சென்னை: ஜூலை 17 ம் தேதி ரமலான் பண்டிகை வருவதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் கடுமையான நோன்பு இருப்பார்கள், ஒவ்வொரு நாளும் நோன்பு முடிந்த பின்பு தான் உணவு உண்ணுவார்கள்.
இஸ்லாமியர்கள் நோன்பு இருக்கும் போது பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களுக்கு இப்தார் விருந்து அளித்து, அவர்களுடன் சேர்ந்து விருந்தில் கலந்து கொள்வார்கள்.
அதே போன்று இந்த வருடமும் இப்தார் விருந்துகள் தொடங்கி விட்டது, சமீபத்தில் நடிகர் விஜய் 100 இஸ்லாமியர்களை வரவழைத்து அவர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்து அசத்தி இருக்கிறார்.
அவர்களுக்கு விருந்து கொடுத்தது மட்டுமின்றி விருந்தில் தானும் கலந்து கொண்டு உணவு அருந்தியுள்ளார். விஜய் நடிப்பில் உருவாகி உள்ள புலி படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment