கமலுடன் கிஷோர்.. முதல் முறையாக.. தூங்காவனத்தில்!

சென்னை: தூங்கா வனம் படத்தில் நடிகர் கமலுடன் வில்லனாக மோதவிருக்கிறார் கன்னட நடிகர் கிஷோர்.

தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வரும் தூங்கா வனம் படத்தில் ஏற்கனவே இன்னொரு வில்லனாக நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ள நிலையில் தற்போது கிஷோரும் ஒப்பந்தமாகி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை திரையுலகில் அதிகரித்து இருக்கிறது.

Kishore in Kamal Haasan’s Thoongavanam

உத்தம வில்லனைத் தொடர்ந்து பாபநாசம் படத்தை வெளியிட இருக்கும் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பாக தூங்கா வனம் படத்தில் தற்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

படத்தை கமலின் நீண்ட நாள் உதவியாளரான ராஜேஷ் இயக்குகிறார். படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்தது. விழாவில் நடிகர் பிரகாஷ்ராசுடன் கிஷோரும் கலந்து கொண்டதால் படத்தில் மற்றொரு வில்லனாக கிஷோரும் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது கிஷோரும் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தூங்கா வனம் படத்தில் நான் நடிக்கிறேன். ஆனால் படத்தில் நான் என்ன ரோலில் நடிக்கவிருக்கிறேன் என்பது ரகசியம் என்று கிஷோர் கூறியிருக்கிறார்.

தமிழில் மிகச் சிறந்த வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் கிஷோர் தற்போது துந்து கைக்கள் சாவாச என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ஹைதராபாத்தில் நடந்து வரும் தூங்கா வனம் படத்தின் படப் பிடிப்புக் குழுவினருடன் இணைந்து கொள்ளவுள்ளார். இன்னும் இரண்டு மாதத்தில் தூங்கா வனம் படத்தின் தமிழ் படப் பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

தூங்காவனம் முத்தக் களமாக இருக்குமா அல்லது யுத்தக் களமாக மாறுமா..பார்க்கலாம்!

 

நல்ல செய்தி வருது... சிம்பு

சென்னை: தொடர்ந்து 3 வருடங்களாக நடித்த எந்தப் படமும் ரிலிசாகாமல் கவலையில் தத்தளித்த சிம்பு விரைவில் நல்ல செய்தி வரவுள்ளதாக டிவிட் செய்துள்ளார்.

வாலு, வேட்டை மன்னன் மற்றும் இது நம்ம ஆளு போன்ற மூணு படங்களுமே வெளியாவதில் பிரச்சினை ஏற்பட்டதால் மனிதர் சோகப் பாட்டு பாடிக் கொண்டு திரிந்தார்.

Simbu Said  Good News To Fans

இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் கான் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் லேசான நம்பிக்கை துளிர்விட தனது கெட்டப்பை சற்று மாற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தவர் தற்போது உற்சாக மூடுக்கு மாறி இனிமேல் எனக்கு எல்லாமே நல்ல நேரம்தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்படி என்ன நல்ல விஷயம் என்று கேட்கிறீர்களா வாலு படத்தின் டிரைலருக்கு முன்பாகவே படரிலீஸ் பற்றி முறையாக அறிவிக்கப்படும் மற்றும் இது நம்ம ஆளு படத்தின் ஆடியோ ரிலீஸ் செய்தி விரைவில் நடிக்கவிருக்கும் படங்களின் தகவல்கள் பற்றி விரைவில் முறைப்படி கூறுகிறேன் என்று உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

நல்லது நடந்தா சரிதான்!

 

அட்லீ படத்தில் அப்பாவாக விஜய்

சென்னை: நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் புலி படத்தைத் தொடர்ந்து ராஜா ராணி படப்புகழ் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இரண்டு வேடங்களில் இப்படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் ஒரு வேடத்தில் போலீசாக நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்னொரு வேடம் ரகசியமாக வைக்கப் பட்டு இருந்தது. தற்போது அந்த இன்னொரு வேடத்தைப் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay plays a dad in Atlee’s film?

முதல் முறையாக இந்தப் படத்தில் அப்பா வேடத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். ஒரு படம் முழுவதும் அப்பாவாக விஜய் நடிக்கவிருப்பது இதுவே முதல் முறை. கத்தி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த விஜய் தற்போது இந்தப் படத்திலும் இரண்டாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். போக்கிரி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக காக்கிச்சட்டை அணியவிருக்கிறார்.

புலி படத்தின் டப்பிங் வேளைகளில் பிசியாக இருக்கும் விஜய் அதனை முடித்துக் கொடுத்துவிட்டு இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார். படப் பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க இருக்கிறார் இயக்குனர் அட்லீ. அனிருத் இசையமைக்க விருக்கும் இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கப் போவது கலைப்புலி எஸ்.தாணு.

பாசமான அப்பாவா வர்றாரா இல்ல பயங்கரமான அப்பாவா வரப்போறாரா...!

 

தமிழில் மிரட்ட வரும் “ஜுராசிக் வேர்ல்ட்“

லாஸ் ஏஞ்செல்ஸ்: 1993 ம் ஆண்டு வெளியாகி உலகையே ஒரு கலக்கு கலக்கிய ஜுராசிக் பார்க் படத்தின் நான்காம் பாகமான ஜுராசிக் வேர்ல்ட் படம் வரும் ஜூன் மாதம் 11 ம் தேதி தமிழில் வெளியாகிறது.

ஹாலிவுட்டின் மெகா இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய இந்தப் படம் டைனோசர்களை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டிருந்தது, வசூலில் நல்ல வெற்றியைக் கொடுத்ததால் அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது.

‘Jurassic Park’ to Air on NBCU Nets Ahead of ‘Jurassic World’ Release

தற்போது அதன் நான்காம் பாகமான ஜுராசிக் வேர்ல்ட் வரும் ஜூன் மாதம் 11 ம் தேதி அன்று உலகெங்கிலும் வெளியாகிறது, தமிழிலும் இப்படம் 2D, 3D, 3D மாக்ஸ் மற்றும் 4D தொழில்நுட்பங்களில் வெளிவரவுள்ளது.

கோலின் டேரவோராவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை யுனிவேர்செல் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது, கிரிஸ் பேராட், ப்ரைஸ் டெல்லா ஹார்டி மற்றும் டி சிப்கின்ஸ் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இசை மைக்கேல் சியாச்சினோ ஒளிப்பதிவு ஜான் ஸ்வர்த் மேன்.

படத்தின் கதை என்னவெனில் 22 வருடங்களுக்கு முன் (முதல் பாகத்தில்) உருவாக்கிய டைனோசர் பூங்காவில் தற்போது நூற்றுக்கணக்கான டைனோசர்கள் பல்கிப் பெருகியுள்ளன. ஒருபக்கம் டைனோசர்கள் பற்றிய ஆராய்ச்சியில் மனிதனுடன் இணைந்து வாழும் வகையில் ஒரு டைனோசரை உருவாக்குகிறார்கள்.

ஆராய்ச்சியில் நடந்த ஒரு தவறின் காரணமாக அந்த டைனோசர் மனிதனுக்கு எதிரானதாக மாறுவதுடன் பூங்காவில் இருந்தும் தப்பித்து விடுகிறது, தப்பித்து போன டைனோசரை வேட்டையாடிக் கொல்வதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

டைனோசரின் அட்டகாசம் மீண்டும் ஆரம்பம்....!

 

சுருதி இப்போ டாக்ஸி டிரைவர்

சென்னை: இயக்குனர் சிறுத்தை சிவா தல அஜித்தை இயக்கி வரும் புதிய படத்தில் டாக்ஸி டிரைவராக நடிப்பது அஜித் இல்லையாம், நடிகை சுருதி ஹாசனாம்.

ஆமாம் அஜித்தின் புதிய படத்தில் அஜித்தின் தங்கையாக நடிகை லட்சுமி மேனனும் அவருக்கு ஜோடியாக நடிகை சுருதியும் நடித்து வருகிறார்கள், அஜித் இந்தப் படத்தில் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது படத்தில் டாக்ஸி டிரைவராக வருவது அஜித் அல்ல சுருதி என்று கூறுகிறார்கள்.

Shruti Hassan plays taxi driver

முதன்முறையாக சுருதி இந்தப் படத்தில் டாக்ஸி டிரைவர் வேடத்தில் நடிக்கிறார், முதற்கட்ட படப் பிடிப்பு பின்னி மில் மற்றும் பழைய மகாபலிபுரம், நாவலூர் போன்ற இடங்களில் தொடங்கி முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் படம் பாட்ஷா படத்தின் ரீமேக் என்று சொல்லப் படும் நிலையில் அதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் படப் பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார் சிறுத்தை சிவா.

ஏற்கனவே வீரம் படத்தில் அஜித்துடன் இணைந்து ஹிட் கொடுத்த சிவா இந்தப் படத்தில் அஜித்தை என்ன வேடத்தில் நடிக்க வைக்கப் போகிறார் என்பது தெரியவில்லை, அஜித் மற்றும் லட்சுமி மேனன் சம்பந்தப் பட்ட காட்சிகள் மட்டும் தற்போது படம் பிடிக்கப்பட்டுள்ளன, விரைவில் சுருதியை டிரைவராக வைத்து படம் பிடிப்பார்கள் எனத் தெரிகிறது.

நெக்ஸ்ட் நம்ம சுருதிய டாக்சி விளம்பரத்துல பார்க்கலாம் போல...!

 

கட்டிடம் முடிஞ்சாதான் கல்யாணம் –நடிகர் விஷால்

சென்னை: நடிகர் சங்கக் கட்டிடம் தொடர்பான விவகாரத்தில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போதுமான நிதி இருந்தும் ஏன் இன்னும் சங்கக் கட்டிடத்தை கட்டவில்லை எனத் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வரும் நடிகர் விஷாலுக்கு ஆதரவாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பல இளம் நடிகர்களும் அவருடன் கைகோர்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

 Hero Vishal challenges About His Marriage

இதற்கு மேலும் திரிகிள்ளிப் போடும் விதமாக புதுக்கோட்டை நாடக நடிகர்களை சமீபத்தில் நடிகர் விஷால் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். இதனால் நடிகர் சங்கத்தில் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் தற்போதைய நடிகர் சங்கத்தலைவர் நடிகர் சரத்குமார் விஷாலின் ஆர்வத்தை நான் மதிக்கிறேன் ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவது முடியாத ஒன்று இது விஷாலுக்கே நன்கு தெரியும். கட்டிடம் கட்டுவது தொடர்பாக சில சட்டப்பூர்வமான வேலைகள் நடந்து வருகின்றன, ஆனால் விஷால் இதனைப் புரிந்து கொள்ளாமல் தனது பேட்டிகளில் தொடர்ந்து பல தவறான கருத்துக்களை கூறி வருகிறார்.

நடிகர் சங்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் விதமாக அவர் நடந்து கொள்கிறார், விஷால் சற்று அமைதி காக்க வேண்டும் என்று சரத்குமார் தனது பேட்டியில் கூறியிருந்த நிலையில், நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடித்த்து விட்டுத் தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் நடிகர் விஷால். விஷாலுக்கு தற்போது 37 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் அலைஓய்ந்து தலை முழுகினார்ப் போலத்தான்...

 

பாகுபாலி படமும் தொடரும் திருமண பந்தமும்

ஹைதராபாத்: பாகுபாலி படத்தின் நடிகை அனுஷ்காவிற்குத் திருமணம் என்று வெளியான செய்தியால் பரபரப்புக்குக்குள்ளான தெலுங்குலகம் மீண்டும் தற்போது அத்தகைய பரபரப்புக்கு ஆளாகியிருக்கிறது.

ஆமாம் அந்த படத்தின் நாயகன் பிரபாசுக்கு இந்த வருடம் டிசம்பரில் கல்யாணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தோட ராசி தொடர்ந்து அடுத்தடுத்து நாயகன், நாயகி இருவருக்கும் திருமணம் நடந்து விடும்போலத் தெரிகின்றது.

