சென்னை: ஜெயலலிதாவுக்கு கிடைத்த தீர்ப்பை எதிர்த்து திரை உலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வந்த இளம் நடிகர்கள் சிலர் வந்த வேகத்தில் கிளம்பிப் போய் விட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தீர்ப்பை எதிர்த்து தமிழ் திரை உலகினர் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட திரை உலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசினர். சிலர் அம்மாவுக்கு கிடைத்த தண்டனையை நினைத்து குமுறினர், சிலர் கதறி அழுதனர்.
இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ரஜினி, கமல் ஹாஸன், அஜீத், விஜய் ஆகியோர் வரவில்லை. சூர்யா உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தார், போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். பந்தலுக்கு வந்த 15 நிமிடத்தில் அவர் கிளம்பிச் சென்றுவிட்டார்.
அதேபோல விக்ரம், விமல், கார்த்தி போன்ற நடிகர்களும் வந்த வேகத்தில் கிளம்பிப் போய் விட்டனர்.
Post a Comment