செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அடித்த பெண் தயாரிப்பாளர்

தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டர் சிவாவை செருப்பால் அடித்ததோடு போலீசிலும் புகார் தந்துள்ளார் 'காதலுக்கு கண்ணில்லை' படத்தின் பெண் தயாரிப்பாளர் இந்து.

ஜெய் ஆகாஷ் நடித்த ‘காதலுக்கு கண்ணில்லை' படத்தை தயாரித்தவர் ஒய்.இந்து. இவர் அந்த படத்துக்கு கதை, வசனமும் எழுதி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.

செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அடித்த பெண் தயாரிப்பாளர்

‘காதலுக்கு கண்ணில்லை' படத்தில் மீடியேட்டராக பணியாற்றியவர் சிவா. இவர், இந்துவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தாராம்.

தினமும் இரவில் இந்துவை போனில் தொடர்பு கொண்டு பேசிய சிவா, இந்துவிடம் ஆபாசமாகப் பேசி, செக்ஸ் உறவுக்கு அழைத்தாராம். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி இந்துவுக்கு, சிவா போனிலேயே பல நாட்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பொறுத்துப் பார்த்த இந்து அவர்கள் நேரில் அழைத்து சிவாவை கண்டித்து இருக்கிறார், அப்பொழுது திடீரென்று காரில் அமர்ந்திருந்த இந்துவைக் கட்டிப்பிடித்து முத்தமிட முயற்சித்திருக்கிறார் .இதனால் மேலும் கோபம் அடைந்த இந்து செருப்பால் அடித்து சிவாவை விரட்டியிருக்கிறார்.

இதுபற்றி இந்து நீலாங்கரை போலீசில் இன்று புகார் அளித்தார். அதில் சிவாவால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அவர் என்னை தொட்டும் மானபங்கம் செய்துள்ளார். எனவே சிவா மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதையறிந்த மீடியேட்டர் சிவா, தமிழகம் முழுவதம் ரிலீசாக வேண்டிய இந்தப் படத்திற்கு 'புக்' செய்யப்பட்ட தியேட்டர்களுக்கு போன் செய்து படத்தை இன்று 31-10-2014 ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்துவிட்டுத் தலைமறைவாகி விட்டாராம்.

தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மீடியேட்டர் சங்கத்திலும் சிவா மீது தயாரிப்பாளர் இந்து புகார் செய்திருக்கிறார்.

 

வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியாவிட்டால் வழக்கு!- கார்த்திக்

சென்னை: சொத்துப் பிரச்சினையை தனது சகோதரர் இன்னும் இரண்டு நாளில் முடிக்காவிட்டால் வழக்குத் தொடரப் போவதாக நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.

நடிகர் கார்த்திக்குக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு நடந்து வருகிறது.

இப்பிரச்னை தொடர்பாக நடிகர் கார்த்தி திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தற்போது அவர் தனியாக தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக சமீபத்தில் சென்னை, தேனாம்பேட்டை போலீசில் நடிகர் கார்த்திக் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியாவிட்டால் வழக்கு!- கார்த்திக்

அதில் அவர், ஆழ்வார்பேட்டையில் என் தந்தைக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்தில் எனக்கு எதுவும் பங்கு கிடையாது என்கிறார் எனது சகோதரர் கணேசன். மேலும் என்னை வீட்டைவிட்டு வெளியேறும்படியும் கூறுகிறார். மேலும் உயிலில் எனது பெயரும் இல்லை. எனது சகோதரர் எனது சொத்தை மோசடி செய்துள்ளார். அவரிடமிருந்து என் சொத்துக்களை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், என கூறி இருந்தார். உடனே கார்த்திக் மீது அவரது அம்மா சுலோசனாவே ஒரு புகார் கொடுத்திருந்தார்.

இந்த சமயத்தில், தனது குடும்ப விவகாரம் தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் பற்றி செய்தியாளர்களுக்கு கார்த்திக் நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது கூறுகையில், "போயஸ் கார்டனில் இருக்கும் வீடு தொடர்பாக எனக்கும் என் சகோதரர் கணேசனுக்கும் இடையே பிரச்னைகள் இருந்து வருகிறது. அந்த இடத்தில் அப்பாட்மென்ட்ஸ் போல் கட்டி, இருவரும் வசிக்கலாம் என நான் கூறினேன். ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். தொடர்ந்து பிரச்னையை முடிக்கவும் அவர் தயாராக இல்லை. இன்னும் இரண்டு நாட்களில் பிரச்னையை முடிக்க அவர் முன்வராவிட்டால் சட்டப்படி வழக்குத் தொடர முடிவு செய்துள்ளேன். மற்றபடி, நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுவது உண்மையல்ல. நானும் அதே வீட்டில் தான் இப்போது வரை இருந்து வருகிறேன்," என்றார்.

 

ரித்திக் ரோஷனுக்கும், நடிகை இஷாவுக்கும் இடையே 'ல்தகா'?

மும்பை: மனைவியை பிரிந்து வாழும் ரித்திக் ரோஷனுக்கும், நடிகை இஷா குப்தாவுக்கும் இடையே ல்கதா சைஆ என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுவது குறித்து நடிகை விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், இஷா குப்தாவும் மிகவும் நெருங்கிப் பழகுவது தான் பாலிவுட்டில் பலரது கண்ணையும் உருத்தியுள்ளது. காரணம் துபாயில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர்கள் அதன் பிறகு ஹோட்டலில் ஓரமாக உள்ள மேஜையில் அமர்ந்து கடலை போட்டுக் கொண்டே சாப்பிட்டது தான்.

தெரியுமா, ரித்திக் ரோஷன், இஷால்ல..: பாலிவுட்டில் பரபரப்பு

இதெல்லாம் பாலிவுட்டில் ஒரு மேட்டரே இல்லை என்றாலும் ரித்திக்கும், இஷாவும் இதுவரை ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்காதது தான் பலரும் புருவத்தை உயர்த்த காரணம்.

ரித்திக்

மனைவியை பிரிந்து வாழும் ரித்திக்கிற்கு 40 வயதானாலும் மனிதர் இன்னும் சிக்கென்று இருக்கிறார். அதனால் அவர் வாழ்வில் மீண்டும் ஒரு காதல் வரும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற வேளையில் தான் இந்த பேச்சு கிளம்பியுள்ளது.

இஷா

இந்த காதல் கிசுகிசு பற்றி அறிந்த இஷா அதை மறுத்துள்ளார். நான் ரித்திக்கை டேட் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

2 முறை

நான் ரித்திக் ரோஷனை இதுவரை இரண்டு முறை தான் பார்த்துள்ளேன். துபாயில் கிளப் துவக்க விழாவில் ஒரு முறை பார்த்தேன், எங்கள் ஏஜென்சி அளித்த தீபாவளி பார்ட்டியில் பார்த்தேன், அவ்வளவு தான் என்றார் இஷா.

ஆசை

அனைவரையும் போன்று நானும் ரித்திக்கின் தீவிர ரசிகையாக்கும். அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்று இஷா கூறியுள்ளார்.

 

திருட்டு விசிடி விற்பனை கடைகளில் விஷால் அதிரடி ரெய்டு! வீடியோ இணைப்பு

கோவை: திருட்டு விசிடி விற்பனை செய்யும் கடைக்கு ஆட்களுடன் போய் கத்தி, பூஜை திரைப்பட சிடிகளை பறிமுதல் செய்ததுடன், கடைக்காரர்களை போலீசில் பிடித்துக் கொடுக்கும் ரியல் ஹீரோயிசத்தில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் விஷால்.

விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் படமும் தயாரித்து வருகிறார் நடிகர் விஷால். தயாரிப்பாளரின் கஷ்டம் தெரியும் என்பதால் அவ்வப்போது திருட்டு விசிடி கடைகளுக்கு சென்று புதிய பட சிடிகளை பறிமுதல் செய்து வருகிறார் விஷால்.

சமீபத்தில் காரைக்குடியில் ஒரு லோக்கல் கேபிள் டிவி மீதும் போலீசில் விஷால் புகார் அளித்தார். அந்த கேபிள் டிவியில் வடகறி, உன் சமையல் அறையில் ஆகிய படங்களை ஒளிபரப்பியதுதான் இதற்கு காரணம்.

தீபாவளிக்கு அவர் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளி வந்துள்ள படம் பூஜை. எனவே மீண்டும் சிடி வேட்டைக்கு கிளம்பிய விஷாலின் பார்வை இம்முறை கொங்கு மண்டலம் பக்கம் போயுள்ளது. பொள்ளாச்சி மற்றும் திருப்பூரில் திருட்டு விசிடிகளை விற்பனை செய்த கடைகளுக்குள் தனது ஆட்களுடன் நுழைந்து ஷட்டரை மூடிவிட்டு சிடிகளை பறிமுதல் செய்துள்ளார் விஷால்.

பூஜை மட்டுமின்றி, கத்தி சிடியையும் பறிமுதல் செய்துள்ளார் விஷால். பிறர் தயாரிப்பில் வெளியான படங்களை விற்பனை செய்தாலும் விஷால் விடுவதில்லையாம்.

உங்கள் வீட்டுக்குள் வந்து நகையை திருடினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா, எங்கள் படத்தை மட்டும் ஏன் திருடுகிறீர்கள் என்று சிடி விற்பனை செய்பவர்களை பார்த்து கடுமையாக திட்டி தீர்த்து வருகிறாராம் விஷால். சமீபத்தில் இதுபோன்ற ஒரு ரெய்டு வீடியோவாக எடுக்கப்பட்டு அது யூடியூப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்த்தால் விஷாலின் வேட்டையை பற்றி நீங்களும் தெரிந்துகொள்ளலாம்.

 

என்னை அறிந்தாலில் த்ரிஷா அஜீத் மனைவி, அப்போ அனுஷ்கா?

