சென்னை: கோ படம் வெளியாகி நான்கு வருடங்கள் கடந்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது.
கோ 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இயக்குநர் கே.வி. ஆனந்திற்கும் நாயகன் ஜீவாவிற்கும் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது கோ படம். நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயகியாக அறிமுகமான முதல் படமும் இதுதான்.
15 கோடி செலவில் எடுக்கப் பட்ட இந்தப் படம் 2011 ல் வெளிவந்த படங்களில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ்நாடு எங்கும் வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து சுமார் 50 கோடி வசூலைக் குவித்த மெகா வெற்றிப்படம் தான் கோ.
கோவின் தெலுங்கு பதிப்பான ரங்கம் ஆந்திராவில் 100 நாட்களைக் கடந்தது. இவ்வளவு பெரிய வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பாபி சிம்ஹா மற்றும் டார்லிங் படப்புகழ் நிக்கி கல்ராணி நடிப்பில் தயாராகி வருகிறது.
முதல் பாகத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் மட்டும் மீண்டும் படத்தில் இடம்பெற்றிருக்கிறார், படத்தை இயக்குவது இயக்குநர் விஷ்ணுவர்தனின் உதவியாளர் சரத். இந்தப் படத்தையும் முதல் பாகத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடேயின்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது. புதிய நடிகர்களுடன் தயாராகும் கோ 2 வில் பாபி சிம்ஹா மீண்டும் ஒரு அதிரடியான தாதாவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
"கோ" வை மிஞ்சுமா கோ 2 பார்க்கலாம்...
Post a Comment