அன்னா ஹசாரேவுக்கு எதிராக பட அதிபர்கள் இன்று நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில், தனக்கு உடன்பாடு இல்லை என்றும், தான் இதில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.
அவர், மேலும் கூறுகையில், "அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, இவ்வளவு அவசரமாக பட அதிபர்கள் உண்ணாவிரதம் இருப்பது தேவையற்றது.
தமிழ் திரையுலகின் எல்லா பிரிவினருடனும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்த பின், இந்த உண்ணாவிரதத்தை மிகப்பெரிய அளவில் நடத்தியிருக்கலாம். இவ்வளவு அவசரமாக நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, எனக்கு அந்த உண்ணாவிரதத்தில் உடன்பாடு இல்லை. அதில் நான் கலந்து கொள்ளவும் மாட்டேன்'', என்றார்.
இன்று பிலிம்சேம்பர் வளாகத்தில் நடக்கும் இந்த உண்ணாவிரதத்துக்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்தான் முன்னின்று செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர், மேலும் கூறுகையில், "அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, இவ்வளவு அவசரமாக பட அதிபர்கள் உண்ணாவிரதம் இருப்பது தேவையற்றது.
தமிழ் திரையுலகின் எல்லா பிரிவினருடனும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்த பின், இந்த உண்ணாவிரதத்தை மிகப்பெரிய அளவில் நடத்தியிருக்கலாம். இவ்வளவு அவசரமாக நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, எனக்கு அந்த உண்ணாவிரதத்தில் உடன்பாடு இல்லை. அதில் நான் கலந்து கொள்ளவும் மாட்டேன்'', என்றார்.
இன்று பிலிம்சேம்பர் வளாகத்தில் நடக்கும் இந்த உண்ணாவிரதத்துக்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்தான் முன்னின்று செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment