நீண்ட காலம் தனக்கு கார் ஓட்டியவருக்கு காரைப் பரிசாகக் கொடுத்த அனுஷ்கா!

Anushka Gifts Car To Her Driver

சென்னை: உயர்ந்த நடிகை அனுஷ்கா அவரது செயலாலும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

நடிகை அனுஷ்காவுக்கு பெரிய மனசுங்க. தெலுங்கில் அமலா பாலுக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறார். தன்னுடன் இருக்கும் திருநங்கைக்கு தான் நடிக்கும் படங்களில் சிறு வேடங்கள் கொடுக்குமாறு இயக்குனரிடம் பரிந்துரை செய்கிறார். ஷூட்டிங்கில் சக நடிகர், நடிகைகளுக்கு யோகா கற்றுத் தருகிறார். இதெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.

தற்போது அனுஷ்காவைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது அவர் தனக்கு நீண்ட காலமாக கார் ஓட்டியவருக்கு ஒரு காரைப் பரிசளித்துள்ளார். என்ன தான் நீண்ட காலமாக டிரைவராக இருந்தாலும் யாரும் காரை பரிசளிப்பதில்லை. ஆனால் அனுஷ்கா சற்றே வித்தியாசமானவராகத் தான் உள்ளார்.

அவர் தற்போது இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

சோனியா என்னுடன் இணைந்து நடிக்க 'கிளைமேக்ஸ்'தான் காரணம்... விவேக்

All Heroines Won T Agree Pair Up With Comedians Vivek

சென்னை: காமெடி நடிகருடன் ஜோடி சேர எல்லா ஹீரோயின்களும் சம்மதிக்க மாட்டார்கள் என்று விவேக் தெரிவித்துள்ளார்.

விவேக்கை நாயகனாக வைத்து ஏபிசி ட்ரீம்ஸ் என்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில் பஷீர் குருவண்ணா தயாரிக்கும் படம் பாலக்காட்டு மாதவன். சாந்தி மோகன் எழுதி இயக்கும் இப்படத்தில் சோனியா அகர்வால், செம்மீன் ஷீலா, எம்.எஸ். பாஸ்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். அஜ்மல் அஜிஸ் இசையமைக்கும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடந்தது.

அந்த விழாவில் விவேக் பேசியதாவது,

என்னைப் போன்ற காமெடி நடிகர்களுடன் தே‌னி‌ குஞ்‌சா‌ரம்‌மா‌, பறவை‌ முனி‌யம்‌மா இல்லை என்றால் பல்லு போன பாட்டிகள் தான் ஜோடியாக நடிப்பார்கள். ஆனால் பாலக்காட்டு மாதவன் படத்தில் முதலில் செம்மீன் ஷீலா நடிக்கிறாங்க என்று சொன்னார்கள். சரி அவுங்க தான் நம்ம ஜோடி என்று நினைத்தேன். அடுத்து சோனியா அகர்வாலும் நடிப்பதாகக் கூறினார்கள். அவர் ஏதோ முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் என்று நினைத்தேன். கடைசியில் பார்த்தால் அவர் தான் எனக்கு ஜோடி என்று கூறினார்கள். அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். அவுங்க எனக்கு ஜோடியாக நடிக்க ஒத்துக்கிட்டதற்கு கதை மற்றும் படத்தோட கிளைமாக்ஸ் தான் காரணம்.

பொதுவா காமெடி நடிகருடன் ஜோடி சேர எல்லா ஹீரோயின்களும் சம்மதிக்க மாட்டார்கள். இதை தப்பு என்று கூற முடியாது. திரையுலகின் டிரெண்ட் அப்படி. இவற்றையெல்லாம் தாண்டி சோனியா என்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம் கதை தான் படத்தோட ஹீரோ. என்னுடன் நடிப்பதில் பெருமை என்று ஷீலா தெரிவித்தார்கள். ஆனால் அவருடன் நடிப்பதில் எனக்குத் தான் பெருமை. தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை செய்தவங்க.

இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன் என்றால் அந்த பட்டியலில் முதலில் இருப்பவர் கே. பாக்யராஜ். அவர் நடித்த அந்த 7 நாட்கள் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் பாலக்காட்டு மாதவன். அந்த பெயரில் நடிப்பதில் எனக்கு பெருமை. அதிலும் அவரும் இப்படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மனதில் உறுதி வேண்டும் படத்தில் இருந்தே எனக்கு எம்.எஸ். பாஸ்கரை நன்கு தெரியும். அவரும், நானும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம். அவரும் இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

 

நீண்ட காலம் தனக்கு கார் ஓட்டியவருக்கு காரைப் பரிசாகக் கொடுத்த அனுஷ்கா!

Anushka Gifts Car Her Driver   

சென்னை: உயர்ந்த நடிகை அனுஷ்கா அவரது செயலாலும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

நடிகை அனுஷ்காவுக்கு பெரிய மனசுங்க. தெலுங்கில் அமலா பாலுக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறார். தன்னுடன் இருக்கும் திருநங்கைக்கு தான் நடிக்கும் படங்களில் சிறு வேடங்கள் கொடுக்குமாறு இயக்குனரிடம் பரிந்துரை செய்கிறார். ஷூட்டிங்கில் சக நடிகர், நடிகைகளுக்கு யோகா கற்றுத் தருகிறார். இதெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.

தற்போது அனுஷ்காவைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது அவர் தனக்கு நீண்ட காலமாக கார் ஓட்டியவருக்கு ஒரு காரைப் பரிசளித்துள்ளார். என்ன தான் நீண்ட காலமாக டிரைவராக இருந்தாலும் யாரும் காரை பரிசளிப்பதில்லை. ஆனால் அனுஷ்கா சற்றே வித்தியாசமானவராகத் தான் உள்ளார்.

அவர் தற்போது இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

நெருக்கமான 'சீன்'களுக்கு தக்காளியே துணை...!

Richa Chadha Nikhil Dwivedi Hide Their Love Behind

மும்பை: அந்தக் காலத்தில் ஹீரோவும், ஹீரோயினும் காதல் டூயட் பாடும்போது படு சுவாரஸ்யமாக காட்சி வைப்பார்கள். அதாவது ஹீரோ, பஸ் கண்ணாடி போல ஒரு பெரிய கண்ணாடியை முகத்தில் தொங்க விட்டபடி, வரையப்பட்ட மீசையுடன், தனது 'முரட்டு' முகத்தை ஹீரோயினின் அழகான முகத்திற்கு அருகில் கொண்டு வருவார். கார்டன் போன்று போடப்பட்ட செட்டில்தான் இந்த காட்சியைப் படமாக்குவார்கள். அந்த செட்டில் வைக்கப்பட்டுள்ள பூச்செடிகளுக்கு அருகில் நின்றபடிதான் இந்த சீனைப் படமாக்குவார்கள். அப்போது ஹீரோ, ஹீரோயின் முகங்கள் நெருங்கும்போது இரண்டு பெரிய பூக்களைக் கொண்டு அவர்களது முகத்தை மறைப்பது போல செய்து பூவை 'கிளுகிளு'வென்று செட் அசிஸ்டெண்டுகள் ஆட்டுவார்கள்... இல்லையானால் ஹீரோ, ஹீரோயினே சுயமாகவும் ஆட்டிக் கொள்வார்கள்.!

இப்படி பூவை ஆட்டினால், ஹீரோவும், ஹீரோயினும் முத்தமிட்டுக் கொண்டார்கள் என்று அர்த்தமாம்....! இதே பாணியில் ஒரு நூதனமான காதல் சீனை லேட்டஸ்டாக பாலிவுட்டில் சுட்டுள்ளனர். ஆனால் இங்கு பூவுக்குப் பதில் தக்காளியை வைத்து காட்சியை கன கச்சிதமாக முடித்துள்ளனர்.

ரிச்சா சத்தா, நிகில் திவிவேதி நடித்து வரும் புதிய படத்தில்தான் இந்தக் காட்சி வருகிறது. மிகவும் நெருக்கமான காதல் காட்சி அது. ஹீரோயின், ஹீரோவுக்கு மிக நெருக்கமாக நின்று முத்தமிடுவது போன்ற காட்சி. ஆனால் ஹீரோயின் ரிச்சாவுக்கு வெட்கமாக இருந்ததாம். இதனால் தயங்கித் தயங்கி அவர் நடித்துள்ளார். இதனால் டைரக்டருக்கு அதிருப்தி ஏற்பட்டது.

என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்த அவருக்கு அந்தக் காலத்தில் செய்வதைப் போல செய்தால் என்ன என்று யோசனை தோன்றியது. அதேசமயம், அந்தக் காலத்தில் உள்ளதைப் போல பூக்களை வைத்து ஆட்டாமல், வேறு விதமாக எடுக்க எண்ணிய அவர் கொஞ்சம் தக்காளியை வாங்கி வரச் சொன்னார். வந்தது தக்காளியும். பின்னர் அந்த தக்காளிகளுக்கு மத்தியில், ஹீரோவையும், ஹீரோயினையும் நெருக்கமாக வருவது போல செய்து, தக்காளியைக் கொண்டு அதை மறைத்து ஷூட் செய்தார் காட்சியை...

இந்த சீனுக்காக ஒரு மூ்டை தக்காளியை வாங்கி வந்தார்களாம் அசிஸ்டென்ட்டுகள்.

பெங்களூர் தக்காளியா இல்லை நாட்டுத் தக்காளியா ஜீ...??

 

மணி போட்ட கன்டிஷன்: பிள்ளைகளை 'பொத்தி' வைத்துள்ள கார்த்திக், ராதா!

Maniratnam S Condition Karthik Radha

சென்னை: கடல் படம் ரிலீஸாகும் வரை கௌதம், துளசியின் போட்டோக்களை வெளியிடக் கூடாது என்று மணிரத்னம் கார்த்திக் மற்றும் ராதாவுக்கு கன்டிஷன் போட்டுள்ளார்.

மணிரத்னம் கார்த்திக் மகன் கௌதம் மற்றும் ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து கடல் படத்தை எடுத்து வருகிறார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. படம் துவங்கி இத்தனை நாட்களாகியும் அது குறித்த தகவல்கள் கசிந்துவிடாமல் மணி ரகசியமாக வைத்துள்ளார்.

மேலும் ஷூட்டிங் நடக்கும் இடங்களில் வெளியாட்கள் வருவதை தடுக்க தனியார் செக்யூரிட்டி நிறுவன ஆட்களை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் மற்றும் ராதா தங்கள் பிள்ளைகளின் போட்டோக்களை வெளியிட்டு விளம்பரம் செய்ய விரும்பினர். ஆனால் அதற்கு மணிரத்னம் ஒத்துக்கொள்ளவில்லை.

படம் ரிலீஸாகும் வரை கௌதம், துளசியின் போட்டோக்களை எந்த பத்திரிக்கைகளிலும் வெளியிடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனால் கார்த்திக் மற்றும் ராதா தங்கள் பிள்ளைகளை பொது நிகழ்ச்சிகள் ஏன் நண்பர்கள் வீடுகளுக்கு கூட அனுப்பாமல் பொத்தி பொத்தி வைத்துள்ளனர்.

சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த துளசி தன்னை போட்டோ எடுக்கக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாகக் கூறிவிட்டார்.

 

வித்யா பாலனுக்கு 'மியாவ் மியாவ்' பிடிக்காதாம்...!

The Phobia That Vidya Balan Wont Even Talk About   

மும்பை: கவர்ச்சி காட்டவே பயப்படாதவர் வித்யா பாலன். அதேபோல எப்பவும் தைரியமாகவும், தில்லாகவும் இருப்பவர். ஆனால் அப்படியாப்பட்ட அவருக்கு ஒரே ஒரு 'மேட்டர்' மட்டும் பிடிக்கவே பிடிக்காதாம்.. அந்தப் பெயரைக் கேட்டாலே பயந்து போய் விடுவாராம்.. அவர்தான் பூணையார்.

பூணைகள் என்றால் வித்யாவுக்கு செம அலர்ஜியாம். பூணை என்ர பெயரைக் கேட்டாலே அவருக்கு டென்ஷனாகி விடுமாம். அதேபோல எங்காவது பூணையைப் பார்த்து விட்டால் போதும், ஓடி ஒளிந்து விடுவாராம். பூணையைப் பற்றியாராவது பேசினால் கூட ஸ்டாப் ஸ்டாப் என்று கத்தி விடுவாராம்.

