பிளேபாய்க்கு நிர்வாண போஸ் கொடுத்ததற்காக ஷெர்லின் சோப்ராவுக்கு பாரத ரத்னா வேணுமாம்

|

Sherlyn Chopra Wants Bharat Ratna N

பிளேபாய் பத்திரிக்கைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்ததற்காக பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வேண்டுமாம். இதை அவரே தெரிவித்துள்ளார்.

ஆண்கள் பத்திரிக்கையான பிளேபாயின் நடுப்பக்கத்தில் யாராவது பிரபலமான பெண்ணின் நிர்வாண புகைப்படம் வருவது வழக்கம். இந்த போட்டோவுக்காக ஆண்கள் ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு இந்த பத்திரிக்கையை வாங்குவார்கள்.
இந்த பத்திரிக்கைக்கு இதுவரை எந்த இந்திய பெண்ணும் நிர்வாண போஸ் கொடுத்ததில்லை. இந்நிலையில் பாலிவுட்டில் பெரிய நடிகையாகத் துடிக்கும் ஷெர்லின் சோப்ரா லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று சற்றும் கூச்சமின்றி நிர்வாண போஸ் கொடுத்துவிட்டு ஏதோ பெரிய சாதனை படைத்துவிட்டதுபோன்று பெருமி்தத்துடன் நாடு திரும்பியுள்ளார். அவரது புகைப்படம் அடங்கிய பத்திரிக்கை வரும் நவம்பரில் வெளிவருகிறது.

இந்தியாவுக்கு வந்ததும், வராததுமாக டுவிட்டரில் தனது பிளேபாய் போஸ் பற்றி அவர் கூறியிருப்பதாவது,

நாட்டுக்கு சேவை செய்வோரை பாராட்டி வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது எனக்கு கொடுக்கப்பட வேண்டும். நான் பிளேபாய் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ளேன். இந்நேரத்தில் எனது தந்தை மட்டும் உயிருடன் இருந்திருந்தால் மிகவும் பெருமைபட்டிருப்பார். பிளேபாய்க்கு அதிக முறை போஸ் கொடுத்த பமிலா ஆன்டர்சனின் சாதனையை முறியடிக்க கடவுள் தான் எனக்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிறந்தமேனியாக போஸ் கொடுத்தற்கு பாரத ரத்னா கேட்குதாக்கும்...

 

Post a Comment