Actor Prabhas to get married in December

35 வயதாகியும் திருமணம் பற்றி எதுவும் வாய்திறக்காமல் இருந்து வந்த டோலிவுட்டின் யங் ரிபல் ஸ்டார் பிரபாஸ் தற்போது பாகுபாலி படத்தை முடித்த கையோடு வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறாராம்.

பெற்றோர் பார்த்து உள்ள பெண்ணை மணம் முடிக்கப் போகிறார் என்று கூறுகிறார்கள். அந்தப் பெண் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவராம். தனது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பாகுபாலி படத்தின் முதல் பாகத்தை முடித்து விட்டு தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

70% படப் பிடிப்பு இரண்டாம் பாகத்தில் முடிந்து விட்டது என்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியிருக்கிறார். டோலிவுட்டின் தி மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் என்ற பட்டப் பெயருக்கு உரியவரான பிரபாசுக்கு திருமணம் என்றவுடன் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள், ஆனால் இந்த செய்தியைக் கேட்டது முதல் அவரது இளம் ரசிகைகள் பலரும் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி விட்டனராம்.

சரி சரி அழாதிங்க கேர்ள்ஸ்...கண்ணத் தொடைச்சுக்குங்க...!

 

மேகி விவகாரம்.. நொந்து "நூடூல்ஸ்" ஆகும் அமிதாப் மற்றும் மாதுரி தீக்சித்!

மும்பை: பிரபலமான நெஸ்லே நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட உப்பின் அளவு அதிகம் இருந்ததைக் கண்டுபிடித்த உத்திரப் பிரதேச மாநில அதிகாரிகள் கண்டுபிடித்து, அந்த நூடுல்சைத் தயாரிக்கும் பிரபலமான 5 கம்பெனிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது அனைவரும் அறிந்ததே.

தற்போது வழக்கில் ஒரு அதிரடியான திருப்பமாக பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

Maggi noodles row: Case lodged against Nestle, Amitabh Bachchan and Madhuri Dixit

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், மாதுரி தீக்சித் மற்றும் பிரீத்தி ஜிந்தா ஆகிய மூவரும் அந்த நூடுல்ஸின் விளம்பரத்தில் நடித்து இருந்தனர். பணத்துக்காக அந்த விளம்பரத்தில் நடித்ததுடன் அது உடல்நலத்திற்கு நல்லது என்றும் இவர்கள் மூவரும் விளம்பரம் செய்துள்ளனர்,

பணத்துக்காக குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கெடுக்கும் செயலில் இவர்கள் மூவரும் ஈடுபட்டிருக்கின்றனர் என்று வழக்கைத் தொடர்ந்தவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அந்த நூடுல்சைத் தடை விதிக்கலாமா என்று மகாராஷ்டிர அரசும் உத்திரப் பிரதேச அரசும் தடை விதிக்கலாமா என்று அந்த மாநில அரசுகள் யோசித்து வரும் இந்த வேளையில், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு இந்தித் திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமிதாப்புக்கு நேரம் சரியில்லையோ, மனுஷன் தொடர்ந்து பிரச்சினையில சிக்குறாரு..

 

புலி படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக 84 நாட்கள்! - சூப்பர் சுப்புராயன் பேட்டி

இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு சினிமா பிரியர்களுக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும், சிலருக்கு ஆக்‌ஷன் காட்சிகளும், இன்னும் சிலருக்கு காதல் காட்சிகளும் பிடிக்கும், ஆனால் இன்றுவரை இந்த இரண்டுக்குமே பெயர் பெற்ற இடம் ஹாலிவுட் மட்டுமே.

இன்றளவும் உலகின் சந்து பொந்துகளிலும் ஹாலிவுட் படங்கள் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. சரி, இப்ப நம்ம இந்திய சினிமாவுக்கு வருவோம். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னே இந்திய சினிமாவில் சண்டைக் காட்சி என்பது நம்ப முடியாத அளவுக்கு அந்தரத்தில் பறந்தும், 15வது மாடியிலிருந்து ஹீரோ குதித்து சண்டைப்போடுவதுமான காட்சிகளை வைத்து ரசிகர்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அந்தந்த படங்களின் ஸ்டண்ட் இயக்குநர்கள்.

Puli stunt scenes shot in 84 days, says Super Subbarayan

இந்த மாதிரியான காட்சிகளைப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனும் 'இது இவனுக்கே ஓவரா இல்ல' என்ற கேட்குமளவுக்குத்தான் இருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும் என்று பலர் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதுகுறித்து தற்போது முதல் முறையாக ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஆமாங்க.. இந்திய சினிமாவுல சண்டைக் காட்சிகள் ரசிகர்களை ஏமாற்றும் விதமாகத்தான் இன்றளவும் இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டேயிருக்கிறது.

எங்கள மாதிரி ஸ்டண்ட் ஆட்கள் ஒரு படத்தில ஒரு ஆக்‌ஷன் சீன் எடுக்கணும்னா அந்த கதையை மீறாத ஒரு சண்டைக்காட்சியாகத்தான் எடுக்க வேண்டியிருக்கு, ஹாலிவுட்ல வர்ற மாதிரி எங்களால் சண்டைக்காட்சிகள் எடுக்க முடியும் அந்தளவுக்கு திறமையும் எங்களிடமிருக்கு, அதைத்தான் தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'புலி' படத்துல நாங்க எகிறி அடிச்சிருக்கோம்.

புலி படத்துல சண்டைக்காட்சிக்கு மட்டும் 84 நாட்கள் நாங்க செலவழிச்சிருக்கோம், இந்த படத்துல வர்ற சண்டைக்காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் அதை நீங்க தியேட்டர்ல பார்த்தா உங்களுக்கு தெரியும்," என்றார்.

 

விஷால் தாராளமாக போட்டியிட்டு தலைவராகட்டும்.. ஆனாலும் நானும் மோதுவேன்! - சரத்குமார்

சென்னை: நடிகர் சங்கத் தலைவராக விஷாலுக்கு விருப்பம் இருந்தால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். நானும் அந்த தேர்தலில் போட்டியிடுவேன், என்றார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.சரத்குமார்.

இதுகுறித்து திருச்சியில் அவர் அளித்த பேட்டி:

Vishal can contest Nadigar Sangam election, says Sarath Kumar

"தோல்வி பயத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் எதிர்க்கட்சிகளே ஒதுங்கியுள்ள நிலையில், டிராபிக் ராமசாமி போட்டியிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.

எனக்கும், நடிகர் விஷாலுக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்னையும் இல்லை. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தவறான கருத்துகள் பேசுவது கண்டிக்கத்தக்கது.

நடிகர் சங்கத் தலைவராக வர வேண்டும் என்றால் அவர் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கட்டும். அதே நேரம் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் நான் போட்டியிடுவேன். அதில் மாற்றமில்லை," என்றார்.

 

புதிய தலைமுறை நடத்தும் 'புகை உயிருக்குப் பகை' குறும்படப்போட்டி

புகை பிடிக்கும் பழக்கம் ஏற்படுத்தும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரையை புகை உயிருக்குப் பகை என்ற தலைப்பில் புதிய தலைமுறைத் தொலைக்காட்சி மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு கலந்துரையாடல்கள், விழிப்புணர்வு குறிப்புகளை அடங்கிய அறிவிப்புகள், பிரபலங்களின் பேட்டிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஒளிபரப்பியதுடன் 'புகை உயிருக்குப் பகை' என்ற தலைப்பில் குறும்படங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

Puthiya Thalaimurai TV's anti tobacco short film competition

புகைப் பிடித்தலின் தீமையை வெளிக்காட்டும் வகையிலும், புகையைத் தவிர்ப்பதை வலியுறுத்தவும் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படங்கள் வரவேற்கப்பட்டன.

அந்தவகையில் சுமார் 300 குறும்படங்கள் வந்து சேர்ந்தன. அவற்றில் ஒளிபரப்புக்குத் தகுதியானவை என 85 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

அந்த 85 படங்களில் புதிய தலைமுறையின் நடுவர் குழு 25 குறும்படங்களைத் தேர்ந்தெடுத்தது. அந்த 25 படங்களின் படைப்பாளிகளை அரங்கத்திற்கு அழைத்து இயக்குனர் சரண் முன்னிலையில் அந்தப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் முதல் மூன்று பரிசுகளை வென்ற குறும்படங்களும், 10 ஊக்கப்பரிசு பெற்ற குறும்படங்களையும் இயக்குனர் சரண் தேர்ந்தெடுத்து அறிவித்ததுடன், அவர்களுக்குப் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் பரிசுகள் அளித்து கவுரவித்தார்.ஞ

மேலும் முதல் இரண்டு பரிசுகளைப் பெற்ற குறும்பட இயக்குனர்களுக்கு தன்னுடன் இணைந்து பணியாற்ற உதவி இயக்குனர்கள் வாய்ப்பையும் தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சி புகையிலை எதிர்ப்பு தினமான மே 31 ம் தேதி ஞாயிறன்று மதியம் 12.00 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

 

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: சூர்யா, பிரேம்ஜி, நயன்தாரா, ப்ரணிதா, சமுத்திரக்கனி

ஒளிப்பதிவு: ஆர்டி ராஜசேகர்

இசை: யுவன் சங்கர் ராஜா

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

எழுத்து - இயக்கம்: வெங்கட்பிரபு


இன்றைய பேய்க் கதை ட்ரெண்டைப் பயன்படுத்தி வெங்கட் பிரபுவும் சூர்யாவும் ஒரு மாஸ் பேய்ப் படத்தைத் தர முயன்றிருக்கிறார்கள். பேய்கள் என்றாலே பயம், பயங்கரம் என்ற நினைப்பை மாற்றி, அவற்றை தோளில் கைபோட்டு நட்பு பாராட்டும் தோழர்களாகக் காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு.

கதை.. ரொம்ப சிம்பிள்.. பழசும் கூட. தன் குடும்பத்தை அழித்தவர்களை, மகன் வளர்ந்து பழிவாங்குகிறான் என்ற ஒற்றை வரிக் கதையை, பேய்கள் மற்றும் தனது வழக்கமான துருப்புச் சீட்டு பிரேம்ஜியைக் கொண்டு கலகலப்பாகவும் உருக்கமாகவும் தந்திருக்கிறார் வெங்கட் பிரபு.

நண்பன் பிரேம்ஜி துணையுடன் சின்னச் சின்ன திருட்டுகள் செய்து கொண்டு, நயன்தாராவை லவ்விக் கொண்டிருக்கும் சூர்யா, ஒரு பெரிய திருட்டின் போது கார் விபத்தில் சிக்குகிறார். தலை பட்ட அடியால் அவருக்கு ஒரு புது சக்தி கிடைக்கிறது. ஆவி, பேய்களைக் காணும் சக்தி. அந்தப் பேய்களை வைத்தே கொஞ்ச காலம் பிழைப்பை ஓட்டுகிறார். பேய்கள் தங்கள் நிறைவேறாத ஆசைகளை சூர்யா மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகின்றன.

Masssu Engira Masilamani Review  

அப்போதுதான் தன்னைப் போன்ற உருவ அமைப்புடன் உள்ள ஒரு பேய் (இன்னொரு சூர்யா) அவரிடம் வருகிறது. அந்தப் பேய் சிலரைப் பழி வாங்க மனித சூர்யாவைப் பயன்படுத்திக் கொள்கிறது. இது புரிந்து அந்தப் பேயை விரட்டியடிக்கிறார் சூர்யா. உடனிருக்கும் மற்ற பேய்களின் இறுதி ஆசைகளை நிறைவேற்றுகிறார்.

சூர்யா விரட்டியடித்த பேய் யார்? எதற்காக அந்தப் பேய் சூர்யா மூலம் சிலரை போட்டுத் தள்ளுகிறது? என்பதெல்லாம் திரையில் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்.