ஒருமுறை இப்படித்தான், கமலிஸ்தான் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்புக்காக வந்திருந்தார் வித்யா. அப்போது கேரவன் வேனுக்குள் சாப்பாட்டுக்காக போயிருந்த வித்யா சாப்பாட்டை முடித்து விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு சில பூணைகள் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து போய் அங்கிருந்த சேர் ஒன்றில் ஏறி நின்று விட்டாராம். பூணைகளை இங்கிருந்து விரட்டினால்தான் நான் இறங்குவேன் என்று பீதியுடன் அவர் கூறவே வேறு வழியில்லாமல், சிலர் சேர்ந்து பூணைகளைப் பிடித்து வேறு பக்கம் கொண்டு போய் விட்டனராம். அதன் பிறகுதான் சேரை விட்டு இறங்கினாராம் வித்யா. இருப்பினும் டென்ஷனில் வியர்த்துக் கொட்டியதால் மறுபடியும் கேரவனுக்குள் ஓடிப் போய் விட்டாராம்.

ஏன் இப்படி பூணையைக் கண்டால் எலி போல ஓடுகிறார் வித்யா... யாராச்சும் பிஎச்டி பண்ணி கண்டுபிடிங்கப்பா....!

 

ஆஸ்திரேலியாவில் உருவான முதல் தமிழ் சினிமா இனியவளே காத்திருப்பேன் - அக் 6-ல் ரிலீஸ்!

First Tamil Film From Australian Tamils

இனியவளே காத்திருப்பேன் என்ற முழு நீள புதிய படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்பு, ஆஸ்திரேலியத் தமிழரால் அங்கேயே உருவாக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா என்பதுதான்.

இந்தப் படத்தின் இயக்குநர் பெயர் ஈழன் இளங்கோ. ஈழப் போர்க்களத்தில் இலங்கை படையினரால் நேரடியாக பாதிக்கப்பட்டு சின்ன வயதிலேயே குடும்பத்துடன் இந்தியா வந்து பின் ஆஸ்திரேலியாவில் செட்டிலானவர்.

இளங்கோவுடன் ஒரு நேர்காணல்...

கேள்வி: சினிமா ஆர்வம் எப்படி?

ஈழப் போரில் எல்லா தமிழ்க் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பமும் சொல்லொணாத துயரங்களைச் சந்தித்தது. எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு கட்டிய துணியோடு தமிழகம் வந்தோம்.

டபுவந்தாரை, வந்தாரை மட்டும் வாழ வைக்கும் தமிழகம் எங்களையும் வாழ வைத்தது! அங்கு பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு சென்னையில் மாநிலக்கல்லூரியில் புள்ளியியல் பட்டப்படிப்பு முடித்தேன். சென்னையில் பல திரைப்பிரபலங்களின் தொடர்பு இருந்தாலும்; எனக்கு திரைத்துறையில் அவ்வளவு நாட்டம் இருந்தது இல்லை.

பின் 1999 ல் நியூசிலாந்து சென்றடைந்தேன். வாழும் நாடு சொர்க்கமாகவே இருந்தாலும் தாய் மண்ணின் இழப்பு மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஈழம் தொடர்பான பல நிகழ்வுகளில் மேடையேறியது பல தமிழ் உள்ளங்களில் என்னை இடம் பிடிக்க வைத்தது. தாய் மண்ணுக்காக என்னால் போராட முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி வருத்திக் கொண்டே இருந்தது. என்னால் என்ன செய்ய முடியும்? நான் என்ன செய்ய வேண்டும்? என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.

ஒவ்வொரு தனிமனிதனுடைய வெற்றியும் அந்த இனத்திற்கு கிடைக்கும் வெற்றி என்பதை புரிந்துகொண்டேன். ஈழத் தமிழனாக எதையாவது சாதிக்கவேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நான் தேர்ந்தெடுத்தது திரைப்படத்துறை. படிப்பில் ஒலிப்பதிவு, இயக்கம், தொகுப்பு சம்மந்தமான பாடங்களை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு பயிற்சிப் பெற்றேன்.

பின் இந்தியா சென்று திரைப்பட தாயாரிப்பாளர் பாலுமகேந்திரா அவர்களை சந்தித்து அவருடைய அறிவுரை பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் பின் ஒளிப்பதிவாளர் கைமல் அவர்கள் பல நுட்பங்களை அறிவுறுத்தினார். இவர்களுக்கு நான் மிகவும் கடமைபட்டுள்ளேன்.

2003 ம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்து சிகரம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணி புரிந்தேன். அச்சமயம் ஈழத்து மூத்த கலைஞர் யு ரகுநாதன் ஐயா அவர்களின் தொடர்பு நண்பர் கருணாகரன் மூலமாக கிடைத்தது. அதிலிருந்து உருவாகியது தான் "இனியவளே காத்திருப்பேன்". சென்னையில் இசையமைப்பாளர் கவி என்னுடைய நெருங்கிய நண்பா. அவர் இசையமைத்த "அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை" என்ற பாடல் நம் மனதை உருக்கும் பாடல்களில் ஒன்று என்பதை நாம் யாவரும் மறந்து விட முடியாது. கவி இசையமைத்த இரண்டு பாடல்கள் எமது படத்தில் அமைந்தது எமது சிறப்பு.

கேள்வி: இந்திய திரைப்படத்துறை அசுர வளர்ச்சி அடைந்து நிற்கும் இக்காலத்தில் ஈழத் தமிழராகிய நாம் அவர்களுக்கு இணையாக வளர்ச்சியடைய முடியுமா? முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

முதலில் இந்த கேள்வியை என்னிடம் கேட்டதற்கு நன்றி. எனது பதில் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல, அவ்வாறு அமைந்தால் என்னை தயவுசெய்து மன்னிக்கவும். உதாரணமாக, 1980 முடிவுவரை உலகிலேயே இலங்கை வானொலி தலைசிறந்த வானொலியாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்திய தமிழர்கள் கூட விரும்பிக் கேட்கும் வானொலியாக இலங்கை வானொலி இருந்தது என்பதை கவிஞர் வைரமுத்துக் கூட குறிப்பிட்டு இருந்ததை நான் இங்கு கூற விரும்புகிறேன். ஆனால் இன்று இந்திய வானொலிகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. நம் மண்ணில் எமக்கு எதிராக நடந்த இனக் கலவரம் எமது வளர்ச்சியை குன்றச்செய்தது.

அதேபோல் திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டோமேயானால் நாம் இந்திய திரைப்படங்களை ரசித்து வந்த போதிலும் எமக்கென்று தளம் அமைப்பதற்காக கலைஞர்கள் யு ரகுநாதன், ஏ ளு துரைராஜா, காவலூர் ராஜதுரை போன்றவர்கள் 70 களில் சில படைப்புகளை படைத்தார்கள். அந்த முயற்சி இனக் கலவரத்தின் காரணமாக முயற்சியோடு முடக்கப்பட்டுவிட்டது.

ஈழத் தமிழ் கலைஞர்கள் இலங்கை அரசின் அடக்குமுறையால் அடக்கப்பட்டு விட்டார்கள். எமது கலை வளர்ச்சி ஸ்தம்பித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். அதன் பின் எமது உயிரை காப்பாற்றவேண்டும், எமது இனத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஈழத்தமிழர்களின் நெஞ்கங்களில் மேலோங்கியிருந்தது. அதன் பின் எமது இனத்தைக் காக்கும் போராட்டத்தில் மட்டுமே எமது பங்களிப்பு அமைய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இத்தருணத்தில் நாம் முழுக்க முழுக்க இந்திய படைப்புகளுக்கே அடிமையாகி விட்டோம் என்றே கூறவேண்டும. இதனால்தான் இன்று எமது கலைப்பயணத்தை வளர்க்க முற்படும்போது நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து தொடர்வதற்கு நாம் சற்று பின்நோக்கியே சென்று துவங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இந்த வளர்ச்சியின் இடைவெளியை நாம் நிரப்ப சில காலம் ஆகலாம். ஆனால் நிச்சயம் கூடிய விரைவில் எமக்கென்று ஒரு தளம் அமைத்து சிறந்த படைப்பாளிகளாக நாம் மாறுவோம் என்பதில் எமக்கு எந்த ஐயமும் இல்லை. தொடக்கம் என்ற ஒன்று இருந்தால் தான் வளர்ச்சி என்ற வார்த்தைக்கே இடமிருக்கும். இதற்காக அவுஸ்திரேலிய வாழ் தமிழர்களுடைய முதற் படைப்பு தான் "இனியவளே காத்திருப்பேன்".

வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடையே பல கனவுகள் இருந்தபோதிலும் எமது கவனம் எமது போராட்டத்தை மையமாக வைத்து மட்டுமே இருந்தது. திரைப்படத்துறையில் ஆர்வம் இருந்த சிலரும் கூட எமக்கு ஒரு தளம் அமைக்க வேண்டும் என்று கருதாது இந்திய படைப்புகளுக்கு தயாரிப்பாளர்களாக மட்டுமே ஆனார்கள். ஒரு படைப்பின் தரத்தை இரண்டாகப் பிரிக்கலாம், ஒன்று கலைநுட்பம், இதற்கு படைப்பாளியே முக்கிய பங்கு வகிக்கின்றான். இன்னொன்று தொழில்நுட்பம். இதற்கு பொருளாதாரமே முக்கிய பங்கை வகிக்கின்றது. அதிக பணம் செலவு செய்து தயாரித்து அதை மீட்கும் நிலையில் எமது தளம் இன்று இல்லை.

திரைப்படத்துறை தொழில்நுட்பக் கலைஞர்களும் எமது இனத்தில் மிக குறைந்தவர்கள் என்றே கூறலாம். ஆனால் இதை நினைத்து இப்படியே இருந்துவிட்டோமேயானால் எப்போதுமே இப்படியே இருந்துவிட வேண்டியதுதான். படைப்பாளிகள் உருவாகின்றார்கள். தொழில்நுட்பவாதிகள் தாமாகவே உருவாக்கிக்கொள்கிறார்கள். மக்களால் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு, மக்களின் ஆதரவை அடையும் கலைஞர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஒரு படைப்பின் வெற்றியையும் ஒரு கலைஞனின் வெற்றியையும் மக்களே நிர்ணயிக்கின்றார்கள் என்று கூட கூறலாம். ஒரு படைப்பாளியை. ஒரு கலைஞனை வாழும் போது அடையாளம் கண்டு ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் வெற்றி இனத்தின் வெற்றியாகவே மாறுகின்றது. ஒரு மனிதனுடைய வளர்ச்சியின் பெருமை அந்த இனத்திற்கும் பெருமை தரும் என்ற எண்ணம் இன மக்களிடம் நிச்சயம் வேண்டும். ஆதரவும் அரவணைப்பும் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தாக அமையும்.

கேள்வி: "இனியவளே காத்திருப்பேன்" உருவாக்கிய அனுபவம்?

திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு மாயையாகவே, சாமான்ய மக்களின் எட்டாக் கனவாகவே இருந்து வந்திருக்கின்றது. நாமும் அப்படியே நினைத்திருந்தோம். திரைப்படத்தை உருவாக்கவேண்டும் என்ற ஆசை இருந்த எமக்கு தயாரிப்பாளருக்காக காத்திருந்ததில் இது ஒரு நிறைவேறாத கனவாகவே ஆகிவிடும் என்ற ஐயம் இருந்தது. ஆகவே எம்மிடம் கைவசம் இருந்த தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்பவாதிகளையும் வைத்துக்கொண்டு கலைஞர்களை தேடும் முயற்சியில் இறங்கினோம். அதில் எதிர்பாராத நடைமுறை சிக்கல்களை சந்திக்கவேண்டியிருந்தது.

சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் திரைப்படத்துறையை கலை கண்ணோட்டத்தோடு அனுகுபவர்கள் எமது சமுதாயத்தில் மிகச் சிலரே என்று புரிந்தது. இருந்த போதிலும் நட்புக்காக நடிப்பதற்கு சிலர் முன் வந்தனர். இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு திரைத்துறை அனுபவம் இல்லை என்றே கூறலாம். இத்தருணத்தில் எனக்கு ஊக்குவிப்பை தந்து அனுபவத்தை பரிமாறிக்கொண்டு என்னை மனம் தளராமல் வழிநடத்திச்சென்றவர் ரகுநாதன் ஐயா அவர்கள். எழுபது வயதை தாண்டி ஐம்பது வருட திரையுலக அனுபவம் கொண்ட அவர் பிரான்சில் இருந்து "இனியவளே காத்திருப்பேனுக்காக" இங்கு வந்து அதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்து, பங்களிப்பை தந்தது மட்டுமல்லாது எமக்கு வழிகாட்டியாகவும் அமைந்தது எமக்கு கிடைத்த பெரும் பேறு.

