வசந்த் இயக்கும் '3 பேர் 3 காதல்' படத்தில் இரண்டு புது ஹீரோயின் அறிமுகமாகிறார்கள். இதுகுறித்து அவர் கூறியதாவது: 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. சிங்கப்பூர், ராஞ்சி, நாகர்கோவில், சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. பாடல்களுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கிறோம். அர்ஜுன், சேரன், விமல் ஹீரோக்கள். ஹீரோயின்களாக ஸ்குருவின், ஸ்ருதி என்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறேன். இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர, மூன்றாவது ஹீரோயினாக 'தாமிரபரணி' பானு நடிக்கிறார்.
Post a Comment