சின்னக் குயில் என திரை இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கேஎஸ் சித்ரா மீண்டும் பாட ஆரம்பித்துள்ளார்.
இசைமேதைகள் எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரால் திரையுலகுக்கு கொண்டுவரப்பட்டவர் சித்ரா. மலையாளப் பாடகி என்றாலும், தமிழை அத்தனை அழகாகப் பாடி ரசிகர்களை வசியம் செய்தார்.
இதுவரை 15000 பாடல்களைப் பாடி, ஆறு தேசிய விருதுகள் உள்ள பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள அவர், சமீபத்தில் பெரும் சோகத்தைச் சந்தித்தார். அவரது ஒரே மகள் நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சியை சித்ராவால் தாங்க முடியவில்லை. பாடுவதையே நிறுத்திவிட்டிருந்தார்.
இப்போது, ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடத் தொடங்கியுள்ளார். மலையாளத்தில் வெளியாகும் 'இஷம்+ஸ்நேகம்= அம்மா' என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வந்ததும் அவர் ஏற்றுக் கொண்டார். இந்தப் பாடல் ஒரு தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தைச் சொல்லும் பாடல்.
சென்னையில் எம்ஜி ஸ்ரீகுமார் இசையில் இந்தப் பாடலைப் பாடும்போது ரெக்கார்டிங் தியேட்டரில் கதறி அழுதுவிட்டாராம் சித்ரா.
இசைமேதைகள் எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரால் திரையுலகுக்கு கொண்டுவரப்பட்டவர் சித்ரா. மலையாளப் பாடகி என்றாலும், தமிழை அத்தனை அழகாகப் பாடி ரசிகர்களை வசியம் செய்தார்.
இதுவரை 15000 பாடல்களைப் பாடி, ஆறு தேசிய விருதுகள் உள்ள பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள அவர், சமீபத்தில் பெரும் சோகத்தைச் சந்தித்தார். அவரது ஒரே மகள் நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சியை சித்ராவால் தாங்க முடியவில்லை. பாடுவதையே நிறுத்திவிட்டிருந்தார்.
இப்போது, ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடத் தொடங்கியுள்ளார். மலையாளத்தில் வெளியாகும் 'இஷம்+ஸ்நேகம்= அம்மா' என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வந்ததும் அவர் ஏற்றுக் கொண்டார். இந்தப் பாடல் ஒரு தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தைச் சொல்லும் பாடல்.
சென்னையில் எம்ஜி ஸ்ரீகுமார் இசையில் இந்தப் பாடலைப் பாடும்போது ரெக்கார்டிங் தியேட்டரில் கதறி அழுதுவிட்டாராம் சித்ரா.
Post a Comment