Masssu Engira Masilamani Review

வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும், அதை கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு. சம கால சினிமா, அதில் வந்த பாத்திரங்கள், காட்சிகளையெல்லாம் சூழலுக்கு ஏற்ப புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் விபத்து மற்றும் ஜெய் பாத்திரத்தைப் பயன்படுத்திய விதம், க்ளாமாக்ஸ் சண்டையில் பார்த்திபனைப் பார்த்து கருணாஸ் கூறும் அந்த ஒற்றை வசனம், படம் முழுக்க வரும் பிரேம்ஜியின் டைமிங் வசனங்கள்.. -வெங்கட் பிரபுவின் அக்மார்க் பார்முலா இது.

Masssu Engira Masilamani Review

ஈழத்துக்கு இளைஞராக வரும் இன்னொரு சூர்யா, மண்ணைப் பிரிந்து அயல்நாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழனின் பிரதிநிதியாக ஜொலிக்கிறார். 'அயல்நாட்டில் வாழும் தமிழன் சொந்த மண்ணுக்கு வந்தால் ஊரைச் சுற்றிப் பார்த்து போட்டோ புடிச்சிக் கொண்டு போயிடுவான்னு நினைச்சியா?' என்ற வசனம் இன்றைய நிலையின் நிதர்சனம்.

சூர்யாவை அத்தனை பரிமாணங்களிலும் ஜொலிக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஒரு ஜாலி திருடனாக, தன்னை வைத்து பழிவாங்கும் தன் உருவ பேயிடம் சீறும் சிங்கமாக, இருபது முரடர்கள் மல்லுக் கட்ட அவர்களை வெளுத்து வாங்கும் அதிரடி நாயகனாக, துறுதுறு காதலாக, அன்பான கணவனாக.. இறுதியில் வெகுண்டு எழும் கோபக்கார மகனாக... மனசை அள்ளுகிறார் மனிதர்.

Masssu Engira Masilamani Review

பிரேம்ஜிக்கும் சூர்யாவுக்குமான நட்பு அருமை. உனக்கு என்னடா கடைசி ஆசை என பிரேம்ஜியிடம் கேட்க, அதற்கு அவர் தமாஷாகத் தரும் பதில் மனசைப் பிசையும் காட்சி.

நாயகிகளில் நயன்தாரா சும்மா ஒப்புக்கு வந்து போகிறார். அவரது நர்ஸ் வேடம் ஒரே ஒரு காட்சிக்குதான் ரொம்ப உதவியாக இருக்கிறது.

Masssu Engira Masilamani Review

ப்ரணிதாவின் அழகும், அந்த அகன்ற விழிகளில் கண்களில் வழியும் காதலும் ரசிக்க வைக்கின்றன. இருவரின் மகளாக வரும் அந்த சுட்டிப் பெண் ஒரு கவிதை.

சின்னச் சின்ன விஷயங்களில் கூட அத்தனை சிரத்தை காட்டியுள்ள வெங்கட் பிரபு, ரசிகர்களை கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலோ என்னமோ இரு பெரிய தவறுகளை சரிப்படுத்தாமலே விட்டிருக்கிறார்.

Masssu Engira Masilamani Review

பேய்களால் எந்தப் பொருளையும் தொட முடியாது.. எதுவும் செய்ய முடியாது என்பதை ஆரம்பத்தில் சொல்லும் அவர், பின்னர் அதே பேய்கள் கிரேனை இயக்குவது போலவும், கன்டெய்னர் கதவுகளை தூக்கி அடிப்பதுபோலவும் காட்டியிருக்கிறார்.

Masssu Engira Masilamani Review

ஒரு விபத்தில் வந்த பேய்களைக் காணும் சக்தி, அடுத்த விபத்தில் போயிடுச்சி என்ற மெகா காமெடி வசனத்தை சூர்யாவை விட்டு சீரியசாகப் பேச வைத்திருக்கிறார்.

'ஒண்ணுமே புடுங்கலன்னு யாரும் சொல்லிடக் கூடாதில்ல..' என்று பஞ்ச் அடித்தபடி, கைதியின் கண்ணாடியைப் பிடுங்கி, அதை சக போலீசிடம் லஞ்சமாகத் தரும் பார்த்திபன் வரும் காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும், அவரை இன்னும்கூட சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

சமுத்திரக்கனியை இத்தனை கொடூர வில்லனாகப் பார்க்க முடியவில்லை. ஜெயப்பிரகாஷ், ராஜேந்திரன், ரியாஸ், கருணாஸ், ஸ்ரீமன், சண்முகசுந்தரம், ஞானவேல் என அத்தனைப் பேரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

Masssu Engira Masilamani Review

படத்துக்கு பெரிய பலம் ராஜசேகரின் ஒளிப்பதிவும், யுவனின் இசையும். குறிப்பாக பின்னணி இசை.

வெங்கட் பிரபுவிடம் பிடித்த விஷயமே, வழக்கமான விஷயத்தைக் கூட ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி மாற்றித் தரும் புத்திசாலித்தனம்தான். அது இந்தப் படத்தில் கொஞ்சம் மிஸ்ஸான மாதிரி தெரிந்தாலும், ஒரு முறை ரசித்துப் பார்க்கும்படியான படம்தான் இந்த மாசு!

 

விஷால் விவகாரம்: நடிகர் சங்க தலைவர் சரத்குமாருக்கு எதிராக நாசரின் பரபரப்புக் கடிதம்!

நடிகர் சங்கத்தில் நடக்கும் பிரச்னை குறித்து கேள்விகள் எழுப்பி நடிகர் நாசர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதம்:

பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெரு மதிப்பிற்குரிய தலைவர் சரத்குமார் அவர்களுக்கு, வணக்கம். இன்னமும் தங்கள் மீது கொண்டுள்ள அன்பு, மரியாதை இம்மியளவும் குன்றா நிலையில் இக்கடிதம் வரைகிறேன்.

Nasser's open letter to Nadigar Sangam Chief Sarath Kumar

இன்றைய செய்திகளில் வலம் கொண்டிருக்கும் - திரு விஷால் அவர்கள் புதுக்கோட்டை நடிகர் சங்கத்தில் பேசிய பேச்சின் தொடர்பாக தாங்கள் வரைந்த அறிக்கையை படிக்க நேர்ந்தது. ஒரே கேள்விதான் எழுகிறது? "என்ன நடக்கிறது சங்கத்தில்" சில உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்கள் மீது கீழ்த்தரமான வார்த்தைகள் நிரம்பிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்கள். நியாயமான முறையில் சந்தேகங்களை எழுப்பியவர்களுக்கு மிரட்டலும் அவலமும் கலந்த மொட்டை கடிதாசிகள் வருகின்றன.

தேர்தல் வருவதற்கு ஓராண்டுக்கு முன்னரே துணைத்தலைவர் திருச்சியில் கூட்டம் கூட்டி தேர்தல் பற்றி பேசியதுமல்லாமல் ஒட்டு மொத்தமாக சினிமா நடிகர்களை ‘மானமற்ற நாய்கள்" என்கிறார். பொதுச் செயலாளரோ தன் சங்கத்தைச் சார்ந்த ஒரு உறுப்பினரை பெரிய மயிறா? என்று கேள்வி எழுப்புகிறார். சங்கத்தை பிளக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்.

இவர் இருவரின் செய்கையின் புகார் கொடுத்து பதில் வராததால் பக்கம் பக்கமாய் மீண்டும் எழுதியதால் .. .. காரணம் ஏதும் விளக்கப்படாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமென செயற்குழு எடுத்த முடிவை ஏற்றுக் கொள்ளுமாறு தங்கள் கையொப்பமிட்ட பதில் வருகிறது. திருவாளர்கள் துணைத்தலைவர், பொதுச் செயலாளர் மீது நான் கொடுத்த புகாரின் பேரில் நீங்கள் எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடில்லை. அதற்க நான் ஏன் பதிலளிக்கவில்லையென்றால் சில செயற்குழு உறுப்பினர்களின் தேவையற்ற கட்டுக்கதைகளும், அவதூறுகளும், மூன்றாம் தர வ்ய+யகங்களாய் ப்ரயோகித்ததின் காரணமாகத்தான். பிடிக்காதவர்களின் மீது அற்பத்தனமான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு நிலைகுலைய செய்யலாமென்று அவர்கள் நினைத்தால் அது நடக்காதென்பதையும் தெளிவுபடுத்துகிறேன்.

நீங்களும் தீர விசாரிக்காமல் அக்கடிதங்களை எனக்கு அனுப்பிவைத்தீர்கள் என்பதுதான் என் வருத்தம். (நிர்வாகிகளையும் சேர்த்து 27 பேர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்திற்கு எனக்கு எதிராக 11 பேரே பதிலளித்தனர். மற்ற 16 பேரின் கருத்துக்களை நான் நன்கறிவேன்) விஷால் அவர்கள் புதுக்கோட்டையில் பேசியதை கண்டித்து இன்று தங்கள் அறிக்கை வந்திருக்கிறது. புதுக்கோட்டையில் எழுபதுற்கும் மேற்பட்ட கலந்து கொண்ட நாடக நடிகர்களை வாக்கில்லாதவர்கள் என்று குறிப்பிடுவது தேர்தல் கவலையோடு என்பதை நான் உணர்கிறேன். ஒரு உறுப்பினர் சங்க நிர்வாகிகளின் கருத்துக்கு மாறுபட்டு செயல்பட்டால் அவரிடம் விளக்கம் கேட்டு விசாரித்து நடவடிக்கை எடுப்பதுதான் முறையென்று நான் நினைக்கிறேன். பத்திரிகை அறிக்கை மூலமாக எச்சரிப்பது புதிய அணுகுமுறையாக இருக்கிறது. (இந்த புதிய அணுகுமுறையை முன்வைத்து தங்களுக்கு எழுதிய இந்த கடிதத்தையும் பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளேன்) யார் யாரையும் பழித்தும் இழித்தும் பேசலாம். நடவடிக்கைகள் எடுக்கப்படாது ஆனால் நிர்வாகம் தன்னை காத்துக்கொள்ள அறிக்கைகள் மட்டும் விடும். ஐயா சில மாதங்களுக்கு முன் நடந்தேறிய சிறப்பு செயற்குழு கூட்டத்தில் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதே சிறப்பு கூட்டத்தில் ‘தை மாதத்திற்குள் வழக்கு முடிவுக்கு வரும் அப்படியில்லாவிட்டால் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டு எல்லோரையும் கலந்தாலோசித்து புதுக்கட்டிடம் துவங்கப்படும்" என்று செயற்குழு உறுப்பினர்களும் மற்ற நிர்வாகிகளும் கரவொலி எழுப்ப அறிவித்தீர்கள். இன்று தை கடந்து வைகாசியும் முடியப்போகிறது.

எப்போது கூடப்போகிறோம், எங்கே கலந்தாலோசிக்கப் போகிறோம். ப+ச்சி முருகன் வழக்கு தொடுத்ததால் கட்டிடம் நின்று போனதாக காலம் காலமாக சொல்லி வருகிறீர்களே தவிர அவ்வழக்கின் தன்மையை ஏன் வெளிச்சத்துக்கு கொண்டு வர மாட்டேன் என்கிறீர்கள். ‘ஒன்பது பேர் கொண்டு செயல்பட வேண்டிய அறக்கட்டளை பத்தாண்டுகளுக்கு மேலாக மற்ற ஏழு பேரை நியமிக்காமல் இருவரால் மட்டுமே செயல்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு எப்படி செல்லுபடியாகும்" என்பதுதான் வழக்கின் சாரம். அதுமட்டுமில்லாமல் ஒப்பந்தம் கையொழுத்திட்ட பின்னரே செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் ஒப்புதல் வாங்கப்பட்டிருக்கிறது. தயவு செய்து தங்களால் ளுPஐ சினிமாவோடு ஒப்பந்தம் கையெழுத்திட்ட தேதியையும் செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வாங்கப்பட்ட தேதியையும் தயவு கூர்ந்து சொல்லமுடியுமா?

ஐயா .. .. .. நடிகர் சங்கம் சார்பாக கையெழுத்திட்ட பத்திரங்களின் நகல்களை நான் பார்க்க நேரிட்டது. அதில் ஆயுட்கால அறங்காவலர்கள் என்று தங்களையும் பொதுச் செயலாளர் ராதாரவியையும் குறிப்பிட்டு கையெழுத்திட்டு இருக்கிறீர்கள். எந்தச் சூழலில், என்ன காரணத்தினால் யார் ஒப்புதல் பெற்று எந்த சட்ட விதியின் கீழ் தாங்கள் இருவரும் ஆயுட்கால அறங்காவலராக நியமிக்கப்பட்டீர்கள் என்பதற்கான சான்றுகள் உறுப்பினனாகிய எனக்கு கிடைக்குமா?

ஐயா.. .. .. சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில், ஒரு கட்டத்தில் தாங்கள் உணர்ச்சிவசப்பட்டு ‘வருங்காலத்தில் இந்த நாட்டு பிரதம மந்திரி ஆவதற்கான லட்சியத்தை வைத்திருக்கிறேன். அதற்காக பாடுபட்டு கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட நான் இச்சங்க விஷயத்தில் ஆதாயம் தேடுவேனா" என்றீர்கள். உண்மையில் என் மனம் சங்கடப்பட்டது. இதுவரை முதலமைச்சர்களை மட்டுமே சமுதாயத்திற்கு அளித்து வந்த தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு பிரதமரையும் அளிக்கச் செய்கிறது என்கிற பெருமை எனக்கும் உண்டு. ஐயா, நாங்கள் எக்காலத்திலும் உங்கள் மீது குற்றஞ்சாட்டவில்லை.. .. சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவே விழைகிறோம். எங்களை நாய் என்றழைத்துக் கொள்ளட்டும். நான் சிறிய கேசமோ அல்லது சின்ன முடியாகவோ இருந்துவிட்டுப் போகிறேன்.சங்க ஒற்றுமையை காக்க வேண்டியே மதிப்பிற்குரிய நிர்வாகிகள் பேசியதாகவே எடுத்துக் கொள்வோம். வேண்டுமென்றால் சங்க ஒற்றுமை காத்திட சங்க நாதமென கர்ஜித்த சிங்கங்கள் என பாராட்டு விழா கூட ஏற்பாடு செய்வோம். ஆனால் ஐயா, குழம்பி கிடக்கும் இக்கட்டிடப் பிரச்சினை குறித்து மட்டுமே ஒரு சிறப்பு கூட்டம் கூட்டி உள்ளும் புறமும் தெளிவாய் தெரியும் வகையில் வெள்ளையறிக்கை ஒன்றை வெளியிட்டாலே போதும் தங்கள் மீதும் மற்ற நிர்வாகிகள் மீதும் பனியென சூழ்ந்திருக்கும் சந்தேகங்கள் மறைந்துவிடும்.

வீண் பேச்சுக்கள் அறிக்கை கணைகள் எல்லாம் தேவையற்று போகும். தாங்கள் இரவும் பகலுமாய் கவலைப்படுகிற சங்க ஒற்றுமையும் பாதுகாக்கப்படும். ஐயா திரையுலகப் பிரச்சினைகளில் நம் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாய் பங்கெடுத்து தீர்வு காண்கிறது என்பதை நான் நன்கறிவேன். நிச்சயமாய் அதற்காக மன நிறைவான பாராட்டுதல்கள் உண்டு. அதே தீவிரம் சங்கப் பிரச்சினைகளிலும் சார்பற்று, பாராபட்சமற்று செயல்களில் இருக்க வேண்டுமென்பதுதான் எல்லா சங்க உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாகும். தங்களைப் போலவே சங்கத்தின் முன்னேற்றத்தையும், ஒற்றுமையையும் மனதில் வைத்து, தங்கள் உண்மையுள்ள

(ம. நாசர்)

இவ்வாறு அந்தக் கடிதத்தில் நாசர் குறிப்பிட்டுள்ளார்.

 

துடி- தீவிரவாதிகளின் கதை

சென்னை: சமீப காலங்களாக தமிழ் சினிமாவில் குடும்பப் படங்களை விட பேய்ப் படங்களும் திகில் படங்களும் அதிக அளவில் வரத் துவங்கிவிட்டன. இதனை ரசிகர்களும் ஏற்றுக் கொண்டதால் புதிதாக படம் இயக்க வரும் அறிமுக இயக்குனர்களும் வித்தியாசமான கதைகளையே கையில் எடுக்கத் துவங்கி விட்டனர் இந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள படம் துடி, ஹலோ நான் ஒன்னும் படத்தோட பாதிப் பெயர மட்டும் சொல்லல படத்தோட முழுப் பெயரே துடி தான்.

Thudi  Terrorist attack story in Tamil

படத்துல வர்றவங்க யாருக்காக துடிக்கிறாங்க அப்படிங்கிறது தான் கதை போல இருங்க இருங்க எதுக்கும் செக் பண்ணி பாத்துக்கலாம் அதாவது தமிழ்ல ஒரு பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்த கதைதான் இந்த துடி யாம். அறிமுக இயக்குனர் ரிதுன் சாகர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் இந்தப் படத்தை தைரியமா இயக்குறதோட இல்லாம படத்தோட தயாரிப்பாளாராகவும் மாறி இருக்காரு.

நிறையக் குறும்படங்கள் இயக்கிய கையோட படத்த இயக்க வந்திருக்கும் இவர் விஷுவல் கம்யூனிகேசன் முடிச்சிருக்காரு, படத்துல நடிகை அபிநயா, சுமன், பிரம்மானந்தம் இவங்களோட சூது கவ்வும் ரமேஷ் மற்றும் நளினி நடிச்சிருக்காங்க. படத்தோட கதை என்னென்னா ஒரு நட்சத்திர ஹோட்டல்ல நடக்கிற தீவிரவாதிகளின் தாக்குதல் தான் தானாம் ( லைட்டா சலீம் மாதிரி இருக்குல்ல) மாலை 6 மணிக்குத் தொடங்கி காலை 6 மணி வரை நடக்கிற விசயங்கள் தான் கதையாம்.

டைட்டில்க்கு ஏத்த மாதிரி படம் " துடி" ப்பா வந்தா சரி...


 

சிவகார்த்திகேயனுடன் நெருக்கமா? - மறுக்கிறார் அஞ்சலி

சிவகார்த்திகேயனுடன் காதல் வயப்பட்டுள்ளதாக வரும் செய்திகளை மறுத்துள்ளார் நடிகை அஞ்சலி.

சிவகார்த்திகேயனும் அஞ்சலியும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த சில நாட்களாக ஒன்றாக தங்கி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்பி படமும் இணையத்தில் உலா வருகிறது.

Anjali denies affair with Sivakarthikeyan

ஏற்கெனவே திருமணம் ஆனவர் சிவகார்த்திகேயன். அஞ்சலி ஏற்கெனவே சித்தியுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியவர்.

சிவகார்த்திகேயன் இப்போது பாக்ஸ் ஆபீசில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அஞ்சலி சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில்தான் இருவருக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்திகளை அஞ்சலியின் மேனேஜர் மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், "அஞ்சலி சமீபத்தில் சென்னைக்கு வரவே இல்லை. படப்பிடிப்புகளில் பங்கேற்பதோடு சரி. சிவகார்த்திகேயனை சமீபத்தில் அவர் சந்திக்கவே இல்லை. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடிகர்- நடிகைகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் பங்கேற்றார்கள். அப்போதுதான் இருவரும் சந்தித்தார்கள். சிவகார்த்திகேயனையும், அஞ்சலியையும் இணைத்து வெளியான செய்தியில் உண்மை இல்லை. தவறானவை,'' என்றார்.

ஆனால் சிவகார்த்திகேயன் இதுகுறித்து எதுவும் கூறவில்லை.

 

டெர்மினேட்டர் 5 - மீண்டு(ம்) வருகிறார் அர்னால்ட்

லாஸ் ஏஞ்செல்ஸ்: ஹாலிவுட் படங்களில் ஏதாவது ஒருபடம் வெற்றியடைந்து விட்டால் போதும் உடனே ரீபூட் முறையைப் பயன்படுத்தி அடுத்தடுத்த பாகங்களை எடுக்கத் தொடங்கி விடுவார்கள். அதென்ன ரீபூட் எனக் கேட்கிறீர்களா ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அதன் கதைக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு அடுத்தடுத்த பாகங்களை உருவாகுவது.

ஹாலிவுட்டில் ஏற்கனவே ஹல்க், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் இந்த வரிசையில் டெர்மினேட்டர் படங்களும் இணைந்துவிட்டன. எல்லாப் படங்களிலும் கதை ஒரே மாதிரித்தான் இருக்கும் திரைக்கதை, நடிகர், நடிகைகள் மற்றும் காட்சிகள் போன்றவை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி இருப்பார்கள். டெர்மினேட்டர் படங்கள் இதுவரை 4 பாகங்கள் வெளிவந்து முறையே வெற்றிபெற்றுவிட்டதால் தற்போது 5 வது பாகத்தை மீண்டும் ஆக்க்ஷன் நடிகர் அர்னால்டை வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Arnold Schwarzenegger and Terminator Genisys: he's back, again

டெர்மினேட்டர் முதல் பாகம் 1984 ல் வெளிவந்து வெற்றி பெற்றது, தொடர்ந்து இந்த 30 வருடங்களில் இதுவரை ஜட்ஜ்மென்ட் டே , ரைஸ் ஆப் தி மெசின் மற்றும் டெர்மினேட்டர் 4 சால்வேசன் ஆகிய மூன்று டெர்மினேட்டர் சீரீஸ் படங்கள் வந்து வசூலில் குறைவைக்காமல் ஓடியதால் தற்போது இந்த வருடம் அதன் 5 ம் பாகமான டெர்மினேட்டர் ஜெனிசிஸ் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.

அர்னால்ட்

ஹாலிவுட் நடிகர் அர்னால்டைப் பற்றி நமது தாய்த்திரு தமிழ்நாட்டில் அறியாதவர்கள் குறைவே நேற்று முளைத்த பொடிசுகள் முதல் பிரபல நடிகர்கள் வரை அர்னால்டை தங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளாதவர்கள் இங்கு குறைவுதான் நீங்கள் எந்த ஜிம்மிற்கு சென்றாலும் அங்கு அர்னால்டின் புகைப் படத்தைதான் முதலில் ஒட்டியிருப்பார்கள். அவரை மாதிரி உடற்கட்டு வேண்டும் என்று தினசரி உடற்பயிற்சியில் தங்களை வருத்திக் கொல்லும் இளைஞர்களை நீங்கள் எங்கெங்கு சென்றாலும் காணலாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அர்னால்ட் டெர்மினேட்டர் படங்களின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றவர் அந்தக் கதையை இவரை மனதில் வைத்தே எழுதி இருப்பார்கள் போல.

டெர்மினேட்டர் படங்களின் கதை என்ன

இயந்திரங்களிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றுவது தான் டெர்மினேட்டர் படங்களின் கதை இதைக் காலத்திற்கு தகுந்தவாறு மாற்றி இயந்திரங்களில் நல்ல இயந்திரம் கெட்ட இயந்திரம் மற்றும் எதிர்கால உலகில் இயந்திரங்களின் பங்கு எப்படி இருக்கும் போன்றவற்றை கொஞ்சம் மசாலா கலந்து அழகிய படமாக மாற்றி நம்மை யோசிக்க விடாமல் செய்து படத்தைப் பார்க்க வைப்பதில் அடங்கியிருக்கிறது படத்தை தொடர்ந்து இயக்கிவரும் இயக்குனர்களின் மூளை.

