தாரை தப்பட்டையில் "கன்னடத்துக் கரகாட்டம்" காவ்யா ஷா!

சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் தாரை தப்பட்டை படத்தில் கன்னட நடிகை காவ்யா ஷாவும் ஒரு கரகாட்டக் கலைஞராக இன்னொரு நாயகியாக நடிக்கிறாராம்.

பரதேசி படத்திற்குப் பின்னர் நீண்ட இடைவெளி விட்டு இயக்குநர் பாலா தற்போது தாரை தப்பட்டை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் இயக்குநர் சசிக்குமார் நாயகனாக வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார்.

தாரை தப்பட்டையில்

அவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி நடிக்கிறார். பாலாவே இந்தப் படத்தை சொந்தமாக தயாரிக்கிறார். இப்படத்துக்கு இசை இளையராஜா. இது இளையராஜாவின் 1000மாவது படம் என்ற பெருமையையும் பெற்று வளர்ந்து வருகிறது.

கரகாட்டம்தான் இப்படத்தின் முக்கியக் கதைக் களமாகும். இதில் கரகாட்டக் கலைஞர்களாக சசிசிக்குமாரும், வரலட்சுமியும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர காவ்யா ஷா என்ற நடிகையும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

கன்னட நடிகையாவார் காவ்யா ஷா. அங்கிருந்து தமிழுக்கு வருகிறார். ஆரம்பா உள்ளிட்ட பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார் காவ்யா ஷா.

தமிழில் இதுதான் இவருக்கு முதல் படம். பல்வேறு பாத்திரங்களில் நடித்தவரான காவ்யா ஷா, தாரை தப்பட்டையில் கரகாட்டக் கலைஞராக நடிக்கிறாராம். இதற்காக இவருக்கு சிறப்புப் பயிற்சியும் கொடுத்துள்ளனராம்.

 

அக்ஷராவுக்கு நான் டிப்ஸ் கொடுப்பதா, அட போங்க பாஸ்: தனுஷ்

சென்னை: அக்ஷரா ஹாஸனுக்கு நான் எந்த டிப்ஸும் வழங்கவில்லை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

தனுஷ் இந்தியில் நடித்துள்ள இரண்டாவது படம் ஷமிதாப். படம் வரும் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஷமிதாபில் தனுஷ் வாய் பேச முடியாதவராக நடித்துள்ளார். அவருக்கு குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.

அக்ஷராவுக்கு நான் டிப்ஸ் கொடுப்பதா, அட போங்க பாஸ்: தனுஷ்

இந்த படம் மூலம் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா நடிகையாகியுள்ளார். அக்ஷரா புதுமுகமாச்சே ஏதாவது நடிப்பு டிப்ஸ் கொடுத்தீர்களா என்று தனுஷிடம் கேட்கப்பட்டது.

அதற்கு தனுஷ் கூறுகையில்,

அக்ஷராவுக்கு டிப்ஸ் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. நான் நடித்த கதாபாத்திரம் சவால் ஆனது. அதனால் நானே அதிகமாக உழைக்க வேண்டி இருந்தது. இது உங்களின் முதல் படமோ, 50வது படமோ அது முக்கியம் இல்லை. இந்த விஷயத்தில் எனக்கும், அக்ஷராவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றார்.

கேமராவுக்கு முன் வந்தால் தனுஷ் வேறு மனிதாரகிவிடுவார். அவர் நடிப்பதை பார்த்தாலே நாம் எல்லாம் அசந்துவிடுவோம் என்று அவரின் நடிப்பை அக்ஷரா புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டூரிங் டாக்கீஸ்... முதல் முறையாக ஒரு பெரும் சமூகக் கொடுமையை அம்பலமாக்கும் படம்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பாலியல் வன் கொடுமைக்கு ஆளான பெண்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுகிறது. இவர்களில் சரி பாதி, சிறுமிகள், குழந்தைகள் என்பதுதான் மிகப் பெரிய அதிர்ச்சிக்குரிய விஷயம்.

கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத இந்தக் கொடூரத்தை முதல் முறையாக திரைப்படமாக எடுத்திருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன். அதுதான் நேற்று வெளியான டூரிங் டாக்கீஸ்.

டூரிங் டாக்கீஸ்... முதல் முறையாக ஒரு பெரும் சமூகக் கொடுமையை அம்பலமாக்கும் படம்!

தன் கடைசி படம் என்று அறிவித்துவிட்டு, அதை இன்றைய சமூகத்துக்கு தேவையான அழுத்தமான செய்தியோடு தந்திருப்பதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

டூரிங் டாக்கீஸ் படத்தில் இரு கதைகள். இரண்டும் வெவ்வேறு கதைகள். முதல் கதையை காதல் 75 என்ற தலைப்பில் படமாக்கியுள்ளார். இது 75 வயதான ஒரு முதியவரின் காதல். சுவாரஸ்யமாகவே அதை முடித்திருக்கிறார் இயக்குநர் சந்திரசேகரன்.

இரண்டாவது கதைக்குப் பெயர் செல்வி 5-ம் வகுப்பு.

இந்தக் கதைதான் சமூகத்தில் நிலவும் அந்த மாபாதகச் செயலை படம் பிடித்துக் காட்டுகிறது.

தமிழகத்தின் ஒரு பகுதியில் இன்றும் நிலவும் கொடூரமான சாதிக் கொடுமையை, சாதீய திமிரால், அப்பாவி மக்கள் சிதைக்கப்படுவதை மிகையின்றிச் சித்தரித்திருக்கிறார் இந்தப் படத்தில். அதற்கு பெரிதும் துணை நின்றிருக்கிறது இளையராஜாவின் இசை.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதை படமாக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள் திரையுலகினர்.

"எனக்கு இந்த விஷயத்தைச் சொல்ல எந்தத் தயக்கமும் பயமும் இருக்கவில்லை. இப்படி ஒரு கொடுமை நடக்கிறதே என்று கண்ணை மூடிக் கொண்டு செல்ல முடியாது. என் கடைசி படம், சமூகத்தின் கண்ணைத் திறக்க உதவ வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் படம் தந்தேன். இன்று அதற்கான பலன் கிடைத்திருக்கிறது," என்கிறார் எஸ் ஏ சந்திரசேகரன்.

 

அனுஷ்கா நடிக்கும் ருத்ரமா தேவி படத்தில் சம்பளத் தகராறு... போலீசில் புகார்

அனுஷ்கா நடித்து வரும் சரித்திரப் படமான ருத்ரமா தேவியில் நடிகர்களுக்கு சம்பளம் சரியாகத் தராததால், பிரச்சினை போலீஸ் வரை போயுள்ளது.

தமிழ், தெலுங்கில் மெகா பட்ஜெட்டில் தயாராகி வருகிறது இந்தப் படம். இதில் அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யாமேனன், கேத்ரினா திரேஷா போன்றோரும் நடிக்கின்றனர்.

குணசேகரன் தயாரித்து இயக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

அனுஷ்கா நடிக்கும் ருத்ரமா தேவி படத்தில் சம்பளத் தகராறு... போலீசில் புகார்

படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் சம்பள விவகாரத்தில் நடிகர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிக்கும் சுமன் தயாரிப்பாளர் குணசேகரன் மீது ஆந்திர மாநிலம் நம்பள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், "ருத்ரமாதேவி படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக தயாரிப்பாளர் குணசேகர் எனக்கு ரூ.5 லட்சம் செக் கொடுத்து இருந்தார். அதை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது. பிறகு குணசேகரை அணுகி பணத்தை கேட்டேன். அவரிடம் இருந்து பொறுப்பான பதில் வரவில்லை," என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

 

அஜீத், விஜய்தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தாங்க!- எஸ் ஜே சூர்யா

அஜீத்துக்கும் விஜய்க்கும் நான் வாழ்க்கை கொடுத்தேன்னு சொல்றது தவறு. அவர்கள்தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார்கள் என்று இயக்குநர் - நடிகர் எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.

எஸ் ஜே சூர்யாவின் இயக்கத்தில் அவரே நடித்து இசையமைத்து வந்துள்ள லேட்டஸ்ட் படம் இசை.

அஜீத், விஜய்தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தாங்க!- எஸ் ஜே சூர்யா

படம் வெளியானது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், அஜீத், விஜய் பற்றியும் கூறியுள்ளார்.

அதில், "எல்லாரும் அஜித், விஜய்க்கு நான் லைஃப் கொடுத்ததா சொல்றாங்க. எனக்குதான் அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கை குடுத்துருக்காங்க. அதுலயும் விஜய் அவ்ளோ பெரிய ஹீரோ... இன்னும் எனக்காக அவர் மனசுல இவ்ளோ பெரிய இடம் கொடுத்திருப்பார்னு நான் நெனைக்கவே இல்ல. இத்தனை வருஷம் கழிச்சு ஒரே வார்த்தைல நான் 10 வருஷம் சினிமாவுல இல்லைங்கறத மக்கள் மறக்குற மாதிரி செஞ்சுட்டாரு.

நான் கடந்து வந்த பாதைக்கு முதல் விதை போட்டவரு அஜித். நல்ல மனுஷன் இப்போ கொஞ்சம் நாளா தன்ன தனிமை படுத்திட்டாரு. அவரு போன் கூட யூஸ் பண்றதில்லை. மெயில் அனுப்பியிருக்கேன் என்னோட டிரெய்லர அஜித் பாத்துருப்பாருன்னு நம்பறேன்," என்று தெரிவித்துள்ளார்.