சென்னை: அனுஷ்கா தனது பள்ளிக் காலத்தில் நடந்த ஒரு தலைக் காதல் சம்பவங்கள் பற்றி தெரிவித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்காவும், த்ரிஷாவும் உள்ளனர். படத்தில் த்ரிஷா அஜீத்தின் மனைவி. அப்படி என்றால் அனுஷ்கா அஜீத்துக்கு என்ன உறவு என்ற கேள்வி எழுகிறது.

படத்தில் அனுஷ்கா அஜீத்தை ஒரு தலையாக காதலிக்கிறாராம். இந்நிலையில் அனுஷ்கா தனது வாழ்வில் வந்து சென்ற ஒரு தலைக்காதல்கள் பற்றி பேசியுள்ளார்.

ஒரு தலைக்காதல்: அனுஷ்காவின் மலரும் நினைவுகள்

பள்ளி

நான் பள்ளியில் படித்தபோது என்னை பல மாணவர்கள் ஒருதலையாக காதலித்தனர். அதில் சிலர் தங்கள் காதலை என்னிடம் தெரிவித்துள்ளனர்.

வேண்டாம்

நான் தான் அவர்களின் காதலை ஏற்கவிலல்லை. அவர்களின் காதலை நிராகரித்த பிறகு அவர்களை பார்க்க பரிதாபமாக இருந்தது.

ஒரு தலைக்காதல்: அனுஷ்காவின் மலரும் நினைவுகள்

என்னை அறிந்தால்

ஒரு தலைக்காதல்களை நிராகரித்த நான் தற்போது அஜீத்தை ஒருதலையாக காதலிக்க வேண்டும் என்று கூறினார்கள். அதை கேட்டவுடன் பள்ளி நினைவு வந்தது என்றார்.

ஒரு தலைக்காதல்: அனுஷ்காவின் மலரும் நினைவுகள்

25 நாட்கள்

என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்கள் நடக்குமாம். படத்தை டிசம்பரில் வெளியிடும் திட்டமும் உள்ளதாம்.

 

சதுரங்க வேட்டை நாயகிக்கு பலமாய் சிபாரிசு செய்யும் நட்டி

ஹீரோக்கள் தங்களுக்குப் பிடித்த ஹீரோயின்களையே அடுத்தடுத்த படங்களில் சிபாரிசு செய்வது திரையுலகில் நடக்கும் விஷயம்தான். அந்த வகையில் தன் பங்குக்கு ஒரு ஹீரோயினை சிபாரிசு செய்து வருகிறாராம் சதுரங்க வேட்டை மூலம் தமிழில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட நட்டி நடராஜ்.

சதுரங்க வேட்டை நாயகிக்கு பலமாய் சிபாரிசு செய்யும் நட்டி

அவர் சிபாரிசு செய்யும் நடிகை இஷாரா. சதுரங்க வேட்டையிலும் இவர்தான் நாயகி. அடுத்து பப்பாளி படத்திலும் இவர் நாயகியாக நடித்து வருகிறார்.

நட்டியின் சிபாரிசுகள் நிச்சயம் வாய்ப்பாக மாறும் என்று நம்பி, சென்னையிலேயே தங்க வீடு பார்த்துக் கொண்டிருக்கிறாராம் இஷாரா.

நட்டியின் கைவசம் கணிசமாகப் படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இன்றைய ரிலீஸ்... நெருங்கி வா முத்தமிடாதே, கல்கண்டு!

தீபாவளிக்குப் பிந்தைய இந்த வாரத்தில் நான்கு சிறிய படங்கள் வெளியாகின்றன. இந்தப் படங்களுக்கு குறைந்த அளவு அரங்குகளே கிடைத்துள்ளன.

வாரத்துக்கு சராசரியாக நான்கு படங்கள் ரிலீஸ் என்பது உறுதியாகிவிட்டது.

தீபாவளி முடிந்த ஒரு வாரம் ஆன நிலையில் இந்த வெள்ளிக்கிழமையும் நான்கு படங்கள் வெளியாகியுள்ளன.

அவை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள நெருங்கி வா முத்தமிடாதே, ஆனந்த் பாபு மகன் கஜேஷ் நடித்த கல்கண்டு, சோக்கு சுந்தரம், காதலுக்கு கண்ணில்லை ஆகிய படங்கள்.

இன்றைய ரிலீஸ்... நெருங்கி வா முத்தமிடாதே, கல்கண்டு!

இவற்றில் நெருங்கி வா முத்தமிடாதே படம் மட்டும் ஓரளவு கணிசமான அரங்குகளைப் பெற்றுள்ளது.

மற்ற படங்களுக்கு அவ்வளவாக தியேட்டர்கள் கிடைக்கவில்லை. கிடைத்த அரங்குகளில் வெளியிட்டுள்ளனர்.

இன்றைய ரிலீஸ்... நெருங்கி வா முத்தமிடாதே, கல்கண்டு!

தீபாவளிக்கு வெளியான கத்தியும், பூஜையும் இன்னும் பெரும்பாலான அரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் அடுத்த வாரம்தான் புதுப் படங்களுக்கு ஓரளவு அரங்குகள் கிடைக்கும்.

 

மோடியின் தூய்மை இந்தியா திட்டம்... மாதம்பாக்கம் ஏரியைச் சுத்தம் செய்யும் கமல் ஹாஸன் ரசிகர்கள்

சென்னை: தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் கட்டப் பணியை நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறார். அன்று சென்னை வேளச்சேரி அருகில் உள்ள மாதம்பாக்கம் ஏரியிலிருந்து தூய்மைப் பணியைத் தொடங்குகிறார் கமல் ஹாஸன்.

"தூய்மை இந்தியா' திட்டத்தை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அத்திட்டத்தை முன்னேடுத்துச் செல்ல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 9 பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பிரதமரின் அழைப்பு, எனக்கு அளிக்கப்பட்ட மிகச் சிறந்த கவுரவம் என நடிகர் கமல்ஹாசன் தெரித்திருந்தார்.

மோடியின் தூய்மை இந்தியா திட்டம்... மாதம்பாக்கம் ஏரியைச் சுத்தம் செய்யும் கமல் ஹாஸன் ரசிகர்கள்

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தூய்மை இந்தியா இயக்கத்தின் முதல் கட்டப் பணிகள் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தாம்பரம்-வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள மாதம்பாக்கம் ஏரியில் இருந்து தொடங்கப்பட உள்ளது.

இதில், எனது நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், திரையுலக நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.

அன்று பிற்பகல் 3 மணி அளவில் சென்னை தூர்தர்ஷன் அலுவலகம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில், தூய்மை இந்தியா இயக்கத்தின் பணிகள் குறித்தும், இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கமல்ஹாசன் அறிவிப்பார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

300 பேருடன் ஆட்டம், அடுத்து ஃபைட்: இது தான் விஜய்யின் திட்டம்

சென்னை: விஜய் 58 படத்தில் முதலில் பிரமாண்ட செட்டில் பாடலை படமாக்குகிறார்களாம்.

விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் 10ம் தேதி துவங்குகிறது. இந்த படத்திற்காக ஈ.சி.ஆர். பகுதியில் பிரமாண்ட செட் போட்டு வருகிறார்கள். அந்த செட்டில் 300 டான்ஸர்களுடன் விஜய் ஆடும் பாடலை முதலில் படமாக்குகிறார்களாம்.

300 பேருடன் ஆட்டம், அடுத்து ஃபைட்: இது தான் விஜய்யின் திட்டம்

அதன் பிறகு சண்டை காட்சியை படமாக்க உள்ளார்களாம். மொத்தம் 5 சண்டை காட்சிகள் உள்ளதாம். படத்தில் ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் மட்டுமே பேன்டஸியாம். மற்றபடி படம் பக்கா கமர்ஷியலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன் என இரண்டு ஜோடிகள். படத்தில் வரும் சுதீப்பின் கதாபாத்திரம் கில்லி பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்தை விட பிரபலமாகுமாம்.

பல ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி நடிக்கும் தமிழ் படம் இது என்பது குறிபப்பிடத்தக்கது.

 

ராமதாஸ் இல்லத் திருமணத்தில் பர்ஸை பறிகொடுத்த சந்தானம்

சென்னை: பிரம்மாண்டமாக நடைபெற்ற அரசியல் கட்சித்தலைவரின் திருமணத்திற்கு சென்ற நடிகர் சந்தானம் தனது பர்ஸை பறிகொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமா நடிகர்களையும், திரைக் கலைஞர்களையும் என்னதான் வாட்டி எடுத்தாலும் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் ஏராளமான நட்சத்திரங்களும், இயக்குநர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் பங்கேற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.

ராமதாஸ் இல்லத் திருமணத்தில் பர்ஸை பறிகொடுத்த சந்தானம்

ராமதாஸ் பேரன், பேத்தியின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற்றது. 29ஆம் தேதி மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பி.வாசு. விக்ரமன் நடிகர் சந்தானம், ஆகியோர் பங்கேற்றனர்.

சந்தானம் வந்த உடன் ஏக வரவேற்பு காட்டினராம். ஆனால் மேடையில்தான் மணமக்களிடம் சந்தானத்தை அறிமுகம் செய்யாமல் விட்டு விட்டனராம்.

மேடையில் இருந்த அன்புமணி ராமதாசிடம் மட்டும் பேசிவிட்டு அவசரமாக கீழே இறங்கிவிட்டாராம் சந்தானம். அப்போது கூட்டம் சந்தானத்தை மொய்க்க அவரது பாக்கெட்டுக்குள் வைத்திருந்த பர்ஸை ஆட்டையை போட்டு விட்டனராம்

பர்ஸை எடுத்த நண்பர்களே பணத்தை வைத்துக்கொள்ளுங்கள்.. அதில் முக்கியமான கார்டுகள் இருக்கிறது அதை மட்டுமாவது கொடுங்கள் என்று கெஞ்சியும் யாரும் கொடுக்கலையாம்.