டெர்மினேட்டர்

டெர்மினேட்டர் படத்தின் முதல் பாகம் அக்டோபர் மாதம் 1984ம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் வெளிவந்தது, அர்னால்டுடன் மைகேல் பீன், லிண்டா ஹாமில்டன் மற்றும் பால் வின்பீல்ட் நடித்து இருந்த இந்தப் படத்தை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருந்தார். கதை 2029 ல் நடகிறது அப்போது இந்த உலகத்தை இயந்திரங்கள் ஆளுகின்றன 1984ம் வருடம் ஒரு மனிதக் குழந்தை பிறக்க இருக்கிறது அந்தக் குழந்தை பிறந்தால் ஆபத்து என்பதால் ஒரு இயந்திரத்தை அனுப்பி (அர்னால்ட்) அந்தக் குழந்தையின் தாயைக் கொல்ல சொல்லுகின்றன இயந்திரங்கள். அதே நேரம் மனிதர்களும் கைல் ரீஸ் என்னும் ஒரு மனிதரை அனுப்பி அந்தக் குழந்தையை காப்பாற்ற சொல்கின்றனர், கைல் ரீஸ் இயந்திர மனிதரிடம் இருந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினாரா என்பது தான் படத்தின் கதை. 6.4 மில்லியன் செலவில் எடுக்கப் பட்டு 78.4 மில்லியன்களை வசூலித்து சாதனை புரிந்தது படம்.

டெர்மினேட்டர் 2 தி ஜட்ஜ்மென்ட் டே

டெர்மினேட்டர் படத்தின் இரண்டாம் பாகமான தி ஜட்ஜ்மென்ட் டே சுமார் ஏழு வருடங்கள் கழித்து வெளிவந்தது, ஒருசில நடிகர்கள் மட்டும் படத்தில் மாறியிருந்தனர் படத்தின் கதை இதுதான் மனிதர்கள் வாழும் இந்தப் பூமியில் இரண்டு வகையான இயந்திரங்கள் தோன்றுகின்றன, ஒன்று நல்ல இயந்திரம் மற்றொன்று நல்ல மனிதர்களை அழிக்கத் துடிக்கும் கெட்ட இயந்திரம். நல்ல இயந்திரமாக வரும் அர்னால்ட் கெட்ட இயந்திரத்திடம் இருந்து மனிதர்களைக் காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் கிளைமாக்ஸ். படம் ஏழு வருடங்கள் கழித்து வந்ததினாலோ என்னவோ பேய் ஓட்டம் ஓடி வசூலை வாரிக் குவித்தது 100 மில்லியன் செலவில் எடுக்கப் பட்ட இந்தப் படம் சுமார் 520 மில்லியன் டாலர்களை வசூலித்தது.

டெர்மினேட்டர் 3 ரைஸ் ஆப் தி மெசின்ஸ்

1997 ல் நிறுத்தப் பட்ட ஜட்ஜ்மென்ட் டே நிறைவேற்றப் படுகிறது இந்தப் பாகத்தில் 2004 ல் முதல் பாகத்தில் பார்த்த அந்தக் குழந்தை பிறந்து தற்போது இளைஞனாக மாறி விடுகிறான் (ஜான் கானர் ) அவனது அம்மா இறந்து விடுகிறார். இயந்திரங்களுக்குப் பயந்து தலைமறைவு வாழக்கை வாழும் ஜானை கொள்ள ஒரு அழகான இயந்திரத்தை பெண்ணாக மாற்றி அனுப்புகிறது ஸ்கைநெட் குழு. அந்த இளைஞனக் காப்பாற்றும் நல்ல இயந்திரமாக அர்னால்ட். இருவருக்கும் இடையேயான சண்டையில் ஜானைக் காப்பாற்றப் போராடும் அர்னால்ட் அந்தப் போராட்டத்தில் வென்றாரா இல்லையா என்பதுதான் கதை. அதிரடியான ஆக்சன்களுடன்2003ல் வெளிவந்த இந்தப் படம் 188 மில்லியன் செலவில் எடுக்கப் பட்டு 433 மில்லியன் வசூலைக் குவித்தது. ஒரே ஒரு மாற்றமாக இந்தப் படத்தின் இயக்குனராக ஜோனாதன் மாஸ்டோ படத்தை இயக்கியிருந்தார்.

டெர்மினேட்டர் 4 சால்வேசன்

டெர்மினேட்டர் படங்கள் என்றாலே அர்னால்ட் தான் ஹீரோ என்னும் மக்களின் நம்பிக்கையை உடைத்தெறிந்து 2009ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அதன் விளைவை படத்தின் வசூலில் தெரிந்து கொண்டது. படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் எம்சிஜி, இந்தக் கதை கொஞ்சம் குழப்பமானது தான் இந்த முறை ஜான் கானர் ஸ்கைநெட்டுடன் போராட நட்சத்திரமாக மாறிவிடுகிறான், அத்துடன் ஒரு போரை ஸ்கைநெட்டுடன் அரங்கேற்றி வெற்றி பெறுகிறான், ஆனால் கதையில் ஒரு ட்விஸ்ட் இந்த முறை ஜான் கானரை அழிப்பதற்குப் பதிலாக அவனுடைய அப்பாவை (முதல் பாகத்தில் ஒரு மனிதன் வந்து அந்தக் குழந்தையை காப்பாற்றுவாரே) அழிக்க ஒரு இயந்திரத்தை அனுப்புகிறது ஸ்கைநெட். ஆனால் அந்த இயந்திரம் தன்னை மனிதன் என்று நம்பிக் கொண்டு ஜானுடன் சேர்ந்து பணிபுரியும் ஒரு கட்டத்தில் போரினால் ஜான் இறந்து போகும் சூழல் ஏற்பட தனது இதயத்தை ஜானுக்கு கொடுத்து பார்ப்பவர்களின் கண்ணில் நீரை வரவழைத்து இறந்து விடும் அந்த இயந்திரம். கதையை படிக்க முடியல தானே அர்னால்ட் இல்லாத குறை படத்துல பெரிசா தெரிஞ்சிடக் கூடாதுன்னு இந்த மாதிரி கதையைச் சொதப்பி இருந்தாங்க. படத்தோட வசூல் என்னவோ சும்மார் தான் 200 மில்லியன் செலவில எடுத்த இந்தப் படம்  71 மில்லியனோட வசூல முடிச்சிக்கிருச்சி.

டெர்மினேட்டர் ஜெனிசிஸ்

மீண்டும் நம்ம அர்னால்டைக் கொண்டுவந்து விட்டார்கள் படத்தில் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது படம் மூன்ற பாகங்களாக எடுக்கப் படுகிறது என்றும் முதல் பாகம் 2016 இரண்டாம் பாகம் 2017 மூன்றாம் பாகம் 2018 லும் வெளியாக இருக்கிறதாம் மூன்றிலும் அர்னால்ட் தான் ஹீரோ மூன்று பாகங்களையும் இயக்குபவர் இயக்குனர் ஆலன் டெய்லர், கிட்டத்தட்ட சுமார் 520 கோடியில் மூன்று பாகங்களும் வெளிவர இருக்கிறது. டிரைலர் வெளியான சிலமணி நேரங்களுக்குள்ளேயே 30 லட்சம் பேர் டிரைலரைக் கண்டு களித்திருக்கிறார்கள், அர்னால்டின் ஆதிக்கம் இந்தப் படத்தில் மிகவும் கம்மியாக உள்ளதாக டிரைலரைப் பார்த்தவர்கள் கருத்துக் கூறியிருக்கிறார்கள். அடுத்த மாதம் ஜூன் 25 அன்று வெளியாகும் இந்தப் படத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது, எதிர்பார்ப்பைப் படம் பூர்த்தி செய்யுமா பார்க்கலாம்.

ஒரு மெஷின வச்சே படத்த இன்னும் எத்தன காலத்துக்குத் தான் ஓட்டுவீங்க...

 

கே பாலச்சந்தர் பெயரில் திரையரங்கம்.. இயக்குநர் சங்கத்தில் திறப்பு

தமிழ் நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் கே பாலச்சந்தர் பெயரில் திரையரங்கம் இன்று திறக்கப்பட்டது.

உதவி இயக்குநர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய குறும்படங்களை திரையிடுவதற்காகவும், கிரீன் மேட் மற்றும் போட்டோ சூட் செய்வதற்கும் இயக்குநர்கள் சங்க கட்டிடத்தில் மினி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

New theater in the name of K Balachander

இந்த திரையரங்கிற்கு இயக்குநர் பாலச்சந்தரின் நினைவாக 'இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அரங்கம்' என்று பெயர் சூட்டப் பட்டு. இயக்குனர் பாரதிராஜாவால் இன்று திறக்கப்பட்டது.

நாற்பது உதவி இயக்குநர்கள் குறும்படங்களை இயக்கி உள்ளார்கள். அதில் இரண்டு குறும்படங்கள் இன்று திரையிடப்பட்டன. இரண்டு படங்களும் சிறந்த படங்கள் என்று அவற்றின் இயக்குநர்களை பாரதிராஜா பாராட்டினார்.

New theater in the name of K Balachander

'பாலசந்தர் தமிழ் திரையுலகில் பல வெற்றிகளைக் கண்டவர். பல சாதனைகளைப் பதிவு செய்தவர். அவரைப் போலவே இளம் இயக்குநர்களும், நாளைய இயக்குநர்களும் தங்களது சாதனைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை' என்றார் பாரதிராஜா.

விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பி .வாசு,கே. பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு குறும்படங்களை இயக்கிய உதவி இயக்குநர்களை பாராட்டிப் பேசினார்கள்.

New theater in the name of K Balachander

சங்கத்தின் தமிழ் வெள்ளித் திரை என்ற இணையதளத்தை கே.பாக்யராஜ் துவைக்கி வைத்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைபுலி. எஸ்.தாணு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலச்சந்தர், பாரதிராஜா இருவரை பற்றிய குறும்படங்களை துவைக்கி வைத்தார்.

சங்கத்தின் தலைவர் விக்ரமன் எல்லோரையும் வரவேற்றுப் பேசினார்.

 

துடி... காலை 6 முதல் மாலை 6 மணிக்குள் நடக்கும் விறுவிறு சம்பவங்கள்!

மைன்டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக ரிதுன் சாகர், ஜி.லஷ்மி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் துடி.

இந்த படத்தில் அபிநயா நாயகியாக நடிக்கிறார். சுமன், பிரமானந்தம், சூது கவ்வும் ரமேஷ், நளினி நடிக்கின்றனர். படத்தின் இன்னொரு நாயகியாக பிரேர்னா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்கிறார்.

Thudi, a new thriller on terrorist attack

கமலா தியேட்டரின் அதிபர் சிதம்பரத்தின் மகன் கணேஷ் அமைச்சர் வேடத்தில் நடிக்கிறார்.

நடாஷா ஆதித்யா இசையமைக்கிறார். ரிதுன் சாகர் எழுதி இயக்குகிறார். இவர் யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. விஷுவல் படித்து விட்டு நிறைய குறும்படங்கள் இயக்கி, அந்த அனுபவத்தைக் கொண்டு இந்த துடியை உருவாக்கியுள்ளார்.

Thudi, a new thriller on terrorist attack

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்...

ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடக்கும் டெரரிஸ்ட் அட்டாக் தான் கதை. மாலை 6 மணிக்கு துவங்கி காலை 6 மணிக்குள் நடக்கும் சம்பவங்களைத் திரைக்கதையாக்கியிருக்கிறோம். இந்த 12 மணி நேரத்தில் ஏற்படும் மிஸ் கம்யூனிகேசன்தான் கதையின் மையக் கரு.

Thudi, a new thriller on terrorist attack

ஹோட்டல் ரிசப்சனிஸ்ட் ஆக அபிநயா நடிக்கிறார். படம் ஆரம்பித்தவுடன் முடியும் வரை ரசிகர்களை சீட் நுனியில் அமர் வைக்கும் மன நிலையில் இருக்க வைக்கும் இந்தக் கதை. இதற்காக சென்னையில் பைவ் ஸ்டார் ஹோட்டலில் இண்டீரியர் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

சென்னை, ஹைதராபாத், மூணார் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறோம்," என்றார் ரிதுன் சாகர்.