 

அஜீத் ரசிகர்கள் கொன்னுப்புட்டாய்ங்க...!- விவேக்குடன் ஒரு கலகல பேட்டி

ரொம்ப நாள் கழித்து தலஅஜீத்துடன் நடித்துள்ளார் விவேக். அந்த அனுபவம் பற்றி இன்னும் யாரிடமும் பெரிதாக சொல்லிக் கொள்ளாமலிருக்கிறார் மனிதர்.

நம்மகிட்டேயாவது சொல்கிறாரா பார்க்கலாம்னு நினைத்து போன் செய்தால், "நீங்க தொடர்பு கொண்ட விவேக் தற்சமயம் பிசியாக மட்டுமல்ல, பசியாகவும் உள்ளார்" என்று தனது வழக்கமான பாணியில் ஆரம்பித்தார்.

நீங்க சாப்பிட்டு முடிச்சு ஃபிரியா இருக்கும் போது கூப்பிடவா சார் என்றேன்.

அஜீத் ரசிகர்கள் கொன்னுப்புட்டாய்ங்க...!- விவேக்குடன் ஒரு கலகல பேட்டி

"அட விளையாட்டுக்கு சொன்னங்க.. பேசுங்க..." என்று சிரித்தார்... சிரிப்பின் சுவாரஸ்யத்தில் நலம் விசாரிப்பு முடித்து... கேள்விகளை ஆரம்பித்தோம்.

கேள்வி: "விவேக் டேட்ஸ் இல்லாத நிலையில்தான் விண்ணைதாண்டி வருவாயா படத்தில் விடிவி கணேஷ் நடித்தார்' என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் கூறியுள்ளார். உங்களிடம் இதை பற்றி சொல்லியிருக்கிறாரா.. அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது வருத்தப்பட்டதுண்டா...?

பதில்: விடிவி கணேஷ்க்கு நல்ல பெயர் கிடைத்தது மகிழ்ச்சிதான்... ஆனால் நான் நடிக்க முடியாமல் போனது எனக்கு வருத்தம் தான்... ஆனால், எப்போ கவுதம் என்னிடம் கேட்டார்??? ஒருவேளை நான் மறந்திருப்பேன்!

மின்னலே இயக்குனர் கவுதம் மேனன் இப்பொழுது ‘என்னை அறிந்தால்' இயக்குனர் கவுதம் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள் ?

கேள்வி: மின்னலே- கௌதம் 13 வருடம் சின்னவர், புதியவர். பரபரப்பும், படபடப்பும் உள்ளவர்.

பதில்: என்னை அறிந்தால் - கௌதம் 13 வருடம் கடந்து வந்து இருக்கிறார்; பக்குவம் வந்திருக்கிறது. அனால் அதே அன்பு. ‘ஆடி' காரில் வருகிறார்.

கேள்வி: உங்க படங்களில் வழக்கமா வரும் கூலர்ஸ் , டி ஷர்ட் போட்ட ஹீரோவின் நண்பனா இல்லாமல் என்னை அறிந்தால் படத்தில் சற்று வேற கெட்-அப்ல வர்றீங்களே.... உங்க கதாப்பாத்திரத்தை பற்றி சொல்லுங்களேன்?

பதில்: இந்த படத்தில் ஒரு சீரியசான , குசும்புமிக்க கதாப்பாத்திரம்; சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும். எடுத்த காமெடி காட்சிகளில் எத்தனை எடிட்டர் ஆண்டனியின் கத்திரிக்கு தப்பிக்கிறதோ... ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.

‘காதல் மன்னன்' ஷிவா, ‘என்னை அறிந்தால்' சத்யதேவ் உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பன் யார்?

ஷிவா - துடிப்பான ‘காதல்' மன்னன்
சத்யதேவ் - பொறுப்பான ‘காவல்' மன்னன்
இருவரும் நல்ல நண்பர்களே...

கேள்வி: Twitter , Facebookனு அஜித் சார் ரசிகர்கள் எங்கும் உள்ளார்கள். சமூக வலைதளங்களில் அவர்களுடன் ஏற்பட்ட ஏதேனும் ஒரு அனுபவம்

பதில்: ஐயோ... ‘தல', ‘தல' ன்னு அலறும் அவர்மேல் வெறிபுடித்த ரசிகர்கள். நான் என்னை அறிந்தால் நடிக்க தொடங்கியதில் இருந்து, ‘என்ன கதை ?', ‘ தல எப்படி இருக்கார்?னு கேட்டே கொன்னுப்புட்டாய்ங்க... பாசக்கார பசங்க...

கேள்வி: இருவார்த்தைகளில் திரிஷாவை பற்றி கூறுங்களேன்.

பதில்: இனிமை, பெண்மை - திரிஷா

கேள்வி: அனுஷ்காவை பற்றி இருவார்த்தைகளில் கூறுங்களேன்.

பதில்: அழகு, அறிவு - அனுஷ்கா

கேள்வி: தீவிர பெரியாரின் கொள்கையை பேசிய நீங்கள்... இப்பொழுது பாபா வின் தீவிர பக்தன் மாறியுள்ளீர்களே?

பதில்: பெரியாரின் சாதி ஒழிப்பு , பெண் கல்வி, மூட நம்பிக்கை போன்றவற்றை படங்களில் சொல்லி இருக்கிறேன். முரட்டுதனமான, முட்டாள் தனமான மதம் வேண்டாம் என்கிறேன் அவ்வளவுதான்.

என்னை அறிந்தால் படத்தில் உங்க கேரியரில் எவ்வளவு முக்கியமானதாக இருக்கும்?

ஷூட்டிங்கில் எடுத்ததெல்லாம், படத்தில் இருந்த எடுத்துவிடாமல் வைத்தால்... என் கேரியரில் முக்கியமான படமாய் இருக்கும். அஜித்தின் அன்புக்கு நன்றி...!

 

இளவரசன்- திவ்யா காதல் கதை படமாகிறது?

வாச்சாத்தி என்ற கிராமத்தில் பொதுமக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை, வாச்சாத்தி என்ற பெயரிலேயே படமாக்கியவர் ஆர் ரமேஷ்.

அவர் அடுத்து சினிமாவாக்கப் போவது தர்மபுரி இளவரசன் - திவ்யா காதல் கதையை.

இந்தப் படத்துக்கு ‘இலக்கணம் இல்லா காதல்' என்று தலைப்பிட்டுள்ளார்.

இளவரசன்- திவ்யா காதல் கதை படமாகிறது?

இப்படக்கதையில் நாயகன் பெயர் இளவரசன், நாயகியின் பெயர் திவ்யா.

இதில் ஆர். ரமேஷ், கவிதா, பாரதி, ராதாரவி, நந்தினி, விஜயகுமார், கெளசல்யா, வி.சி.ஜெயமணி, தேவிகிருபா, போண்டா மணி, ஐஸ்வர்யா, கராத்தே ராஜா, ப்ரியா, பெஞ்சமின், ஜெகதீஸ், விஜய கணேஷ், பழனி, கிங்காங், விஜயகுமார். பி.எஸ். ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படத்தை வி.சி.ஜெயமணி இயக்குகிறார். தீபக் - மணி ஒளிப்பதிவு செய்கிறார்கள். வில்லியம்ஸ் - நாகா பாடல்களுக்கு இசையமைக்க படத்தின் பின்னணி இசையை அம்சத்வனி அமைக்கிறார்.

‘வாச்சாத்தி' படம் போலவே இப்படமும் விமர்சகர்க்ளிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெறும் என ஆர்ரமேஷ் மற்றும் வி.சி.ஜெயமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

படத்தை கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி பகுதிகளில்தான் படமாக்குகிறார்கள்.

 

சினிமாக்காரன் சாலை- 4: தோப்பிலொரு சினிமா நடக்குது ஏலேலங்கிளியே...

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

'போங்கடி நீங்களும் உங்க காதலும்,' 'தெரியாம உன்னை காதலிச்சுட்டேன்', ‘இன்னுமா நம்மள நம்புறாங்க,' 'நாங்கெல்லாம் ஏடாகூடம்' போன்றன உள்ளிட்ட 210 படங்கள் கடந்த ஆண்டு ரிலீஸாகின. சென்சார் வரை வந்து ரிலீஸாகாத படங்களின் எண்ணிக்கையும் இதைவிட அதிகமாக இருக்கும்.

‘ஆண்டவா காப்பாத்து' இதுவும் ஒரு படத்தின் பெயர்தான். வாரம் தோறும் ஐந்து படங்கள் வந்துகொண்டே இருந்ததால் தமிழ் சினிமா ரசிகனின் அலறலும் இந்த ஆண்டவா காப்பாத்துதான்!

ஷங்கரின் ‘ஐ' முருகதாஸின் ‘கத்தி' போன்ற மெகா ஜிகா பட்ஜெட் படங்களையும் எழுபது, எண்பது லட்ச ரூபாய் சின்ன பட்ஜெட் படங்களையும் கலந்து கட்டிப்பார்த்தால் கடந்த ஆண்டு தமிழ்சினிமாவில் விதைக்கப்பட்ட பணம் சுமார் 500 முதல் 600 கோடி இருக்கும் என்கிறது ஒரு 'புள்ளி'விபரம். இதில் பத்திரமாக தயாரிப்பாளர்களின் வீடு திரும்பிய பணம் பத்து சதவிகிதம் கூட இருக்காது.

சினிமாக்காரன் சாலை- 4: தோப்பிலொரு சினிமா நடக்குது ஏலேலங்கிளியே...

ஆனாலும் இந்த ஆண்டு கர்மசிரத்தையாய், இன்னும் அதிகமானவர்கள் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்கள்.

