லண்டன்: மை நேம் இஸ் சாமி, பழனிச்சாமி.. என்று நம்ம ஊர்க்காரர்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளக் கூடிய அளவுக்கு பட்டையைக் கிளப்பிய கேரக்டர் ஜேம்ஸ் பாண்ட் 007. உலகம் பூராவும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கும் இந்த ரகசிய ஏஜென்ட் பிறந்து 50 வருடங்களாகி விட்டது. ஆனாலும் இன்னும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் மீதான ரசிப்பும், லயிப்பும் உலக ரசிகர்களிடையே சற்றும் குறையவில்லை.