திருவனந்தபுரம்: கடந்த வாரம் கணவர் வாங்கிக் கொடுத்த காரை எடுத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்குச் சென்ற நஸ்ரியா, திரும்பி வரும் போது அவரது காரை சக மனிதர் ஒருவரின் கார் லேசாக உரசிவிட்டது. இந்த உரசலில் லேசாக நஸ்ரியாவின் காரின் பெய்ண்ட் உதிர்ந்து விட்டது.
அவ்வளவு தான் வந்ததே கோபம் நஸ்ரியாவுக்கு. நடுரோடேன்றும் பார்க்காமல் காரிலிருந்து இறங்கி நஸ்ரியா போட்ட சண்டையில் அந்த மனிதர் ஆடிப் போக, கடைசியில் போலீஸ் வந்து சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் நஸ்ரியாவை.
இந்த சண்டையை ரசித்த ரசிகர்கள் அதனை இணையதளங்களில் ஷேர் செய்ய, நஸ்ரியாவின் சண்டையால் வைரலானது இணையம். என்னதான் லேசாக பெய்ண்ட் மட்டுமே உதிர்ந்தாலும் நஸ்ரியா சமாதானமாக வில்லையாம், நஸ்ரியாவை மீண்டும் இயல்புக்கு மாற்றுவதற்காக கணவர் பகத் பாசில் அந்தக் காரை விற்றுவிட்டு தற்போது ஒரு புதிய பென்ஸ் காரை வாங்கிக் கொடுத்திருக்கிராறாம்.
1 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தக் காரை விற்றுவிட்டு நஸ்ரியா தற்போது வாங்கியிருக்கும் புதிய காரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 30 லட்சம்.
Post a Comment