‘இவர்களிடமிருந்து சினிமாவைக் காப்பாற்ற அல்லது சினிமாவிடமிருந்து இவர்களைக் காப்பாற்ற தயாரிப்பாளர் சங்கம் என்னதான் செய்திருக்கிறது அல்லது செய்யவிருக்கிறது?' என்று 7 வது முறையாக செயற்குழு உறுப்பினராகியிருக்கும் விஜயமுரளி அவர்களிடம் கேட்டுக்கூட முடிக்கவில்லை. பெட்டி பெட்டியாய் கொட்டித் தீர்த்தார்.

சினிமாக்காரன் சாலை- 4: தோப்பிலொரு சினிமா நடக்குது ஏலேலங்கிளியே...

புதுசாய் படம் எடுக்க வருபவர்களைப் பற்றி அவர் சொன்ன கதைகளை எழுத தனியாக ஒரு ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் சைஸ் புத்தகங்கள்தான் போடவேண்டும்.

அதில் ஒரு சில சுருக்கமாக...

‘முந்தின ஆண்டு எடுத்த 210-ல் 200 படங்கள் தோற்றுப் போயிருந்தாலும், அடுத்த ஆண்டில் களம் இறங்குபவர்கள் தோற்ற படங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வெற்றி பெற்ற ‘கோலிசோடா' மாதிரி ஒரு படத்தை தாங்கள் எடுக்கவிருப்பதாகவே அனைவரும் ஒரேமாதிரி, உறுதியாக நம்புகிறார்கள்.

இங்கே டீக்கடை வைப்பவர் முதல் பிக்பாக்கெட் அடிப்பவர் வரை அனைவரும் முறையே தொழில் கற்றுக் கொண்டே பின்னர் களம் இறங்குகிறார்கள். ஆனால் படம் எடுக்க வருபவர்கள் மட்டும் ஏனோ முன்னனுபவம் இல்லாமல் குதித்து பண இழப்பையும் அவமானத்தையும் சுமக்கிறார்கள்.

சினிமாக்காரன் சாலை- 4: தோப்பிலொரு சினிமா நடக்குது ஏலேலங்கிளியே...

பிலிம் இனி தேவையில்லை என்று டிஜிடல் சினிமா வந்த பிறகு நிலைமை இன்னும் படுமோசம்.

நேற்று ஒரு சின்ன கூட்டம் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அப்பா, சித்தப்பா தயாரிப்பாளர்கள், அண்ணன் டைரக்டர், தம்பி ஹீரோ, இவர்களுடன் இன்னும் சில உறவுக்கார வில்லன்கள் என்று ஒரு ஏழெட்டுப் பேர்.

‘ஏனுங்க. புரடியூசர் கவுன்சில் இதுதானுங்களே.. இங்க மெம்பராகனும்னா எவ்வளவு பணம் கட்டோனும்?'

கேள்வியில் அப்பாவித்தனம் இருந்ததால், படத் தயாரிப்பு குறித்து சில ஆலோசனைகள் கூறலாமே என்ற எண்ணத்தில் ‘எப்ப படத்தை ஆரம்பிக்கப் போறீங்க?' என்றேன்.

அதற்கு அவர் சொன்ன பதில் என்னை தூக்கிவாரிப் போட்டது.

சினிமாக்காரன் சாலை- 4: தோப்பிலொரு சினிமா நடக்குது ஏலேலங்கிளியே...

‘என்னது எப்ப ஆரம்பிக்கப் போறீங்களாவா? படத்தை முடிச்சிட்டு முதல்ல கோவை, ஈரோடுல ரிலீஸ் பண்ணலாமுன்னு தியேட்டர் புக் பண்ணப் போனா அங்க சென்சார் சர்டிபிகேட் இருந்தாதான் தியேட்டர்ல போடுவோமுன்னு சொல்லிட்டாங்க. சரி சென்சார் பண்ண என்ன செய்யலாமுன்னு விசாரிச்சப்பதான், புரடியூசர் கவுன்சில்ல மெம்பரா இருந்தாத்தான் சென்சார் பண்ணுவாங்களாம்னு சொன்னாங்க. இன்னும் கியூப், டியூப்ல்லாம் சொல்லி என்னென்னமோ குழப்புறாங்க. கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்க' என்று அவர் நீளமாய் பேசி முடிக்க, ‘அடடே அவிங்களா நீங்க? என்று ஒரு வழியாய் நிலவரத்தைப் புரிந்து கொண்டேன்.

இப்போதெல்லாம் சென்னையைத் தாண்டி, கோவை, ஈரோடு, மதுரை போன்ற நகரங்களில் கூட டிஜிடல் கேமராக்களும், மற்ற தொழில் நுட்ப சாதனங்களும் சல்லிசான விலைக்கு படப்பிடிப்புக்கு கிடக்கின்றன. இயக்குநர்களும், நடிகர்-நடிகைகளும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். ஊரில் 'வெல்கம்' ஸ்டுடியோ வைத்திருந்தவர்களெல்லாம் ஒளிப்பதிவார்களாகி ரொம்ப நாளாச்சி.

'ராம்கோபால் வர்மா, கார்த்திக் சுப்பாராஜ் இவங்கள்லாம் ஒரு படத்துலகூட வேலை பாக்காமலே டைரக்டரானவங்க தெரியுமில்ல' என்ற கருத்தோடு ஊருக்கு பத்துப்பேர் டைரக்டராக அலைகிறார்கள்.

‘மாப்ள முதல்ல பாத்தப்ப அடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாத மாதிரி இருந்த தனுஷை யாருக்கு புடிச்சிச்சி? அடுத்து பாக்கப்பாக்க புடிச்சிப்போய் இன்னைக்கு ஹிந்தியில இறங்கி ரவுசு காட்டுற அளவுக்கு கெத்து ஹீரோவாயிடலை? அதே மாதிரி ஃபேஸ் கட்டுதாண்டா உனக்கு. உங்க அப்பனை கரெக்ட் பண்ணு. அப்பிடியே நம்ம தேனி, கம்பம், கூடலூரைச் சுத்தியே படத்தை முடிச்சிரலாம்'.

சினிமாக்காரன் சாலை- 4: தோப்பிலொரு சினிமா நடக்குது ஏலேலங்கிளியே...

‘ஹீரோயினுக்கு எங்கடா போறது?'

‘நீ ரொம்ப நாளா ஏங்கிட்டுத் திரியுறயே ‘மலைச்சாரல்' ஆடல்-பாடல் குரூப் கவிதா, சும்மா எடுப்பா... சினிமான்னா உயிரையே குடுப்பா..."

‘அப்பிடீன்ற... அப்ப என் அப்பன்கிட்ட என் சொத்தைப் பிரிச்சி எழுதி வாங்கியாவது படம் பண்றோம்'

இப்படி ஒன்றிரண்டல்ல. ஐந்து, பத்து என்று வளர்ந்து கடந்த ஆண்டில் இப்படி தயாரான படங்கள் சுமார் முப்பத்துக்கும் மேல் இருக்கும்.

படத்தை முடித்து ரிலீஸ் என்று வருகிறபோதுதான், இவர்களுக்கு கவுன்சில்,பெப்ஸி, சென்சார், கியூப், பிஎக்ஸ்டி, மற்றும் நிகில்முருகன் போன்ற சமாச்சாரங்கள் இருப்பதே தெரிய வருகிறது.

தோப்பிலோ, குளத்து மேட்டிலோ, வயல் காட்டிலோ, கரும்புத் தோட்டத்திலோ ஏதோ ஒரு இடத்தில் பேசி முடித்து படம் ஆரம்பிக்கப் போகும் இவர்களை எப்படி கண்டுபிடித்து ‘ஏனுங்க கவுன்சில்ல இருந்து வர்றோம். எங்களை கொஞ்சம் கலந்துபேசிக்கிட்டு, வெவரமா படம் பண்ணுங்க? என்று எப்படி சரி பண்ணுவது?'.

'நியாயமான கேள்விதான். எனினும் பதில் சொல்லத் தேவையில்லாத கேள்வியும் கூட...

‘ஏன் பதில் சொல்லத் தேவையில்லை? என்று கமெண்ட் பாக்ஸில் சின்னதாய் ஒரு கேள்விகேட்டால், பெரியதாய் ஒரு பதில் சொல்வேன். பல பஞ்சாயத்துக்களை கிளப்பப்போகும் பதில் அது!

(தொடர்வேன்)

 

டூரிங் டாக்கீஸ் படம் பார்த்து "மெர்சலான" இயக்குநர் ஷங்கர்

எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கியுள்ள டூரிங் டாக்கீஸ் படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர், படம் சிறப்பாக வந்துள்ளதாகக் கூறி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இளையராஜா இசையில் வெளியாகியுள்ள டூரிங் டாக்கீஸ் இன்று தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகியுள்ளது.

டூரிங் டாக்கீஸ் படம் பார்த்து

இப்படம் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டப்பட்டது. ஃபோர் ஃபிரேம்ஸ் தியேட்டரில் நேற்று இந்தப் படத்தைப் பார்த்த பலரும் எஸ்.ஏ. சந்திரசேகரனை பாராட்டினார்கள்.

இயக்குநர் ஷங்கர் கூறும்போது, இந்த வயதிலும் கடுமையாக உழைத்து சிறப்பாக இப்படத்தை எடுத்துள்ளார் எஸ்ஏசி. குறிப்பாக அந்த இரண்டாம் பாகத்தில் சமூகத்தில் நிலவும் அவலத்தை அத்தனை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். இதுவரை யாரும் எடுக்கத் துணியாத கதை இது," என்றார்.

