கன்னட ஹீரோ சுதீப், 'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரை அடுத்து மற்றொரு கன்னட ஹீரோவான ஆதித்யா தமிழில் வில்லனாகிறார். சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிக்கும் படம், 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்துவருகிறது. இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க புதுமுகங்களைத் தேடி வந்தனர். இப்போது கன்னட ஹீரோ ஆதித்யா வில்லனாக நடிக்கிறார். இவர் நடித்த காட்சிகளின் ஷூட்டிங் நேற்று முதல் தொடங்கியது.
இதுபற்றி இயக்குனர் விஜய் சந்தர் கூறியதாவது: இது ஜாலியான கதை. முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது. வில்லனாக நடிக்க புதுமுகங்களைத் தேடினோம். தமிழ், தெலுங்கில் பலரைப் பார்த்தும் நாங்கள் நினைத்த கேரக்டருக்கு யாரும் செட்டாகவில்லை. இதையடுத்து பெங்களூரில் லொகேஷன் பார்க்க சென்றபோது ஆதித்யா நடித்த பட போஸ்டர்களைப் பார்த்து இவரை நடிக்க வைக்கலாம் என நினைத்தோம். அவரிடம் கேட்டபோது சம்மதித்தார். இதில் அன்பு என்கிற தொழிலதிபராக ஆதித்யா நடிக்கிறார். அவர் கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். இவ்வாறு கூறினார்.
இதுபற்றி இயக்குனர் விஜய் சந்தர் கூறியதாவது: இது ஜாலியான கதை. முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது. வில்லனாக நடிக்க புதுமுகங்களைத் தேடினோம். தமிழ், தெலுங்கில் பலரைப் பார்த்தும் நாங்கள் நினைத்த கேரக்டருக்கு யாரும் செட்டாகவில்லை. இதையடுத்து பெங்களூரில் லொகேஷன் பார்க்க சென்றபோது ஆதித்யா நடித்த பட போஸ்டர்களைப் பார்த்து இவரை நடிக்க வைக்கலாம் என நினைத்தோம். அவரிடம் கேட்டபோது சம்மதித்தார். இதில் அன்பு என்கிற தொழிலதிபராக ஆதித்யா நடிக்கிறார். அவர் கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். இவ்வாறு கூறினார்.
Post a Comment