தேனிலவு தள்ளி வைப்பு: சினேகா மீண்டும் நடிக்கிறார்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சினேகா- பிரசன்னா திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமணத்துக்கு பின் சினேகா சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவர் விரும்பினால் தொடர்ந்து நடிக்கலாம் என்று பிரசன்னா கூறினார். நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று சினேகா தெரிவித்தார்.

திருமணம் முடிந்து ஓரிரு வாரங்கள் ஆன நிலையில் சினேகா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் ஹரிதாஸ் படத்தில் நடிக்கிறார். அதில் சினேகாவுக்கு வித்தியாசமான வேடமாம். கேரக்டர் ரொம்ப பிடித்து போனதால் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளதால் தேனிலவுக்கு போவதை சினேகாவும், பிரசன்னாவும் தள்ளி வைத்துள்ளனர்.


 

Post a Comment