இவரோடு நாச்சிமார் கோயிலடி வில்லுப்பாட்டுக் கலைஞர் ராஜன் தம்பையா அவர்கள் ஜெர்மனியில் இருந்து வந்து ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்தது எமக்குப் பெருமை. திரைப்பட தொகுப்பை முடித்துக்கொண்டு சென்னை சென்று திரைப்பட இசையமைப்பாளர் உதயன் அவர்களை பின்னணி இசைக்காக நாடினோம். அவருடைய பின்னணி இசை திரைப்படத்திற்கு மெருகூட்டியது. இறுதியில் நாம் பட்ட கஷ்டங்களின் பயன் "இனியவளே காத்திருப்பேன்" ஒரு தரமான படைப்பாக உருவாகி இன்று திரையில் வெளிவரும் தருணத்தை அடைந்திருக்கின்றது.

கேள்வி: உங்கள் திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க சிறப்புகள் ஏதாவது உள்ளதா?

முக்கியமாக துப்பாக்கி கத்தி ரத்தம் குத்து சண்டை இல்லாத ஈழத்தமிழர்களுடைய முதலாவது படம் என்று பார்த்தவர்கள் கூறினார்கள். இரட்டை வேட காட்சி மற்றும் ஒருவர் பலராக தோன்றும் காட்சிகள் அமைந்துள்ளது. மக்களுடைய ஆதரவு இத் திரைப்படத்தின் முழு வெற்றிக்கு காரணமாக மட்டும் இல்லாமல் இனி வரும் படைப்புகளுக்கு தூண்டுகோலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. "இனியவளே காத்திருப்பேன்" ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களின் கலையுலக சாதனையில் இன்னுமொரு மைல்கல்.

-இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றிக்கு வாழ்த்துகள் ஈழன் இளங்கோ!

 

7சி வகுப்புக்கு வந்த சமுத்திரகனி

Sattai Team Meet 7c Students

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘7 சி' சீரியல் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டது. 7 சி யின் வகுப்பு ஆசிரியர் ஸ்டாலின் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமானவர். ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்று உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சாட்டை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவும் ஆசிரியர் - மாணவர்களைப் பற்றிய கதைதான். அதில் அரசுப் பள்ளி ஆசிரியராக வரும் தயாளன் மாணவர்களின் நலனுக்காகவும், பள்ளியின் நலனுக்காகவுமே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.

சாட்டையில் தயாளனாக நடித்துள்ள சமுத்திரகனி, இயக்குநர் எம். அன்பழகன், தயாரிப்பாளர் பிரபுசாலமன் ஆகியோர் 7சி வகுப்பு மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடினார்கள். ஆசிரியராக நடித்த சமுத்திரகனியிடம் 7சி வகுப்பு மாணவர்கள் சராமாரியாக கேள்விகளை கேட்டனர்.

சாட்டைப் படத்தின் வசனத்தை அதே வேகத்தோடும் உணர்ச்சியோடும் பேசி மாணவர்களிடம் கைத்தட்டல் பெற்றார் சமுத்திரக்கனி. இறுதியாக பள்ளி மாணவர்கள் அனைவரும் சமுத்திரகனி, பிரபுசாலமன், அன்பழகன் ஆகியோருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அன்றைய தினம் மகிழ்ச்சியாக கழிந்தது 7சி மாணவர்களுக்கு.

 

காஞ்சனாவை ‘3டி’ யில் வெளியிடும் லாரன்ஸ்

Kanchana Re Release 3d   

காஞ்சனா திரைப்படத்தை 3 டி யில் மாற்றி வெளியிட ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்த படம் காஞ்சனா. தமிழில் வெளியான இந்த திரைப்படம் தெலுங்கிலும் வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தை 3 டி யாக மாற்றி மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள ரிபல் தெலுங்குத் திரைப்படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது. இதனையடுத்து காஞ்சனா திரைப்படத்தினை 3 டி யாக மாற்றும் வேலைகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 6 மாதகாலம் வரை ஆகும் என்பதால் புதிதாக ஏதாவது சில காட்சிகளை சேர்க்கலாமா என்று லாரன்ஸ் யோசித்து வருகிறார்.

லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. தலைவர் படம் சிவாஜி 3 டியில் வெளியாக உள்ளது. அதே பாணியில் தனது படமான காஞ்சனாவை 3 டியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.

 

'பர்ஃபி' ரீமேக்கில் சிம்புவா? ஜீவாவா?

Simbu Stepping Into The Shoes Ranbir Kapoor   

யுடிவி தயாரிப்பில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்து வரும் பர்ஃபி இந்திப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. தமிழில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல்களை வெளியாகி உள்ளன.

ரன்பீர்கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா ஆகியோர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் பர்ஃபி. ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தினை தமிழில் ரீமேக் செய்ய யுடிவி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் ரன்பீர் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் யுடிவி தயாரிப்பில் வெளியான முகமூடி படத்தில் ஜீவா நடித்து இருந்தார். எனவே பர்ஃபி ரீமேக்கில் ஜீவாவையே நடிக்க வைக்கலாமா என்று அந்த நிறுவனத்தினர் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து கூறியுள்ள சிம்பு, பர்ஃபி சிறந்த படம். மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த படத்தை இரண்டு முறை நான் பார்த்திருக்கிறேன். இதன் ரீமேக்கில் நடிப்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.

இந்தியில் வெளியான த்ரி இடியட்ஸ், டெல்லி பெல்லி போன்ற திரைப்படங்கள் தமிழில் சமீபத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பர்ஃபி படமும் ரீமேக் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

சந்தானத்தின் ஒருநாள் சம்பளம் ரூ.10 லட்சம்!

Santhanam Charges 10 Lakhs Per Day

சந்தானத்தின் காட்டில் அதிர்ஷ்ட மழை பொழிவதால் 1 நாள் 2 நாள் கால்சீட் என்றால் நோ சொல்லிவிடுகிறாராம். 10 நாள் 20 நாள் என்றால் மட்டுமே கால்சீட் தருகிறாராம். இதற்கு காரணம் லம்பாக பணம் கிடைக்கும் என்பதுதான் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தில்

காமெடி நடிகர்களைப் பொறுத்தவரை நாள் கணக்கில் தான் சம்பளம் கொடுப்பார்கள். சந்தானத்துக்கும் அப்படி தான். அவரது ஒரு நாள் சம்பளம் 10 இலட்சம். ஒரு படத்திற்கு தொடர்ந்து 10 நாள் நடித்துக் கொடுத்தால் அவருக்கு கிடைப்பது 1 கோடி. இது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளின் சம்பளத்தை விட அதிகம். இதனால் சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகளை 2 அல்லது 3 நாட்களில் முடிக்கவே இயக்குனர்கள் முயற்சி செய்கின்றனர். தற்போது சந்தானம் போட்டிருக்கும் இந்த புதிய நிபந்தனையினால், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் கலங்கிப் போய் இருக்கின்றனர். 20 நாள் என்றால் சந்தானத்தின் சம்பளம் 2 கோடியா என்று அனைவரும் வாயைப் பிளந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பதால், மீண்டும் அவரிடமே செல்கின்றனர்.

சந்தானத்தை ஒதுக்கியவர்கள் எல்லாம், இன்று அவரது கால்ஷீட்டுக்காக தவம் இருக்கின்றனர். இந்த வரிசையில் சில முன்னணி இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் சந்தானம்.

 

'களிமண்ணு' படத்திற்காக மலையாள நடிகை சுவேதா மேனனின் நிஜ பிரசவ காட்சி படப்பிடிப்பு

மும்பை: பிரபல மலையாள நடிகை சுவேதா மேனனின் உண்மையான பிரசவ காட்சியை, களிமண்ணு என்ற திரைப்படத்திற்காக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

malayalam actress shweta menon s reality   
Close
 
நடிகை சுவேதா மேனன். இவர் தமிழில் 'நான் அவன் இல்லை 2, ‘சாது மிரண்டால், ‘அரவான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்து வந்த சுவேதாவுக்கும், மும்பையில் பத்திரிக்கை ஆசிரியராக உள்ள ஸ்ரீவல்சன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் தனது பிரசவ காட்சியை படமாக்க அனுமதித்துள்ளதாக சுவேதா ஏற்கனவே தெரிவித்திருந்தார். நேற்று மதியம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று மாலை 5.27 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

சுவேதா மேனன் ஏற்கனவே கூறியது போல, அவரது பிரசவ காட்சியை, 'களிமண்ணு' என்ற மலையாள திரைப்படத்திற்காக படப்பிடிக்க அனுமதிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற பிரசவத்தை இயக்குனர் பிளஸி படம் பிடித்தார். பிரசவத்தின் முடிவில் சுவேதா மேனன் தனது குழந்தைக்கு முத்தமிடுவதுடன் படப்பிடிப்பு முடிந்தது.

இந்தியாவிலேயே ஒரு நடிகை உண்மையிலேயே பிரவசத்தில் இருக்கும் காட்சி படப்பிடிப்பு நடத்துவது இதுவே முதல் முறையாகும். படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிபி ஜேக்கப் மற்றும் 2 உதவியாளர்கள், சுவேதா கணவர் ஸ்ரீவல்சன் ஆகியோர் பிரசவத்தின் போதும் காட்சி படமான போதும் உடனிருந்தனர்.

'களிமண்ணு' படத்தில் சுவேதா மேனன், பிஜூ மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். கர்ப்பிணியாக உள்ள போது ஒரு தாய்க்கும், சேய்க்கும் இடையிலான அன்பு எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுவதாக, 'களிமண்ணு' படத்தின் கதை அமைந்துள்ளது. இதற்காக சுவேதா மேனன் கர்ப்பம் தரித்தது முதல் பல கட்டங்களாக, படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

இரண்டாவது கதாநாயகியா நடிச்சா என்ன தப்பு?: பியா

Piaa Avoids Glamor Roles   

இரண்டாவது கதாநாயகியாக நடித்தாலும் என் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பதிந்து விடுகிறது அதனால் இரண்டாவது கதாநாயகி வேடம் பற்றி நான் கவலைப்படவில்லை என்று நடிகை பியா கூறியுள்ளார்.

கோவா, கோ உள்ளிட்ட பல படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் பியா. தொடர்ந்து இரண்டாவது கதாநாயகியாகவே நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கிறதாம். இது குறித்து கருத்து கூறிய பியா," சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும், நல்ல வேடங்களாக இருந்தால் நடிக்க சம்மதிக்கிறேன். கோ மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் இரண்டாவது கதாநாயகியாக தான் நடித்திருந்தேன். ஆனால் அந்த வேடங்கள் ரசிகர்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தியது எனவே இரண்டாவது கதாநாயகியாக நடிப்பது பற்றி வருத்தப்படவில்லை என்றார். கவர்ச்சி நடிகை என்ற முத்திரையை மாற்றும் வகையில் யாராவது கவர்ச்சி இல்லாத வேடங்கள் கொடுத்தால் உடனே நடிக்கத் தயார் என்றும் பியா கூறினார்.

பியா தற்போது சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். பியாவுடன் பிந்து மாதவி, ரீமா சென் போன்றோரும் இந்தப் படத்தில் இருக்கின்றனர். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தி படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

 

ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி

Rajini S Praise Sridevi

இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த ரஜினிகாந்த் ஹீரோயின் ஸ்ரீதேவியை புகழ்ந்து தள்ளிவிட்டாராம். இதனால் மகிழ்ந்து போயிருக்கிறார் ஸ்ரீதேவி.

1980 களில் ரஜினிகாந்துடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி. பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ஆனவை. இந்தி பட வாய்பிற்குப் பின்னர் பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி போனிகபூரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

தற்போது கௌரி இயக்கத்தில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப்பின்னர் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்' படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சியை சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். அதில் ஸ்ரீதேவியின் நடிப்பை பார்த்து வெகுவாகப் புகழ்ந்தாராம். படத்தில் என்னுடைய நடிப்பு ரஜினி மிகவும் பிடித்திருந்தது என்று ஸ்ரீதேவி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

கண்ணதாசனின் பேத்தியுடன் நடிகர் ரிச்சர்டுக்கு நிச்சயதார்த்தம் - அஜீத் பங்கேற்பு!

Actor Richard S Marriage Engagement

நடிகை ஷாலினியின் சகோதரரும் அஜீத்தின் மைத்துனருமான ரிச்சர்டுக்கும் தயாரிப்பாளர் சத்யலட்சுமிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

கிரிவலம், நாளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ரிச்சர்ட். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

ஏன் இப்படி மயக்கினாய், ரெண்டாவது படம், கூத்து போன்ற படங்களில் இப்போது நடித்து வருகிறார். ரிச்சர்ட்டுக்கும் கவிஞர் கண்ணதாசனின் பேத்தி சத்திய லட்சுமிக்கும் திருமணம் முடிவாகியுள்ளது.

