சென்னை: கருப்பு பணத்திற்கும் என் மகளுக்கும் சம்பந்தமில்லை என்று நடிகை சமந்தாவின் தந்தை கூறியுள்ளார்.
நடிகை சமந்தாவின் சென்னை வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டில் 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை குறித்து சமந்தாவின் தந்தை பிரபு கூறுகையில், "கறுப்புப் பணத்துக்கும் என் மகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் மகள் வருமானத்துக்கான வரிகளை ஒழுங்காகக் கட்டி வருகிறாள். வரி ஏய்ப்பு செய்ததில்லை. இப்போது வெளிநாட்டில் உள்ளார் சமந்தா.
பொதுவாக தன் வருமானம் மற்றும் கணக்கு வழக்குகளை அவள்தான் பார்த்துக் கொள்வாள்," என்றார்.
Post a Comment