக்குழுவினர் பாராட்டு

குழந்தைகளை சிரிக்கவும், அதேசமயத்தில் சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை கதாபாத்திரம் தான் மிஸ்டர் பீன். கார்ட்டூன் மற்றும் தொலைக்காட்சி தொடரில் இக்கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ரோவன் அட்கின்சன்(வயது 59).

இந்நிலையில், நேற்று நிஜத்தில் விபத்தில் சிக்கிய ஒருவரை காப்பாற்றியுள்ளார் அட்கின்சன். இதனால், நேற்றைய ஊடகச் செய்திகளில் மிஸ்டர் பீனின் மனிதாபிமான உதவி தான் பெருமளவில் இடம்பெற்றதாக அந்நாட்டு செய்திகள் கூறுகின்றன.

மீட்பு....

நேற்று இத்தாலியில் தனது காரில் பயணம் செய்து கொண்இருந்த அட்கின்சன், சாலை ஓரத்தில் ஒரு கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக தனது காரை விட்டு இறங்கிய அட்கின்சன் விபத்து நடந்த காரினுள் சிக்கியவர்களை மீட்க உதவி செய்தார்.

தகவல்...

மேலும், இந்த விபத்துக் குறித்து இந்தாலிய போலீசாருக்கும் மீட்புப்படையினர்களுக்கு போன் மூலம் தகவலளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

மனிதாபிமானம்...

அதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில், விபத்தில் சிக்கியது அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிபர் என தெரிய வந்தது. மிஸ்டர் பீன் அவர்களின் மனிதாபமானத்தை மீட்புக்குழுவினர்கள் பாராட்டினார்கள்.

இதே போன்ற விபத்து...

விபத்தில் சிக்கிய தொழிலதிபர் ஓட்டி வந்தது மெக்லர்ன் எப் 1 ஸ்போர்ட்ஸ் வகைகாராகும். இதே போல் ஒரு காரில் செல்லும் போதுதான், கடந்த 2011ம் ஆண்டு நடிகர் அட்கின்சனும் விபத்தில் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிட தக்கது.

 

திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை கேட்டு முஸ்லிம் அமைப்பு வழக்கு!

சென்னை: திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது.

திருமணம் என்னும் நிக்காஹ் என்ற தலைப்பும், அது எதைப் பற்றிய கதை என்ற தகவலும் வெளியானதிலிருந்தே, அந்தப் படத்துக்கு ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆட்சேபணை தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இப்போது அது நடந்தேவிட்டது. திருமணம் என்னும் நிக்கா படத்துக்கு எதிராக தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பின் துணைத் தலைவர் அலிகான், சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடை கேட்டு முஸ்லிம் அமைப்பு வழக்கு!

நடிகர் ஜெய், நடிகை நஸ்ரியா நடித்துள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

இந்த படம் நாளை (30-ந் தேதி) வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷியா முஸ்லிம் சமுதாயத்தின் மதக் கொள்கை தவறாகவும் அவதூறாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளிவந்தால், மத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் வேலாயுதம் என்ற படத்தில் மன உணர்வுகளை புணப்படுத்தும் விதமாக காட்சிகளை எடுத்திருந்தார். தற்போது திருமணம் என்னும் நிக்காஹ் படத்திலும் முஸ்லிம் சமுதாயத்தை விமர்சனம் செய்துள்ளார்.

எனவே ரவிச்சந்திரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் கமிஷனரிடம் கடந்த 20-ந் தேதி புகார் செய்தோம். இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எனவே திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை 30-ந் தேதி வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவிச்சந்திரன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடவேண்டும்.

-இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனர், சென்சார் வாரியத்தின் மண்டல அதிகாரி, படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

 

லிங்காவுக்கு அடுத்து ஷங்கர் படம்... ரஜினி முடிவு!

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது லிங்கா படம் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிங்கா படத்தின் படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

லிங்காவுக்கு அடுத்து ஷங்கர் படம்... ரஜினி முடிவு!

நான்கு நாயகிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா மற்றும் லாரன் இர்வின் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் ரஜினி ஜோடிகளாக நடிக்கின்றனர். நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

இந்தப் படம் கடந்த மே 2-ம் தேதி மைசூரில் தொடங்கியது. தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து நடித்து வருகிறார் ரஜினி. யாருக்கும் அனுமதி கிடைக்காத மைசூர் அரண்மனையில் ரஜினியின் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்குகிறது. அங்கு மீதிப்படத்தை முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை திரும்பும் ரஜினி, ஷங்கருடன் கதை விவாதத்தில் ஈடுபடப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஷங்கர் தனது ஐ படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். ஒரு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கியாம். ஜூன் இறுதி அல்லது ஜூலையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். படத்தை வெளியிட்ட கையோடு, சில தினங்கள் ஓய்வெடுத்த பிறகு, ரஜினியின் படத்துக்காக களமிறங்கப் போகிறாராம் ஷங்கர்.

முன்பெல்லாம் மூன்றாண்டுகளுக்கொரு படம் என்ற கொள்கை வைத்திருந்த சூப்பர் ஸ்டார், இந்த ஆண்டே மூன்று படங்களில் நடிப்பது, ரசிகர்களுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சிதானே!


 

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளின் சம்பளம் ஜாஸ்தியாயிருச்சாமே?

சென்னை: சேட்டிலைட் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கு சேனல்கள் வழங்கும் சம்பளம் என்னவோ குறைவுதான்.

ஆனால் சினிமா ஆடியோ ரிலீஸ், பொதுநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாங்கும் சம்பளமோ மிக மிக அதிகம்.

நட்சத்திர டிவி சேனலின் காபி நிகழ்ச்சி தொகுப்பாளினிதான் இன்றைய தேதிக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குதவதற்கு அதிக சம்பளம் வாங்குகிறவரவராம். அவர் ஒரு நிகழ்ச்சிக்கு 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை வாங்குகிறாராம்.

அடுத்த இடத்தில் பாடல் ரியாலிட்டி ஷோ தொகுப்பாளினி இருக்கிறார். இவர் 35 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். நட்சத்திர சேனலின் ரம்யமான தொகுப்பாளினி 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வாங்குகிறார்.

சூர்ய டிவியின் அழகு தொகுப்பாளினியின் சம்பளமும் இருமடங்காகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற தொகுப்பாளினிகளின் சம்பளம் 5 ஆயிரத்தில் தொடங்கி 20 ஆயிரம் வரை. ஆண் தொகுப்பாளர்களுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரைதான்.

இந்த சம்பளம் சினிமா நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான். மற்ற கமர்ஷியல் நிகழ்ச்சிகள் என்றால் இன்னும் கூடுதலாக இருக்கும். காரணம் சினிமா நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். மற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகாது.

வெளியூர் நிகழ்ச்சிக்கென்றால் சம்பளம் அப்படியே இரண்டு மடங்காகிவிடும். முதல் வகுப்பு கட்டணம், தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல் இதெல்லாம் தனியாக கொடுத்துவிட வேண்டுமாம்.

மாதிரி உடைகள் அணிய வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். அதற்குரிய உடைகளை கொடுத்துவிட வேண்டும், அவர்களே அணிந்து வந்தால் அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும்.

உடன் வரும் உதவியாளர் மற்றும் மேக்அப்மென் சம்பளம் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். ஒரு மாதம், அல்லது ஒரு வாரத்துக்கு முன்பே புக் செய்து 50 சதவிகித சம்பளத்தை அட்வான்சாக கொடுத்து விடவேண்டுமாம். எந்த இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகளும் உண்டு என்கின்றனர் சின்னத்திரை வட்டாரங்களில்.

 

பேர்தானே... வெச்சுக்கங்க! - ஜிவி பிரகாஷுக்கு ஓகே சொன்ன நயன்தாரா

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் தன் பெயரை பயன்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இல்லை என்று ஜிவி பிரகாஷுக்கு நயன்தாரா அனுமதிக் கடிதம் அளித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா.

பேர்தானே... வெச்சுக்கங்க! - ஜிவி பிரகாஷுக்கு ஓகே சொன்ன நயன்தாரா

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஆனந்தி. கயல் படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் தலைப்பு, உயிருடன் இருக்கும் நடிகைகளின் பெயர்களை உள்ளடக்கியிருப்பதால், அவர்களின் அனுமதி வேண்டும் என்பது தயாரிப்பாளர் சங்க நிபந்தனை.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா, த்ரிஷா இருவரையும் சந்தித்து அனுமதிக் கடிதம் கோரினார் ஜிவி பிரகாஷ். இவர்களில் நயன்தாரா தனது பெயரைப் பயன்படுத்திக் கொள்ள ஆட்சேபணை இல்லை என்று கடிதம் கொடுத்துவிட்டார்.

அடுத்து த்ரிஷாவும் விரைவில் அனுமதி தருவதாகக் கூறியுள்ளாராம்.

இந்தப் படத்தில் பாரதிராஜா, அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி ஆகியோர் நடிக்கின்றனர்.

 

வேறு நிறுவனத்துக்கு கைமாறுகிறதா ஷங்கரின் ஐ?

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ஐ படம் குறித்து ஏகப்பட்ட எதிர்மறைச் செய்திகள்.

படம் நிதிப் பற்றாக்குறையால் தடுமாறுவதாக கடந்த ஆறேழு மாதங்களாக செய்திகள். படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே ஹீரோயின் எமி ஜாக்ஸன் கம்பி நீட்டிவிட்டார் என்று இன்னொரு செய்தி.

வேறு நிறுவனத்துக்கு கைமாறுகிறதா ஷங்கரின் ஐ?

ஆனால் இன்னொரு பக்கம் பிரமாண்ட ஆடியோ ரிலீசுக்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஏற்பாடு செய்து வருவதாக தகவல் கசிந்தது.

இந்த நிலையில் படத்தை வேறு பெரிய நிறுவனத்துக்குக் கைமாற்றிவிடலாம் என இயக்குநர் ஷங்கர் யோசனை கூறியுள்ளாராம்.

ரிலையன்ஸ் மாதிரி ஒரு நிறுவனத்துக்கு படத்தை மொத்தமாகக் கைமாற்றிவிடுங்கள், அட்லீஸ் ஜூலையிலாவது படத்தை வெளியிட்டுவிடலாம் என்று கோரிக்கை வைத்துள்ளாராம் ஷங்கர்.

இந்தப் படம் மே மாதமே வெளியாகும் என்று ஷங்கர் அறிவித்திருந்தார். ஆனால் இன்னும் ஷூட்டிங்கே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீயா, நானா?: படப்பிடிப்பில் பலப்பரீட்சையில் இறங்கிய நடிகைகள் லட்சுமி ராய், ராகினி திவேதி

பெங்களூர்: கன்னட நடிகை ராகினி திவேதியும், நடிகை லட்சுமி ராயும் பொது இடத்தில் பலப்பரீட்சையில் இறங்கியுள்ளனர்.

அடடே லட்சுமி ராய் கன்னட திரையுலகிற்கு சென்று அங்குள்ள நடிகை ராகினி திவேதியிடம் சண்டை போட்டுள்ளாரா என சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டாம். ஸ்ருங்காரா என்ற கன்னட படத்தில் ராகினியும், லட்சுமி ராயும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

நீயா, நானா?: படப்பிடிப்பில் பலப்பரீட்சையில் இறங்கிய நடிகைகள் லட்சுமி ராய், ராகினி திவேதி

அந்த படத்தின் படப்பிடிப்பில் இரண்டு நடிகைகளும் பலசாலியை கண்டறிய முயற்சி கூட செய்யவில்லை புகைப்படத்திற்கு போஸ் தான் கொடுத்துள்ளனர்.

படத்தில் இருவரும் தோழிகளா அல்ல எதிரிகளா என்று தெரியவில்லை. ஆனால் புகைப்படத்திற்கு சந்தோஷமாக சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர். அதை வைத்து தற்போதைக்கு அவர்களுக்குள் லடாய் எதுவும் இல்லை என்று நம்புவோம்.

லட்சுமி ராய் கைவசம் இருக்கும் ஒரே கன்னட படம் இது தான்.

 

ரூ 1 கோடி வசூலுடன் 75வது நாளைத் தொட்டது எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்!

எம்ஜிஆர் படத்தின் வெற்றிச் செய்திகளை நாமும் எழுதுவோமா என்ற பல நிருபர்களின் கனவை நனவாக்கியிருக்கிறது ஆயிரத்தில் ஒருவன்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் இது. புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன், இன்றைய முதல்வர் ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார்.

அன்றைக்கு தமிழ் சினிமா வசூலில் சரித்திரம் படைத்த இந்தப் படத்தை, 50 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியிட்டனர். கிட்டத்தட்ட 100 அரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு.

ரூ 1 கோடி வசூலுடன் 75வது நாளைத் தொட்டது எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்!

திரையுலகப் பிரபலங்களும் திரண்டு போய் இந்தப் படத்தைப் பார்த்தனர். மதுரையில் மட்டும் படம் சுமாராகத்தான் போனது. ஆனால் அங்கும் மறுவெளியீடு செய்து வசூலை ஈட்டினர்.

இப்போது இப்படம் சென்னை சத்யம், ஆல்பர்ட் தியேட்டர்களில் 75 நாட்களை தாண்டி ஓடுகிறது. பிற மாவட்டங்களிலும் 100 - வது நாளை நோக்கி ஓடிக்கொண்டுள்ளது இப்படம்.

இதுவரை ரூ.1 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் 75 நாள் விழா சத்யம் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடினர். டைரக்டர் பி.ஆர்.பந்தலு மகன் பி.ஆர்.ரவிசங்கர், எம்.ஜி.ஆரின் மெய் காப்பாளர் கே.பி.ராம கிருஷ்ணன், திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ஆகியோர் விழாவில்

சத்யம் தியேட்டரில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக ஆயிரத்தில் ஒருவன் படம் ஓடிக் கொண்டுள்ளது.

 

மேடை சரிஞ்சதால நமீதா விழுந்தாங்களா? நமீதா ஏறினதால மேடை சரிஞ்சதா? நீங்க சொல்லுங்க!!

நாமக்கல்: நடிகை நமீதா பங்கேற்ற விழா மேடை சரிந்ததால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விழாவும் பாதியில் நிறுத்தப்பட்டது.

விழா மேடை சரிந்ததால் லேசான காயத்துடன் அவர் பாதியிலேயே கிளம்பினார்.

நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டியில் நடந்து வரும் பகவதியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில் "மணவாழ்க்கை" எனும் சமூக நாடகம் நடந்தது.

மேடை சரிஞ்சதால நமீதா விழுந்தாங்களா? நமீதா ஏறினதால மேடை சரிஞ்சதா? நீங்க சொல்லுங்க!!

அதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக சினிமா இயக்குனர் பாக்யராஜ் மற்றும் நடிகை நமீதா அழைக்கப்பட்டிருந்தனர். இரவு 10.30 மணிக்கு நமீதா நாடக மேடைக்கு வந்தார்.

நமீதாவை பார்த்ததும் அங்கிருந்த ரசிகர்களும் மேடையில் ஏறினர். அதனால் மேடை ஒருபுறம் சரிந்தது. மேடையில் அமர்ந்திருந்த நமீதா நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சரிந்து விழுந்தனர்.

அதிர்ச்சியடைந்த நமீதா சிறு காயத்துடன் காரில் ஏறி ஓட்டம் பிடித்தார்.இந்த திடீர் அதிர்ச்சியால் நாடக விழா ரத்து செய்யப்பட்டது.பாவம் மேடையில் இருந்தவர்கள் சரிந்து விழுந்ததுடன் தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக ஏகத்துக்கும் எடையேறிக் காணப்படுகிறார் நமீதா. உடற்பயிற்சியை தொடராமல் விட்டதாலும், முன்பு போல படங்கள் இல்லாததால் நடிப்புப் பயிற்சி குறைந்து போய் விட்டதாலும் உடல் உப்பி விட்டது நமீதாவுக்கு.. பாவம்.. அதுதான் மேடை பாரம் தாங்காமல் படுத்து விட்டது போல.

 

மூணுஷா பார்ட்டியில் மில்க் நடிகை போட்ட ஆட்டத்தை பார்த்து அதிர்ந்த வருங்கால மாமனார்

சென்னை: மூணுஷா பிறந்தநாள் விழாவில் மில்க் நடிகை போட்ட ஆட்டத்தை வீடியோவில் பார்த்து அவரின் வருங்கால மாமனார் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.

விரைவில் வெற்றி இயக்குனரை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மில்க் நடிகை மூணுஷாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின. இந்நிலையில் அந்த பார்ட்டியில் நடிகைககள் ஆட்டம் போட்ட வீடியோ மில்கின் வருங்கால மாமனார் கையில் கிடைத்துள்ளது.

வருங்கால மருமகளின் ஆட்டத்தை வீடியோவில் பார்த்த மனிதர் அதிர்ந்துவிட்டாராம். உடனே அவர் மகனிடம், ஏற்கனவே இந்த புள்ள நம்ம குடும்பத்திற்கு ஒத்துவருமா என்று ஊரில் உள்ள சொந்தங்கள் எல்லாம் கேட்கிறார்கள். இந்நிலையில் இந்த பெண் இப்படி ஆட்டம் போட்டதை பார்த்தால் அவ்வளவு தான்.

இந்த ஆட்டம் பாட்டத்தை எல்லாம் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்தால் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தாராம்.

 

லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக பிரிட்டிஷ் நடிகை லாரன் இர்வின்!

லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பிரிட்டிஷ் நடிகை லாரன் ஜே இர்வின் நடிக்கிறார்.

ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் லிங்கா. இதில் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா நடிக்கின்றனர்.

லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக பிரிட்டிஷ் நடிகை லாரன் இர்வின்!

இந்த நிலையில் மேலும் ஒரு ஜோடியாக பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன் ஜே இர்வின் நடிக்கிறார். அவர் ரஜினியுடன் நடிக்கும் காட்சி, புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் வெளிநாட்டில் படித்த எஞ்ஜினியராக ஒரு பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா விடுதலையடைவதற்கு முந்தைய காலத்தில் நடக்கும் கதையில் ரஜினி, லாரன் இர்வின், சோனாக்ஷி நடிக்கிறார்கள்.

கடந்த வாரம் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்க லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மைசூர் வந்தார் லாரன். அவர் பங்கேற்கும் காட்சிகள் முடிந்ததும், "சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவம். ரவிக்குமார் மாதிரி இயக்குநர் ஒரு ஆச்சர்யம்," எனப் புகழ்ந்தார்.

லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக பிரிட்டிஷ் நடிகை லாரன் இர்வின்!

அத்துடன் கடந்த வாரம் வெளியான ரஜினியின் கோச்சடையான் படத்தையும் பார்த்துப் பாராட்டியுள்ளார்.

பிரிட்டிஷ் படம் ஹார்ட், ஹாலிவுட் படம் வகரி, லண்டனின் புகழ்பெற்ற நாடகங்கள் வெஸ்ட் எண்ட், ஆன்னி, ஆலிவர் போன்றவற்றில் நடித்தவர் லாரன் இர்வின்.

லிங்கா படம் தனக்கு நிறைய இந்தியப் பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆகஸ்டில் சண்டமாருதம்!- தென்காசியில் சரத் பேட்டி

தென்காசி: ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக தான் நடித்து வரும் சண்டமாருதம் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருப்பதாக சரத்குமார் தெரிவித்தார்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினரும்,நடிகருமான சரத்குமார் நேற்று மாலை குற்றாலம் ஐந்தருவியில் நிருபர்களை சந்தித்தார்.

அபோது அவர் கூறுகையில், "ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு, தற்போது சண்டமாருதம் படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துவருகிறேன்.

ஆகஸ்டில் சண்டமாருதம்!- தென்காசியில் சரத் பேட்டி

கதாநாயகன், வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். ஆவணி மோடி, மீனாட்சி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

ராதாரவி,சமுத்திரக்கனி,கன்னடநடிகர் அருன்சாகர்,தம்பிராமையா, கவுரவ வேடத்தில் ராதிகா சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

சென்னை, கும்பகோணம், பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு வாரணாசியில் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 15தினங்களில் விடியல் படத்தின் பாடல்வெளியிட்டு விழா நடைப்பெறுகிறது.

தலைப்பாக்கட்டி

இந்தப் படத்துக்குப் பிறகு தலைப்பாக்கட்டி என்ற படத்தில் நடிக்கிறேன். தனுஷை வைத்து ஒரு படமும் தயாரிக்கும் திட்டம் உள்ளது," என்றார்.

தலைப்பாக்கட்டி ஓட்டல் விளம்பரத்தில் சரத்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

போகாத பங்கு போட்டுத்தள்ளிய தலைமை!

சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வி ஒருபுறம் இருக்க பங்கு விவகாரம்தான் நால்வரில் ஒருவர் நகர்த்தப்பட காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ஒருவராக இருந்தவர் மீதே நடவடிக்கை பாய என்ன காரணம் என்பதை கதை கதையாக கூறுகின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

மாம்பழ வேட்பாளரை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று அசைன்மென்ட் கொடுக்கப்பட்டும் அதை சரிவர கவனிக்காமல் சாதிப் பாசத்தை காட்டினார் என்று செல்போன் ஆதாரத்தோடு மேலிடத்தில் போட்டு கொடுத்துவிட்டனராம்.

