கிரியேட்டிவ் கோம்ப் நிறுவனம் சார்பில் அர்ச்சித் தயாரிக்கும் நிகழ்ச்சி, 'பாட்டு தர்பார்'. மதன்பாப் நடத்துகிறார். மே 6-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த நிகழ்ச்சி 3 பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி 'பாட்டோட கதை கேளு'. பாடல் பிறந்த கதை, சிறப்பு உள்ளிட்ட விவரங்களை சொல்வேன். இரண்டாவது பகுதி 'சிரிப்பு மழை'. இதில் மிமிக்ரி கலைஞர்கள் சிரிக்க வைப்பார்கள். அடுத்து, 'என் கேள்விக்கு என்ன பதில்'. இதில் திரைப்பட கலைஞர்களை பேட்டி காண்கிறேன். ஒரு காப்பி ஷாப்பில் நடப்பது மாதிரியான நிகழ்ச்சி. அதனால் பிரமாண்ட செட் போட்டு படமாக்கி வருகிறோம். இவ்வாறு மதன்பாப் கூறினார்.
Post a Comment