கிம் கர்தஷியான் என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது. வழக்கமாக பாய் பிரண்டுகளால்தான் அவருக்குப் பிரச்சினை வரும். ஆனால் தற்போது பாம்புத் தோலால் பிரச்சினையாகி விட்டது.
சமீபத்தில் டிவிட்டரில் படு கவர்ச்சிகரமான ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டார். அதில் கருப்பு நிற உள்ளாடையும், காலில் பாம்புத் தோலால் ஆன ஷூவும் போட்டபடி குண்டக்க மண்டக்க குணிந்து நிற்கிறார் கிம். இது ரசிகர்களிடையே சூட்டைக் கிளப்பி விட்டுள்ளது. ஆனால் பெடா எனப்படும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அமைப்பு போர்க்கொடி உயர்த்தி விட்டது.
பாம்புத் தோலால் ஆன பூட்ஸை அவர் எப்படி அணியலாம் என்று கேட்டு பஞ்சாயத்துக்கு வந்துள்ளனர் விலங்குகள் நல ஆர்வலர்கள்.
பெடாவுக்கும், கிம்முக்கும் இடையே மோதல் வெடிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு ஒரே நாளில் இரண்டு முறை விலங்குத் தோலால் ஆன கோட்களை அணிந்து பெடாவின் கோபத்தை சம்பாதித்தவர்தான் கிம் என்பது நினைவிருக்கலாம்.
Post a Comment