இயக்குநர் ஷங்கர், எஸ்.ஏ.சந்திசேகரனிடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றி, அதன்பின் பெரிய இயக்குநராக உருவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஜய்யை மீண்டும் இயக்க ஆசை - எஸ் ஜே சூர்யா

நடிகர் விஜய்யை வைத்து மீண்டும் படம் இயக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா.

வாலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. அடுத்தடுத்து தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தவர்.

மிக இக்கட்டான நேரத்தில் விஜய்க்கு குஷி என்ற மெகா ஹிட் படத்தைத் தந்தவர்.

விஜய்யை மீண்டும் இயக்க ஆசை - எஸ் ஜே சூர்யா

மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா நடித்து, இயக்கி, இசையமைத்து உருவாக்கியுள்ள இசை படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்தான் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.

குஷி படத்துக்குப் பிறகு விஜய்யும் எஸ் ஜே சூர்யாவும் இணைந்து புலி என்ற பெயரில் படம் உருவாக்கத் திட்டமிட்டிருந்தனர். இதுகுறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

ஆனால் பல காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அந்தத் தலைப்பைத்தான் இப்போது சிம்பு தேவன் இயக்கும் விஜய் படத்துக்கு சூட்டியுள்ளனர்.

விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்து எஸ் ஜே சூர்யா கூறுகையில், "நானும் விஜய்யும் இணைந்து பணியாற்றி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் விஜய் என்னுடைய படத்தின் பாடல்களை வெளியிட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவருடன் இணைந்து மீண்டும் ஒரு படம் செய்ய விரும்புகிறேன்," என்றார்.

 

அமெரிக்காவில் 95 அரங்குகளில் 'என்னை அறிந்தால்'

வாஷிங்டன் (யு.எஸ்): அஜீத்தின் என்னை அறிந்தால் படம் அமெரிக்காவில் 95 அரங்குகளில் வெளியாகிறது. அரங்குகள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கணிசமான ரசிகர்களைப் பெற்றிருப்பவர் அஜீத். எந்த பின்புலமும் இல்லாமல் திரையுலகில் முன்னேறி வந்ததும், ரசிகர் மன்றங்களை கலைத்து உட்பட அவருடைய வெளிப்படையான அணுகுமுறையுமே அவருக்கு அங்கே உள்ள ஆதரவுக்கு முக்கிய காரணமாகும்.

அமெரிக்காவில் 95 அரங்குகளில் 'என்னை அறிந்தால்'

இந் நிலையில் அஜீத்தின் என்னை அறிந்தால் திரைப்படம் 95 தியேட்டர்களில் அமெரிக்காவில் வெளியாகிறது. முன்னதாக 'ஆரம்பம்' 78 தியேட்டர்களில் வெளியாகி இருந்தது. வீரம் படம் 80 அரங்குகளில் வெளியானது.

இப்போது 95 அரங்குகளில் என்னை அறிந்தால் வெளியாகிறது.

கலிஃபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக 9 தியேட்டர்களிலும், இலனாய்-ல் 8, டெக்சாஸில் 5, நியூ ஜெர்சியில் 5, ஒஹயோவில் 5, ஃப்ளோரிடாவில் 4, பிலடெல்பியாவில் 4 , மிசிகன் 4 உட்பட 36 மாகாணங்களில் என்னை அறிந்தால் படத்தை.

அட்மஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

 

இத்தனை ஆண்டுகளில் விஜய் சம்பாதித்த பெரிய சொத்து எது தெரியுமோ?

சென்னை: இத்தனை ஆண்டுகளில் தான் சம்பாதித்த பெரிய சொத்தே ரசிகர்கள் தான் என்று விஜய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இந்த படம் மூலம் சமந்தா முதல்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். லைக்கா நிறுவனம் தயாரித்ததால் கத்தி படம் பல பிரச்சனைகளை சந்தித்து ஒருவழியாக ரிலீஸானது.

இத்தனை ஆண்டுகளில் விஜய் சம்பாதித்த பெரிய சொத்து எது தெரியுமோ?

படம் ரூ.100 கோடி வசூல் செய்தது என்று கூறப்பட்டது. இந்நிலையில் கத்தி படம் வியாழக்கிழமையுடன் 100 நாட்களை தொட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ட்விட்டரிலும் இதை டிரெண்டாகவிட்டு அழகு பார்த்தனர்.

இந்நிலையில் இது குறித்து விஜய் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நீங்கள் என் மீது செலுத்திய அன்புக்கு நன்றி என்பது மிகவும் சிறிய வார்த்தை. இத்தனை ஆண்டுகளாக நான் சம்பாதித்த பெரிய சொத்தே நீங்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.

விஜய் சம்பாதித்த பெரிய சொத்தே அவரது ரசிகர்கள் தானாம்.

 

பிப்ரவரி 27-ல் காக்கிச் சட்டை.. சிவகார்த்திகேயனுக்கு காத்திருக்கும் முக்கிய 'டெஸ்ட்'!

காக்கிச் சட்டை படத்தை வரும் பிப்ரவரி 27-ம் தேதி வெளியிடவிருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

துரை செந்தில் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் காக்கிச் சட்டை. முதல் முறையாக இந்தப் படத்தில் காக்கிச் சட்டை போட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

பிப்ரவரி 27-ல் காக்கிச் சட்டை.. சிவகார்த்திகேயனுக்கு காத்திருக்கும் முக்கிய 'டெஸ்ட்'!

தனுஷின் சொந்தத் தயாரிப்பான இந்தப் படம் கடந்த பொங்கலன்றே வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், பொங்கலுக்கு ஐ வந்ததால், பிப்ரவரிக்கு தள்ளி வைக்கப்பட்டது. எந்த கட்டும் இல்லாத கிளீன் யு சான்று பெற்று இந்த போலீஸ் படம், வரும் பிப்ரவரி 27-ம் தேதி உலகம் முழுவதும் வெலியாகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே படங்களுக்குப் பிறகு பெரிய அளவில் எதிர்ப்பார்க்கப்படும் நாயகனாகிவிட்ட சிவகார்த்திகேயனுக்கு இது முக்கியமான டெஸ்ட் என்று கூடச் சொல்லலாம்.

 

ஏகப்பட்ட படங்கள் வருவதால் ஒத்திவைக்கப்பட்டது பொங்கி எழு மனோகரா!

நாளை வெளியாகவிருந்த பொங்கி எழு மனோகரா படம், வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இர்பான், அர்ச்சனா, அருந்ததி, சிங்கம் புலி நடித்துள்ள புதிய படம் ‘பொங்கி எழு மனோகரா'.

இப்படத்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரமேஷ் ரங்கசாமி என்பவர் இயக்கியுள்ளார்.

காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகவிருந்தது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சியும் போடப்பட்டது.

ஏகப்பட்ட படங்கள் வருவதால் ஒத்திவைக்கப்பட்டது பொங்கி எழு மனோகரா!

இந்நிலையில், படம் நாளை வெளியாகாது என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தயாரிப்பாளர் பரந்தாமன் கூறுகையில், ‘பொங்கி எழு மனோகரா' படத்தை நாளை வெளியிட முடிவு செய்திருந்தோம். இந்தப் படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டோம்.

ஆனால், நாளை ‘இசை', ‘புலன்விசாரணை 2', ‘தரணி', ‘கில்லாடி', ‘டூரிங் டாக்கீஸ்' ஆகிய படங்கள் வெளியாவதால் நாங்கள் எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஆகையால், படத்தை வேறு தேதிக்கு ஒத்திவைத்துள்ளோம். படம் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்," என்றார்.

 

ஏழுமலையான் கருணையால் 'என்னை அறிந்தால்' பிப்.5ல் ரிலீஸ் ஆகுமா? எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள்

திருப்பதி: என்னை அறிந்தால் திரைப்படம் நல்லபடியாக உருவாகி வந்துள்ள நிலையில், நடிகர் அஜித், திருப்பதி கோயிலுக்கு சென்று எழுமலையானை தரிசித்து விட்டு திரும்பியிருக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே செல்வதால், அஜித்தின் சாமி தரிசனத்திற்கு பிறகாவது சொன்ன தேதியில் என்னை அறிந்தால் ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘என்னை அறிந்தால்'. இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்கள், எங்களுக்கு இது 'தல' பொங்கல் என்று கூறி கொண்டாடிடனர். இதனிடையே பட வேலைகள் பாக்கியிருப்பதால் ஜனவரி 29ம்தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு திடீரென அறிவித்ததால் தயாரிப்பு தரப்புக்கு எதிராக ரசிகர்கள் பொங்கினர். இருப்பினும், அஜித்துக்காக பல்லைக்கடித்துக் கொண்டனர்.

ஏழுமலையான் கருணையால் 'என்னை அறிந்தால்' பிப்.5ல் ரிலீஸ் ஆகுமா? எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள்

ஆனால் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பது போல, படம் பிப்ரவரி 5ம்தேதி ரிலீஸ் ஆகப்போவதாக அறிவிக்கப்பட்டது. இம்முறை சென்சார் தாமதத்தை காரணமாக கூறியது படக்குழு. பட வெளியீடு தள்ளிப்போக, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இடையே ஏற்பட்டுள்ள மோதல்தான் காரணம் என்று சிலர் கொளுத்திப்போட்டனர். இந்நிலையில்தான், அஜித் படம் ரிலீசாகும் தினத்தன்று தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என்ற மிரட்டல் வெளியாகியுள்ளது.

