இதில் நிறைய உணர்ச்சிகளை காட்டி நடிக்க வேண்டி இருக்கிறது. இப்போது நடிக்கும் படங்களில் திருப்தியாக உணர்கிறீர்களா என்று கேட்கிறார்கள். அப்படி இல்லை. ஒரு நடிகையாக வித்தியாசமான வேடங்களில் நடிப்பதை அதிகமாக எதிர்பார்க்கிறேன். அதனால் எதிலும் திருப்திப்பட்டுவிட முடியவில்லை. ஆரம்பத்தில் நடிக்க கேட்டு வந்த கதைகளில் எல்லாம் நடித்தேன். சில கதைகளை கேட்கும்போது, இது ஹிட்டாகும் என தோன்றும். ஆனால், நிஜத்தில் அப்படி இல்லை. அதனால் பல தவறுகள் செய்தேன். இப்போது அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதால் சிறந்த கேரக்டர்களில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன்.
இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.
Post a Comment