பொன்மாலை பொழுது என்ற படத்தைத் தயாரித்துள்ளார் சத்யலட்சுமி.

ரிச்சர்ட் - சத்தியலட்சுமி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. காலை 10.30 மணி முதல் பகல் 1 மணிவரை நிச்சயதார்த்த சடங்குகள் நடந்தன.

இதில் நடிகர் அஜீத் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்காவுடன் கலந்து கொண்டார். வருகிற ஜனவரியில் திருமணம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

 

சன்னி லியோனுக்கு யாரும் வீடு தர மறுக்கிறார்களாம்!

No Home Porn Star Sunny Leone Mumbai    | ஜிஸ்ம் 2  

மும்பை: கவர்ச்சியில் உச்சம் தொட்ட நடிகை சன்னி லியோனுக்கு மும்பையில் யாரும் வீடு தர மறுக்கிறார்களாம்.

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிப் பெண் இந்த சன்னி லியோன். மாடலாக வாழ்க்கையை ஆரம்பித்தவர், பின்னர் ஆபாசப் பட நடிகையாகிவிட்டார்.

இவரது எக்கச்சக்க ஆபாச வீடியோக்கள் இப்போதும் ஆன்லைனில் உள்ளன. இந்த நேரத்தில்தான் ஜிஸ்ம் 2 இந்திப் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது.

இந்தப் படம் சுமாராக இருந்தாலும், சன்னியின் கவர்ச்சிக்காக நல்ல வசூலைக் குவித்தது. இதைத் தொடர்ந்து இனி ஆபாசப்படங்களில் நடிக்காமல், இந்திப் படங்களில் முழு கவனத்தையும் செலுத்தப் போவதாக அறிவித்தார். அத்துடன் மும்பையிலேயே குடியேறவும் முடிவு செய்துள்ளார்.

ஆனால் சன்னி லியோனுக்கு வீடு வாடகைக்கு தர பலரும் மறுத்துவிட்டனர்.ஆபாச நடிகைக்கு வீடு தர முடியாது என கூறுகிறார்களாம்.

சரி, வாடகைக்குதானே வீடு தர மறுக்கிறார்கள்? சொந்தமாகவே ஒரு வீட்டை வாங்கிவிடலாம்... உடனே ஏற்பாடு செய்யுங்கள் என புரோக்கர்களிடம் கூறிவிட்டாராம் சன்னி லியோன்!

 

கிராமத்து மணம் கமழும் பரவை முனியம்மா சமையல்

Suvaiyo Suvai Kalaignar Tv Show

சமையல் செய்வது அனைவருக்கும் கை வந்து விடாது அதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். அதுபோலத்தான் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும், அதை செய்து காட்டுவதும் எல்லோராலும் சிறப்பாக செய்து விட முடியாது. கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிபரப்பாகும் ‘சுவையோ சுவை' நிகழ்ச்சியில் பரவை முனியம்மா வின் ‘கிராமத்து சமையல்' சிறப்பானதாக அமைந்துள்ளது.

சமையல் செய்வது பாரம்பரியம் மிக்க மண் சட்டிகளில்களில்தான். பக்குவமாக வறுத்து அவற்றை அம்மியில் அரைத்து பாட்டி செய்யும் சமையல் பக்குவமே தனிதான். வறுக்கும் போது ஒரு பாட்டு, கறி வேகும் போது ஒரு பாட்டு என கலந்து கட்டி அடிக்கிறார். கண் பார்வைக்கு ஏற்ற பொன்னாங்கண்ணி கீரை பொறியல் ஆகட்டும், சளி, ஜலதோசத்திற்கு மருந்தாக சமைத்த இளந்தேங்காய் பொரியல் அற்புதமான சமையல். அம்மாவின் கைமணமும், பாட்டி வைத்தியமும் கலந்த ரசனையான சமையல் அது.

கிராமத்து திருவிழாக்களில் பாட்டுக்களை பாடி தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக்கொண்டிருந்த பரவை முனியம்மா தூள் படத்தின் மூலம் சினிமாவில் காலடி வைத்தார். பின்னர் சன் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில் களம் இறங்கி பாரம்பரிய சமையலை கற்றுக்கொடுத்தார். இப்பொழுது கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மதியம் விதம் விதமான கிராமத்து விருந்தினை சமைத்து உணவே மருந்து என்று நிரூபித்து வருகிறார். சமையல் ரசிகர்கள் கொஞ்சம் பரவை முனியம்மாவின் கிராமத்து சமையலையும் பார்த்து ரசிக்கலாமே.

 

டிஸ்கவரி சேனலில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை சரித்திரம்

Discovery Celebrates The Epic Life Neil Armstrong

தமிழ் சேனல்களைப் பார்த்து போரடித்துப் போனவர்கள், கொஞ்சம் டிஸ்கவரி, அனிமல் பிளானட், என்ஜிசி என சேனலை திருப்பிப் பாருங்களேன். அற்புதமான, மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. டிஸ்கவரி தமிழில் இந்த வாரம் ஞாயிறு இரவு 8 மணிக்கு நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை சரித்திரம் ஒளிபரப்பாக உள்ளது.

மனிதப்பிறவி எடுக்கும் அனைவருமே சாதனையோ, சரித்திரமோ படைப்பதில்லை. சிலர் மட்டுமே சாதனை படைத்து வரலாற்றில் நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் சாதனையும் சரித்திரத்தில் இடம்பெற்று விட்ட முக்கிய நிகழ்வு என்றே கூறலாம்.

நிலவில் காலடி வைத்த நீல்ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆகஸ்ட் 25 ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையும் விண்வெளி ஆய்வில் அவரது கணக்கற்ற பங்களிப்புகளையும் கொண்டாடும் வகையில், டிஸ்கவரி சேனல் `ஒன் ஜெயன்ட் லீப் : எ நீல் ஆம்ஸ்ட்ராங் ட்ரிபியூட்` என்ற நிகழ்ச்சியை ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்புகிறது. ஒருமணிநேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் நீல் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சியின் காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன.

நிகழ்ச்சியில் அவருடன் நிலவுக்கு பயணித்த குழு உறுப்பினர்களான ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் ஆம்ஸ்ட்ராங் உடனான நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். அப்போல்லோ -11 விண்கலத்தில் அவர்களின் பயணம் அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளிலிருந்து நிலவில் நடந்த தருணம் மற்றும் மீண்டும் பூமியில் இறங்கிய தருணம் வரை முழுமையான அந்த பரவச சாதனைப் பயணமும் இடம் பெறுகிறது.

நீல் ஆம்ஸ்ட்ராங் பிரம்மிக்கத்தக்க சாதனையை படைத்து இந்த உலகத்தில் அதற்கான அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியை அவருக்கு சமர்ப்பிப்பதாக டிஸ்கவரி சேனலில் தெற்காசிய பொது மேலாளர் கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை அற்புதமான அறிவியலும் தொழில்நுட்பம் இணைந்த மகத்தான கலவை. இந்த வாழ்க்கைக் கதை இணையற்ற உணர்ச்சியைத் தருவதுடன், உலகின் சிறப்பு மிக்க வரலாற்றுத் தருணத்தின் ஒரு காட்சியையும் வருங்காலத்திற்கு உணர்த்துகிறது. ஞாயிறு இரவு 8 மணி முதல் 9 மணிவரை கண்டு டிஸ்கவரி தமிழில் அதனை ரசிக்கலாமே. இந்த சிறப்பு நிகழ்ச்சி உலகம் முழுவம் 200 நாடுகளில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தாண்டவம் - திரை விமர்சனம்

எஸ். ஷங்கர்
நடிப்பு: விக்ரம், எமி ஜாக்ஸன், அனுஷ்கா, சந்தானம், ஜெகபதிபாபு, நாசர்
இசை: ஜிவி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
பிஆர்ஓ: ஜான்சன்
தயாரிப்பு: யுடிவி
எழுத்து - இயக்கம்: விஜய்
ஏகப்பட்ட பரபரப்பைக் கிளப்பியபடி வெளியாகியிருக்கும் தாண்டவம், ஒரு வழக்கமான பழி வாங்கல் கதைதான். ஆனால் அதற்கு லண்டன் லொகேஷன், கலர் கலராக ஹீரோயின்கள், ஸ்டைலிஷ் மேக்கிங் என கோட்டிங் கொடுத்து, பார்க்க வைத்துவிடுகிறார் இயக்குநர் விஜய்.

thaandavam movie review   

இந்தியாவின் முதன்மையான ரா அதிகாரிகளுள் ஒருவரான விக்ரமுக்கு, தீவிரவாதிகளைக் களையெடுக்கும் வேலை. அவருடைய சக அதிகாரி ஜெகபதிபாபு.திடீரென ஊரில் விக்ரமுக்கு திருமணம் நிச்சயமாகிறது. வேண்டா வெறுப்பாக வருபவர், அனுஷ்காவைப் பார்த்ததும் மனம் மாறி மணக்கிறார். திருமணமான கையோடு வேலை விஷயமாக மனைவியுடன் லண்டன் கிளம்புகிறார். அங்கே வில்லன்கள் சதியில் மனைவியை இழக்கிறார்.. கூடவே தன் இரு கண்களையும்!

இதற்குக் காரணமான 5 வில்லன்களை கண்தெரியாத விக்ரம் எப்படி பழி தீர்க்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

இந்தக் கதைதான் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் பல முறை அடித்துத் துவைக்கப்பட்ட சமாச்சாரமாச்சே... அதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்... வழக்கு.. பஞ்சாயத்து.. ராஜினாமாக்கள்? என்ற கேள்விதான் முதலில் எழுகிறது.

தெரிந்த கதை, யூகிக்கும் காட்சி நகர்வுகளைக் கூட சுவாரஸ்யமாய் சொல்வது ஒரு திறமைதான். அந்த வகையில் இயக்குநர் விஜய் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார் என்பது எவரெஸ்டில் எக்கச்சக்க பனி என்பது மாதிரி ரொம்ப வழக்கமான சொல்லாடல். ஆனால் அவர் முகத்தில் எட்டிப் பார்க்கும் முதுமை டூயட் காட்சிகளில் நெருடுகிறது. எக்கோலொகேஷன் முறையில், காதுகளைக் கண்களாக அவர் பாவிக்கும் காட்சிகளில் சில ஓஹோ ரகம்.. சில காதுல பூ சமாச்சாரம்.

அனுஷ்கா, எமி ஜாக்ஸன், லட்சுமி ராய் என மூன்று ஹீரோயின்கள். மூவரில் அனுஷ்காவுக்கே வாய்ப்புகளும் கைத்தட்டல்களும் அதிகம்.

படத்தில் ஒரு இளைப்பாறல் என்றால் அது டாக்சி ட்ரைவராக சந்தானம் வரும் காட்சிகள்.

வெட்டி ஆபீசராக வருகிறார் நாசர்.

தன்னை வளைக்கும் லண்டன் போலீசை, நிராயுதபாணியாக இருக்கும் விக்ரம் சுட்டுக் கொல்லும் காட்சி, சந்தானம் காமெடியைவிட டாப்!!

அதேபோல, அந்த தீவிரவாதிகளை அழிக்கப் போடும் பிளானை பென் ட்ரைவில் அனுப்புவது. 'என்னப்பா... இன்னும் கடுதாசி காலத்திலேயே இருக்கீங்களே' என்ற கமெண்டடிக்கும் அளவுக்கு இப்படி சில காட்சிகள். தவிர்த்திருக்கலாம்.

படத்தில் ஈர்க்கும் விஷயம் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. வேண்டா வெறுப்பாக கேட்க வைக்கும் விஷயம் ஜிவி பிரகாஷின் இசை. கிராமத்துப் பாடல் என்ற பெயரில் அவர் 'படுத்தியிருக்கும்' அனிச்சம் பூவழகியைக் கேட்ட பிறகு... 'தம்பி, நீங்க இன்னும் நல்ல கிராமிய இசை கேட்கணும்!'

ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களைச் சந்தித்ததாலோ என்னமோ பெரிய ஈர்ப்போ எதிர்ப்பார்ப்போ இல்லாமல்தான் தாண்டவம் படத்தைப் பார்க்க நேர்ந்தது.

அதுகூட ஒருவிதத்தில் நல்லதுதான். தாண்டவம் ஆனந்த தாண்டவமாக இல்லையென்றாலும், மோசமான ஆட்டம் என்று சொல்லும்படி இல்லை. கதையில் சறுக்கினாலும், காட்சிப்படுத்திய விதத்தில் பார்வையாளர்கள் கவனத்தை வென்றிருக்கிறார் விஜய்!

Read in English: Thaandavam Movie Review
 

டான்ஸில் அம்மா, நடிப்பில் அப்பாவை நினைவுபடுத்தும் ஸ்ருதி: அக்ஷய் குமார்

Shruti Reminds Akshay Kamal Sarika   

மும்பை: ஸ்ருதி ஹாஸனின் நடிப்பு அவரது அப்பா கமலை நினைவுபடுத்துவதாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாஸன் தற்போது பிரபுதேவா இயக்கத்தில் தமிழில் வெளியான உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்கின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இதற்காக பிரபுதேவாவிடமே நடனம் கற்றுக்கொண்டுள்ளார். பாலிவுட் மூலமாகத் தான் ஸ்ருதி நடிகையானார். அவரது முதல் படமான லக் கை கொடுக்காவிட்டாலும் தற்போது ரீமேக் மன்னன் என்று பாலிவுட்டில் பெயர் எடுத்துள்ள பிரபுதேவாவின் படம் ஸ்ருதி மார்க்கெட்டை அங்கே தூக்கி நிறுத்தும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ருதியைப் பற்றி இந்தி நடிகர் அக்ஷய் குமார் கூறுகையில்,

ஸ்ருதியின் நடனத்தைப் பார்க்கையில் அவரது அம்மா சரிகா ஞாபகம் வருகிறது. அவரது நடிப்பைப் பார்க்கையில் அப்பா கமல் ஹாஸன் ஞாபகம் வருகிறது. ஸ்ருதி ஒரு சமத்துப் பொண்ணு என்றார்.

 

'தல' அஜீத்தின் அடுத்த படத்தலைப்பு என்ன தெரியுமா?

சென்னை:

அஜீத்தின் குமாரின் அடுத்த படத்தின் தலைப்பு என்ன என்பது தெரிந்துவிட்டது.

அஜீத்தின்அடுத்த படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் அல்ல. அந்த படத்தின் தலைப்பை இன்னும் ரகசியமாகத் தான் வைத்துள்ளனர். நாம் சொல்வது அஜீத்தின் 53வது படத்தின் தலைப்பு. அதாவது விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு அவர் சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த படம் அஜீத்தின் 53வது படமாகும். அதன் தலைப்பு தான் கசிந்துள்ளது. 'வெற்றி கொண்டான்', தலைப்பு எப்படி இருக்கு? இப்படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் சொல்கிறோம். வெற்றி கொண்டான் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.

அதென்ன வெற்றி கொண்டான் என்று நம்மிடம் தலைப்பைத் தெரிவித்தவர்களிடம் கேட்டதற்கு, அஜீத்தின் இமேஜிற்கு இந்த தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை தேர்வு செய்துள்ளனர் என்றனர்.

 

'தல' அஜீத்தின் அடுத்த படத்தலைப்பு என்ன தெரியுமா?

28 Ajith Kumar S Next Movie Title Revealed

சென்னை: அஜீத்தின் குமாரின் அடுத்த படத்தின் தலைப்பு என்ன என்பது தெரிந்துவிட்டது.

அஜீத்தின்அடுத்த படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் அல்ல. அந்த படத்தின் தலைப்பை இன்னும் ரகசியமாகத் தான் வைத்துள்ளனர். நாம் சொல்வது அஜீத்தின் 53வது படத்தின் தலைப்பு. அதாவது விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு அவர் சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த படம் அஜீத்தின் 53வது படமாகும். அதன் தலைப்பு தான் கசிந்துள்ளது. 'வெற்றி கொண்டான்', தலைப்பு எப்படி இருக்கு? இப்படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் சொல்கிறோம். வெற்றி கொண்டான் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.

அதென்ன வெற்றி கொண்டான் என்று நம்மிடம் தலைப்பைத் தெரிவித்தவர்களிடம் கேட்டதற்கு, அஜீத்தின் இமேஜிற்கு இந்த தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை தேர்வு செய்துள்ளனர் என்றனர்.

 

'மசாஜ்' செய்வதில் கிரிக்கெட் வீரர் ஆசிப் 'சூப்பர்'... புளகாங்கிதமடையும் வீணா மாலிக்!

மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ஆசிப்புடன் முன்பு தீவிரக் காதலில் இருந்தவரான பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் தனது பழைய காதல் மற்றும் காதலர் குறித்து உணர்ச்சிமயமாக பேசியுள்ளார். ஆசிப், மசாஜ் செய்து விடுவதில் வல்லவர் என்றும் அவர் புளகாங்கிதத்துடன் கூறியுள்ளார்.

mohd asif was better at foot massage
Close
 
கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் ஆசிப் சிக்க ஒரு வகையில் வீணா மாலிக்கும் கூட காரணம்தான். ஆசிப்புக்கு கிரிக்கெட் புக்கிகளுடன் தொடர்பு இருப்பதை வீணாதான் உறுதி செய்தார். ஆனால் இந்த விவகாரத்திற்கு முன்பு இருவரும் நெருக்கமான காதலர்களாக இருந்தனர். காதல் முறிந்த பின்னர்தான் ஆசிப்பைப் போட்டுக் கொடுத்து விட்டார் வீணா.

இந்த நிலையில் தனது பழைய காதல் குறித்துப் பேசியுள்ளார் வீணா. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆசிப்புடன் இருந்த நாட்கள் அருமையானவை. அவரை நான் நிறைய மிஸ் செய்கிறேன். எனக்காகவே இருந்தவர் ஆசிப்.

அவருடன் நான் இருந்தபோது எனக்கு கால்களில் அருமையாக மசாஜ் செய்வார். உண்மையில் அவர் நல்ல கிரிக்கெட் வீரர் என்பதை விட நல்ல மசாஜ் செய்பவர் என்றுதான் நான் சொல்வேன் என்று கூறியுள்ளார் வீணா.

மறுபடியும் 'மசாஜுக்காக' ஆசிப்பை அணுகும் திட்டத்தி்ல உள்ளாரோ வீணா...!

 

நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேம்பா: மல்லிகா ஷெராவத்

I Dont Think I Will Ever Get Married Mallika Sherawat

மும்பை: தான் கல்யாணமே செய்துகொள்ளப் போவதில்லை என்று பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கும், ஹாலிவுட் நடிகர் ஆன்டனியோ பண்டாரஸு்க்கும் காதல் என்று பேசப்படுகிறது. மல்லிகாவால் தான் பண்டாரஸின் மனைவி பிரிந்து சென்றார் என்று கூட கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் திருமணம் குறித்து மல்லிகா ஷெராவத் கூறுகையில்,

நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன். திருமணம் ஓல்டு பேஷன். சிங்கிளாக இருக்கத் தான் பிடித்திருக்கிறது. எனது ரசிகர்களின் அன்பை எதற்காக நான் இழக்க வேண்டும்?

எந்த மாதிரி கணவர் வேண்டும் என்று நான் யோசித்துப் பார்த்ததே இல்லை. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் படங்களில் நடித்து வருகிறேன். அதனால் பிசியாக இருக்கிறேன் என்றார்.

முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற மல்லிகா ஆன்டனியோ பண்டாரஸுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியதுடன், நடனமும் ஆடினார். அதன் பிறகு பண்டாரஸுடன் விடுமுறையைக் கழிக்க பாரீஸ் செல்வதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பட்டையை கிளப்பப் போகும் ராகவா லாரன்ஸ்சின் ‘ரிபல்’

Rebel Gets A

தெலுங்குத் திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே ரிலீசாகிறது ‘ரிபல்' திரைப்படம். நம்ம ஊர் ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபாஸ், தமன்னா நடித்துள்ளனர். வியாபாரத்தின் போதே நாற்பது கோடியை தொட்டுவிட்டது. படத்தின் ஆடியோ ஏற்கனவே ஹிட் அடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு சென்சாரில் ‘ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள் இருந்தாலும் ஒருவாரத்திற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டன.

லாரன்ஸ்சின் காமெடி ப்ளஸ் ஆக்சன் பாணி படம்தான் இதுவும் எழுத்து இயக்கத்துடன் இசையும், நடனமும் சேர்ந்து தன்னால் எதுவும் முடியும் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் லாரன்ஸ். காஞ்சனா வெற்றிக்குப் பின்னர் லாரான்ஸ்சுக்கு தெலுங்கில் இது சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நாகர்ஜூனாவை வைத்து லாரன்ஸ் இயக்கிய ‘மாஸ்' திரைப்படம் பெறும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

'பாட்ஷாவும் நானும்...' - ரஜினி பற்றி சுரேஷ் கிருஷ்ணா புத்தகம்!

Suresh Krishna Writes Book On His Experience

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தான் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்களை பாட்ஷாவும் நானும் என்ற பெயரில் தனி புத்தகமாக எழுதியுள்ளார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

அண்ணாமலை, வீரா, பாட்ஷா மற்றும் பாபா என நான்கு படங்களில் ரஜினியை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.

இந்த படங்களில் ரஜினியுடன் ஏற்பட்ட நட்பு, அனுபவங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிடுகிறார்.

இந்தப் புத்தகம் குறித்து சுரேஷ் கிருஷ்ணா தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு இது:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் என்றும் பசுமை நிறைந்த வெற்றிகளான, அண்ணாமலை, பாட்ஷா, வீரா திரைப்படங்களின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, மேற்கண்ட திரைப்படங்களின் திரையாக்கத்தை இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக புத்தக வடிவில் பதிவு செய்துள்ளார்.

அனைத்து விதமான சுவாரசிய சம்பவங்களும், ‘பன்ச்' வசனங்கள் உருவான விதமும், இசை மெட்டுக்கள் உருவான விதமும், இசைக்கோர்ப்புகளின் சூழலும், சண்டைக் காட்சிகளின் சூழ்நிலை விவாதங்களும் எளிய நடைமுறையில் இடம் பெற்றுள்ளன.

அது மட்டுமல்லாமல் ரஜினிகாந்தின் மறுபக்கம், தினசரி படப்பிடிப்பு முடிந்ததும், அவர் எப்படி இருப்பார், ‘மேக்கப்' புடன் இருக்கும் போது அவருடைய கதாபாத்திரத்துடன் ஒன்றி இருக்கும் மனநிலை, வெள்ளோட்ட காட்சியின் போது ஏற்படும் பதட்டம், முதல் பட நடிகன் போன்ற அவரின் செயல்பாடுகள் ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன.

ஒரு சாதாரண மனிதனாக, அசாதாரண உச்சநட்சத்திரம் ரஜினிகாந்தைப் பற்றிய இப் புத்தகம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் வெளிவருகிறது.

‘பாஷாவும் நானும்' என இப்புத்தகத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் ‘My Days With Baasha'என்ற பெயரில் இப்புத்தகம் தயாராகியுள்ளது.

 

இன்னிக்கு தாண்டவம் மட்டும்தான்!

Thaandavam Releasing Big Today   

இந்த வாரம் வெள்ளிக்கிழமை தாண்டவம் படம் மிகப் பிரமாண்டமாக வெளியாகிறது. பெரிய படம் என்பதால், இந்தப் படத்துடன் வேறு படங்கள் போட்டியிடவில்லை.

யுடிவி தயாரிப்பில், இயக்குநர் விஜய் உருவாக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம்-அனுஷ்கா -எமி ஜாக்ஸன் - ஜெகபதி பாபு நடித்துள்ளனர்.

ஜிவி. பிரகாஷ்குமார் இசையமைக்க, பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார்.

கதைப் பிரச்சினை, தலைப்புப் பிரச்சினை, உதவி இயக்குநர்கள் எதிர்ப்பு என பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.

சென்னையில் மட்டும் 55 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் 750-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகியுள்ளது.

படம் பற்றி எதிர்ப்பார்ப்பு பெரிதாக இருந்ததால், அட்வான்ஸ் புக்கிங் திருப்திகரமாக இருந்ததாக திரையரங்குகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தோடு ராகவா லாரன்ஸ் இயக்கிய தெலுங்குப் படம் ரிபெல், பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்திப் படம் கமால் தமால் மலாமால், அக்ஷய் குமாரின் ஒ மை காட், ஹாலிவுட் படம் ரெஸிடென்ட் ஈவில் ஆகியவையும் வெளியாகின்றன.