அங்கிருந்த ஆர்கெஸ்ட்ரா குழுவின் மைக் மூலமாக அறிவிப்பு செய்தும் யாரும் கொடுக்கவில்லையாம். கிடைத்தால் கொண்டுவந்து கொடுத்திருங்க என்று சொல்லிவிட்டு போனாராம் சந்தானம்.

ஆனால் இப்போது வரைக்கும் சந்தானம் கைக்கு பர்ஸ் வந்தபாடில்லையாம்.

 

கதாநாயகனாகிறார் மெட்ராஸ் கலையரசன்

மெட்ராஸ் படம் பார்த்தவர்கள் அத்தனைப் பேரும் தவறாமல் கேட்ட கேள்வி, யார் இந்த கலையரசன்? என்றுதான்.

கார்த்தியின் உயிர் நண்பன் அன்புவாக வந்து அனைவரின் பாராட்டுகளையும் குவித்த கலையரசன், இப்போது ஹீரோவாக களமிறங்குகிறார். படத்தின் பெயர் மைலாஞ்சி.

கதாநாயகனாகிறார் மெட்ராஸ் கலையரசன்

இப்படத்தில் கிஷோர், ஈஸ்வரி ராவ், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, மதுரை முத்து உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது.

ரேகா மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் திரைக்கதையை இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து அமைப்பதோடு, இயக்குநராக அறிமுகமாகிறார் அஜயன்பாலா.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தங்கர்பச்சன் இப்படத்தில் ஒளிப்பதிவு செய்கிறார். ரொம்ப நாளைக்குப் பிறகு ஜோஸ்வா ஸ்ரீதர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 

அறிமுக இயக்குநர் படத்தை 'ஆட்டயப் போட்ட' எழுத்தாள இயக்குநர்!

எழுத்தாளர் என்று சொல்லிக் கொண்டு சினிமாவுக்குள் நுழைந்தார் அந்த நபர். பெயரெல்லாம் வேண்டாம். வேறு எங்கெங்கோ வாய்ப்பு தேடினார். கோபாலபுரம் பக்கம் ஒரு ஆபீஸ் போட்டிருந்தார்.

சாலிகிராமத்தில் ஒரு இளைஞர்.. அவரும் முதல் சினிமா இயக்கும் முயற்சியில் இருந்தவர். எப்படியோ வாய்ப்புக் கிடைத்தது. வெளிநாடு வாழ் தமிழர்தான் தயாரிப்பாளர். இவர் சொன்ன கதை பிடித்ததால், உடனே சாலிகிராமத்தில் ஆபீஸ் போட்டு வேலையைத் தொடங்கிவிட்டார்கள். ஸ்க்ரிப்ட் ஒர்க் முடிந்து ஷூட்டிங் போக வேண்டியதுதான் பாக்கி.

இந்த சூழலில் முதல் பாராவில் படித்தீர்களே, அந்த நபருக்கும், இரண்டாவது பாராவில் படித்த தயாரிப்பாளருக்கும் எப்படியோ லிங்க் உண்டாகிவிட்டது. உடனடியாக இந்த வெளிநாட்டுத் தயாரிப்பாளரை கைக்குள் போட்டுக் கொண்டார் எழுத்தாள இயக்குநர். மெல்ல மெல்ல அவரிடம் அவரது படத்தின் இயக்குநர், தயாரிப்பு நிர்வாகி என அத்தனைப் பேரைப் பற்றியும் தவறாகச் சொல்லி, படத்தையே நிறுத்தும் அளவுக்கு வேலைப் பார்த்துவிட்டார்.

இவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு, படத்தைத் தள்ளி வைப்பதாக முதலில் சொன்ன தயாரிப்பாளர், பின்னர் படத்தையே ட்ராப் பண்ணி விட்டதாகவும், அனைவரும் வெளியேறுங்கள் என்றும் கூறிவிட்டார்.

இப்போது, திடீரென அதே தயாரிப்பாளரிடமிருந்து ஒரு பிரஸ் ரிலீஸ். அவரது பேனரில் எழுத்தாள இயக்குநர் புதுப்படம் இயக்குகிறார் என்று!

எப்படியெல்லாம் வேலை பாக்குறாங்க!

 

திருப்பூரில் திருட்டு விசிடி: நடிகர் விஷால் நேரடியாக ரெய்டு!

திருப்பூர்: திருப்பூரில் பூஜை படத்தின் திருட்டு விசிடியை விற்பனை செய்த கடையில் சோதனை செய்த நடிகர் விஷால் அங்கிருந்த பூஜை, கத்தி படங்களில் விசிடிகளை பறிமுதல் செய்ததோடு, அவர்களை போலீசில் ஒப்படைத்தார்.

சினிமாவில் நடித்தோமா சம்பளம் வாங்கினோமா, ரிலீஸ் முடிந்த உடன் டூர் கிளம்பினோமா என்றில்லாம் இப்போது நடிகர்களே திருட்டு விசிடி ரெய்டுக்கு கிளம்பிவிடுகின்றனர்.

திருப்பூரில் திருட்டு விசிடி:  நடிகர் விஷால் நேரடியாக ரெய்டு!

பார்த்திபன், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் தாங்களே கடை வீதிகளில் இறங்கி திருட்டு விசிடியை ஒழிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

தீபாவளி நாளில் விஷால் நடிப்பில் வெளியாகியிருக்கும் பூஜை படத்தின் திருட்டு விசிடிக்கள் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருப்பதாக அவரது வெளியூர் ரசிகர்கள் தகவல் கொடுத்தனர்.

இதன் பேரில், சமீபத்தில் கோவை, திருப்பூர் உள்பட பல ஊர்களுக்கு தியேட்டர் விசிட் சென்ற விஷால், அங்கு கடை கடையாக ஏறி இறங்கியிருக்கிறார்.

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதிகளில் சில கடைகளில் பூஜை படத்தின் திருட்டு விசிடிக்கள் இருப்பதை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்ததோடு விற்பனை செய்த நபர்களை போலீஸ் வசம் ஒப்படைத்தார் விஷால்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், புதுப்படங்களில் போஸ்டர்களை போட்டே இப்போது திருட்டு விசிடி விற்பனை செய்கின்றனர் என்றார்.

விஷாலின் இந்த திடீர் ரெய்டு காரணமாக, பல ஏரியாக்களில் விற்பனைக்கு வந்திருந்த ஏராளமான புதிய படங்களின் திருட்டு விசிடிக்களை வியாபாரிகள் பதுக்கி விட்டார்களாம்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வெளியானபோது, சென்னையிலுள்ள பிரபலமான கடை வீதிகளில் இறங்கி திருட்டு விசிடி விற்பனை செய்தவர்களை கையும் களவுமாக போலீஸ் வசம் பிடித்துக் கொடுத்தார் பார்த்திபன்.

அதேபோல், காரைக்குடிக்கு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அங்குள்ள லோக்கல் சேனலில் புதிய படங்கள் ஒளிபரப்பாவதைக்கண்டு நடிகர் விஷால், நேரடியாக சென்று அவர்களை போலீசில் பிடித்துக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராஸ்கல், யாரை பார்த்து நக்கல்: வாரிசு நடிகர் மீது கடுப்பில் 'லீடர்'

சென்னை: தனது ஆயுதம் படம் பற்றி ட்விட்டரில் கலாய்த்த அந்த வாரிசு நடிகர் மீது லீடர் கடுப்பில் உள்ளாராம்.

லீடரின் ஆயுதம் படம் படாதபாடு பட்டு ஒருவழியாக ரிலீஸானது. படம் ரிலீஸான வேகத்தில் அவ்வளவு வசூல் செய்துவிட்டது, இவ்வளவு வசூல் செய்துவிட்டது என்று செய்திகள் வந்தன. மேலும் படத்தின் வசூல் புதிய சாதனைகள் படைக்க உள்ளது என்று கூறப்பட்டது.

இதை பார்த்த பலரும் வசூல் பற்றி கதை கட்டுவதாகக் கூறி ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். பிரமாண்ட இயக்குனர் இயக்கத்தில் ஸ்டைல் நடிகர் நடித்த படத்தின் வசூலை முந்திவிட்டதாக கூறுவதே இந்த நடிகரின் ரசிகர்களுக்கு வேலையாகிவிட்டது என்று ஆளாளுக்கு ட்வீட் செய்தார்கள். இதை பார்த்த லீடரின் ரசிகர்கள் கோபம் அடைந்து பதிலுக்கு ட்வீட் செய்தார்கள்.

இந்த சண்டையில் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆனார் அந்த வாரிசு நடிகர். அவரும் லீடரின் படத்தின் வசூல் கணக்கு பொய் என்பது போல கமெண்ட்கள் போட்டுத் தாக்கினார். வாரிசு நடிகரின் இந்த செயல் பற்றி லீடருக்கு தகவல் சென்றுள்ளது.

படம் சூப்பராக ஓடும் மகிழ்ச்சியில் இருக்கும் லீடர் வாரிசு நடிகரின் செயலை பற்றி கேட்டதும் கடுப்பாகிவிட்டாராம்.

 

மீட்பு இல்லத்திலிருந்து தாயுடன் வீடு திரும்பும் ஸ்வேதா பாசு!

விபச்சார வழக்கில் கைதாகி மீட்பு இல்லத்தில் தங்கியிருந்த நடிகை ஸ்வேதா பாசு தன் தாயுடன் இன்று வீடு திரும்புகிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது பெற்றவர் பிரபல தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு. இவர் ஹைதராபாத்தில் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டபோது போலீசில் பிடிபட்டார்.

மீட்பு இல்லத்திலிருந்து தாயுடன் வீடு திரும்பும் ஸ்வேதா பாசு!

நடிக்க வாய்ப்பு குறைந்ததால் விபசாரத்தில் ஈடுபட்டதாகவும், என்னைப்போல பல நடிகைகள் இப்படி நடந்து கொள்வதாகவும் அவர் கூறியது இந்தியா முழுவதும் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவருக்கு திரையுலகினர் ஆதரவு தெரிவித்தனர்.

ஸ்வேதா பாசு ஹைதராபாத்தில் உள்ள மீட்பு இல்லத்தில் 6 மாதங்கள் தங்கியிருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்வேதாவை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று அவரது தாயார் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் செசன்சு கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.

மீட்பு இல்லத்தில் அவர் தங்க வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமையை மீறுவதாகும். எனவே அவரை என்னுடன் அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தார். மீட்பு இல்லம் அவரை விடுதலை செய்வதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு ஸ்வேதா பாசுவை அவரது தாயாருடன் செல்ல நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இன்று தன் தாயாருடன் வீட்டுக்குத் திரும்புகிறார் ஸ்வேதா பாசு. அவருக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஏற்கெனவே பிரபல இயக்குநர்கள் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போலீசில் புகார்!

சென்னை: தன் மகன் கார்த்திக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது சொந்த தாயாரே போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் நடிகர் கார்த்திக். மிகப் பிரபலமான நடிகர். பல வெற்றிப் படங்கள் தந்தவர். கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

சொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போலீசில் புகார்!

கார்த்திக் கூட்டுக் குடும்பமாகவே வசித்து வந்தார். இப்போது அவர்கள் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.

கார்த்திக் தற்போது, சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கன் எஸ்டேட், 1-வது தெருவில் வசிக்கிறார். கார்த்திக் கடந்த திங்கட்கிழமை சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், தனது தந்தை நடிகர் முத்துராமன் வாங்கிய சொத்துக்களில் தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை தனது அண்ணனும், அண்ணியும் சேர்ந்து அபகரித்துக் கொண்டனர் என்றும், சொத்துக்களை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றும், தனது தாயாரை ஏமாற்றி, சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்றும், தனக்குச் சேரவேண்டிய சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும் என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தனக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கார்த்திக் தெரிவித்திருந்தார்.

அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட தேனாம்பேட்டை போலீசார் சி.எஸ்.ஆர். ரசீது மட்டும் கொடுத்தனர். வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அவரது மனுவை விசாரிப்பதாகச் சொன்னார்கள்.

இந்த நிலையில், நடிகர் கார்த்திக் கொடுத்த புகாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கார்த்திக் மீது அவரது தாயார் சுலோச்சனா, ஒரு புகாரை தேனழாம்பேட்டை போலீசில் நேற்று இரவு கொடுத்தார்.

அதில், "எனது இளைய மகன் கார்த்திக் கொடுத்த புகார் மனு தவறானது. எனது பெயரில் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி ரோட்டில் சொத்துக்கள் இருந்தன. அந்த சொத்துக்களை நான்தான் எனது மூத்தமகன் கணேசன் பெயருக்கு எழுதி கொடுத்தேன்.

என்னை ஏமாற்றி அந்த சொத்துக்களை எனது மூத்த மகன் எழுதி வாங்கிக் கொண்டதாக கார்த்திக் கூறிய புகாரில் உண்மை இல்லை. அந்த சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கார்த்திக்கும், அவரது அடியாட்களும் என்னையும், எனது மூத்த மகன் கணேசனையும் மிரட்டுகிறார்கள். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, கார்த்திக் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினை குறித்து கார்த்திக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைத் தெரிவித்தார்.

 

அபிஷேக் பச்சன் அம்மாவாக நடிக்கும் அமைச்சர் ஸ்மிருதி இராணி

டெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, அபிஷேக் பச்சனின் அம்மாவாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அமைச்சராவதற்கு முன்பே அவர் ஒத்துக்கொண்ட படம் என்பதால் வார விடுமுறை நாட்களில் படப்பிடிப்புக்குப் வர ஒப்புதல் அளித்துள்ளாராம்.

மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி அமைச்சராக பதவியேற்பதற்கு முன் நடிக்க ஒப்புக்கொண்ட படத்தின் படப்பிடிப்பில் வார இறுதி நாட்களில் மட்டும் ஈடுபடுவார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் ஸ்மிருதி ராணி.

லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதால் மத்திய அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆனார் ஸ்ம்ரிதி இராணி.

அபிஷேக் பச்சன் அம்மாவாக நடிக்கும் அமைச்சர் ஸ்மிருதி இராணி

பாலிவுட் படத்தில்

இவர் அமைச்சராக பதவி ஏற்கும் முன் 'ஆல் இஸ் வெல்' என்ற பாலிவுட் படத்தில் ரிஷி கபூரின் மனைவியாகவும், அபிஷேக் பச்சனின் தாயாகவும் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.

பிஸியான ஸ்மிருதி இராணி

லோக்சபா தேர்தலில் பிஸியானதாலும், தேர்தலுக்கு பின் அமைச்சரானதாலும் ஸ்ம்ரிதி, படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் அலுவலக பணியில் மும்முரமாக இருக்கிறார்.

நடிக்க சம்மதம்

ஆல் இஸ் வெல் படத்தின் படப்பிடிப்பிற்காக இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் நேரம் ஒதுக்குவார் என தெரிகிறது.

வார விடுமுறை நாட்களில்

மேலும், அவர் நாடாளுமன்றம் இயங்காத வார இறுதி நாட்களில் மட்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவி தொகுப்பாளினி ரோஜா எம்.எல்.ஏ

மத்திய அமைச்சர் மீண்டும் நடிக்க வருவதைப் போல இங்கே நடிகை ரோஜா எம்.எல்.ஏ ஆன பின்னரும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

காரைக்குடியில் நடந்த ரஜினி முருகன் பூஜை!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தின் பூஜை காரைக்குடியில் நேற்று நடந்தது.

காரைக்குடியில் நடந்த ரஜினி முருகன் பூஜை!

சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் தந்த பொன்ராம் இயக்கும் அடுத்த படம் இது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக் கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

காரைக்குடியில் நடந்த ரஜினி முருகன் பூஜை!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நேற்று காரைக்குடியில் தொடங்கியது. தயாரிப்பாளர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ், படத்தின் இயக்குநர் பொன்ராம், சிவகார்த்திகேயன், நாயகி கீர்த்தி சுரேஷ், பரோட்டா சூரி ஆகியோர் பூஜையில் பங்கேற்றனர்.

 

ரூ 100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்!

கத்தி படம் முதல் வாரத்தில் ரூ 82 கோடியை வசூலித்துள்ளதாகவும், விரைவில் ரூ 100 கோடியைத் தொடும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளியையொட்டி கடந்த 22-ம் தேதி வெளியானது கத்தி படம்.

ரூ 100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்!

இந்தப் டம் முதல் நாள் மட்டுமே ரூ 25 கோடியை வசூலித்ததாக இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்த நாட்களில் கத்தியின் வசூல் சிறப்பாக இருந்ததாகவும், இதனால் படம் வெளியான முதல் வாரம் மட்டும் ரூ 82 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீசில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வசூல் தொடர்ந்தால் அடுத்த சில தினங்களில் ரூ 100 கோடியை எட்டிவிடும் என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இனி 'தல 55' அல்ல... என்னை அறிந்தால்.. இதுதான் அஜீத்தின் புதுப்படத் தலைப்பு!

பொதுவாக ஒரு படத்தின் ஷூட்டிங்குக்கு கிளம்பும் முன் அந்தப் படத்தின் தலைப்பை அறிவித்து விடுவது சினிமா வழக்கம். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் சிகரங்கள் தொடங்கி, புதிதாய் வருபவர்களும் அப்படித்தான் செய்து வருகிறார்கள் இதுவரை.

ஆனால் அந்த வழக்கத்துக்கு மாறாக ஒரு தலைப்புக்கே ஓவர் பில்ட் அப் கொடுக்கிறாரோ என வெளியிலிருப்பவர்களைப் பேச வைத்தவர் அஜீத்தான்.

இனி 'தல 55' அல்ல... என்னை அறிந்தால்.. இதுதான் அஜீத்தின் புதுப்படத் தலைப்பு!

அவரது சமீபத்திய படங்கள் அனைத்தின் தலைப்பும் ரொம்பவே பிகு பண்ணிக் கொண்டுதான் வெளியிடுகிறார்கள்.

ஆரம்பம் படத்தின் தலைப்பைச் சொல்வதற்கு ஜவ்வாய் இழுத்தார்கள். ஆடியோ ரிலீசுக்கு முன்புதான் அந்தப் பெயரைச் சொன்னார்கள். இத்தனைக்கும் அதை முடிவு செய்து ஆறு மாதங்கள் அமைதி காத்தார்கள். எல்லாம் பப்ளிகுட்டி ஸ்டன்ட்தான்.

இப்போது கவுதம் மேனன் இயக்கும் புதுப் படத்துக்கு கடந்த எட்டு மாதங்களுக்கும் மேல் தலைப்பைச் சொல்லாமல் அமைதி காத்தார்கள். அதுவே ஏகப்பட்ட செய்திகள் உருவாகக் காரணமாக அமைந்தது. எவ்வளவு விளம்பரம் பாருங்கள்.

இப்போது படத்தின் இசை வெளியாக உள்ள தறுவாயில் படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர்.

இதுவரை தல 55 என அழைக்கப்பட்டு வந்த அந்தப் படத்துக்கு 'என்னை அறிந்தால்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

என்னை அறிந்தால்.... என்ன, தலைப்பு நல்லாருக்கா?

 

4 நாட்களில் ரூ 200 கோடியைத் தொட்டது ஹேப்பி நியூ இயர்!

