பூர்வகுடி ஜல்லிகட்டு குடும்பத்தின் கதை

|

சென்னை : திருத்தணி முருகன் பிலிம்ஸ் சார்பில் எம்.குமார் தயாரிக்கும் படம், 'பூர்வகுடி'. ஈஸ்வர், மதுஸ்ரீ என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். புரூஸ் இசை. இதன் பாடலை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, கலைப்புலி தாணு பெற்றார். விழாவில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். படம் பற்றி இயக்குனர் இப்ராஹிம் கூறியதாவது:

கிராமத்தில் ஜல்லிகட்டு ஒவ்வொரு குடும்பத்தின் தன்மானத்தோடு தொடர்புடையது. ஜல்லிக்கட்டால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை இது. பாதுகாப்பற்ற ஜல்லிக்கட்டால் எத்தனை உயிர்கள் பலியாகிறது. அவர்கள் குடும்பம் என்னாகிறது என்பதை சொல்லும் படம். படத்துக்காக தேனி அருகில் உள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தி படமாக்கினோம். இது படத்தின் ஹைலைட்டாக இருக்கும். இவ்வாறு கூறினார்.
 

Post a Comment