இன்றைய தேதிக்கு பாலிவுட்டில் நம்பர் ஒன் கவர்ச்சி நடிகை என்றால் அது தான்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார் சோனம் கபூர்.
சமீபத்தில் சோனம் கபூர் பத்திரிக்கைகளுக்கு கொடுத்த சூடான புகைப்படங்களைப் பார்த்து இந்தித் திரையுலகமே ஆடிப் போய்க் கிடக்கிறது.
நடிகைகள் அனைவருமே தலைசிறந்த மாத இதழ்களின் அட்டைப்படம் மற்றும் காலண்டர் போன்றவற்றுக்கு தங்கள் புகைப் படங்களை அளிப்பது வழக்கம். இதற்காக தலைசிறந்த புகைப்பட நிபுணர்களை வைத்து புதிதாக புகைப்படங்களை எடுப்பார்கள். அவ்வாறு எடுக்கும் புகைப்படங்கள் காலத்திற்கு ஏற்றவாறு ஏடாகூடமான கவர்ச்சியுடன் இருக்கும்.
குறிப்பிட்ட சில பிரபல பத்திரிக்கைகளின் அட்டைப் படங்களை அலங்கரிப்பது ஒன்றும் லேசுப்பட்ட காரியம் அல்ல, எனவே கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நடிகைகளும் போஸ் கொடுத்து தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்கின்றனர்.
குறிப்பிட்ட பத்திரிகையின் காகிதத்தை மட்டும் அணிந்து போஸ் கொடுப்பதில் தொடங்கி, சிலசமயங்களில் துணியே இல்லாமலும் கூட போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்து விடுவார்கள்.
கிங்பிஷர் நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட கடன்கள் இருக்கின்றன. ஆனால் ஆண்டுதோறும் பிரபலமான நடிகைகளின் புகைப்படங்களுடன் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியாகும் இருந்து காலண்டர் வெளிவரத் தவறுவதில்லை.
இந்த வருடம் மும்பையில் வெளியான பிரபல பத்திரிக்கைகளின் அட்டைப்படத்தை அலங்கரித்த 5 நடிகைகளில் மிகச்சிறந்த நடிகை யார் என்று ஒரு வாக்கெடுப்பு ரசிகர்களிடம் நடத்தப் பட்டது. சோனம் கபூர், அலியா பட், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நர்கிஸ் பக்ரி மற்றும் நிம்ரத் கவுர் போன்ற 5 நடிகைகளில், மற்ற நால்வரையும் விட அதிக வாக்குகளைப் பெற்று (43%) முன்னணியில் இருக்கிறார் நடிகை சோனம் கபூர்.
ஹாட் மற்றும் செக்ஸியான நடிகை யார் என்பதுதான் போட்டியின் தலைப்பாம், நடிகை அலியா பட்டை வெறும் செக்ஸி நடிகையாக மட்டுமே அங்கீகரித்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்!
Post a Comment