நான்கே நாட்களில் ரூ 200 கோடி வசூலைத் தொட்டு புதிய சாதனைப் படைத்துள்ளது ஹேப்பி நியூ இயர்.

ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘ஹேப்பி நியு இயர்' படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்துக்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

4 நாட்களில் ரூ 200 கோடியைத் தொட்டது ஹேப்பி நியூ இயர்!

உலகம் முழுவதும் 5000 க்கும் அதிகமான அரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டன.

படம் வெளியான 4 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் கிடைத்துள்ளதாம்.

சல்மான்கானின் ‘ஜெய் ஹோ' அக்ஷய்குமாரின் ஹாலிடே படங்கள்தான் இதுவரை அதிகம் வசூல் ஈட்டிய படங்களாக இருந்தன. அந்த சாதனையை ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்' படம் முறியடித்துவிட்டதாம்.

 

கோபிகாவுக்கு ஆண் குழந்தை!

சென்னை: தமிழிலும், மலையாளத்திலும் கதாநாயகியாக வலம் வந்த நடிகை கோபிகாவுக்கு ஆஸ்திரேலியாவில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழில் ஆட்டோகிராப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கோபிகா. தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியவர். மலையாளத்திலும் நடித்தவர்.

இந்நிலையில் கோபிகாவுக்கும், அயர்லாந்தில் டாக்டராக பணியாற்றிய அகிலேஷ் என்பவருக்கும் 2008ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கி கணவருடன் சென்று இனிய இல்லறத்தில் ஈடுபட்டுள்ளார் கோபிகா.

கோபிகாவுக்கு ஆண் குழந்தை!

இவர்களுக்கு எமி என்ற நான்கு வயது பெண் குழந்தை இருக்கிறது. தற்போது அகிலேஷ் மாற்றலாகி ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகிறார். இந்த நிலையில், கோபிகா 2வது முறையாக கர்ப்பமானார்.

அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டவுடன் உடனடியாக ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோபிகாவுக்கு நேற்று காலை 10 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.

 

ட்விட்டர் ட்ரெண்டில் முதலிடம் பிடித்த என்னை அறிந்தால்!

ட்விட்டர் ட்ரெண்டில் இன்று முதலிடத்தைப் பிடித்துள்ளது அஜீத்தின் என்னை அறிந்தால் தலைப்பு.

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத், த்ரிஷா, அனுஷ்கா நடிக்கும் புதிய படம் இதுவரை தல 55 என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்தப் படத்தின் தலைப்பை வெளியிட 8 மாதங்கள் எடுத்துக் கொண்டனர். அதனாலேயே படத்தின் தலைப்பு குறித்து ஒரு எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.

ட்விட்டர் ட்ரெண்டில் முதலிடம் பிடித்த என்னை அறிந்தால்!

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்தப் படத்தின் தலைப்பை அறிவித்தனர் படக் குழுவினர்.

என்னை அறிந்தால் என்று படத்துக்கு தலைப்பிட்டுள்ளனர். இந்தத் தலைப்பு வெளியானதிலிருந்து, சமூக வலைத் தலங்களில் அந்தத் தலைப்பு குறித்து பலரும் எழுதி வருகின்றனர்.

ட்விட்டரில் இதுவரை 50 ஆயிரம் ட்வீட்டுகளுக்கு மேல் என்னை அறிந்தால் பற்றி வந்துவிட்டன. இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டில் என்னை அறிந்தால் என்ற தலைப்புதான் இன்று முதலிடத்தில் உள்ளது.

 

வெளியானது என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... போலீஸ் கெட்டப்பில் அஜீத்!

கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் இன்று வெளியாகின.

என்னை அறிந்தால் என்ற தலைப்பு நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து படத்தில் அஜீத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

அறிவித்தபடி, முதலில் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

வெளியானது என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... போலீஸ் கெட்டப்பில் அஜீத்!

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர்களில், அஜீத் போலீஸ் கெட்டப்பில் தோற்றம் அளிக்கிறார். கருகரு தலைமுடி, போலீஸ் கட், கூலிங்கிளாஸ் அணிந்து புல்லட்டில் கம்பீரமாக காட்சி தருகிறார் ஆங்கில போஸ்டரில்.

வெளியானது என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... போலீஸ் கெட்டப்பில் அஜீத்!

அதே கெட்டப், டிசைனில் தமிழ் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் வெளியான ஒரு டிசைனில் பரந்து விரிந்த வயல் வெளி.. அதில் என்னை அறிந்தால் தலைப்பும், பின்னணியில் கோட்டுச் சித்திரமாய் அஜீத் படமும் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

இரண்டு போஸ்டர்களையும் இங்கே தந்துள்ளோம். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!

 

மலேசியாவில் விஜயகாந்த்… ''ரசிகர்களே கன்னம் பத்திரம்''

சென்னை: தனது மகன் சண்முகப்பாண்டியன் படப்பிடிப்பை மேற்பார்வையிட விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா உடன் மலேசியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த ஜூன் மாதம் மலேசியா சென்று திரும்பினார். அப்போது அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்பட்டது.

இதற்கிடையே அவரது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் ‘சகாப்தம்' படத்துக்கான படப்பிடிப்பு மலேசியா, சிங்கப்பூரில் நடந்தது. இதையும் விஜயகாந்த் மேற்பார்வையிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் இன்று மீண்டும் மலேசியா சென்றார்.

மலேசியாவில் விஜயகாந்த்… ''ரசிகர்களே கன்னம் பத்திரம்''

விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன் சண்முகபாண்டியன், மைத்துனர் எல்.கே.சுதீஷ், ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். இங்கிருந்து பகல் 11.15 மணிக்கு ஜெட்ஏர்வேஸ் விமானம் மூலம் மலேசியா சென்றனர்.

மலேசியாவில் சினிமா படப்பிடிப்பு தொடர்பான இடங்களை விஜயகாந்த் பார்வையிடுவார். அடுத்து அங்கு நடைபெறும் ‘சகாப்தம்' படப்பிடிப்பையும் பார்ப்பார் என்று கூறப்படுகிறது.

விஜயகாந்த் முழு நலத்துடன் இருக்கிறார். என்றாலும் ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் உடல் நிலையை பரிசோதனை செய்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

கடந்த முறை விஜயகாந்த் மலேசியா சென்றிருந்த போது அங்குள்ள விஜயகாந்த் ரசிகர்கள் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். ஒருவர் பின் ஒருவராக விஜயகாந்துடன் போட்டோ எடுத்துக்கொண்டனர், அப்போது ஒரு ரசிகர் திரும்ப திரும்ப வந்து அவருடன் வெவ்வேறு கோணத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தாராம். இதனால் கோபமடைந்த விஜயகாந்த், ஷாஜகான் என்ற அந்த ரசிகரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து அதிர்ச்சி அளித்தார். இம்முறை எந்த ரசிகரின் கன்னம் வீங்கப் போகிறதோ தெரியலையே?.

 

மீஞ்சூர் கோபியின் 'மூத்தகுடி' கதை இது... கத்திக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அப்பீல்!

கத்தி படத்தின் கதை தன்னுடைய மூத்தகுடி படத்தின் கதைதான் என்று அடித்துச் சொல்லும் மீஞ்சூர் கோபி, மீண்டும் நீதிமன்றப் படியேறியுள்ளார். இந்த முறை உயர்நீதிமன்றம்.

ஏற்கெனவே சென்னை பெருநகர நீதிமன்றத்தில் கத்திக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியாகிவிட்டதால், இப்போது இந்த அப்பீலை மேற்கொண்டுள்ளார்.

மீஞ்சூர் கோபியின் 'மூத்தகுடி' கதை இது... கத்திக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அப்பீல்!

சரி... அதற்கு முன் இந்த வார ஜூனியர் விகடனில் 'கத்தி அல்ல, காப்பி' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில், மீஞ்சூர் கோபியின் கதை வெளியாகியுள்ளது. அதைப் பார்க்கலாம்...

மூத்த குடி கதை

"தமிழகத்தில் ஒரு கிராமத்தில் இருக்கும் நீர்வளத்தைப் பார்த்து, பன்னாட்டு நிறுவனம் ஒன்று குளிர்பானம் தயாரிக்கும் கம்பெனியை அமைக்க வருகிறது. கிராம மக்கள் மற்றும் விவசாயக் கூலிகளுக்கு வேலையும் நல்ல சம்பளமும் தருவதாகவும், நிலம் தருபவர்களுக்கு நல்ல விலையும் தருவதாகவும் உறுதியளிக்கிறது. ஆனால், அந்த கிராமத்துப் பெரியவரும், இளைஞர் ஒருவரும் நிலத்தைத் தர முடியாது என்று சொல்லிவிடுகின்றனர். அந்த நிறுவனம் இவர்களைத் தாக்க முயல, கிராம மக்கள் ஒன்றிணைந்து தடுக்கின்றனர்.

மக்களின் ஒற்றுமையைக் கண்டு, பின்வாங்கும் நிறுவனம், அந்த ஊரில் இருக்கும் ஏற்றத்தாழ்வு, முரண்பாடு, மனிதர்களுக்குள் இருக்கும் விரிசல் போன்றவற்றை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, நிலம் கையகப்படுத்தும் முயற்சியைத் தொடர்கிறது. கிராமத்துப் பெரியவரின் உள்ளூர் எதிரி தனது நிலத்தை குளிர்பான கம்பெனிக்கு விற்கிறான். அவனுக்கு மிகப்பெரிய தொகை கொடுக்கப்படுகிறது. அந்தத் தொகையைப் பார்த்து, ஊர் மக்கள் ஆச்சர்யப்படுகின்றனர். அந்த நேரத்தில், நிறைய பணம் கிடைத்தால் வாழ்க்கையை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற அனிமேஷன் படம் கிராம மக்களுக்கு போட்டுக் காட்டப்படுகிறது. அதை நம்பி பெரும்பாலான மக்கள் நிலத்தைக் கொடுக்க சம்மதிக்கின்றனர். மறுநாள் புல்டோசர் வந்து, வாங்கிய நிலத்தை தோண்ட ஆரம்பிக்கிறது. அப்போது அங்கு கிடைக்கும் தங்களுடைய மூதாதையர்களின் எலும்புக் கூடுகளைப் பார்த்து மக்கள் உணர்ச்சிவசப்படுகின்றனர்.

இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கும் மக்களுக்கும் இடையில் தகராறு ஏற்படுகிறது. மக்களுக்கு ஆதரவாக அந்த இளைஞனும், பெரியவரும் இறங்குகின்றனர். போலீஸ் வருகிறது, இளைஞனை கைது செய்கிறது. நிலம் கொடுத்த மக்களுக்கு வேறு இடமும் நிலமும் தருவதாகச் சொன்ன நிறுவனம், அவர்களை ஒரு முகாமில் அடைக்கிறது. நிறுவனத்தின் கழிவுகளால் அங்கு தொற்றுநோய் பரவி, தங்கியிருக்கும் கிராம மக்களில் 20 பேர் மரணமடைகின்றனர்.

அப்போது சிறையில் இருந்து திரும்பிய இளைஞன், மக்களின் அவல நிலையைக் கண்டு கம்பெனிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறான். இந்த நேரத்தில் கம்பெனியின் உற்பத்திக் கோளாறைச் சரி செய்ய கம்பெனியின் உரிமையாளரும் ஆராய்ச்சியாளர்களும் வருகின்றனர். அவர்களை மக்கள் தடுக்கின்றனர். போலீஸ் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. அதில் ஒன்பது பேர் இறந்துவிடுகின்றனர். ஆனால், அவர்களின் உடல்களை எரிக்காமல், எப்போது தங்களின் நிலம் தங்களுக்குக் கிடைக்கிறதோ அன்றுதான் இவர்களின் உடலை தகனம் செய்வோம் என்று அந்த இளைஞனும், பெரியவரும் சபதம் எடுக்கின்றனர்.

இளைஞனைக் கொலை செய்ய கூலிப்படையை ஏவுகிறது நிறுவனம். அதனால் நாயகன் தலைமறைவாகிவிடுகிறான். அப்போது கம்பெனி முதலாளி ஊருக்குள் வருகிறார். அவரை எதிர்த்து, கிராம மக்கள் தங்களை நிர்வாணமாக்கி பாதி மணலில் புதைத்துக்கொண்டு போராடுகின்றனர். இதனால் அவர்களைக் போலீஸ் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது.

அப்போது மக்கள், நீதிபதிகளிடம் தங்கள் பிரச்னையைச் சொல்ல, நாயகனுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும், அவர் தாராளமாக நீதிமன்றத்துக்கு வரலாம் என்று உத்தரவிடுகின்றனர். இதையடுத்து நாயகன் கம்பெனியின் சதிகளை முறியடித்து நீதிமன்றம் வருகிறான். அப்போது, தீர்ப்பளிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.

தன் வாதத்தை எடுத்து வைக்கும் நாயகன், 'கம்பெனி நிலத்துக்குத்தான் பணம் கொடுத்தது. அந்த நிலத்துக்கு அடியில் இருந்த இயற்கை வளத்துக்கு அல்ல. இயற்கை வளங்களின் மதிப்புக்கான பணத்தை, அவர் எங்களுக்குக்கூட அல்ல, இந்த நாட்டுக்குக் கொடுக்கட்டும், நாங்கள் நிலத்தை இலவசமாகவே தருகிறோம்' என்று சொல்கிறார்.

இதை நிறுவனம் ஏற்க மறுத்து வெளியேறுகிறது. மக்கள் அனைவரும் நாயகன் மற்றும் ஊர்ப் பெரியவருடன் சேர்ந்து கிராமத்துக்குத் திரும்புகின்றனர். இதுதான் நான் எழுதிய 'மூத்தகுடி' படத்தின் கதை. இதில் சிறு சிறு மாற்றம் செய்து 'கத்தி' என்ற பெயரில் படமெடுத்துவிட்டார்கள்'' என்று நீதிமன்றத்துக்குப் போனார் மீஞ்சூர் கோபி.

பெரிதாக வேறுபாடு இல்லை

என்னுடைய கதை இதுதான் என்று, நீதிமன்றத்தில் கோபி கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்த மனுவில் உள்ள கதைக்கும் 'கத்தி' படத்துக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை என்பது படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

அவரிடம் தொடந்து பேசியபோது, ''கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று நிறுவனம் தொடங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியது. அப்போது ஏற்பட்ட பாதிப்புகளை வைத்தும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை மனதில் வைத்தும், 'மூத்தகுடி' என்ற தலைப்பில் இந்தக் கதையை எழுதினேன்.

முருகதாசிடம்...

அதை தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரிடம் சொன்னேன். அப்போது ஜெகன் என்பவர் எங்களுடன் இருந்தார். மூன்று மணி நேரம் நான் அந்தக் கதையை சொல்லி முடித்ததும், தற்போது என்னால் இந்தக் கதையை திரைப்படமாகத் தயாரிக்க முடியாது என்று விஸ்வாஸ் சுந்தர் சொல்லிவிட்டார். ஆனால், அப்போது அவருடன் இருந்த ஜெகன், இந்தக் கதை அற்புதமாக உள்ளது என்றும் இதைத் திரைப்படமாகத் தயாரிக்க இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் முருகதாஸிடம் சொல்லி, தான் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். சொன்னபடியே என்னை இயக்குநர் முருகதாஸிடம் அழைத்துப்போனார். கதையைக் கேட்டு என்னைப் பாராட்டிய முருகதாஸ், 'அஜித்தை வைத்து இந்தப் படத்தைத் தயாரிக்கலாம். ஆனால், இதை இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக மாற்ற வேண்டும்' என்று சொன்னார். அதையும் செய்து கொடுத்தேன்.

ஒன்றரை ஆண்டுகள்

கதையை மெருகேற்றும் வேலைகள் மட்டும் ஒன்றரை வருடங்களாக நடைபெற்றன. ஆனால், அதன் பிறகு திடீரென அந்த வேலையை நிறுத்திவிட்டு தன்னால் இந்தத் திரைப்படத்தை இப்போது தயாரிக்க முடியாது என்று சொல்லி முருகதாஸ் ஒதுங்கிக்கொண்டார். திடீரென நடிகர் விஜய்யை வைத்து அவர் இரட்டை வேடத்தில் நடிக்கும் 'கத்தி' திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு கொல்கத்தாவில் வைத்து பூஜை போட்டனர். அப்போதே எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. ஏனென்றால், நான் இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக 'மூத்தகுடி' கதையை மாற்றியபோது, அதில் ஒரு ஹீரோ கொல்கத்தாவில் இருந்து தப்பி வருவதுபோல்தான் அமைத்திருந்தேன்.

கோபி யாருன்னே தெரியாது... - இது முருகதாஸ்

உடனே, இதுபற்றி நான் சினிமா ஆட்களிடம் விசாரித்தபோது, 'கத்தி' திரைப்படத்தின் கதை, என்னுடைய 'மூத்தகுடி'யின் கதைதான் என்பது தெரியவந்தது. நான் இதுபற்றி, அவர்களிடம் கேட்டபோது, 'அது உங்களுடைய கதை அல்ல. இந்தப் படம் முடிந்ததும், நிச்சயம் நீங்கள், அந்தக் கதையை அஜித்தை வைத்து இயக்குவீர்கள்' என்று சொல்லி வந்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. வேறு வழியில்லாமல்தான் நீதிமன்றத்துக்குப் போனேன். அங்கே இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர். அதன் பிறகுதான் தற்போது உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறேன்'' என்றார்.

ஆனால் இயக்குநர் முருகதாஸோ இந்த மீஞ்சூர் கோபியை எனக்குத் தெரியவே தெரியாது, முன் பின் பார்த்தது கூட இல்லை. இது பணம் பறிக்கும் டெக்னிக், என்கிறார்!

 

அஜீத் - கவுதம் மேனன் படத்தின் தலைப்பு நாளை அறிவிப்பு - அதிகாரப்பூர்வ தகவல்

அஜீத் - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயரை நாளை அறிவிக்கப் போவதாக அஜீத்தின் பிஆர்ஓ அறிவித்துள்ளார்.

அஜீத், த்ரிஷா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் புதிய படத்தின் தலைப்பை எப்போதோ முடிவு செய்துவிட்டாலும், அதை அறிவிப்பேனா என்று இழுத்தடித்து வந்தனர்.

அஜீத் - கவுதம் மேனன் படத்தின் தலைப்பு நாளை அறிவிப்பு - அதிகாரப்பூர்வ தகவல்

தீபாவளிக்கு தலைப்பை அறிவிக்கப் போவதாகச் சொன்னவர்கள், அந்த நாளில் அமைதியாக இருந்துவிட்டனர்.

இப்போது படத்தின் தலைப்பை நாளை அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சத்யா, ஆயிரம் தோட்டாக்கள் என பல தலைப்புகள் மீடியாவில் உலா வந்தன.

உண்மையான தலைப்பு என்னவென்பது நாளை தெரிந்துவிடும். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, ஒரு தலைப்புக்காக இவ்வளவு பில்ட் அப் கொடுக்க ஆரம்பித்தது அஜீத் படங்களுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விபச்சார வழக்கில் கைதான நடிகை ஸ்வேதாவை காப்பகத்தில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஹைதராபாத்: விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்வேதா பாசுவை விடுதலை செய்ய ஹைதராபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்தபோது கையும் களவுமாக கைதானவர் சுவேதா பாசு. தேசிய விருது பெற்ற 23 வயது நடிகையான சுவேதா பாசு, தமிழில் கருணாசுக்கு ஜோடியாக சந்தாமாமா திரைப்படத்திலும் நடித்தவர். எனவே தேசிய அளவில் இந்த கைது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

விபச்சார வழக்கில் கைதான நடிகை ஸ்வேதாவை காப்பகத்தில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில், ஸ்வேதா பாசுவை, மகளிர் காப்பகத்தில் அடைத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் வெளியுலக தொடர்பு ஏதுமின்றி தொடர்ந்து காப்பகத்தில் இருந்தார்.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணை ஹைதராபாத், நாம்பல்லே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு கருத்தை கேட்ட நீதிமன்றம், ஸ்வேதா பாசுவை உடனடியாக காப்பகத்தில் இருந்து ரிலீஸ் செய்ய உத்தரவிட்டுள்ளது. இன்று இரவே அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமந்தாவை நம்பி போகலாமா... தயக்கத்தில் தமன்னா!

ஒரே நேரத்தில் ஃபீல்டில் முன்னணியில் இருக்கும் இரு நடிகைகள் சேர்ந்து பணியாற்றுவதே வெகு அரிது.. அதிலும் ஒரு நடிகையை வைத்து இன்னொரு நடிகை படம் தயாரிக்க முன் வருகிறார் என்றால் சாதாரண விஷயமா...

அப்படி ஒரு விஷயம் தெலுங்கில் நடந்தது. இந்தியில் வென்ற குயீன் படத்தை ரீமேக் செய்ய விரும்பினார் சமந்தா. தயாரிப்பாளராக மட்டும் இருந்து கொண்டு, வேறு நடிகையை ஹீரோயினாக்கத் திட்டம்.

ஆனால் அந்தப் படத்தை தென்னிந்தியாவில் ரீமேக்கும் உரிமைகளை வாங்கிவிட்டார் பிரசாந்த் அப்பா தியாகராஜன்.

சமந்தாவை நம்பி போகலாமா... தயக்கத்தில் தமன்னா!

எனவே வேறு ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்ட சமந்தா, தமன்னாவை அதில் ஹீரோயினாக்க விரும்பினார்.

இதுகுறித்து தமன்னாவிடமும் பேசினாராம். அப்போதைக்கு ஒப்புக் கொண்ட தமன்னா, பின்னர் தனியாக தீவிரமாக யோசித்திருப்பார் போலிருக்கிறது.

சமந்தாவே முன்னணி நடிகைதானே.. நம்மைவிட ஏகத்துக்கும் கவர்ச்சியும் காட்டுகிறார். அப்புறம் எதுக்கு நம்மை அழைக்கிறார், என சந்தேகப்பட்ட தமன்னா, பட வாய்ப்பை ஏற்க தயங்குகிறாராம்!

 

எப்போ கல்யாணம்...? கேள்விகளுக்குப் பயந்து அயல்நாட்டுக்கு ஓடிவிட்ட நடிகை

சென்னை: கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் இவர். தமிழில் பிசியாக இருந்தபோதே "சன்" நடிகருடன் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் ஒன்றின் மூலம் ஹிந்திக்கு தாவினார்.

துறுதுறு நடிப்பு, துள்ளலான அழகு என திறமைசாலியான நடிகையை இந்தி திரையுலகம் புன்னகையுடன் வரவேற்றது. ஆனால், முதல் படத்தைத் தவிர அங்கு சொல்லிக் கொள்வது போன்ற படங்கள் எதுவும் அமையவில்லை.

நடிகை இந்திப் பட வாய்ப்புக்காக காத்திருந்த காலத்தில் தமிழில் வாய்ப்புகள் குறைந்தது. இதனால் நடிகையின் இடத்தை மற்ற நடிகைகள் ஆக்கிரமித்தனர்.

வடக்கு கை விரித்ததால், மீண்டும் தமிழ்ப் பட வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தார் நடிகை. ஆனால், அக்கா, அண்ணி வேடங்கள் வேண்டுமானால் தருகிறோம் என தயாரிப்பாளர்கள் கறாரா சொல்லி விட்டனர். தன்னை விட மூத்த நடிகைகள் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது, அக்கா, அண்ணி வேடங்களில் நடிப்பதா என மறுத்து விட்டார் நடிகை.

இதற்கிடையே தொடர்ந்து படங்களில் நடிக்காததால் நடிகைக்கு திருமணம் என்ற பேச்சும் கிளம்பியது. இதனால் மனம் வெறுத்துப் போன நடிகை வெளிநாட்டில் சென்று ஓய்வெடுக்கிறாராம். தனது பிறந்தநாளைக் கூட அங்கேயே தான் கொண்டாடினாராம்.

பிறந்தநாளுக்காக இந்தியா வந்தால் எப்போ கல்யாணம் என்ற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற பயத்தால் தான் இந்த வெளிநாட்டுப் பயணம் எனக் கூறப்படுகிறது.

 

அருண்பாண்டியன் தயாரிக்கும் சவாலே சமாளி! - சுவிஸ்ஸில் படப்பிடிப்பு

அய்ங்கரன் நிறுவனத்திலிருந்து விலகிய பிறகு, அருண்பாண்டியன் தனியாக தொடங்கிய ஏபி குரூப்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படம் சவாலே சமாளி.

கவிதாபாண்டியன், எஸ் என் ராஜராஜன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு 'சவாலே சமாளி' என்று பெயரிட்டுள்ளனர்.

அருண்பாண்டியன் தயாரிக்கும் சவாலே சமாளி! - சுவிஸ்ஸில் படப்பிடிப்பு

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சவாலே சமாளி. அந்த தலைப்பு இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் இப்பெயர் சூட்டியதாக தெரிவிக்கிறார் இயக்குனர் சத்யசிவா.

சூது கவ்வும், தெகிடி வெற்றிப் படங்களில் நடித்த அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார்.

அருண்பாண்டியன் தயாரிக்கும் சவாலே சமாளி! - சுவிஸ்ஸில் படப்பிடிப்பு

எஸ்எஸ் தமன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சத்யசிவா. "கழுகு " வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இவர் இயக்கும் படம் இந்த சவாலே சமாளி.

படம் பற்றி கூறும் போது, "கழுகு, படத்திலிருந்து மாறுபட்டு இந்த படத்தை உருவாக்க நினைத்தேன். அதனால் முழுக்க முழுக்க காமெடி படமாக இதை உருவாக்கி உள்ளோம். படித்த இரண்டு இளைஞர்கள் வாழ்வில் முன்னேற சந்திக்கும் சவால்கள்தான் சவாலே சமாளி" என்றார்.

 

டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கானை என் படத்தில் நக்கலடித்தேனா?: ஃபரா கான் விளக்கம்

மும்பை: பிரபல டான்ஸ் மாஸ்டரான சரோஜ் கானை தனது ஹேப்பி நியூ இயர் படத்தில் கிண்டல் செய்யவில்லை என்று இயக்குனரும், டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கான் தெரிவித்துள்ளார்.

ஃபரா கான் தான் இயக்கிய ஹேப்பி நியூ இயர் படத்தில் தன்னை கிண்டல் செய்துள்ளதாக பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான் தெரிவித்தார். இதனால் அவர் ஃபரா மீது கோபத்தில் உள்ளார்.

சரோஜ் கானை என் படத்தில் நக்கலடித்தேனா?: ஃபரா கான் விளக்கம்

இந்நிலையில் இது குறித்து ஃபரா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சரோஜ் கான் ஒரு மேதை. அவரிடம் இருந்து தான் நான் கற்றுக் கொண்டேன். அவரை என் படத்தில் கிண்டல் செய்யவில்லை. அவரை மனதார நேசிக்கிறேன். படத்தில் அவரை கிண்டல் செய்திருப்பதாக அவர் நினைத்தால் அது உண்மை இல்லை அவரை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம் என்றார்.

ஷாருக்கான், தீபிகா, அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹேப்பி நியூ இயர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்னும் 9 வெள்ளிக்கிழமைகள்... 90 படங்கள்.. தாங்குமா திரையரங்குகள்?

இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் இன்னும் 9 வெள்ளிக்கிழமைகளே பாக்கியுள்ளன.

இந்த இரண்டு மாத காலகட்டத்துக்குள் வெளியாவதற்குக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை... கிட்டத்தட்ட 90!

இந்தப் படங்கள் அனைத்துமோ அல்லது பாதியோ வெளியானால் கூட அது புதிய சாதனையாகிவிடும். ஆமாம்.. இந்த ஆண்டு வெளியான படங்களின் எண்ணிக்கை 200 படங்களைத் தாண்டிவிடும்!

இன்னும் 9 வெள்ளிக்கிழமைகள்... 90 படங்கள்.. தாங்குமா திரையரங்குகள்?

2014ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே, வாரா வாரம் வெளியாகும் படங்களின் சராசரி எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.

கடந்த தீபாவளி வாரம் வரை தமிழில் வெளியான நேரடிப் படங்கள் 167. கடந்த ஆண்டு மொத்தம் 160 படங்கள் வெளியாகின. அப்படிப் பார்த்தால் 10 மாதங்களில் கடந்த ஆண்டின் எண்ணிக்கையைக் கடந்து விட்டது தமிழ்த் திரையுலகம்.

இந்த ஆண்டு முடிய இன்னும் 9 வெள்ளிக் கிழமைகளே பாக்கியுள்ளன. இந்த இடைவெளிக்குள் இன்னும் 90 படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. இவற்றில் முக்கால்வாசிப் படங்கள் சென்சாரும் செய்யப்பட்டுவிட்டன.

இந்த 90 படங்களில் ரஜினியின் லிங்கா, ஷங்கரின் ஐ, அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2, ராகவா லாரன்ஸின் முனி 3 உள்ளிட்டவையும் அடங்கும்.