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில்தான் அஜித் நேற்று திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். ஏழுமலையானை அவர் மனமுருக வேண்டிக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

அஜித் ஏழுமலையானை தரிசனம் செய்வது புதிது கிடையாது. பில்லா-2, ஆரம்பம், வீரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகும் அஜித் ஏழுமலையானை தரிசனம் செய்தார். திருப்பதி சென்று வந்த பிறகு தனது திரையுலக வாழ்க்கையில் திருப்பங்கள் நடந்துவருவதாக நம்பிக்கை கொண்டுள்ளார் அஜித் என்கின்றனர் அவரது நெருங்கிய நண்பர்கள்.

எனவேதான், என்னை அறிந்தால் ரிலீசுக்கு முன்பாகவும், அஜித் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த ஏழுமலையான் கருணையால், இனியாவது என்னை அறிந்தால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகக்கூடாது என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுதல்.

 

'புலி' விஜய் எப்படி இருப்பார்: பார்க்க ஆசையா இருக்கிறதா?

சென்னை: இளைய தளபதி விஜய் நடித்து வரும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

சிம்பு தேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் பேன்டஸி படம் புலி. துப்பாக்கி, கத்தி என்று தொடர்ந்து ஆயுதங்களின் பெயர் கொண்ட படங்களில் நடித்த விஜய் தற்போது விலங்கின் பெயர் கொண்ட படத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த பெயரும் நிலையில்லை என்று கூறப்படுகிறது. படத்தின் பெயர் மாற்றப்படலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

'புலி' விஜய் எப்படி இருப்பார்: பார்க்க ஆசையா இருக்கிறதா?

ஹாங்காங்கைச் சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் நாங்(Nang)கூறியபடி விஜய் பயங்கரமான ஸ்டண்ட் காட்சியில் நடித்துள்ளாராம். புலி படத்தின் படப்பிடிப்பு பற்றி பல செய்திகள் வருவதை பார்த்துவிட்டு ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது புலி படத்தில் விஜய் பார்க்க எப்படி இருப்பார் என்பது தான் அந்த எதிர்பார்ப்பு. இந்நிலையில் தான் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியை தெரிவிக்கிறோம். புலி படத்தின் பர்ஸ்ட் லுக் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் வெளியாகுமாம்.

புலி படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு இளமை துள்ளும் ஹீரோயின்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சேரனின் சினிமா டு ஹோம் திட்டம் மீண்டும் தள்ளி வைப்பு.. பிரமாண்ட விழா எடுத்து ஆரம்பிக்க முடிவு!

சென்னை: சேரன் தொடங்கியுள்ள சினிமா டு ஹோம் திட்டத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

படங்களை திரையரங்குகளில் வெளியிடும் போதே, நேரடியாக வீட்டுக்கு வீடு டிவிடியாக வழங்கும் திட்டமான சினிமா டு ஹோம் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

சேரனின் சினிமா டு ஹோம் திட்டம் மீண்டும் தள்ளி வைப்பு.. பிரமாண்ட விழா எடுத்து ஆரம்பிக்க முடிவு!

இத்திட்டத்தின் மூலம் சேரன் இயக்கிய ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை டி.வி.டி.யாக வீடுகளில் கடந்த பொங்கலன்று விநியோகம் செய்ய ஏற்பாடு நடந்தது. பின்னர் அது 30-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தள்ளிப் போகிறது.

இதுகுறித்து சேரன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "சினிமா டூ ஹோம் திட்டம் மூலம் ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை நாளை (30-ந் தேதி) டி.வி.டி.யாக வீடுகளில் சப்ளை செய்ய இருந்தோம். தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் கலைப்புலி தாணு மற்றும் விநியோகஸ்தர்களை நேற்று சந்தித்து இத்திட்டம் குறித்து விளக்கினேன்.

கலைப்புலி தாணு நல்ல முயற்சி என்று பாராட்டினார். தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பலன் அளிக்கும் திட்டம் என்றும் கூறினார். இரு வாரங்கள் கழித்து நடிகர்- நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரை அழைத்து பிரமாண்டமாக இந்த திட்டத்தின் தொடக்க விழாவை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்டேன்.

நாளை தொடங்க இருந்த இத்திட்டம் கலைப்புலி தாணு வேண்டுகோளுக்கிணங்க தள்ளி வைத்துள்ளேன். விரைவில் நடிகர், நடிகை வைத்து பிரமாண்டமாக இதன் தொடக்க விழா நடத்தப்படும்.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட திலையுலகினரின் கூட்டு முயற்சியாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்," என்றார்.

 

அப்பாவின் நடிப்பைப் பாராட்டிய விஜய்!

டூரிங் டாக்கீஸ் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள தன் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் நடிப்பை நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் கூறுகையில், "டூரிங் டாக்கீஸ் படத்தை என் மகன் நடிகர் விஜய் பார்த்தார்.

அவரைப் பற்றி அனைவருக்குமே தெரியும், அதிகம் பேசமாட்டார் என்று.

அப்பாவின் நடிப்பைப் பாராட்டிய விஜய்!

அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒன்றும் சொல்லாமல் போய்விடுவார்.

என்னிடம் கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வெடுக்கச் சொல்லி வருகிறார். ஆனால் ஒரு நல்ல வெற்றிப் படம் கொடுத்துவிட்டு ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்த முறை டூரிங் டாக்கீஸ் படத்தைப் பார்த்ததுமே, என் மகன் என் தோளில் தட்டி நல்லா பண்ணியிருக்கீங்கப்பா என்றார். அதுவே பெரிய விஷயம்தான்.

இது என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றிப் படம்," என்றார்.

 

லிங்கா பட விவகாரம்: ரஜினி, கே.எஸ்.ரவிகுமார் நேரில் ஆஜராக மதுரை கோர்ட் உத்தரவு

மதுரை: இழப்பீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், ரஜினி உள்ளிட்ட லிங்கா படக்குழுவினர் ஆஜராக, நோட்டீஸ் அனுப்ப மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் லிங்கா. இப்படத்தின் கதை தன்னுடையது என மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் மதுரை ஷைகோர்ட் கிளையில் கடந்த டிசம்பர் மாதம் மனுத் தாக்கல் செய்தார்.

லிங்கா பட விவகாரம்: ரஜினி, கே.எஸ்.ரவிகுமார் நேரில் ஆஜராக மதுரை கோர்ட் உத்தரவு

அந்த மனுவில், "முல்லைப் பெரியாறு அணை மற்றும் அணையைக் கட்டிய பென்னிகுயிக் வரலாறை பின்னணியாக கொண்டு ‘முல்லைவனம் 999' என்ற படத்தை இயக்கி வருகிறேன். அந்த கதையை திருடி ‘லிங்கா' படத்தை தயாரித்துள்ளனர். எனவே, ‘லிங்கா' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனது கதையை திருடிய ‘லிங்கா' படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ரவிரத்தினம் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தனி நீதிபதி, ‘மனுதாரரின் முக்கியமான கோரிக்கை பதிப்புரிமை சட்டம் தொடர்பானது என்பதால் மனுதாரரின் கோரிக்கைக்கு இந்த நீதிமன்றம் பரிகாரம் அளிக்க முடியாது. மனுதாரர் சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம்" எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக ரவிரத்தினம் மதுரை மாவட்ட கூடுதல் உரிமையியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "லிங்கா படத்தின் கதை, நான் திரைக்கதை எழுதி தயாரித்து வரும் முல்லைவனம் 999 படத்தின் கதை ஆகும். எனவே, லிங்கா படத்தின் கதையும், முல்லைவனம் 999 கதையும் ஒன்று தான் என்று உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை லிங்கா படக்குழுவினர் அந்த படத்தின் கதையை தங்களுடையது என்று சொல்வதற்கு தடைவிதிக்க வேண்டும். என்னுடைய கதையை திருடியதற்காக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சரண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணை முடிவில், லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் ஆஜராக நோட்டீசு அனுப்புமாறு உத்தரவிட்டதுடன் வழக்கை வருகிற மார்ச் மாதம் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

விஜய் நடித்த கத்திக்கு இன்று 100வது நாள்!

விஜய் நடித்த கத்தி படம் இன்று நூறு நாட்களைத் தொட்டுள்ளது.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடித்த படம் கத்தி. லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படம் பல வழக்குகள், ஆர்ப்பாட்டங்கள், சர்ச்சைகளைக் கடந்து தீபாவளிக்கு வெளியானது.

உலகெங்கும் வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் இதுவரை வந்த விஜய் படங்களை முந்தி சாதனைப் படைத்ததாக பாக்ஸ் ஆபீஸில் கூறப்படுகிறது.

விஜய் நடித்த கத்திக்கு இன்று 100வது நாள்!

இந்தப் படம் சென்னையில் மூன்று திரையரங்குகளில் நூறு நாளை எட்டியுள்ளது.

வெளிநாட்டு கார்ப்பொரேட் நிறுவனங்கள், தமிழகத்தில் விவசாயத்துக்கான தண்ணீரை உறிஞ்சுவதை மையப்படுத்தி வந்த படம் கத்தி. இந்தக் கதை தன்னுடையது என சிலர் வழக்குத் தொடர்ந்தனர். படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதையடுத்து லைகா பெயரை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டனர்.

கடைசியில் நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. இப்போது லைகா நிறுவனப் பெயரிலேயே படம் நூறாவது நாள் கண்டுள்ளது.

 

‘நச்’சுனு ஒரு படம்... 7 ஹீரோ, 5 ஹீரோயின்களுடன்!

