ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது த்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை. திருமணத்துக்கு முன் எப்படியாவது சூப்பர் ஸ்டாருடன் நடித்துவிடுவேன் என்று சபதமே போட்டிருந்தார்.
ஆனால் அந்த சபதம் நிறைவேறும் முன்பே அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. காலத்தின் முடிவை யாரால்தான் முன்கூட்டி கணிக்க முடியும். அந்த திருமணம் நின்றே போனது.
ஆக ரஜினியுடன் த்ரிஷா ஜோடி சேரும் வாய்ப்பு இன்னும் அருகிவிடவில்லை என்றுதான் தோன்றுகிறது.
இதுகுறித்து அவரிடம் சமீபத்தில் ரசிகர்கள் இணையதளம் மூலம் கேட்டிருந்தனர்.
எந்த நடிகருடன் நடிக்காததற்காக வருந்துகிறீர்கள்? - இது ரசிகர்கள் கேள்வி.
அதற்கு பதிலளித்த த்ரிஷா, "ரஜினி ஜோடியாக நடிக்காததற்காக வருத்தப்படுகிறேன். அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறேன். மற்ற யாரையும்விட அவருடைய அதி தீவிர விசிறியான எனக்கு இன்னும் அந்த வாய்ப்பு கிட்டாததை ஏற்க முடியவில்லை," என்றார்.
ரஜினியின் புதிய படத்துக்கு இன்னும் யார் ஹீரோயின் என்று அறிவிக்காமல் உள்ளனர். த்ரிஷாவின் கோரிக்கை தயாரிப்பாளர், இயக்குநர் காதுகளில் விழுமா?
Post a Comment