இந்த 90 படங்களில் பாதி வெளியானால் கூட, தமிழ் சினிமா 200 ஐக் கடந்து புதிய சாதனைப் படைத்துவிடும். ஆனால் இவற்றுக்கு தியேட்டர் கிடைப்பதுதான் பெரும்பாடாக இருக்கும்.

 

தங்கையின் தலை தீபாவளியை ஜமாய்த்த காஜல் அகர்வால்

மும்பை: தங்கை நிஷாவின் தலை தீபாவளிக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்து அசத்தினாராம் அக்கா காஜல் அகர்வால்.

நடிகை காஜல் அகர்வாலின் தங்கையும் அக்கா வழியில் நடிகையானார். ஆனால் போட்டி நிறைந்த திரை உலகில் நிஷாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் கரண் வேலச்சாவை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

தங்கையின் தலை தீபாவளியை ஜமாய்த்த காஜல் அகர்வால்

இந்நிலையில் நிஷா தலை தீபாவளியை கொண்டாடினார். தங்கையின் தலை தீபாவளி அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் காஜல். இதையடுத்து தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தங்கையை அசத்திவிட்டாராம்.

காஜல் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர இரண்டு இந்தி படங்களிலும், ஒரு தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். காஜல் தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு அடங்கிவிட்டது.

அவர் தனது திருமணம் பற்றி தற்போதைக்கு யோசிப்பதாக தெரியவில்லை.

 

கேரள வினியோகஸ்தர்களை பதம் பார்க்கும் தமிழ் படங்கள்: கத்தி நஷ்டத்தின் பின்னணி இதுதான்

திருவனந்தபுரம்: தமிழ் திரைப்படங்களின் வினியோக உரிமையை எடுக்கும் கேரள வினியோகஸ்தர்கள் கை சுட்டுக்கொள்வது கத்தி திரைப்படம் வரை தொடர் கதையாகிவருகிறது.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆன கத்தி திரைப்படத்தின் கேரள வினியோக உரிமை ரூ.4.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. கேரளாவில் சுமார் 120 தியேட்டர்களில் இப்படம் ரிலீசான நிலையில், முதல் நாளில் ரூ.1 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது. அடுத்த நாள் அதைவிட பாதிதான் வருமானம் வந்துள்ளது. அதற்கடுத்த நாட்களில் இந்த வருவாய் மதிப்பு மேலும் சரிவை சந்தித்தது.

இதனால் சுமார் ரூ.1 கோடி அளவுக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கத்திக்கு மட்டுமே கேரளாவில் இந்த நிலை ஏற்படவில்லை. இதற்கு முன்பு தமிழிலில் மிகவும் எதிர்பார்ப்புடன் ரிலீசான சில படங்களாலும் வினியோகஸ்தர்கள் கையை சுட்டுக் கொண்டுள்ளனர்.

கேரள வினியோகஸ்தர்களை பதம் பார்க்கும் தமிழ் படங்கள்: கத்தி நஷ்டத்தின் பின்னணி இதுதான்

லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடித்து மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான அஞ்சான் திரைப்படமும் கேரளாவில் சுமார் ரூ.4.5 கோடிக்கு விற்பனையானது. ஆனால் அந்த படம் மிக மோசமாக வினியோகஸ்தர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்த்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், பாக்ஸ் ஆபீசை கலக்கிய, முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த, துப்பாக்கி திரைப்படத்தால் கூட கேரள வினியோகஸ்தர்கள் நஷ்டத்தையே அனுபவித்துள்ளனர்.

எனவே கேரள வினியோகஸ்தர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை வைத்து ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய முடியாது என்பது புரிகிறது. அப்படியானால் இதற்கு என்னதான் காரணம்?

ஒரு வினியோகஸ்தர் இதுகுறித்து கூறுகையில் "கேரளாவில் விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இருப்பினும் முன்பெல்லாம் விஜய் படங்களின் கேரள வினியோக உரிமை, ரூ.2 கோடி முதல் ரூ.2.5 கோடி வரையில்தான் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இப்போது இருமடங்காக விலை உயர்த்தப்பட்டுள்ளதுதான் நஷ்டத்துக்கான காரணம்" என்றார்.

ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்து வெளியாக உள்ள 'ஐ' திரைப்பட உரிமை கேரளாவில் ரூ.5.6 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம். இதனால் பீதியிலேயே உள்ளனர் கேரள வினியோகஸ்தர்கள். ஐ திரைப்படம் அவர்களை காப்பாற்றுமா, கைவிடுமா என்பது அடுத்த மாதத்தில் தெரிந்துவிடும்.

 

யுவன் சங்கர் ராஜாவுக்கு கீழக்கரை முஸ்லீம் பெண்ணுடன் நிச்சயம் முடிந்தது: துபாயில் திருமணம்

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு மூன்றாவது முறையாக திருமணம் நடைபெற உள்ளது.

தந்தை இளையராஜா வழியில் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தனது காதலியான லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார். 2008ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பிறகு அவர் ஷில்பா மோகன் என்பவரை திருப்பதியில் வைத்து கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

யுவனுக்கு கீழக்கரை பெண்ணுடன் நிச்சயம் முடிந்தது: துபாயில் திருமணம்

ஆனால் ஷில்பாவுடனும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து ஷில்பா யுவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தாயின் மரணத்தால் மனமுடைந்த யுவன் இஸ்லாத்திற்கு மாறினார். தனது பெயரைக் கூட அப்துல்லா என்று மாற்ற உள்ளார்.

யுவனுக்கு கீழக்கரை பெண்ணுடன் நிச்சயம் முடிந்தது: துபாயில் திருமணம்

தான் 5 நேரமும் தவறாமல் தொழுது வருவதாக யுவன் தெரிவித்தார். இந்நிலையில் யுவனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஜப்ருன்னிஸாருக்கும் நேற்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் துபாயில் நடக்க உள்ளது. ஜப்ருன்னிஸார் துபாயில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

 

நான் ஏன் சல்மான் கானிடம் டிப்ஸ் கேட்கணும்?: இந்தி 'சிங்கம்'

மும்பை: நான் ஏன் சல்மான் கானிடம் டயலாக் பேச டிப்ஸ் கேட்க வேண்டும் என்று நடிகர் அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார்.

நம்ம மசாலா கம் ரீமேக் மன்னன் பிரபுதேவா பாலிவுட் கொண்டாடும் இயக்குனர் ஆவார். காரணம் அவர் சரியான அளவில் மசாலா கலந்து படம் தருவதுடன் ரீமேக் படங்கள் எடுப்பதில் வல்லவராக உள்ளார்.

இந்நிலையில் தான் அவர் மீண்டும் ஒரு ரீமேக் படத்தை எடுத்து வருகிறார்.

நான் ஏன் சல்மான் கானிடம் டிப்ஸ் கேட்கணும்?: இந்தி 'சிங்கம்'

தூக்குடு

தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி ஹிட்டான தூக்குடு படத்தை இந்தியில் ஆக்ஷன் ஜாக்சன் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் பிரபுதேவா.

அஜய், சோனாக்ஷி

ஆக்ஷன் ஜாக்சனில் அஜய் தேவ்கன் தான் ஹீரோ. பிரபுதேவாவின் மனம் கவர்ந்த நடிகை சோனாக்ஷி சின்ஹா தான் ஹீரோயின்.

சல்மான்

பஞ்ச் வசனங்கள் பேச, நடிக்க தான் சல்மான் கானிடம் டிப்ஸ் கேட்கப் போவது இல்லை என்று தெரிவித்துள்ளார் அஜய் தேவ்கன்.

ஷாருக்கான்

தனது படத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்று அஜய் தனக்கு ஆகாத நடிகர் ஷாருக்கானை குத்திக்காட்டி பேசியுள்ளார்.

ஹிட்

ஆக்ஷன் ஜாக்சன் படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று பாலிவுட்டில் பலர் தற்போதே சத்தியம் செய்கிறார்கள். அது என்ன மாயமோ

ரிலீஸ்

ஆக்ஷன் ஜாக்சன் வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஃபரா கான் கிண்லடிக்க நான் தான் கிடைச்சேனா: கொந்தளிக்கும் டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான்

மும்பை: ஹேப்பி நியூ இயர் படத்தில் ஃபரா கான் தன்னை கிண்டல் செய்திருப்பதை நினைத்து பிரபல டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான் கோபம் அடைந்துள்ளார்.

பிரபல டான்ஸ் மாஸ்டரும், இயக்குனருமான ஃபரா கான் இயக்கிய ஹேப்பி நியூ இயர் படம் கடந்த 24ம் தேதி ரிலீஸானது. படம் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.108 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் ஃபரா கான் மகிழ்ச்சியில் உள்ளார். ஆனால் பாலிவுட்டின் மற்றொரு பிரபலமான டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கானோ கோபத்தில் உள்ளார்.

இந்த ஃபரா கான் கிண்லடிக்க நான் தான் கிடைச்சேனா: கொந்தளிக்கும் டான்ஸ் மாஸ்டர்

காரணம் படத்தில் ஃபரா சரோஜ் கானை கிண்டலடித்துள்ளார். மேலும் படத்தின் விளம்பர நிகழ்ச்சியிலும் அதாவது கபில் சர்மா நிகழ்ச்சியிலும் சரோஜை நக்கல் செய்துள்ளார்.

இது குறித்து சரோஜ் கான் கூறுகையில்,

ஃபரா விரக்தியில் உள்ளார். அவர்கள் டிவி நிகழ்ச்சியில் செய்ததை நான் பார்த்தேன். இது போன்று நடந்து கொள்வது அவருக்கு பொருந்துகிறதா?

அவரை போன்றவர்களுக்காக பாவப்படுகிறேன். என்னை கிண்டல் அடிப்பதால் அவர்களுக்கு என்ன லாபம் என தெரியவில்லை. ஃபராவை நினைத்து வெட்கப்படுகிறேன் என்றார்.