அமிதாப் பேத்திக்கு காது குத்தியாச்சாம்!

|

Beti B S Ears Pierced Jaya Bachchan

அமிதாப் பச்சனின் பேத்தியும் அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராயின் மகளுமான ஆரத்யாவுக்கு காது குத்தி விட்டார்களாம். இதை ஆரத்யாவின் பாட்டி ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார்.

அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா தம்பதிக்கு அழகான மகள் பிறந்துள்ளாள். இக்குழந்தைக்கு ஆரத்யா என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் நடந்த ஒரு திரைப்பட விழாவுக்கு பாட்டி ஜெயா பச்சன் வந்திருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பிரபலங்களிடம் அவர் பேசியபோது ஆரத்யாவும், ஐஸ்வர்யாவும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். ஆரத்யா படு சுட்டியாக இருப்பதாகவும் பூரிப்புடன் கூறினார்.

பின்னர் தனக்கு அருகில் நின்றிருந்த நடிகை நந்திதா தாஸிடம் ஜெயா கூறுகையில், பேத்திக்கு மொட்டை போட்டு விட்டோம் என்று கூறினாராம்.

அப்புறம், ப்ரீகேஜி எங்கே சேர்க்கப் போறீங்க...சொன்னீங்கன்னா நியூஸ் போட வசதியா இருக்கும்!

 

Post a Comment