சென்னை: 7 கதாநாயகர்கள், 5 கதாநாயகிகள் நடிப்பில் ‘நச்' என்ற தலைப்பில் படம் ஒன்று உருவாகி வருகிறது.

‘மரிக்கார் ஆர்ட்ஸ்' தமிழில் தயாரிக்கும் முதல் படம் ‘நச்'. இப்படத்தினை ஹசிம் மரிக்கார் எழுதி, இயக்குகிறார். இதில் ‘அங்காடி தெரு' மகேஷ், சஞ்சீவ், பிரவீன் பிரேம், மக்பூல் சல்மான் உட்பட 7 பேர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகிகளாக மதுரிமா பானர்ஜி, எதன், பூனம் ஜாவர் உட்பட 5 நடிக்கிறார்கள். மற்றும் ரியாஸ்கான், காளி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘நச்’சுனு ஒரு படம்... 7 ஹீரோ, 5 ஹீரோயின்களுடன்!

இந்தப் படத்தில் நடித்துள்ள மக்பூல் சல்மான் நடிகர் மம்முட்டியின் அண்ணனும், பிரபல நடிகருமான இப்ராகிம் குட்டியின் மகன் ஆவார். ஏற்கெனவே 5 மலையாள படங்களில் நடித்திருக்கும் மக்பூலின் முதல் தமிழ்ப் படம் இது.

இதேபோல், மதுரிமா பானர்ஜி விஷாலின் ‘ஆம்பள' படத்தில் நடித்தவர்.

‘நச்’சுனு ஒரு படம்... 7 ஹீரோ, 5 ஹீரோயின்களுடன்!

இப்படத்திற்கு மன்சூர் அகமது இசையமைக்கிறார். அடுத்தமாதம் துவங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொச்சின், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது.

‘நச்’சுனு ஒரு படம்... 7 ஹீரோ, 5 ஹீரோயின்களுடன்!

வரும் மே மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 

வருணின் வருங்காலப் படத் தயாரிப்புகளில் கை கோர்க்கிறார் திரிஷா!

வருங்கால கணவருக்கு துணையாக படத்தயாரிப்புப் பணிகளில் இறங்குகிறார் வருணின் வருங்காலப்  படத் தயாரிப்புகளில் கை கோர்க்கிறார் திரிஷா!

த்ரிஷா - வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. மார்ச் மாதத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு நடிப்பதில் தடையில்லை என்று த்ரிஷா கூறியிருந்தார். புதிய படங்களில் ஒப்பந்தமாகப் போவதாகவும் கூறியிருந்தார்.

இன்னொரு பக்கம், வருண் மணியனுடன் இணைந்து படத் தயாரிப்பில் இறங்கவும் த்ரிஷா திட்டமிட்டுள்ளாராம்.

முதலாவதாக திரு இயக்கும் படத்தை தயாரிக்கப் போகிறாராம். விஷாலை வைத்து சமர், தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன் படங்களை இயக்கியவர் திரு.

இந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

 

காதலரை பதிவுத் திருமணம் செய்து சூப்பராக ரிஷப்ஷன் வைத்த நடிகை சோஹா அலி கான்

மும்பை: பாலிவுட் நடிகை சோஹா அலி கான் தனது காதலரான நடிகர் குணால் கேமுவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் தங்கை நடிகை சோஹா அலி கான். அவர் பாலிவுட் நடிகர் குணால் கேமுவை காதலித்து வந்தார். இந்நிலையில் கேமு சோஹாவுக்கு மோதிரம் அணிவித்து திருமணத்தை நிச்சயம் செய்தார்.

காதலரை பதிவுத் திருமணம் செய்து சூப்பராக ரிஷப்ஷன் வைத்த நடிகை சோஹா அலி கான்

இதையடுத்து சிறப்பு திருமண சட்டப்படி கடந்த 25ம் தேதி அவர்களின் திருமணம் நடைபெற்றது. மும்பையில் உள்ள சோஹாவின் வீட்டில் அவரது தாய் பாலிவுட் நடிகை சர்மிளா தாகூர், சகோதரர் சயிப் அலி கான், அண்ணி கரீனா கபூர், சகோதரி சபா அலி கான் ஆகியோரின் முன்பு பதிவுத் திருமணம் நடந்தது. திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது.

அதன் பிறகு பிரமாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகைகள் நேஹா தூபியா, மலாய்க்கா அரோரா கான், அம்ரிதா அரோரா, சோபி சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பில் சயிப் அலி கானின் மகன் சித்தி கரீனா கபூருடன் சகஜமாக பழகியதுடன், ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்.

 

இந்தக் ‘கொசு’த் தொல்லை தாங்களயே.... சம்பளத்தை உயர்த்திய நடிகர்!

சென்னை: பதி நடிகர் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். இப்போது அவர் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம்.

நட்புக்காக நண்பர்களின் படங்களில் சிறிய வேடங்களில் கூட தலை காட்டியவர் தான் இவர். ஆனால், அவரிடம் ஏன் இந்த அதிரடி மாற்றம் என அவரது நெருங்கிய வட்டாரத்தாரிடம் கேட்டால், ''குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தால், நிறைய பேர் வந்து கதவை தட்டுகிறார்கள். சம்பளத்தை உயர்த்தி விட்டால், கதவை தட்டுபவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும்'' என நடிகர் விளக்கம் கூறுகிறாராம்.

ஆனால், சிறிய படங்கள் மூலம் மக்களிடம் அதிக கவனிப்பைப் பெற்றவரான இந்த நடிகர், இவ்வாறு அதிரடியாக கோடிகளில் சம்பளத்தை உயர்த்தினால், சின்னத் தயாரிப்பாளர்கள் பலர் நடிகரை நெருங்கவே பயப்படுவார்களே... இதை ஏன் நடிகர் மறந்தார்.

 

கணையம் பாதிப்பு... நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: கணைய பாதிப்பு காரணமாக நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல நடிகை விந்தியா, இப்போது அதிமுகவில் முழுநேரப் பேச்சாளராக உள்ளார்.

கணையம் பாதிப்பு... நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதி!

சில தினங்களுக்கு முன் வாரணாசிக்குச் சென்றிருந்தார் விந்தியா. அங்கிருந்து சென்னைக்கு திரும்பியதிலிருந்து பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.

ஆனால் நேற்று அவர் உடல் நிலை மோசமடைந்து, மயங்கி விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து கேகே நகரில் உள்ள கேஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மூன்று நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

பாரத ரத்னாவுக்கு நான் தகுதியற்றவன் - அமிதாப்

பாரத ரத்னா விருது பெறும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை.. நாடு இப்போது தந்திருக்கும் கவுரமே பெரியது என நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

பாரத ரத்னாவுக்கு நான் தகுதியற்றவன் - அமிதாப்

பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு, நாட்டின் 2-வது உயரிய விருதான ‘பத்மவிபூஷண்' வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மம்தா கருத்து

இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, "அமிதாப்பச்சனுக்கு பத்மவி பூஷணுக்கு பதிலாக பாரத ரத்னா விருதினை அறிவித்து கவுரவம் செய்திருக்க வேண்டும்.. அதற்கு தகுதியானவர் அவர்," என கூறியிருந்தார்.

அமிதாப்

இதற்கு அமிதாப் பச்சன் தனது ‘ட்விட்டர்' பக்கத்தில் இப்படி பதிலளித்திருந்தார்:

"மம்தா அவர்களே, பாரத ரத்னா என்ற அங்கீகாரம் பெறுவதற்கு எனக்கு தகுதி இல்லை. நாடு எனக்கு இப்போது தந்திருப்பதே மிகவும் கவுரவமானது என அடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்," என்றார்.

 

தாரை தப்பட்டையில் சசிகுமாருக்கு 7 கெட்டப்புகளாம்

பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் தாரை தப்பட்டை படம் பற்றி பிரஸ் மீட் வைக்காமலே ஏகப்பட்ட செய்திகள் கொட்டுகின்றன.

காரணம், இந்தப் படம் பாலாவின் ஸ்பெஷல் உருவாக்கம் மற்றும் இளையராஜாவின் ஆயிரமாவது படம் என்ற பெருமை.

தாரை தப்பட்டையில் சசிகுமாருக்கு 7 கெட்டப்புகளாம்

படத்துக்கான இசையை இளையராஜா பல மாதங்களுக்கு முன்பே போட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் திரைக்கதையை மீண்டும் மீண்டும் சரிபண்ணிக் கொண்டிருந்த பாலா, இரு மாதங்களுக்கு முன்புதான் கும்பகோணத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தார். அதே வேகத்தில் பெருமளவு காட்சிகளை படமாக்கியும் விட்டார்.

படத்தின் நாயகன் சசிகுமாருக்கு இதில் ஏழு விதமான தோற்றங்களாம். எந்தத் தோற்றமும் வெளியில் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் சமீப காலமாக சசியை எங்குமே பார்க்க முடிவதில்லை.

சசிகுமார் ஜோடியாக இந்தப் படத்தில் வரலட்சுமி நடிக்கிறார். விரைவில் மிக பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடத்தவிருக்கிறார்கள்.

 

அஜீத் படம் ரிலீசாகும் தேதியில் 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும்! - ஆரம்பிச்சிட்டாங்கய்யா மிரட்டலை!

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கு புதிய மிரட்டல் வந்துள்ளது. அந்தப் படம் வெளியாகும் பிப்ரவரி 5-ம் தேதி, சென்னையில் 8 அரங்குகளில் குண்டு வெடிக்கும் என மிரட்டியுள்ளனர் சிலர்.