 

படுக்கையில் கிடந்த வினு சக்கரவர்த்தியை நடக்க வைத்த அபூர்வ மகான்!

சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து அபூர்வ மகான் என்ற படம் உருவாகிறது. இதில் சாய்பாபாவாக நடிக்கிறார் தலைவாசல் விஜய்.

டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டிஎன்எஸ் செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகிறது இந்தப் படம்.

Aboorva Mahan based on Shirdi Saibaba

இளம் நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடிக்கிறார்கள். சுமன், பவர்ஸ்டார், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், பிரேம்குமார், அஜெய்ரத்னம், பாண்டு, சிசர் மனோகர், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன், அவன் இவன் ராமராஜன், நெல்லை சிவா, போண்டா மணி, ஜோதி முருகன், விஜய் கணேஷ் ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வினுசக்கரவர்த்தி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வி தஷி இசையமைக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.ஆர்.மணிமுத்து.

படம் குறித்து மணிமுத்து கூறுகையில், "சீரடி பாபாவின் அபூர்வ செயல்களை பற்றி நிறைய பேர் நிறைய சம்பவங்களை சொல்வார்கள். அவர் வாழ்கையையும், இன்றைய காலகட்டத்தையும் இணைத்து கதை உருவாக்கப் பட்டுள்ளது.

படத்தை பார்க்கிற யாருமே உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியாது. ஒரு கதாப்பாத்திரத்திற்காக வினு சக்கரவர்த்தியைப் பார்க்க போனோம். அவரால் நடக்கவே முடியாது எப்படி நடிக்க வைப்பீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். நான் போனபோது அவர் படுக்கையில் படுத்திருந்தார். நான் கதாப்பாத்திரத்தைச் சொல்லி விட்டு, பாபா உங்களுக்கு நல்லதே செய்வார் என கூறிவிட்டு வந்தேன்.

சில நாட்கள் கழித்து அவரே போன் செய்து படப்பிடிப்பு தேதியையும், இடத்தையும் கேட்டார். சொன்னேன் அந்த தேதியில் அவரே காரை விட்டு இறங்கி நடந்து வந்து நடித்துக் கொடுத்தார். டப்பிங்கும் அவரே பேசினார். நடக்கவே முடியாதவர் பாபாவின் ஆசியால் நடித்தது அபூர்வம்தானே. அதுமட்டுமல்ல, நடித்ததற்காக பணம் எதுவுமே வாங்கவில்லை அவர். நிஜமாய் நடந்த அந்த சம்பவம் எங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தித் தந்தது," என்றார்.

 

விக்ரம் - கவுதம் மேனன் படம் கைவிடப்பட்டது!

விக்ரமை வைத்து கவுதம் மேனன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட படம் கைவிடப்பட்டது.

என்னை அறிந்தால் படம் வெளியானதும், கவுதம் மேனனும் விக்ரமும் ஒரு புதிய படத்தில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனை இயக்குநர் கவுதம் மேனனும் ஒப்புக் கொண்டார்.

அய்ங்கரன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கப் போவதாகக் கூறப்பட்டது.

Vikram - Goutham Menon project dropped

ஆனால் அரிமா நம்பி படம் தந்த ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விக்ரம் ஒப்புக் கொண்டிருந்தார். இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பதாக இருந்தது.

இப்போது அந்தப் படத்தை அய்ங்கரன் நிறுவனத்துக்கு கைமாற்றிவிட்டார் தாணு.

இதனைத் தொடர்ந்து, கவுதம் மேனன் - விக்ரம் படத்தை தயாரிப்பதை கைவிட்டுள்ளது அய்ங்கரன் நிறுவனம். மேலும் இளம் இயக்குநர்களிடம் தொடர்ந்து கதை கேட்டு வரும் விக்ரமுக்கு, கவுதம் மேனன் சொன்ன கதையில் அவ்வளவு உடன்பாடு இல்லையாம்.

இப்போதைக்கு ஆனந்த் சங்கர் படம் மற்றும் இளம் இயக்குநர் ஒருவரின் படங்களில் மட்டுமே நடிக்கிறாராம். விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள படம் நடித்து வரும் விக்ரம், மீண்டும் அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் சம்மதித்துள்ளாராம்.

 

ஜிகர்தண்டா படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய இடைக்கால தடை

சென்னை: வரும் ஜூன் இரண்டாம் வாரம் வரை கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா படத்தின் பிற மொழி உரிமைகளை விற்கவோ, ரீமேக் செய்யவே சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

Interim stay to remake Jigarthanda in any language

'ஜிகர்தண்டா 'திரைப்படத்தின் இந்தி மொழிமாற்று உரிமையையொட்டி எழும் பிரச்சினையை உங்கள் முன் கொண்டுவருகிறேன்.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்தி மொழிமாற்று உரிமத்தில் 40 சதவீதத்தை எனக்கு தரவேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், சமீபத்தில் கதிரேசன் எனக்கு தெரியாமல் இந்த திரைப்படத்தின் உரிமையை விற்க முயல்வதாக அறிந்தேன்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தில் இந்தப் பிரச்சினையை பதிவு செய்தேன். மேலும், இந்த பிரச்சினையை நான்கு சுவற்றுக்குள் முடிக்க, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால், கதிரேசனின் ஒத்துழையாமையால் சுமூக முடிவுக்கு வர முடியாமல் போனது. பின்னர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் ஆலோசனையோடு, வேறு வழியில்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தேன்.

தற்போது சென்னை உயர் நீதிமன்றம் 'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் மொழிமாற்று உரிமத்தை விற்பதற்குத் தடை விதித்துள்ளது.''

கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கிய, சித்தார்த், லட்சுமி மேனன் நடித்த, பல கோடி வசூல் செய்த 'ஜிகர்தண்டா' திரைப்படத்தை சமீபத்தில் இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக அறிவிப்பு வந்த நிலையில் இந்தத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இந்த தடை 11, ஜூன் 2015 வரை, பைவ் ஸ்டார் திரைப்பட நிறுவன உரிமையாளர் கதிரேசன் மீது கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த ஒப்பந்த மீறல் மற்றும் பதிப்புரிமை மீறல் புகாரின் பேரில் விதிக்கப்பட்டுள்ளது.

பணம் கொடுக்கல் விதி மற்றும் ஒப்பந்த மீறல் காரணமாக விளையக்கூடிய பதிப்புரிமை மீறலின் மேல் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், நீதிபதி ர.மாதவன் இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

என்னது அனுஷ்கா சர்மாவை ஏமாத்திட்டாங்களா

மும்பை: பாம்பே வெல்வெட் படத்தில உயிரக் கொடுத்து நடிச்ச நம்ம அனுஷ்காவுக்கு பேசினபடி பணம் இன்னும் கொடுக்கலையாம், படத்துல நடிக்கிறதுக்காக கொஞ்சம் அட்வான்ஸ் மட்டும் கொடுத்ததோட அதுக்கு அப்புறம் பணத்தைப் பத்தி மூச்சே விடலையாம் படக்குழு , ஆனா படத்தோட ஹீரோ ரன்பீருக்கு மட்டும் பேசின தொகையில ஒரு பைசா மிச்சம் வைக்காம செட்டில் பண்ணியிருக்காங்க.

Is Anushka Sharma not yet paid for ‘Bombay Velvet’?

பாலிவுட்டின் பிரபலமான இயக்குனர் அனுராக் காஷ்யப் படம்னு பொண்ணு உயிரைக் கொடுத்து நடிச்சது, அனுராக் கூட ஒரு பேட்டியில நான் பார்த்ததிலே அனுஷ்கா ஒரு மாதிரி ஒரு ஹீரோயின்ன பார்த்ததே இல்ல, பொண்ணு இந்தப் படத்துக்காக ஒரு நாளைக்கு பல கிலோ எடையுள்ள உடைகளை சுமந்து கிட்டு நடிச்சுக் கொடுத்தாங்க நான் பார்த்ததிலே அனுஷ்காவை தான் நல்ல உழைப்பாளி என்பேன்னு பாட்டு மட்டும் தான் பாடல அந்த அளவுக்கு மனுஷன் புகழ்ந்து தள்ளியிருந்தாரு. ஆனா இப்போ சார் எங்க இருக்காரு தெரியுமா பாரிஸ்ல கோடை சுற்றுலாவ குடும்பத்தோட என்ஜாய் பண்ணிட்டு இருக்காரு.

பாம்பே வெல்வெட் படத்த எல்லாரும் ஆர்வமா எதிர்பார்த்தாங்க ஆனா 110 கோடியில பாண்டம் பிலிம்ஸ் தயாரிச்ச இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ்ல பயங்கரமா சொதப்பிடுச்சு படம் இதுவரைக்கும் வசூலிச்ச மொத்த பணமே 22.7 கோடி தான், இதனால பயங்கரமா நொந்து போன ப்ரோடியுசெர்ஸ் இந்தப் படத்தில நடிச்சவங்களுக்கு மட்டும் இல்லாம மத்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பணம் கொடுக்காம இருக்காங்க. நீங்க யாருக்கு வேணாலும் பணம் கொடுக்காம இருக்கலாம் ஆனா படத்துக்கு தன்னோட உழைப்பைக் கொடுத்து முழுமூச்சா நடிச்சுக் கொடுத்த அனுஷ்காவுக்கு இப்படி பண்ணலாமா?

நீங்க பேசாம விராட் கோலியக் கூப்பிட்டு வந்து நியாயம் கேளுங்க அனுஷ்கா...

 

உண்மைக்குப் புறம்பாகப் பேச வேண்டாம்! - விஷாலுக்கு சரத்குமார் எச்சரிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர் பாக நடிகர் விஷால் தவறான கருத்துகளை தெரிவித்து வருவ தாக ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

Sarath Kumar's warning to actor Vishal

தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டுவது குறித்து நடிகர் விஷால் ஊடகங்களுக்கு பல்வேறு தவறான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். புதுக்கோட்டையிலும் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது குறித்து சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழுவில் முடிவெடுத்தப்படி கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து சிலருக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நடிகர் விஷால் மற்றும் சிலரை சிறப்பு செயற்குழுவிற்கு வரவழைத்து அவர்களுக்கும் தேவையான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. கட்டிட பணிகள் தொடங்காததற்கு காரணம் பூச்சி முருகன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குத்தான் என்பதை விஷால் உள்பட அனைத்து உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள்.

சங்கக் கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று எங்களை போலவே ஆர்வமுடன் இருக்கும் விஷாலின் எண்ணத்தை வரவேற்கிறேன். கலைத்துறையின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் நடிகர் சங்கம் எத்தகைய ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறது என்பதை தமிழ் திரைப்படத்துறை நன்கு அறியும்.

தமிழ் திரையுலகில் ஏற்படும் பிரச்சினைகளை அவ்வப்போது தீர்ப்பதற்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்சி போன்ற அமைப்புகள் உடனுக்குடன் கலந்துபேசி ஒன்றுபட்ட முடிவுகளை எடுத்து வருவதையும் அனைவரும் அறிவார்கள். கொம்பன், லிங்கா, உத்தமவில்லன் உட்பட பல்வேறு திரைப்படங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடிகர் சங்கம் முழுமனதுடன் பாடுபட்டது அனைவருக்கும் தெரியும்.

தலைவரை எதிர்க்கவில்லை, ஆனால் சங்கக்கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று அடிக்கடி விஷால் தெரிவித்து வருகிறார். கட்டிடம் கட்ட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கலாம். ஆனால் அது எங்கள் லட்சியம். கட்டிடம் கட்ட போட்ட ஒப்பந்தத்தை அந்த பொதுக்குழுவில் கைதட்டி வரவேற்றவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வழக்குப் போடுகிறார்கள்.

