மும்பை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது ரவ்னக் ஆல்பத்தை வெளியிட்டு அதை பெண்கள் முன்னேற்றத்திற்காக அர்பணித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ரவ்னக் என்ற ஆல்பத்தை கடந்த 29ம் தேதி மும்பையில் வெளியிட்டார். இந்த ஆல்பத்தை அவர் பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வோக் எம்பவர் என்ற திட்டத்திற்கு அர்பணித்துள்ளார்.
இந்த ஆல்பத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அவற்றை லதா மங்கேஷ்கர், சித்ரா, ஸ்ரேயா கோஷல், மோஹித் சவ்ஹான், ஸ்வேதா பண்டிட் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ளார்.
லாட்லி என்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். இந்த பாடலை எழுதியவர் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் ஆகும். லாட்லியை லதா, ரஹ்மானுடன் சேர்ந்து பாடியுள்ளார்.
ஷங்கர் பிரமாண்டமாக எடுத்துள்ள ஐ படத்திற்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment