திருவனந்தபுரம்: சந்தானம் ஒரு படத்தில நான் யாரு நான் யாருன்னு மூச்சு விடாமக் கேட்பாரே, அதே மாதிரி ஒரு நடிகர் போன ஜென்மத்துல நாம என்னவா இருந்தோம்னு நிஜமாவே தேடப் போறாராம்.
மலையாள நடிகர் தீலிப் தான் அந்த முன்ஜென்மத்த தேடப் போற நடிகர். எல்லாம் இவர் நடிச்ச சந்திரேட்டன் எவிடயா படத்தால வந்த வெனை தான்.
ஆமாம் அந்தப் படத்தில குடும்பத்தோட தஞ்சாவூர் கோவிலுக்குப் போகும் தீலிப் ஜாதகம் மூலமா முன் ஜென்மத்தில் தன்னோட காதல் கைகூடாம போனதத் தெரிஞ்சிகிட்டு தன்னோட காதலிய இந்த ஜென்மத்தில தேடிப் போற மாதிரி கதை இருக்கும்.
அந்தப் படத்தில நடிச்சு முடிச்ச தீலிப் உண்மையிலே போன ஜென்மத்தில தான் யாரா இருந்திருப்போம்னு தேடப் போறாராம்.கடவுள் பக்தி அதிகம் உள்ள தீலிப் இதற்காக தஞ்சாவூருக்கு திரும்ப போய் தன்னுடைய முயற்சியைத் தொடங்கப் போறாராம்.
அப்படியே கையோட உங்க போன ஜென்மத்து காதலி மற்றும் மனைவி யாருன்னும் கேட்டு தெரிஞ்சிட்டு வாங்க சார்.. பல பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும்!
Post a Comment