அவர்களுடன் இணைந்து விஷால் செயல்படுகிறார். இது எந்தவகையில் நியாயம்? நேற்று முன்தினம் புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்துக்கு பூச்சிமுருகனை அழைத்து சென்ற விஷாலை, தலைவர் எஸ்.எம்.இசையரசன், செயலாளர் எம்.பி.சுப்பிரமணியன், பொருளாளர் டி.வி.ராஜேந்திரன் சங்க நிர்வாகிகள் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போட உரிமை பெற்ற புதுக்கோட்டை உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

நடிகர் சங்கத்தில் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது போல, அவ்வப்போது பேட்டி கொடுத்துக்கொண்டு உண்மைக்கு புறம்பாக பேசிவருவது வேதனை அளிக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒற்றுமையை உறுதிப்படுத்த இனியாவது விஷால் இத்தகைய செயல்களில் மீண்டும் ஈடுபட வேண்டாம் என்று நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

 

மாசு படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுப்பு.. காசியில் 8 மணி காட்சி ரத்து!

சூர்யா நடிப்பில் மாசு என்கிற மாசிலாமணி படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.

வெங்கட்பிரபு-சூர்யா கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த படத்தில் முதல்நாள் முதல் காட்சிக்காக அனுமதி கேட்டிருந்தனர்.

No special shows for Massu

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் ரசிகர்களுக்காக அப்படத்தை நள்ளிரவிலிருந்தே திரையிடுவது வழக்கம். சமீபத்தில் வெளிவந்த ரஜினியின் லிங்காவுக்கு நள்ளிரவு 12 மணி, அதிகாலை 1 மணி மற்றும் 2 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடந்தன.

விக்ரமின் ஐ, அஜித்தின் என்னை அறிந்தால் போன்ற படங்களுக்கு காலை 4 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், சூர்யாவின் மாஸ் படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. சென்னையில் காலை 8 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை காசி தியேட்டரில் மாசு படத்தின் சிறப்புக் காட்சிக்கு ரசிகர்கள் குறைவாக வந்ததால், ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

ஆட்டோ ஜானி இன்னொரு பாட்ஷாவா அலறும் ஆந்திரா

ஹைதராபாத்: இன்னைக்கு நம்ம மெகா ஸ்டார் சிரஞ்சீவி பத்தி எதுவுமே விஷயம் இல்லன்னு சொல்லிட்டு இருக்கும்போதே அடுத்த ஒரு திரிய கிள்ளிப் போட்டு அதில குளிர்காய அரம்பிசிட்டங்க நம்ம மெகா ஸ்டார் ரசிகர்கள், விஷயம் இதுதான் சிரஞ்சீவியோட 150 வது படத்துல நம்ம தலைவர் ஆட்டோ ஜானியா வாரார் இது பத்தாதா அவரப் பத்தி பக்கம்பக்கமா எழுதற அளவுக்கு அந்தப் படத்தோட கதை இதுதான்னு ஆளாளுக்கு ஒரு கதைய சொல்றாங்க.

Chiranjeevi’s auto jaani another  baasha  movie

நம்ம ரஜினி சார் பாட்ஷா படத்தில ஆட்டோ டிரைவரா வருவார் ஆனா பிளாஷ்பேக்ல ஒரு டானா வருவார், அதே மாதிரி மெகா ஸ்டாரும் டானா நடிக்கிறாருன்னு யாரோ ஒருத்தர் சொல்லிட்டுப் போக அட உண்மையிலே அப்படித் தான்னு சொல்றாங்க. படத்தோட டைட்டில் சிரஞ்சீவியோட காஸ்ட்யூம் எல்லாமே பாட்ஷா மாதிரி இருக்கே இது நிஜமாவே பாட்ஷா பட ரீமேக்கான்னு நெட்டில கும்மியடிக்குது இன்னொரு குரூப்.

நீண்ட நாள் கழிச்சு நம்ம தலைவரு நடிக்க வராரு ரீமேக் படத்துல நடிச்சு நம்மள ஏமாத்திடுவாரோன்னு அவரது ரசிகர்கள் பயந்து போய் இருக்காங்க, பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் படம் அப்படில்லாம் ஆண்டவன் நம்மளக் கைவிட்டுட மாட்டாருன்னு இன்னொரு பக்கம் அவரது ரசிகர்கள் கடவுள வேண்டிட்டு இருக்காங்க.கதை இதுதான்னு முறைப்படி இயக்குனர் சொல்ற வரைக்கும் ஆளாளுக்கு ஒரு கதைய சொல்லிட்டு திரிய வேண்டியதுதான்.

இவங்க சொல்ற கதைய வச்சி இன்னும் 10 பத்து படம் எடுக்கலாம் போல..

 

ஜான் நாஷ் மரணத்தைத் தாளாமல் பதறிக் கதறியவர்கள்

லாஸ் ஏஞ்செல்ஸ்: எ பியூட்டிபுல் மைன்ட் படத்தின் இன்ஸ்பிரேசன் ஆக விளங்கிய அமெரிக்கக் கணித மேதை ஜான் நாஷ் தனது மனைவி அலிசியாவுடன் கடந்த வாரம் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். 86 வயதான ஜான் நாஷ் தனது மனைவி அலிசியாவை (82) மரணத்திலும் விட்டுப் பிரியவில்லையே என்று அனைவரும் ஆச்சரியப் பட்டனர். இந்த மேதையின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து உலகெங்கும் பலபேர் வருத்தம் தெரிவித்து இருக்கின்றனர். அவற்றில் சில முக்கியமான ட்விட்டர் பதிவுகளை இங்கு பார்க்கலாம்.

RIP 'beautiful minds': Russell Crowe mourns the death of John and Alicia Nash

இறப்பிலும் ஒரு சுவாரசியம் என்னவென்றால் தனது மனைவியையும் சேர்த்து தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார் என்பதுதான். தனது மனைவி அலிசியாவை திருமணம் செய்த சிறிது வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சுமார் 37 வருடங்கள் கழித்து மீண்டும் அவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் ஜான் நாஷ். இருவருமே சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை எனவே இந்த மோசமான விபத்தில் இருந்து இருவரையும் உயிருடன் மீட்க முடியவில்லை என்று அமெரிக்காவின் காவல்துறை அதிகாரி பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

எ பியுட்டிபுல் மைன்ட் படத்தில் ஜான் நாஷ் பாத்திரத்தில் நடித்து இருந்தவர் ரஸில் க்ரோ நியூசிலாந்த்தைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகரான ரஸில் க்ரோ ஜான் நாஷ் மற்றும் அவரோட மனைவி அலிசியாவோட மரணத்தை தன்னால தாங்கிக்கொள்ள முடியல என்னோட இதயம் துடிக்கிறத நிறுத்திட்டு வெளில போன மாதிரி இருக்கு இறப்பிலும் பிரிவில்லைன்னு நிரூபிச்சிட்டாங்க ஜான் நாஷ் மற்றும் அலிசியா தம்பதி அப்படினு சமூக வலைதளத்தில ரொம்பவே கதறி இருக்காரு.

எ பியுட்டிபுல் மைன்ட் படத்தோட இயக்குனர் ரோன் ஹாவர்ட் ( இந்தப் படத்துக்காக சிறந்த இயக்குனர் விருது வாங்கியிருக்காரு) நோபல்பரிசு வாங்கிய ஒரு மனிதர் இறந்து விட்டார், படத்தின் கதை அந்தத் தம்பதிகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.

நமது பிரதமர் மோடி அவர்களும் ஜான் நாஷ் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில பின்வருமாறு சொல்லியிருக்காரு கணிதத்திற்கு நீண்ட காலம் பணியாற்றிய ஒரு அறிவுஜீவி இறந்துவிட்டார் எனினும் அவர் ஆற்றிய தொண்டுகளின் மூலம் மக்களின் மனதில் அவர் என்றென்றும் நினைவில் இருப்பார் என்று கூறியிருக்கிறார்.

காலத்தால் அழியாத கணித மேதை ஜான் நாஷ்...

 

இன்டெர்நெட்டில் வெளியாகிய “மாசு” திரைப்படம் – அதிர்ச்சியில் படக்குழு

சென்னை: சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் "மாசு என்கிற மாசிலாமணிa". இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் இன்றுதான் இந்தியாவில் வெளியாகிறது. இருப்பினும், வெளிநாடுகளில் இப்படம் நேற்றே திரையிடப்பட்டது. இந்நிலையில் "மாசு" முழுப்படத்தையும் திருட்டுத்தனமாக சிலர் இணைய தளத்தில் உலாவ விட்டுள்ளனர்.

MASU film illegally released in Online before official release

தியேட்டரில் இருந்து படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையதளத்தில் உலாவ விட்டுள்ளனர்.

இந்தியாவில் வெளியாவதற்கு முன்பாகவே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துள்ளது குறித்து மாசு படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, அந்த இணையதளங்களை முடக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

நானும் ரெடி… நானும் ரெடி… தயாரான மந்திரம்!

அந்தமாதிரி விசயங்களை கூச்சப்படாமல் பேசி வாசகர்களைக் கவர்ந்தவர் அந்த தொகுப்பாளின். சமையலில் மந்திரம் செய்த அவருக்கு பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பது என்றால் பாயாசம் சாப்பிடுவது போல. தயக்கமே இல்லாமல் பதில் சொல்லுவார். இவரது பேச்சுக்கும், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர்களே இருக்கிறார்களாம். இது ஒருவிதமான மருத்துவ நிகழ்ச்சி என்று கூறும் மந்திரத்திற்கு தயாரின் ஆதரவு அமோகமாக உண்டாம்.

மந்திர நிகழ்ச்சிக்கு புகழை விட விமர்சனம்தான் அதிகம் என்றாலும் அதைப்பற்றி எல்லாம் கவலையில்லையாம் மந்திரத்திற்கு. காரணம் அம்மாவின் ஆதரவு இருக்கும் போது எதற்கு கவலைப்படவேண்டும் என்று கேட்கும் மந்திரத்திற்கு சினிமா ஆசை அதிகமாக இருக்கிறதாம். நடிக்க நானும் ரெடி என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் மந்திரம். ஆனால் சினிமா இயக்குநர்கள் தயாராக இருக்கணுமே என்கின்றனர் சின்னத்திரை ரசிகர்கள்.

பட்ஜெட் குறைஞ்சாலும் தரம் குறையாதாம்

நட்சத்திர டிவி சேனலின் சீரியல்களுக்கு தனி வரவேற்பு உண்டு. காரணம், கதை, திரைக்கதை அசத்தும் ட்விஸ்ட்கள். அழுகை,ஆர்ப்பாட்டம் என்று எதுவும் இருக்காது.

ஸ்டெடி காமராதானாம், ஒரே இடத்திலேயே காட்சிகளை அமைத்து படமாக்கி விடுகின்றனர். இதனால் செலவு கம்மியாம். ஒரே இடத்தில் படமாக்கினாலும் கதையில் கவனம் செலுத்தினால் சீரியல் ஜெயிக்கும் என்கின்றனர் நட்சத்திர சேனல்காரர்கள்.

 

சிங்கிள் கவிதைக்கு 1 கோடியா

மும்பை: அமிதாப் சார் எனக்கு ஒரு 1 கோடி ரூபாய கொடுத்திட்டு நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க இப்படி ஸ்டிரைட்டா அவர்ட்ட கேட்டா கொடுப்பாரா ஆனா வேறு வழியில்ல இப்போ கொடுத்து தான் ஆகணும் எனக்கு இல்லைங்க அமிதாப் மேல கேஸ் ஒன்னு போட்டு நஷ்ட ஈடு கேட்டவருக்கு, என்னது அமிதாப் மேல கேசான்னு மெர்சலாகாம மேல படிங்க அவரோட பேரு ஜக்பீர் ரதி டாக்டருன்னு சொல்றாங்க அதைப் பத்தி நமக்கெதுக்கு.