இதுதான் தோல்விக்குக் காரணம் என்று பற்ற வைத்தாலும், சென்னை மாநகராட்சியில் ஒரு டெண்டர் தொடர்பான விஷயத்தில் மேலிடத்துக்கு பங்கு சரிவர போய் சேரவில்லையாம் இதுதான் கோபத்திற்குக் காரணம் என்கின்றனர்.

கடந்த 18ம் தேதி மாலையில்தான் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. மூன்று பேரை உள்ளே வெளியே போட்டு தாக்கிய தலைமை சாமியானவரிடம் இருந்து வெயிட்டான துறையை பறித்துவிட்டு டம்மி துறையை கொடுத்தனர்.

பதவி போகலையே என்ற சந்தோஷத்தில் இருந்த நிலையில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருந்து நீக்கியது தலைமை.

சரி, மாவட்டச் செயலாளர் பதவியாவது தப்பியதே என்று எண்ணியவரின் தலையில் 20ம்தேதி மதியம் இடியை இறக்கியது தலைமை, மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் தூக்கப்பட்டார். மாசெ பதவி போனாலும் பரவாயில்லை, அமைச்சர் பதவியாவது மிஞ்சியதே என்று திருப்தி அடைந்தார் சாமி.

ஆனால் அதுவும் கொஞ்ச நேரத்திலேயே பறிக்கப்பட்டது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கின்றனர் சாமியின் ஆதரவாளர்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் சாமிக்கு இது போதாத காலம் என்கின்றனர்.

 

நடிச்சது போதும்.. குட்பை!- நஸ்ரியா நஸீம்

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று ஒருவழியாக முடிவு செய்து, அதை திரையுலகிலுள்ளவர்களுக்கும் சொல்லிவிட்டாராம் நஸ்ரியா.

சினிமாவில் அறிமுகமானவுடன் பரபரவென புகழ் பெற்றவர் நஸ்ரியா. தமிழிலும் மலையாளத்திலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தன.

இந்த நேரத்தில் தனது வாய்த்துடுக்கால் சர்ச்சைகளிலும் சிக்கினார்.

நடிச்சது போதும்.. குட்பை!- நஸ்ரியா நஸீம்

இதற்கிடையில் திடீரென அவருக்கும் நடிகர் பகத் பாஸிலுக்கும் காதல் என செய்தி கிளம்பியது. அதே வேகத்தில் அந்தக் காதலை உறுதி செய்து, திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர் நஸ்ரியாவும் பகத் பாசிலும்.

இருவருக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வேண்டும் என்பது நஸ்ரியாவின் ஆசை.

ஆனால் பாஸில் வீட்டில் இதை விரும்பவில்லை. திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட வேண்டும் என வற்புறுத்தினர்.

இதனால், தான் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த மலையாளப் படங்களிலிருந்து விலகிக் கொண்டாராம் நஸ்ரியா. தமிழில் திருமணம் எனும் நிக்காஹ்தான் அவரது கடைசி படம்!

 

கோச்சடையான் ராக்கிங்: சொல்கிறார் 'தல' ரசிகரான சிம்பு

சென்னை: கோச்சடையான் படம் பார்த்த நடிகர் சிம்பு இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோச்சடையான் ராக்கிங்: சொல்கிறார் 'தல' ரசிகரான சிம்பு

அஜீத் குமாரின் தீவிர ரசிகரான நடிகர் சிம்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்த கோச்சடையான் படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த பிறகு அவர் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கோச்சடையான் படத்தின் கிராபிக்ஸை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிட முடியாது. இருப்பினும் இதை சாத்தியமாக்கிய சௌந்தர்யாவுக்கு வாழ்த்துக்கள். மாஸை தெரிந்து வைத்திருக்கும் கே.எஸ்.ஆர்., இசை மூலம் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், அந்தோனி பற்றியும் கூற வேண்டும். வசனங்கள் சூப்பரோ சூப்பர்.

கோச்சடையான் ராக்கிங், படம் மிகவும் பிடித்திருந்தது. சௌந்தர்யாவை நினைத்து பெருமையும், சந்தோஷமும் படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.