இந்திய கலாச்சாத்தின் எண்ணற்ற கருத்துக்களை உலகெங்கும் உள்ள மக்கள் அறிந்து மனிதகுலம் செம்மையடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் செயல்பட்டுவரும் ஒரே ஆன்மீக பன்மொழி தொலைக்காட்சி தான் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி.
சங்கராவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சநாதன தர்மத்தின் மேன்மையை விளக்கும் வகையில் உருவாக்கப்படுவதால் ஆன்மீகத்தலைவர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைநது செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் "குரு வந்தனா" எனும் புதிய நிகழ்ச்சியும் நமது ஆன்மீக சிந்தனையைத்தூண்டும் வகையில் குருவரேண்யர்கள் பலரின் அருளுரைகள் இடம்பெருகின்றன. இனிய மாலைவேளையை பயனுள்ளதாக மாற்றுகின்ற இந்நிகழ்ச்சி 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட ஆன்மீக நிறுவனத்தின் பஜனைப்பாடல்கள் 15 நிமிடங்களுக்கு முதற்பகுதியில் இடம்பெறும்.
அந்த ஆன்மீக நிறுவனத்தைச்சேர்ந்த பிரதிநிதி ஒருவர் அந்நிறுவனம் உருவாகுவதற்குக் காரணமாக இருந்த குருவைப்பற்றியும், அந்நிறுவனம் செய்துவரும் தொண்டுகள் பற்றியும் சுமார் 15 நிமிடங்களுக்கு விவரிப்பார். ஆன்மீக குரு ஒருவர் ஆற்றும் அருளுரை அல்லது உபன்யாசம் 3ம் பகுதியில் ஒளிபரப்பாகும். குரு வந்தனா நிகழ்ச்சி வியாழக்கிழமையைத் தவிர மற்ற நாட்களில் மாலை 6 .00மணி முதல் 7.00 மணி வரை ஒளிபரப்பாகிறது.
Post a Comment