அவரிடம் பணியாற்றும் மகேந்திரன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சொன்னதை செய்யும் முரட்டு குணம் படைத்தவர். அவரை காதலிக்கும் நீலாம்பரி மணல் கொள்ளையால் இயற்கை வளம் எவ்வாறு கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை புரிய வைத்து மணல் கொள்ளைக்கு எதிராக அவரை மாற்றி போராட வைக்கிறார். மனோபாலா, கிரேன் மனோகர், புதுமுகம் ஜெயகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆண்டனி ஒளிப்பதிவு. பவதாரணி இசை. ம.பாலாஜி, ரோஸ்மேரி தயாரிப்பு. காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. இவ்வாறு சேகர் பாரதி கூறினார்.
Post a Comment