புலிக்கு பின் விடுப்பு.. குடும்பத்தோடு லண்டன் பறக்க உள்ளார் இளைய தளபதி!

|

சென்னை: நடிகர் விஜய் தனது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தாரோடு, லண்டனிலுள்ள மாமியார் வீட்டுக்கு விடுமுறையை செலவிட செல்ல உள்ளாராம்.

நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்படிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Actor Vijay is planing to go to London

நடிகர் விஜய் இப்படத்திற்கான டப்பிங் பேசுவது, பாடல் பாடுவது என அனைத்து பணிகளையும் முடித்து கொடுத்துவிட்டதால், குடும்பத்துடன் கோடை விடுமுறைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.

விஜய், மாமியார் வீடு லண்டனில் உள்ளது. எனவே, குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க, விஜய் அங்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் மகன் அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார்.

அந்த பள்ளிக்கு கோடை விடுமுறை ஜூன் 30வரை உள்ளது. எனவே, அதுவரை விஜய் தனது குடும்பத்துடன் லண்டனில் விடுமுறையை கழிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கோடை விடுமுறையை முடித்துவிட்டு ராஜா ராணி திரைப்பட புகழ், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன், விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். விஜய் லண்டனிலிருந்து திரும்பி வந்தபிறகு இதற்கான வேலைகள் நடைபெறும்.

 

Post a Comment