 

நீர்குமிழியில் தொடங்கிய திரை வாழ்க்கை: பாலசந்தர்

K Balachandar Look Back On His Films Tirumbipaarkiren

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் செப்டம்பர் மாதம் முழுவதும் திங்கள் முதல் வெள்ளி வரை இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் அனுபவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

மலரும் நினைவுகள் என்றைக்கும் இனிமையானவை. அந்த நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்து மகிழ்வது அனைவருக்கும் பிடித்தமானது. அதுவும் பிரபலமானவர்களின் நினைவுகளை அவர்களின் மூலமே தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்டதுதான் திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சி. செப்டம்பர் மாதம் முழுவதும் கே. பாலசந்தர் தன்னுடைய திரை உலக வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பகிர்ந்துகொண்டார்.

மேடைநாடகங்களில் வெற்றிகரமான இயக்குநராக, கதாசிரியராக அறியப்பட்ட கே. பாலசந்தர் 1965-ம் ஆண்டு நீர்க்குமிழி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர்.

இத்திரைப்படம் மிகுந்த வெற்றிப் படமாக அனைவராலும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், புன்னகை, இரு கோடுகள், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்று முடிச்சு போன்ற தொடர் வெற்றிப்படங்களை இயக்கினார். அவர்கள், அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, என பெண்களின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இயக்குனர் சிகரம் பெருமைக்குரியவராக போற்றப்பட்டவர் கே.பாலசந்தர். இவர் இயக்கியவை பெரும்பாலும் மனித உறவுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறும் திரைப்படங்களாக திகழ்ந்தன. அந்த அனுபவங்களையும், அதற்கான கதைக்களம் உருவான விதம் பற்றியும் பாலசந்தர் பகிர்ந்து கொண்டார்.

பழைய திரைப்படங்களை மட்டுமல்லாது இன்றைய இளைஞர்களுக்கு படிப்பினை தரக்கூடிய வகையில் எடுக்கப்பட்ட ‘வானமே எல்லை' திரைப்படம் பற்றி கூறியது சுவாரஸ்யமாக இருந்தது. வாழ்க்கையை வெறுத்துப்போய் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இருந்து வெளியேறிய ஐவர் ஒன்றாக சந்தித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பதும். இறுதியில் காந்தி ராமன் என்ற மாற்றுத்திறனாளியின் சாதனையை கண்டு மனம் மாறுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கிளைமேக்ஸ் என்று கூறினார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரிதா, சுஜாதா போன்ற பல முன்னணி நடிகர்-நடிகைகளை திரையுலகிற்கு அறிமுகம் செய்த பின்னணியையும் கூறினார். இவர் ஒவ்வொரு திரைப்படம் பற்றி கூறும் போதும் அதிலிருந்து சிறப்பான காட்சிகள் ஒளிபரப்பானது. நான்கு வாரமும் ஒளிபரப்பான இவருடைய வாழ்க்கை அனுபவங்கள் வரும் தலைமுறை இயக்குநர்களுக்கு நிச்சயம் ஒரு பாடமாக அமையும்.

 

சூப்பர் சிங்கர் ஜூனியரில் வீடு வெல்லப்போவது யார்?

Super Singer Junior 3 Finalist

தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் மூன்று போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வைல்ட் கார்டு சுற்று மூலம் இன்னும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிப்போட்டியில் முதலாவதாக வெற்றி பெருபவர்களுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 இப்பொழுது அரையிறுதிச் சுற்றை எட்டியுள்ளது. நான்கு போட்டியாளர்கள் இப்பொழுது முதல் மூன்று இடங்களுக்காக போட்டி போட்டு வருகின்றனர். இறுதிச்சுற்றில் முதலிடத்தைப் பிடித்து 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை வெல்லப்போவது யார் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 கடந்த 2011 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் போட்டியாளர்களை தேர்வு செய்தனர். இறுதியில் 25 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல சுற்றுகள் மூலம் அரை இறுதிச் சுற்றுக்கு நான்கு பேர் தேர்தெடுக்கப்பட்டனர். பாடகர் மனோ, சித்ரா, மால்குடி சுபா ஆகியோர் நடுவர்களாக இருந்து செல்லக்குரல்களை தேர்ந்தெடுத்தனர். இறுதிச் சுற்றுக்கான மூன்று போட்டியாளர்களை பாடகி சாதனா சர்க்கம் மனோ, மால்குடி சுபா ஆகியோர் தேர்ந்தெடுத்தனர். சுகன்யா, பிரகதி, கௌதம் ஆகியோர் இறுதிச்சுற்றில் நுழைந்துள்ளனர்.

வைல்ட்கார்டு சுற்று நடைபெறுகிறது. போட்டியில் இருந்து வெளியேறிய 10 குழந்தைகள் மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்று பாடத் தொடங்கியுள்ளனர். அவர்களில் வெற்றி பெரும் ஒருவருக்கு இறுதிச்சுற்றில் பாட வாய்ப்பு வழங்கப்படும். இவர்களுக்கு உற்சாகமூட்ட உன்னிமேனன், உஷா உதூப், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட சிறப்பு நடுவர்களும் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை மா.பா.க ஆனந்த், பாவனா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். சூப்பர் சிங்கர் ஜூனியராக தேர்ந்தெடுப்படுபவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்று பரிசளிக்கப்படும்.

 

டான்ஸ் மாஸ்டருக்கு நிறைய வேலையிருக்கு – ஜான்பாபு

Athiradi Aattam Dance Master S Interview

பாடலுக்கு ஏற்ப நடனம் அமைப்பது சாதாரண காரியமில்லை. அது திரைப்பட இயக்குநரைப் போல சிக்கலான விஷயம்தான் என்று உணர்த்தினார் நடன இயக்குநர் ஜான் பாபு.

ஜெயா டிவியின் அதிரடி ஆட்டம் நிகழ்ச்சியில் பேசிய ஜான்பாபு தான் நடனம் அமைத்த திரைப்படங்களில் தன்னுடைய பணியாற்ற இயக்குநர், கேமராமேன் ஆகியோர் தன்னுடன் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர் என்பதையும் ஆர்வமாய் தெரிவித்தார்.

ஒரு பாடலுக்கான நடனம் நன்றாக அமைய நடன இயக்குநரின் ஐடியாக்களை திரைப்படத்தின் இயக்குநரும், கேமராமேனும் புரிந்து கொண்டால் மட்டுமே அந்த நடனம் நன்றாக அமையும் என்றும் கூறிய ஜான்பாபு தன்னுடைய நடனத்தின் மீது இயக்குநர்கள் அதிக நம்பிக்கை வைத்தனர் என்று கூறினார்.

தித்திக்குதே படத்தில் அறிமுகமான ஜீவா விற்கு முதல் முதலாக நடனம் அமைத்த விதத்தினை ஜான்பாபு கூறிய விதம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜெயா டிவியில் செவ்வாய்கிழமை தோறும் 6.30 மணி ஒளிபரப்பாகும் 'அதிரடி ஆட்டம்' நிகழ்ச்சியில் வரும் வாரமும் நடன இயக்குநர் ஜான் பாபு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

 

உடல் உறுப்புகளை தானம் செய்த 'ஈ' பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி

S S Rajamouli Pledges Donate Organs

ஒரு படம் வெற்றி பெற்றாலே பந்தா காட்டும் இயக்குநர்கள் வரிசையில் ஒன்பது படம் வரிசையாக வெற்றி பெற்றும் விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் இருப்பவர் எஸ்.எஸ். ராஜமவுலி. ஈகா ( நான் ஈ ) வெற்றிக்குப் பின்னர் சத்தமில்லாமல் ஒரு காரியம் செய்திருக்கிறார்.ஐதரபாத்தில் உள்ள காந்தி மருத்துவக்கல்லூரிக்கு தனது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்திருக்கிறார்.

இது குறித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள ராஜமவுலி, என்னுடைய உடல் உறுப்புகள் நான் இறந்த பின்னர் 8 பேருக்கு வாழ்வு அளிக்கும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

அவரது இந்த செயல் தெலுங்குத் திரையுலகில் இப்போது பெரிய விசயமாக பேசப்படுகிறது.

 

ஜோசியருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கரீனா கபூர்

Kareena Sends Legal Notice Astrologer For Predicting

பாலிவுட் நட்சத்திரங்கள் ஒவ்வொரு செயலையும் ஜாதகம், ஜோசியம் அடிப்படையில்தான் பார்த்து பார்த்து செய்வார்கள். ஆனால் தனக்கு பலன் குறித்துச் சொன்ன ஜோசியர் ஒருவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் கரீனா கபூர்.

சாயீஃப் அலிகானுடன் காதல், திருமணம் முடிந்துவிட்டது, 250 வது தேனிலவு, என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கரீனா கபூர் - சாயீஃப் அலிகான் பற்றிய செய்திகள் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கையில் ஜோசியர் ஒருவர் கரீனாவிற்கு ஜோசியம் சொல்லியிருக்கிறார்.

சாயீஃபை திருமணம் செய்துகொண்டால் உங்கள் வாழ்க்கை நரகமாகிவிடும், சிலமாதங்களிலேயே விவாகரத்து பெற்றுவிடுவீர்கள் என்று கூறி கிரகங்களின் அடிப்படையில் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே நல்லது என்று பலன் கூறியிருக்கிறார் அந்த ஜோசியர்.

இதனைப் பார்த்த கரீனா என்ன செய்தார் தெரியுமா? தனக்கு ஜோசியம் சொன்னவரின் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

பாவம் அந்த ஜோசியர் அவருடைய ஜாதகத்தை சரியாகப் பார்க்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது.

 

தாண்டவம் படத்தின் கதை என்னுடையதுதான்... அமீர் ராஜினாமா வேதனை அளிக்கிறது - இயக்குநர் விஜய்

Director Vijay S Letter On Thaandavam Issue

சென்னை: தாண்டவம் படத்தின் கதை முழுக்க முழுக்க என்னுடையதுதான். இந்த விவகாரத்தில் அமீர் தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார் இயக்குநர் விஜய்.

தாண்டவம் கதையின் உரிமை பிரச்சினையில் இயக்குநர்கள் சங்கமே இரண்டாக உடைந்துள்ளது.

இந்த நிலையில், தாண்டவம் படத்தின் இயக்குநர் என்ற முறையில், விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"தாண்டவம் படத்தின் இயக்குனர், கதாசிரியர் என்ற முறையில் , இப்படத்ன் தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறித்தும், அதில் நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைத்தது பற்றிய எனது கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடந்த ஒரு மாத காலமாக, தாண்டவம் திரைப்பட பிரச்சனை தொடர்பாக, இயக்குனர் சங்கம் உதவி இயக்குனர் திரு.பொன்னுச்சாமி தொடுத்த வழக்கை எடுத்து, இரு தரப்புக்கும் நியாயமான முறையில் விசாரித்து வந்ததும், பின் இவ்வழக்கு நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட அனுமதிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. உதவி இயக்குனர் பொன்னுச்சாமி தொடுத்த இவ்வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இதுநாள் வரையிலான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இவ்வழக்கை கையிலெடுத்துக் கொண்ட நாள் முதல், நான் முழுமையான ஒத்துழைப்பு தரவிழைந்ததற்கு காரணம் இயக்குனர் அமீர் மற்றும் இயக்குனர் ஜனநாதன் அவர்கள் மேல் வைத்த அளவு கடந்த நம்பிக்கை , சங்கத்தின் மீது எனக்கிருக்கும் அளவற்ற மரியாதை, இவையனைத்தையும் மீறி உதவி இயக்குனர் திரு.பொன்னுச்சாமிக்கு அவர் கதை வேறு, என் கதை வேறு என்று தெளிவுபடுத்த விரும்பியதால், நான் எனது திரைக்கதையை வாசிக்கக் கொடுத்தேன், தொடர்ந்து என் படத்தையும் பார்க்க அனுமதித்தேன்.

இன்று இவ்வழக்கு வெற்றி பெற்றதால், இதுவரை போராடிய நியாயத்தின் பக்கம் கிடைத்த வெற்றிக்காக நான் மகிழ்ச்சியடையலாம், ஆனால் உள்ளூர வேதனையும், வருத்தமும் எனக்குள் இருக்கிறது. காரணம், இப் பிரச்சனை தொடர்பாக, இயக்குனர் அமீர் அவர்கள், தனது இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை கேட்டு , அதிர்ச்சி அடைந்தேன்.

உண்மையில் இப்பிரச்சனையை நேர்மையாகவும், உண்மையாகவும் விசாரித்து, இரு குழுவினரையும் படம் பார்க்க வைத்து, அதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், என்னையும் பொன்னுச்சாமியையும் நீதிமன்றத்துக்கு சென்று சரியான தீர்வு காணும்படி அறிவுறுத்தினார்.