இதுகுறித்து சென்னையில் உள்ள உதயம் தியேட்டர் மேலாளருக்கு கடிதம் ஒன்றும் வந்துள்ளது. அஜீத், திருவான்மியூர் என்ற பெயரிலிருந்து வந்த கடிதத்தை தியேட்டரின் மேலாளர் ஹரிஹரன் வாங்கிப் பார்த்தார்.

அதில், "என்னை அறிந்தால்' படம் ரிலீஸ் ஆகும் அன்று உதயம் தியேட்டர் உள்ளிட்ட 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அஜீத் படம் ரிலீசாகும் தேதியில் 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும்! - ஆரம்பிச்சிட்டாங்கய்யா மிரட்டலை!

அதே போல அஜீத்தின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதம் பார்த்து பயந்துபோன ஹரிஹரன், உடனடியாக குமரன் நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் ஜெயின் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து சென்று தியேட்டர்களை சோதனையிட்டனர்.

ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது இதுபோல எதிர்மறை புரளிகளைப் பரப்புவதையே சிலர் வேலையாக வைத்துள்ளனர். இதுவும் அவர்களின் வேலையோ என்ற கோணத்தில் ஆராய்ந்து வருகிறது காவல் துறை.

என்னை அறிந்தால் படம் சென்னையில் மட்டும் 45 அரங்குகளுக்கு மேல் வெளியாகிறது. தமிழகமெங்கும் 400 அரங்குகளில் வெளியாகிறது.

 

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் மரணம்

கேரள சினிமாவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 72.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாலா கிராமத்தைச் சேர்ந்த இவர் பத்திரப்பட்டு என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் மரணம்

தொடர்ந்து சமயமில்லாம் போலும், கண்ணக்குள், அங்குரி, ஆவேசம் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து கேரள மக்களின் மனதில் இடம் பிடித்தார். கடந்த ஆண்டு மசாலா ரிப்பப்ளிக் என்ற படத்தில் நடித்தார். இதுதான் அவரது கடைசி படம். மொத்தம் 400க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

கேரள சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்திருந்தவர் அரவிந்தன்.

கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அரவிந்தன் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்தார். கடந்த 19-ந்தேதி மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் முயற்சித்தனர்.

ஆனால் மாலா அரவிந்தனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இன்று காலை (புதன்கிழமை) மாலா அரவிந்தன் மரணமடைந்தார்.

கோவையிலிருந்து மாலா அரவிந்தனின் உடல் கேரளாவுக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டது. அவரது சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

அரவிந்தனருக்கு இவருக்கு கீதா என்ற மனைவியும். முத்து என்ற மகனும், கலா என்ற மகளும் உள்ளனர்.

 

தொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன்? - ஏ எம் ரத்னம் பதில்

அஜீத்தின் அடுத்த படத்தையும் தானே தயாரிக்கப் போவதாகவும், அஜீத் தனக்கு மிக சவுகர்யமான நாயகன் என்றும் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் கூறியுள்ளார்.

என்னை அறிந்தால் படம் வெளியாவது குறித்து அதன் தயாரிப்பாளரான ஏ எம் ரத்னம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன்? - ஏ எம் ரத்னம் பதில்

அப்போது அவரிடம், அடுத்தடுத்து அஜீத் படங்களைத் தயாரிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.எம்.ரத்னம், "ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை அடுத்து மீண்டும் அஜித்தை வைத்து படம் தயாரிக்கப் போகிறேன்.

இந்தப் படத்தை வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார்.

அஜித் எனக்கு சவுகரியமான கதாநாயகனாக உணர்கிறேன். அவரும் அப்படித்தான் கருதுகிறார். எனவேதான் எங்கள் கூட்டணி தொடர்கிறது', என்றார்.

 

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜீத்... ரசிகர்கள் அன்புப் பரிசை ஏற்றுக் கொண்டார்

என்னை அறிந்தால் படம் பிப்ரவரி 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் அஜீத் திருப்பதி திருமலையில் சாமி தரிசனம் செய்தார்.

அங்கு குழுமிய தனது ரசிகர்களை நலம் விசாரித்தார். அவர்கள் தந்த அன்புப் பரிசை பெற்றுக் கொண்டதோடு, உடன் நின்று படமும் எடுத்துக் கொண்டார்.

வெள்ளை வேட்டி, சட்டை, தனது பிராண்ட் நரைத்த தாடியுடன் திருமலைக்கு வந்த அஜீத்தை, கோயில் நிர்வாகிகள் வரவேற்று சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜீத்... ரசிகர்கள் அன்புப் பரிசை ஏற்றுக் கொண்டார்

சாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்த அஜீத்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் நின்று படங்கள் எடுத்துக் கொண்டார் அஜீத். சிலர் அவருக்கு பரிசாக திருப்பதி ஏழுமலையான் படத்தை அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு, ரசிகர்களை நலம் விசாரித்தார் அஜீத்.

பின்னர் அங்கிருந்து சென்னைக்கு கிளம்பினார்.

திருப்பதிக்கு அஜீத் செல்வது இது முதல் முறையல்ல. என்னை அறிந்தால் படத்துக்கு முன், வீரம் படம் முடிந்ததும் திருமலைக்குச் சென்று இயக்குநர் சிவாவுடன் மொட்டை போட்டுக் கொண்டு திரும்பியது நினைவிருக்கலாம்.

 

சினிமாக்காரன் சாலை-3: நேனு... நீனு... கடைசியில தாணு!

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு 48 மணி நேரங்கள் ஆனபிறகுதான் இந்தக் கட்டுரையை எழுதவேண்டும் என்று முடிவு செய்துவிட்டு காத்திருந்தேன்.

அனைத்து தினசரிகள், முன்னணி இணையங்கள் தொடங்கி குசும்பர்களின் கிசுகிசு.காம்கள் வரை அனைத்திலும் தோண்டித் துருவிப் பார்த்துவிட்டேன். தேர்தல் தொடர்பாக கைகலப்புகளோ, கோர்ட்டில் மறுதேர்தல் கேட்டு மல்லுக்கட்டுகளோ இல்லை. இதற்கு மேல் யாரும் 'கிளம்பி' வரமாட்டார்கள் என்று திடமாக நம்புவோம்.

காரணம் அடிதடிகளில் ஈடுபட்டவர்களும் கோர்ட் கேஸ் என்று தடை வாங்கியவர்களும் ஒன்று, அளவுக்கு மீறி டயர்டாகி விட்டார்கள். அடுத்தது, அதில் முக்கால்வாசிப்பேர் பதவிக்கு வந்துவிட்டார்கள்!

இந்த அடிதடிகள் எப்போது துவங்கின என்று சின்னதாக ஒரு ஃப்ளாஷ்பேக் பார்ப்போம்.

2011 மே திமுக ஆட்சி அஸ்தமனமாகி மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்தபோது, அப்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவராக 'அமரர்' ராமநாராயணன் இருந்தார். பெரும் பதவியில் இருந்தாலும் அவரளவுக்கு ஒரு எளிமையான மனிதரை பார்ப்பது அரிது. யாரும் தங்கள் பிரச்சினைகள் குறித்துப் பேச, ஒரே ஒரு போன் காலில் அவரை சந்தித்துவிட முடியும். அரசியலில் திமுக சார்புடயவராக இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அரசியல் சார்பற்றே நடந்துகொண்டார்.

சினிமாக்காரன் சாலை-3: நேனு... நீனு... கடைசியில தாணு!

அதிமுக ஆட்சியைப் பிடித்தபோது, அவரது தலைவர் பதவிக்காலம் முடிய மேலும் ஒரு வருடம் இருந்தது. எனினும் தான் தலைமைப் பதவியில் இருந்தால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசாங்கம் மூலம் கிடைக்கக்கூடிய உதவிகள் சரியாக வந்து சேராது என்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து உடனே தேர்தல் வைப்பது சரிப்படாது என்ற முடிவில், அதிமுக

ஆதரவாளர் என்று கருதப்பட்ட எஸ்.ஏ. சந்திரசேகரன் தற்காலிக தலைவராக்கப்பட, அன்று யூனியனுக்குள் சனியன் புகுந்தது. 'எஸ்.ஏ. சி சங்கத்துக்காக எதையும் செய்ய மாட்டார். அம்மாவின் உண்மையான விசுவாசி நான்தான்' என்று கே. ஆர் கள்ளாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். சுமார் ஆறுமாத காலம் நல்ல நல்ல கெட்ட வார்த்தைகளில் சண்டை போட்டு ஒரு தேர்தல் நடத்தினார்கள். அந்தத் தேர்தலில் எஸ்.ஏ.சியிடம் 13 ஓட்டுக்களில் தோற்றுப்போன கே. ஆர் மீண்டும் போங்காட்டம் ஆட ஆரம்பிக்க, கவுன்சில் தெருச் சண்டை நடக்கும் இடமாக ஆக ஆரம்பித்தது. இவர்களது சண்டையானது குழாயடிச் சண்டைகளுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாமல் இருந்தது.

சினிமாக்காரன் சாலை-3: நேனு... நீனு... கடைசியில தாணு!

விதவிதமாக, வெரைட்டியாக அடித்துக் கொண்டார்கள். காலையில் கேயார் அணியில் இருந்து தாணுவிடம் சண்டை போட்டவர், மதிய லஞ்சை எஸ்.ஏ.சியிடம் சாப்பிட்டுவிட்டு, இரவு டின்னருக்கு மீண்டும் தாணுவிடமே தஞ்சமடைந்து கேயாரைக் கன்னாபின்னாவென்று கேள்விகள் கேட்ட அந்தர்பல்டிகள் அடிக்கடி அரங்கேறின. நேனு, நீனு கடைசியா தாணு என்று ஆட்டங்கள் நடந்தன.

அடுத்து வரிசையாக மறுதேர்தல்களும் நம்பிக்கை இல்லாத் தீர்மானங்களுமாக கவுன்சில் அல்லுசில் ஆகி கடந்த ஞாயிறன்றுதான் 'ஐயாம் நவ் நார்மல்' என்று ஆகியிருக்கிறது.

நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நடந்த அந்தத் தேர்தலில் சின்னப்புள்ளத்தனமான பஞ்சாயத்துக்கள் ஏதுமின்றி பேல்லட் பேப்பரில் ஓட்டுப்போட்டு வந்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாக்காரன் சாலை-3: நேனு... நீனு... கடைசியில தாணு!

முன்னர் நடந்த பல பஞ்சாயத்துக்களின் காரணகர்த்தா தாணுவையே சிலபல உள்நோக்குகளுடன் ‘ஒரு வாட்டி அவரும் என்னதான் பண்றாருன்னு விட்டுக் குடுத்து பாப்பமேப்பா' என்ற எண்ணத்தில் தலைவராக்கி இருக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற சில முக்கிய தலை'களுக்கும் இது பொருந்தும்.

ஏனெனில் கடந்த நான்கு வருடங்களாக நடந்த வெட்டுக் குத்துக்களால் தயாரிப்பாளர் சங்கம் குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கிறது. இனி ஒரு மறுதேர்தலோ, நம்பிக்கையில்லா தீர்மானமோ வந்தால் கவுன்சிலை தூக்கிக்கொண்டு போய் கண்ணம்மா பேட்டையில் அடக்கம் பண்ணவேண்டிய நிலை.

2008- திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட சிறுபட்ஜெட் படங்களுக்கான மானியம் கடந்த ஏழு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.

FROM ADDRESS.....TO ADDRESS இரண்டுமே இல்லாத அனாதைக் கடிதம் போல, சுமார் இரண்டாயிரம் உறுப்பினர்கள் இருக்கும் சங்கத்தின் பிரச்சினைகள் குறித்து யார் யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியாத நிலை மேற்படி சிலவருடங்களாகவே நீடித்து வருகிறது.

இதனாலேயே ஃபிலிம் தின்று படம் போட்ட ஏ.வி.எம், சூப்பர்குட், சிவாஜி பிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களே படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கி நின்று திரையுலகில் நடப்பனவற்றை சினிமா பார்ப்பதுபோல் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

தேங்கிக் கிடக்கும் படங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்க, விவரமில்லாமல் அல்லது தக்க வழிகாட்டுதல் இன்றி படமெடுக்க வந்தவர்களின் எண்ணிக்கை ஒரிஜினல் பாம்புகளின் படையெடுப்பு போல் ஆனது.
பதில்களற்ற கேள்விகள் கவுன்சில் முழுக்க, ஐந்து வருடங்களாக பெருக்கப்படாத குப்பைகள் போல் குவிந்து கிடக்கின்றன.

என்ன செய்யப்போகிறார்கள் தாணுவும் அவரது சகாக்களும் என்று அறிந்துகொள்ள புதிய அணியின் செயற்குழு உறுப்பினரும், கடந்த ஏழு ஆண்டுகாலமும் தொடர்ந்து செயற்குழு உறுப்பினராய் இருந்து வருபவருமான தயாரிப்பாளர் விஜயமுரளி அவர்களைச் சந்தித்தேன்.

பொதுவாக பேசிவிட்டு ‘புதுப்படம் எடுக்கவரும் தயாரிப்பாளர்கள் குறித்து ஒரு கதை சொன்னார் பாருங்கள்.. ‘அப்படியே நான் ஷாக்காயிட்டேன்....'


(இதை மட்டும் நாளையே தொடர்வேன்)

 

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஸ்ருதிஹாஸன்

ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன் சினிமாவில் அறிமுகமாகி, இன்று இந்தியாவின் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி ஹாஸனுக்கு இன்று பிறந்த நாள்.

இந்த நாளை அவர் தனது தந்தை கமல் ஹாஸனுடன் சென்னையில் கொண்டாடினார்.

பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பன்முகம் கொண்ட கலைஞர் ஸ்ருதிஹாஸன். மிக இளம் வயதிலேயே, தன் தந்தையின் உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றினார்.

ஆரம்பத்தில் லக், ஏழாம் அறிவு போன்ற படங்கள் அவருக்கு கைகொடுக்காவிட்டாலும், பின்னர் அவர் நடித்த தெலுங்கு, இந்திப் படங்கள் சக்கைப் போடு போட ஆரம்பித்துவிட்டன.

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஸ்ருதிஹாஸன்

கவர்ச்சி, நடிப்பு, சர்ச்சை என எதிலுமே குறை வைக்காத நடிகை ஸ்ருதி. இன்று இந்திய சினிமாவில் இயக்குநர்களால் அதிகம் தேடப்படும் நடிகை ஸ்ருதிதான்.

இன்று தன் பிறந்த நாளையொட்டி, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், "எனது ரசிகர்கள் தாங்கள் செய்துள்ள நல்ல விஷயங்கள் பற்றி தெளிவாக எனக்கு மெயில் அல்லது சமூக வலைத் தளத்தில் செய்தி அனுப்புங்கள். அவற்றில் சிறந்த 5 மெயில்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு எனது புகைப்படத்துடன் கூடிய ஆட்டோகிராப் அனுப்புவேன். இவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தியும் உண்டு," என்று கூறியுள்ளார்.

 

ஐ 'வெற்றி விருந்து'.... செம குஷியில் விஜய், விக்ரம், ஷங்கர்!

ஐ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய், விக்ரம், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று விடிய விடிய கொண்டாடினர்.

சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது.

இந்தப் படம் மூலம் முதல் முறையாக ரூ 100 கோடி க்ளப்பில் சேர்ந்துவிட்ட நடிகர் விக்ரம் மிக உற்சாகமாக பங்கேற்று, அனைவரையும் வரவேற்றார்.

ஐ 'வெற்றி விருந்து'.... செம குஷியில் விஜய், விக்ரம், ஷங்கர்!

நடிகர் விஜய்யும், ஷங்கரும் இந்த விருந்தில் பங்கேற்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் குடும்பத்தினரும் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.

ஐ 'வெற்றி விருந்து'.... செம குஷியில் விஜய், விக்ரம், ஷங்கர்!

நல்ல குத்துப் பாடல்களைப் போடச் சொல்லி, டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர் விஜய் உள்ளிட்ட அனைவரும்.

இயக்குநர் ஷங்கர் அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் (பீகே ரீமேக் என்கிறார்கள்) இயக்கப் போவதாக வரும் செய்திகளை இந்த விருந்து உறுதிப்படுத்துவதாக பேச ஆரம்பித்துள்ளனர்.

 

தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன்... புலி.. உருவான பிரமாண்டங்களின் கலைக் கூடம்!

ஸ்டுடியோக்களை விட்டு தமிழ் சினிமா அவுட்டோருக்குப் பறந்துவிட்டாலும், பிரமாண்ட செட்கள் அமைத்து ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்றால்... அது ஸ்டுடியோவில்தான் சாத்தியம்.

இருப்பதிலேயே இன்றைக்கு மகா நவீனமாய் உள்ள ஸ்டுடியோ என்றால் அது ஆதித்யராம் ஸ்டுடியோதான்.

தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன்... புலி.. உருவான பிரமாண்டங்களின் கலைக் கூடம்!

சென்னை ஈசிஆர் சாலையில் சகல வசதிகளோடும் ஆதித்யராம் உருவாக்கியுள்ள இந்த ஸ்டுடியோவில்தான் தசாவதாரம் உருவானது. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் உருவானது. இப்போது விஜய்யின் புலி படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் இங்குதான் நடந்தது.

இருபத்தைந்து ஏக்கரில், இரண்டு பகுதிகளாக இந்த ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளார் ஆதித்யராம். ஏக் நிரஞ்சன், குஷி குஷிகா, ஸ்வக்தம், சண்டதே சண்டதே படங்களைத் தயாரித்தவர்.

ஸ்டுடியோவை நிர்வகிப்பதோடு, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது படங்களும் தயாரித்து வருகிறார் ஆதித்யராம்.

 

இயக்குநர் ஹரியின் சகோதரர் வி.ஏ.ஜி கார் வண்ணராஜா மரணம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான டைரக்டர் ஹரியின் சகோதரர் வி.ஏ.ஜி கார் வண்ணராஜா இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 43.

வி.ஏ.ஜி கார் வண்ண ராஜா ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டிருந்தார்.

இயக்குநர் ஹரியின் சகோதரர் வி.ஏ.ஜி கார் வண்ணராஜா மரணம்

சிறிது காலம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று உடல்நிலை மோசமடையவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் பலனின்று இன்று அதிகாலை மருத்துவமனையில் காலமானார்.

மரணமடைந்த வி.ஏ.ஜி கார் வண்ணராஜாவுக்கு, ஹெண்ணிலா கார்வண்ணராஜா என்ற மனைவியும் 10 வயது மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கார் வண்ணராஜாவின் உடல் நாளை காலை 10 மணிக்கு போரூர் மின்சார மையானத்தில் தகனம் செய்யப்படுகிறது.