ரஜினி, அமிதாப் பங்கேற்க, கோவாவில் தொடங்கியது சர்வதேச திரைப்பட விழா

|

இந்தியாவின் இரு பெரும் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் பங்கேற்க, கோவாவில் இன்று தொடங்கியது சர்வதேச திரைப்பட விழா.

பல ஆண்டுகள் இந்த விழாவில் பங்கேற்காமல் இருந்த அமிதாப் பச்சன் தலைமையில் மாலையில் விழா தொடங்கியது.

ரஜினி, அமிதாப் பங்கேற்க, கோவாவில் தொடங்கியது சர்வதேச திரைப்பட விழா

ரஜினிகாந்துக்கு இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகருக்கான விருது இந்த விழாவில் மத்திய அரசு வழங்குகிறது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, இணைய அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர், மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிகார் ஆகியோர் பங்கேற்றுள்ள இந்த விழாவை, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி முறைப்படி தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினரான அமிதாப் பச்சன் சிறப்புரை ஆற்றியபிறகு ரஜினிக்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட உள்ளது.

அடுத்த பத்து நாட்கள் இந்த திரைப்பட விழா தொடர்ந்து நடக்கிறது.

 

Post a Comment