அவர் ஒரு போதும் ஒரு சாராராக நடந்து கொள்ளாமல் உண்மையே வெல்ல வேண்டும் என்று தனது அனைத்து வேலைகளின் நடுவிலும், ஒரு மாத காலமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடினார்.

அப்படி நடுநிலை வகித்த திரு. அமீர் அவர்கள் மீது, இன்று சில பேர் அவதூறு பேசுவதாக அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

இயக்குனர் சங்கம் இன்று தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கியமான சங்கமாக உருவெடுத்ததற்கும், காரணம் அமீர் அவர்களும் இன்று பதவி வகிக்கும் சக நிர்வாகிகளுமே காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

அப்பேர்ப்பட்ட ஒருவர் மீது அவதூறு சுமத்துவது நீதியை குலைப்பது போன்ற செயலாகும். இயக்குனர் அமீர் அவர்கள் சங்க நலன் கருதியும், உறுப்பினர்கள் நலன் கருதியும் தனது ராஜினாமா முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உறுப்பினர் என்ற முறையில் ஊடக நண்பர்கள் மூலமாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். "

-இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

ஸ்ரேயா காரால் ட்ராபிக் ஜாம்.. திட்டித் தீர்த்த வாகன ஓட்டிகள்!

Shriya S Worst Experience With Public

மும்பை: தோழிகளை அழைத்து வர சென்றபோது நடிகை ஸ்ரேயாவின் கார் பஞ்சரானதால் மும்பையில் பெரும் ட்ராபிக் நெரிசல் ஏற்பட்டது. ஸ்ரேயாவை மக்கள் திட்டித் தீர்த்தனர்.

ஸ்ரேயாவின் சொந்த ஊர் மும்பைதான். அவரைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து சில தோழிகள் வந்துள்ளனர்.

இவர்களை நேரில் வரவேற்க விமான நிலையத்துக்கே கிளம்பினார் ஸ்ரேயா. தோழிகளை ஏற்றிக் கொண்டு உற்சாகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்ரேயா. அப்போது மும்பை மெயின் ரோடில் அவர் கார் பஞ்சராகி நின்றது.

இதனால் பெரும் ட்ராபிக் ஜாம் ஏற்பட்டது. மிகுந்த பதட்டத்துடன் தன் தந்தை மற்றும் உறவினர்களை அழைத்தார் ஸ்ரேயா. அதற்குள் வாகன ஓட்டிகள் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டு திட்ட ஆரம்பித்தனர். வெகு சிலர் மட்டும் வேடிக்கைப் பார்த்தனர்.

வேதனை மற்றும் ஆத்திரத்தில் கண்கலங்க நின்று கொண்டிருந்தார் ஸ்ரேயா.

சற்று நேரத்தில் அவர் தந்தை போலீசாருடன் வந்து சேர, பிரச்சினையை சமாளித்து வீடு திரும்பினார்.

தோழிகள் முன்னிலையில் தனக்கு நேர்ந்த இந்த சங்கடம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரேயா, மிக மோசமான அனுபவம் அது என்றார்.

 

இளையராஜாவை கவுரவிக்க 1000 கிலோ எடையில் 100 மீட்டர் மெகா கேக்!

சென்னை: இந்தியாவின் பிரபல கேக் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இளையராஜாவைக் கவுரவிக்க 1000 கிலோ எடை கொண்ட, 100 மீட்டர் மெகா கேக் ஒன்றை தயாரித்து வருகிறது.

அந்த கேக்கில் இளையராஜாவின் 1000 புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.

salute ilayaraja with 100 meter cake
Close
 

முட்டை கலக்காமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சைவ கேக்கில், இளையராஜா தன் இசைப் பயணத்தை ஆரம்பித்த அன்னக்கிளி தொடங்கி, அவர் நடத்திய கச்சேரிகள், சமீபத்திய ரிலீசான நீதானே என் பொன்வசந்தம் வரை புகைப்படங்களை தேதி வாரியாக அதில் இடம்பெறச் செய்கின்றனர்.

வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளில் இந்த கேக் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

இந்த கேக்கை 25 பேர் கொண்ட குழு தயாரித்துள்ளது. 600 கிலோ சாக்லேட், 150 கிலோ பிரஷ் க்ரீம், 80 கிலோ சர்க்கரை, 240 கிலோ கறுப்பு சாக்லேட், 100 கிலோ வெள்ளை சாக்லேட், 60 கிலோ ஜெல் மற்றும் 600 சர்க்கரை ஏடுகள் கொண்டு இந்த கேக்கை தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் வர்த்தக தலைவர் விபுல் மெஹ்ரோதா கூறுகையில், "ஒரு சமூக சேவை நோக்கில் இந்த கேக்கை தயாரித்துள்ளோம். கண்காட்சிக்குப் பின்னர், ஒரு சமூக நல அமைப்பிடம் இந்த கேக்கின் விற்பனை உரிமையை வழங்கவிருக்கிறோம்," என்றார்.

கடந்த ஆண்டு, தமிழ் சினிமாவின் 70 ஆம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் இதே நிறுவனம் ஒரு மெகா கேக் செய்தது நினைவிருக்கலாம்.

 

வாய்ப்பு குறைவதால் கவர்ச்சிக் கடலில் குதித்த ராணி முகர்ஜி

Rani Turns Too Sexy Aiyyaa

மும்பை: பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு வாய்ப்பு குறைவதால் அவர் அய்யா படத்தில் ஓவராக கவர்ச்சி காட்டியுள்ளார் என்று பேசப்படுகிறது.

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு 34 வயது ஆகிறது. அவருக்கும் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுக்கும் இடையே நீண்ட காலமாக காதல். அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்படுகிறது. பாலிவுட்டில் கரீனா, கத்ரீனா, பிரியங்கா ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கையில் ராணிக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் 5ம் தேதி ரிலீஸாகவிருக்கும் அய்யா படத்தில் ராணி சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். அப்படியாவது சான்ஸ் கிடைக்காதா என்று பார்க்கிறாரோ என்னவோ. மேலும் இந்த படத்தில் அவர் பெல்லி டான்ஸ் வேறு ஆடியுள்ளாராம். படத்தில் மகாராஷ்டிரா பெண்ணாக நடித்துள்ள ராணிக்கு ஜோடி நம்ம மலையாள நடிகர் பிரித்விராஜ் தான்.

ஒரு பாட்டில் ராணி குட்டி குட்டியாக டிரஸ் போட்டு பிரித்விராஜுடன் ரொம்பவே ரொமான்டிக்காக டான்ஸ் ஆடியுள்ளார். பாலிவுட் நடிகைகளுக்கு ஐட்டம் டான்ஸ் அதாவது குத்தாட்டம் போடுவது என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகை ஒரு படத்தில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டால் அதைப் பார்த்துவிட்டு இன்னொரு நடிகை தன் படத்தில் அதைவிட படுகவர்ச்சியாக ஆடுகிறார். இந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல?

 

அதிபர் தேர்தலில் ஒபாமா வென்றால் நான் நிர்வாணமாகத் தயார்: பாப் பாடகி மடோனா

Pop Singer Madonna Willing Go Naked For Obama

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவை மக்கள் மீண்டும் வெற்றி பெற செய்தால், மேடையில் எனது ஆடைகளை துறந்து நிர்வாண கோலத்தில் நிற்கத் தயார் என்று பிரபல பாப் பாடகி மடோனா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் மடோனா கலந்து கொண்டார். அப்போது ரசிகர்களிடையே ஒபாமாவுக்கு ஆதரவு கோரி பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

ஒபாமாவிற்கு ஓட்டு போடுவது நல்லதோ, கெட்டதோ, அவருக்கு ஓட்டு போடுங்கள். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு முஸ்லீம் உள்ளார். அவருக்கு ஓட்டு போடுவதன் மூலம் நாட்டிற்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும். அவர் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். அதற்காக அவரை ஆதரித்து ஓட்டு போடுங்கள்.

ஒபாமா ஒரு முஸ்லிம் அல்ல, அவர் கிறிஸ்தவர் என்பது எனக்கு தெரியும். ஆனால் நம் நாட்டில் பலரும் அவரை ஒரு முஸ்லிம் என்றே நினைத்து வருகின்றனர். என்னை பொறுத்த வரை ஒரு நல்ல மனிதன் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் நல்லவராகவே இருப்பார். ஒபாமா எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.

அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமா, மீண்டும் அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றால், மேடையிலேயே எனது ஆடைகளை களைய தயாராக உள்ளேன் என்றார்.

பின்னர் அதிபர் தேர்தலில் ஒபாமாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மேடையில் ரசிகர்களுக்கு முன்பாக மடோனா தனது மேலாடையை கழற்றினார். அதன்பிறகு தனது முதுகைத் திருப்பிக் காட்டி அதில் 'ஒபாமா' என்று ஆங்கிலத்தில் பச்சைக்குத்தி இருப்பதை ரசிகர்களுக்கு காட்டி உற்சாகப்படுத்தினார்.

 

தகாத வார்த்தைகளால் திட்டினார்கள் - உறுப்பினர்கள் மீது அமீர் குற்றச்சாட்டு

Ameer S Explanation His Resignation

சென்னை: சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, அகௌரவப்படுத்தி வருகின்றனர். என் சுயமரியாதையைக் காத்துக் கொள்ள, செயலர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

தாண்டவம் கதை விவகாரத்தில் எழுந்த மோதலைத் தொடர்ந்து இன்று இயக்குநர் சங்க செயலர் பொறுப்பிலிருந்து விலகினார் அமீர்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள விளக்கக் கடிதம்:

தாண்டவம் படத்தின் கதை உரிமை தொடர்பாக என்மீது செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழுபேர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

என்னை குற்றம்சாட்டுவதாக நினைத்து ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் குற்றம்சாட்டுகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களாக நமது சங்கத்துக்கு வந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, கீழ்த்தரமாக நடந்து கொண்டு சங்கத்தின் கண்ணியத்தை காயப்படுத்தியிருக்கிறார்கள்.

சந்தேகத்தின் நிழலோடு ஒருபோதும் எந்தப் பதவியிலும் இருக்க விரும்பாதவன் நான்.

நான் தொடர்ந்து இப்பதவியில் இருந்தால் இவர்கள் மேலும் மேலும் என்னை அகௌரவப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு சங்கத்தின் கவுரவத்தைக் குறைத்துக் கொண்டே இருப்பார்கள்.

தனிமனிதனை விட சங்கமே முக்கியம் என்று கருதுவதாலும், வலிமையாக உருவெடுத்திருக்கிற நமது சங்கம் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதற்காகவும் என் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

காஜலின் கால்ஷீட் சொதப்பலால் ரூ 2 கோடி நஷ்டம் - நாயகியை மாற்றும் தயாரிப்பாளர்

Kajal Makes Rs 2 Cr Loss Producer   

நடிகை காஜல் அகர்வாலின் கால்ஷீட் சொதப்பலால் ரூ 2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

தெலுங்கு படமொன்றில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்த படத்துக்கான ஒரு பாடல் காட்சியை ரூ 2 கோடி வரை செலவழித்து பிரமாண்டமாக எடுத்தார்கள்.

ஆனால் இந்தப் பாட்டோடு படத்தின் ஷூட்டிங் நிற்கிறது.

காரணம் காஜல் அகர்வால் படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுத்ததுதான். தமிழ்ப் படங்களில் பிஸியாகிவிட்டதால் மகேஷ் பாபு படத்தை அவர் கண்டுகொள்ளவே இல்லையாம்.

இதனால் காஜல் அகர்வாலை தூக்கிவிட்டு வேறு நாயகியை தேர்வு செய்ய தயாரிப்பாளர் தயாராகிவிட்டாராம். அப்படி மாற்றினால், ரூ 2 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்பதால், அதை காஜலிடம் எப்படி கறப்பது என யோசித்து வருகிறாராம்!

 

தாண்டவம் விவகாரம்... இயக்குநர் சங்கத்தின் முன் உதவி இயக்குநர்கள் போராட்டம்!

சென்னை: தாண்டவம் படத்தின் கதை உரிமை தொடர்பான சர்ச்சையில் இயக்குநர் சங்கத்தின் நிலைப்பாட்டைக் கண்டித்து ஏராளமான துணை இயக்குநர்கள் இன்று சங்கத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தாண்டவம் பட விவகாரம் இயக்குநர் சங்கத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது.

இந்தப் படத்தின் கதை தனக்கு சொந்தம் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் உதவி இயக்குநர் பொன்னுசாமி. ஆனால் படத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது நீதிமன்றம்.

இந்த விவகாரத்தில் பொன்னுசாமிக்கு ஆதரவாக உதவி இயக்குநர்கள் களமிறங்கியுள்ளனர்.

மேலும் பொன்னுசாமிக்கு நீதி கிடைக்கச் செய்வதை விட்டுவிட்டு, தாண்டவம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு சாதகமாக சங்கத்தின் முதல் நிலை நிர்வாகிகள் அமீர், கரு பழனியப்பன் போன்றவர்கள் செயல்படுவதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொன்னுசாமிக்கு ஆதரவாக ஜெகதீசன், ஐந்துகோவிலான், பாலமுரளிவர்மன், வி.சி.விஜயசங்கர், விருமாண்டி என்கிற கமலக்கண்ணன், நாகேந்திரன் ஆகிய செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். சங்க இணைச் செயலரான தம்பிதுரையும் ராஜினாமா செய்தார். இவர்களுடன் ஒரு நியமன உறுப்பினரும் பதவி விலகிவிட்டார்.

தங்கள் ராஜினாமா குறித்து பாலமுரளி வர்மன் கூறுகையில், "இந்த இயக்குநர் சங்கம் உருவானதே உதவி இயக்குநர்களுக்காகத்தான். ஆனால் இன்று பொன்னுசாமி என்ற உதவி இயக்குநரே இந்த சங்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதமே சங்கத்தில் புகார் பதிவு செய்தார் பொன்னுசாமி. அப்போதே, பொன்னுசாமியின் திரைக்கதையையும் விஜய்யின் திரைக்கதையையும் சங்த்தின் 7 பேர் கொண்ட குழு ஒப்பிட்டுப் பார்த்தது. உண்மையில் நாங்கள் கேட்ட பிறகே, விஜய் அந்த திரைக்கதையை தயார் செய்திருந்தார். இரு திரைக்கதைகளும் ஒரே மாதிரிதான் இருந்தன. பின்னர் படத்தையும் பார்த்தோம். படத்திலும் பொன்னுசாமியின் திரைக்கதையைத்தான் அப்பட்டமாக எடுத்தாண்டிருந்தனர்.

இந்தப் படத்தின் கதை அல்லது திரைக்கதைக்கு பொன்னுசாமி பெயரைப் போட வேண்டும் என்பதுதான் வைக்கப்பட்ட கோரிக்கை.

ஆனால் அதை யுடிவி ஒப்புக் கொள்ளவில்லை. மற்ற மொழிகளில் பிரச்சினை வரும் என்றார்கள். இதைத் தவிர்த்து வேறு எந்த திட்டத்துக்கும் பொன்னுசாமி சம்மதிக்காததால்தான் விஷயம் கோர்ட்டுக்குப் போனது. ஆனால் இந்த விசாரணையை வேண்டுமென்றே இயக்குநர் சங்கம் காலம் தாழ்த்தியது. குறிப்பாக ஜனநாதன், கரு பழனியப்பன், அமீர் போன்றவர்கள். அப்போதுதான் படத்துக்கு பொன்னுசாமியால் தடை வாங்க முடியாது என்று தெரிந்து காலம் தாழ்த்தினர்.

அவர்களின் இந்த ஒரு சார்பான நிலையைக் கண்டித்துதான் நாங்கள் ராஜினாமா செய்தோம். இன்று போராட்டம் நடத்தினோம். இந்த வழக்கையும் விடப் போவதில்லை.

இன்று அமீர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஏதோ நாங்கள் லெட்டர் பேடை திருடி பொன்னுசாமிக்கு ஆதரவாக கடிதம் கொடுத்ததாக பொய் கூறி வருகிறார். நாங்களும் சங்க நிர்வாகிகள்தான். அந்த லெட்டர் பேடில் எங்கள் பெயரும் உள்ளது. அந்த வகையில் லெட்டர் பேடை பயன்படுத்த எல்லா உரிமையும் எங்களுக்கு உள்ளது. இருந்தாலும், அவர்களிடம் விஷயத்தை சொல்லிவிட்டுத்தான் நாங்கள் அந்தக் கடிதத்தை தயாரித்து நீதிமன்றத்துக்குக் கொடுத்தோம். ஆனால் எங்களை தவறாக சித்தரித்து அமீர் பேசி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றார்.

உதவி இயக்குநர்கள் முற்றுகை

இன்று மாலை சென்னையில் உள்ள இயக்குநர் சங்க அலுவலகம் முன் குவிந்த ஏராளமான உதவி இயக்குநர்கள், சக உறுப்பினரான பொன்னுசாமிக்கு நீதி வழங்குமாறு கோஷம் எழுப்பினர். சங்கத்தின் நிர்வாகிகள் ஒரு சார்பாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டினர்.

இயக்குநர் சங்கம் கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவு பட்டுள்ள இந்த சூழலில், சங்கத்தின் தலைவராக உள்ள பாரதிராஜா, எதுவும் பேசாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ரியாலிட்டி ஷோவில் டான்ஸை விட கவர்ச்சியில் 'அப்ளாஸ்' வாங்கிய பமீலா!

Pamela Anderson Outshines Other Contestants In Glam

நியூயார்க்: அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சி நடத்தும் டான்ஸிங் வித் ஸ்டார்ஸ் ரியாலிட்டி ஷோவிலிருந்து கவர்ச்சித் தாரகை பமீலா ஆண்டர்சன் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டு விட்டாலும் கூட அவரது கவர்ச்சிதான் அத்தனை பேரின் கண்களையும் கவ்வியது.

ஏபிசி தொலைக்காட்சியின் டான்ஸிங் வித் ஸ்டார்ஸ் ரியாலிட்டி ஷோவின் 15வது எபிசோட் தற்போது நடந்து வருகிறது. இது ஒரு நடன ரியாலிட்டி ஷோவாகும். ஆணும், பெண்ணுமாக ஜோடி போட்டு ஆட வேண்டும். இந்த ஷோவில் பமீலாவும், அவருக்குப் பார்ட்னராக டிரிஸ்டன் மெக்மெனஸும் கலந்து கொண்டனர். ஆனால் முதல் வாரத்திலேயே பமீலா ஜோடி வெளியேற்றப்பட்டு விட்டது.

45 வயதான பமீலா எப்பேர்ப்பட்ட பெருமைக்குரியவர், அவரது சிறப்புகள் என்ன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படிப்பட்டவர் முதல் வாரத்திலேயே வெளியேறியது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனாலும் தனது கவர்ச்சியால் அத்தனை போட்டியாளர்களையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் பமீலா. நடன நிகழ்ச்சிக்காக அவர் போட்டிருந்த உடை படு கவர்ச்சிகராக இருந்தது. தொடையோடு நின்று வி்ட்ட அந்த கவர்ச்சி டிரஸ்ஸில் பமீலாவின் கால் அழகு பளிச்சிட்டது.

அத்தோடு நில்லாமல், அவரது உடல் அங்கங்களின் கவர்ச்சியும் பளீரிட்டது. மெக்மெனஸுடன் ஆடுவதற்குத் தயாரானபோதும் சரி, உடைகளை மாற்றியபோதும் சரி பமீலா மீதுதான் அத்தனை பேரின் கண்களும் படிந்து கிடந்தன. பமீலாவும் சும்மா இருக்காமல், தனது மார்பகங்களை இரு கைகளாலும் கவ்வி்ப் பிடித்து அதை பார்ட்னரை பார்க்க வைத்து சூட்டைக் கூட்டினார்.

முதல் வாரத்தில் அவரும், அவரது பார்ட்னரும் ஆடிய நடனம் வரவேற்பைப் பெறாவிட்டாலும் கூட பமீலாவின் கவர்ச்சி அனைவரையும் கவர்ந்து விட்டது என்னவோ உண்மை.

 

துப்பாக்கி போலீஸ் கதை இல்லை - ஏ ஆர் முருகதாஸ்

Ar Murugadoss Speaks On Thupakki   

விஜய் நடிக்கும் துப்பாக்கி போலீஸ் கதை அல்ல.... அதிரடி ஆக்ஷன் கதை, என்கிறார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

துப்பாக்கி படத்தின் தலைப்பு விவகாரம் மிகுந்த இழுபறியாக உள்ளது. இந்தத் தலைப்பு கிடைக்குமா, தடை போட்டுவிடுவார்களா என்ற டென்ஷனில் இருக்கிறது படக் குழு.

இதற்கிடையே துப்பாக்கியில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றெல்லாம் செய்தி வெளியாகி வந்தது.

இதுகுறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

அவர் கூறுகையில், "இந்தப் படத்தின் நாயகன் மும்பையில் வசிக்கும் ஒரு தமிழன். அவனுக்கென்று ஒரு இலக்கும், அவனுடன் ஒரு படையும் இருக்கிறது. படத்தில் போலீஸ் உண்டு. ஆனால் நாயகன் போலீஸ் கிடையாது," என்றார்.

சரி... தீபாவளிக்கு நெருங்கிடுச்சே... ஆடியோ ரிலீஸ் எப்போ?

"நிச்சயம் அக்டோபர் முதல் வாரம் ஆடியோ ரிலீஸ் வச்சிடுவோம்," என்றார் முருகதாஸ்!

 

தாண்டவம் படத்தை வெளியிட தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தாண்டவம் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி நாளை அந்தப் படம் வெளியாகிறது.

உதவி இயக்குநர் பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் விக்ரம், நடிகை அனுஷ்கா நடித்த தாண்டவம் படத்தின் கதை என்னுடையது. இந்த படத்தின் கதையை யு.டி.வி. நிறுவனத்திடம் நான் கூறினேன். அந்தக் கதையை படமாக்கும் போது படத்தின் இணை இயக்குனராக சேர்க்கிறோம் என்று அந்த நிறுவனத்தின் சார்பில் எனக்கு வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் என்னை சேர்க்காமலேயே படத்தை தயாரித்துள்ளனர். இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தாண்டவம் படம் வெளியிடப்பட்டால் எனக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அதை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

தாண்டவம் படத்தில் வரும் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும். எனக்கு தகுந்த நஷ்டஈட்டை வழங்க யு.டி.வி. நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்," என்று கோரியிருந்தார்.

யு.டி.வி. சார்பில் ஆஜரான வக்கீல் சிவானந்தராஜ், "அவர், யு.டி.வி. நிறுவனத்திடம் மனுதாரர் கதை கூறினார் என்பதற்கு ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. தாண்டவம் படத்தில் இருப்பது அவரது கதை அல்ல. இந்தப் படம் வெளியிடப்படாவிட்டால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே தடை விதிக்கக் கூடாது," என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.சந்துரு, தாண்டவம் படம் வெளியாவதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

 

இயக்குநர் சங்க பதவியிலிருந்து அமீர் விலகல்!

Director Ameer Resigns Fro Director Association

தாண்டவம் படத்தின் கதை விவகாரம் இயக்குநர் சங்கத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சங்கத்தின் செயலர் பொறுப்பிலிருந்து இயக்குநர் அமீர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

இன்னொரு பக்கம் உதவி இயக்குநர் பொன்னுசாமிக்கு நியாயம் கிடைக்க வேண்டி, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் ஒரு இணைச் செயலர் பதவி விலகியுள்ளன்.

இதனால் இயக்குநர் சங்கமே இரண்டாக பிளவுபட்டு நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.

தாண்டவம் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் பொன்னுசாமி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போகும் முன் இயக்குநர் சங்கத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் படத்தைத் தயாரித்த யுடிவி மற்றும் பிரச்சினையை விசாரித்த இயக்குநர் சங்க குழுவுக்கிடையில் எந்த உடன்பாடும் எட்ட முடியவில்லை.

கடைசி நேரத்தில்தான் பொன்னுசாமி நீதிமன்றம் போனார். அவருக்கு ஆதரவான நிலையை சங்கத்தில் செயற்குழு உறுப்பினர்களாக உள்ள உதவி இயக்குநர்கள் எடுத்தனர். சங்கத்தின் சார்பில் இவர்கள் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை பொன்னுசாமிக்கு ஆதரவாக அளித்தனர்.

இந்தக் கடிதம் தன் அனுமதியில்லாமல் தரப்பட்டிருப்பதாகக் கூறி சங்கத்தின் செயலர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் இயக்குநர் அமீர்.

இது கட்டுப்பாட்டை மீறிய செயல். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் அனுமதியின்றி சங்கத்தின் லெட்டர்பேடில் கடிதம் தந்தது தவறு. இதனால் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தலைவராக உள்ள பாரதிராஜாதான் விசாரித்து தீர்த்து வைக்க வேண்டும் என அமீர் கூறியுள்ளார்.