Amitabh Bachchan in trouble over 'poem', slapped Rs 1 crore notice

நான் பல தடவ அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து பலன் இல்லை எனவேதான் தற்போது வக்கீல் நோட்டிஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறேன்னு கேஸ் போட்டவாறு சொல்லி இருக்காரு , விஷயம் இதுதான் ஜக்பீர் ரதி ஒரு கவிதைய எழுதி அதை சமூக வலைத்தளத்தில (அதாவது இது நடந்தது 2006 வது வருசத்தில) அமிதாப்போட பேன்ஸ் ஒருத்தருக்கு போஸ்ட் பண்ணியிருக்காரு அவர் பேரு விகாஸ் துபே.

நம்ம அமிதாப் சார் சும்மா இல்லாம அந்த உலகப் புகழ் பெற்ற கவிதைய தன்னோட பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்துல போட்டு அந்தக் கவிதையால பேரும் புகழும் அடைஞ்சிட்டாருன்னு இந்த ஜக்பீர் ரதி கேஸ் ஒன்னு போட்டு இன்னும் 15 நாளைக்குள்ள எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரணும்னு அவரோட கன்னத்தில அறைஞ்ச மாதிரி கேட்டு இருக்காரு இதுக்கு அமிதாப்போட ரியாக்சன் என்னன்னு தெரியல பாக்கலாம்.

நமக்கெதுக்குப்பா இந்த இந்த கவிஞர் ஆசையெல்லாம்...

 

வெளியானது பாண்டிராஜ்- சூர்யாவின் ஹைக்கூ பர்ஸ்ட் லுக்

சூர்யா தயாரித்து நடிக்க, பாண்டிராஜ் இயக்கி வரும் 'ஹைக்கூ' படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் தோற்ற போஸ்டர்கள் இணையத்தில் வெளியானது.

சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் குழந்தைகள் பலர் நடித்து வரும் படம் 'ஹைக்கூ'. பிசாசு பட இசையமைப்பாளர் ஆரோல் கொரெலி இசையமைத்து வரும் இப்படத்துக்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Haiku movie first look released

பாண்டிராஜ் இயக்கி வருகிறார். முதல் பிரதி அடிப்படையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வந்த 'இது நம்ம ஆளு' படத்தின் தாமதத்தால் 'ஹைக்கூ' படத்தை துவங்கினார் பாண்டிராஜ். இப்போது படப்பிடிப்பையே முடித்துவிட்டார்.

சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் 'மாஸ்' படத்துடன் 'ஹைக்கூ' படத்தின் டீஸர் இணைக்கப்பட்டுள்ளது. இன்று சமூக வலைதளங்களில் 'ஹைக்கூ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இன்று மாலை 'ஹைக்கூ' டீஸரையும் யூ - டியூப் தளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

 

100 கோடி ரேசில் ஜெயிக்கப் போவது பிகுவா (அ) தனு வெட்ஸ் மனுவா?

மும்பை பாலிவுட்டில் 100 கோடி படங்களின் வரிசையில் இந்த வருடம் முதலில் இணையப் போவது தீபிகாவின் பிகு படமா அல்லது கங்கனாவின் தனு வெட்ஸ் மனு ரிட்டர்னா என்பது இன்னும் தெரியவில்லை, நல்ல விமர்சனம் தெளிவான கதை குடும்ப செண்டிமெண்ட் எல்லா விசயத்திலும் இரண்டு படங்களுமே ஒன்றை மிஞ்சவில்லை. எனினும் பிகுவை விட தனு வெட்ஸ் மனுவிற்கு தற்போது திரையரங்குகளில் வரவேற்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த பிகு படம் ஆரம்பத்தில் நல்ல வசூலைக் கொடுத்தது. ஆனால் கடந்த வாரம் வெளியாகிய தனு வெட்ஸ் மனு ரிடர்ன் படத்தால் வசூலில் தற்போது தொய்வு விழுந்துள்ளது என்றே தோன்றுகிறது, 100 கோடி படங்களின் நாயகி என்ற பட்டப் பெயரைத் தீபிகா தக்க வைத்துக் கொள்வாரா என்பது இன்னும் சற்று தினங்களில் தெரிந்து விடும். பிகு ஏற்கனவே உலக அளவில் 100 கோடியை வசூலில் தொட்டு விட்டது ஆனால் இந்தித் திரயுலகில் தொடுமா என்பது இனிமேல் தான் தெரியும்

Box Office Collection: 'Tanu Weds Manu Returns' a Blockbuster; 'Piku' Yet to Reach 100 Crore Mark in India

மூன்று வாரங்களில் பிகு படம் 74.33 கோடியும் ஒரே வாரத்தில் தனு வெட்ஸ் மனு 62.95 கோடியும் வசூலித்துள்ளது, தனு வெட்ஸ் மனு படத்தால் பிகு படத்தின் வசூல் குறைந்துள்ளது தற்போது உள்ள நிலவரத்தை வைத்துப் பார்த்தால் இந்த வருடத்தின் முதல் 100 கோடியை வசூலித்த படம் என்ற பெருமையை தனு வெட்ஸ் மனு தட்டிச் செல்லும் போலத் தெரிகிறது.

தமிழ்நாட்ல படம் ஓடுறதே பெரிய பிரச்சினை இதுல நாங்க எங்க 100 கோடியப் பாக்குறது..

 

“பர்மிய முஸ்லிம்களை காப்பாற்றுவோம்” – பேஸ்புக்கில் ஆதரவு தரும் நடிகர் விஜய் சேதுபதி

சென்னை: மியான்மரில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்காக நடிகர் விஜய் சேதுபது தன்னுடைய சமூக வலைதளப் பக்கமான பேஸ்புக் மூலமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

பல்லாண்டு காலமாக பர்மாவில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையினர் "மியன்மாரை சேந்தவர்கள் அல்ல" என்ற கருத்து பரப்பப்பட்டு பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரில் அவர்கள் வெளியேற்றும் வகையில் அவ்வப்போது இனக்கலவரங்கள் நடைபெற்று வருகிறது.

இதனால் ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் இந்த வன்முறைகளில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். இனவாத புத்த பிக்குகள் தலைமையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன‌.

Vijay sethupathi supports Myanmar Muslims in FB

புத்த இனவாத குழுக்களுக்கு அஞ்சி மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் கடல் வழியாக படகுகளில் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

சமீபத்தில் படகுகளில் நாட்டை விட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கானோரை அண்டை நாடுகள் தங்களின் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் நடுகடலில் தத்தளித்தனர்.

இதனால் இப்பிரச்சனை உலக அரங்கின் கவனத்தை ஈர்த்து தற்போது பாதிக்கப்பட்ட ரோஹிங்கிய‌ மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் கண்டன குரல்கள் எழும்ப தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நிலையில் தமிழகத்தின் பிரபல நடிகர் விஜய் சேதுபதி "பர்மாவில் அப்பாவி முஸ்லிம் மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள்" என பேஸ்புக் மூலம் ஆதரவு குரல் எழுப்பியுள்ளார்.

 

கொளுத்தும் வெயில்…. கொடைக்கானல் சூட்டிங்… கொண்டாட்ட டீம்!

அக்னி நட்சத்திர வெயில் பட்டையை கிளப்ப நட்சத்திர பட்டாளத்தோடு கொடைக்கானலுக்கு கிளம்பிவிட்டார் சித்தி நடிகை. கூல் கிளைமேட்டை அனுபவித்தது போல ஆச்சு சூட்டிங் வைத்தது போலவும் ஆச்சு என் டூ இன் ஒன் வேலையில் ஈடுபட்டுள்ளார் சித்தி. சீரியலின் டி.ஆர்.பியை எகிறவைக்க தற்கொலை சீனை வைத்து நினைத்ததை சாதித்து கொண்டார் சித்தி.

சித்தி நினைத்தது போலவே ‘அவங்களை கொன்னுடாதீங்க' என்று ரசிக ஜனங்கள் கதற மறுபடியும் கதையில் ட்விட்ஸ்ட் வைத்து விட்டார் நடிகை. மொத்த யூனிட்டும் கொடைக்கானலில் குவிந்துள்ளது. நடிகர்களின் குடும்பத்தோடு சூட்டிங் ஸ்பாட்டில் முகாமிட்டுள்ளனராம்.

பகலில் சூட்டிங் இரவில் கொண்டாட்டம் என ஒரே உற்சாகம்தானாம். எப்படியோ கொதிக்கிற வெயிலுக்கு ஜில் கிளைமேட்டில் சூட்டிங் நடத்தி தினந்தோறும் ரசிகர்களை தன்வசப்படுத்தி விடுகிறார் சித்தி என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

 

'வேந்தர் மூவீசுக்கு படம் பண்ணுவதாக ரஜினி சொல்லவே இல்லை!' - திருப்பூர் சுப்பிரமணியம்

வேந்தர் மூவீசுக்கு படம் செய்து தருவதாக ரஜினி எந்த விதமான வாக்குறுதியும் தரவில்லை. அதுபற்றி யாரிடமும் அவர் பேசவும் இல்லை, என்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

லிங்கா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட ரஜினி தரப்பிலிருந்து பனிரெண்டரைகோடி கொடுக்கப்பட்டதென்றும் அதனால் அந்தச் சிக்கல் முடிவுக்கு வந்துவிட்டதென்றும் சொல்லப்பட்டது. அது குறித்த ஒப்பந்தப் பத்திரம் கையெழுத்திடப்பட்டு, அதை தாணுவிடமிருந்து பெறுவது போல போஸ் கொடுத்த விநியோகஸ்தர் சிங்காரவேலன்தான், இப்போது ரஜினி வேந்தர் மூவீசுக்கு படம் பண்ண வேண்டும் அல்லது மேலும் ரூ 15 கோடி தர வேண்டும் என பேட்டியளிக்கிறார்.

Rajini never says to do movie for Vendhar, says Tiruppur Subramaniyam

மே 26 ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிங்கார வேலன், 'சொன்னபடி பணம் வரவில்லை. ஐந்து கோடியே தொண்ணூறு லட்சம்தான் கொடுத்திருக்கிறார்கள். மீதி ஆறு கோடியே ஒரு லட்சம் இதுவரை வந்து சேரவில்லை' என்றார்.

அதோடு பனிரெண்டரை கோடி என்பதை ஒப்புக்கொண்டதற்குக் காரணமே, அடுத்து ரஜினி வேந்தர் மூவிஸூக்கு ஒருபடம் நடித்துத் தருவார் என்றும் அந்தப் படத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் இணை தயாரிப்பாளர்களாகி விடுங்கள்.

அந்தப் படத்தில் கிடைக்கும் லாபம் உங்களுக்கு முழுமையான நிவாரணமாக இருக்கும் என்று ரஜினி சார்பில் திருப்பூர் சுப்பிரமணி வாய் மொழியாகச் சொன்னதாகவும் தெரிவித்தார்கள்.

இதுபற்றி திருப்பூர் சுப்பிரமணியிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, இது கடைந்தெடுத்த பொய் என்றார்.

பனிரெண்டரை கோடியில் ஆறரைக் கோடியைக் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்களே?

எங்களுக்கு ராக்லைன் வெங்கடேஷிடமிருந்து ஆறு கோடிதான் வந்தது. அதைப் பிரித்துக் கொடுத்துவிட்டோம். மீதிப்பணம் வந்ததும் அதையும் பிரித்துக் கொடுத்துவிடுவோம். அவர் மகள் கல்யாணம் முடிந்ததும் இந்த செட்டில்மென்ட் முடிந்துவிடும்.

ராக்லைன் வெங்கடேஷ் மொத்தத் தொகையையும் கொடுத்துவிட்டார் என்றும் நீங்களும் தாணுவும்தான் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தராமல் இருக்கிறீர்கள் என்று சிங்காரவேலன் சொல்கிறாரே?

அவர் சொல்வது அனைத்துமே கடைந்தெடுத்த பொய்கள். எங்களுக்கு வந்தது ஆறு கோடிதான் அதைக் கொடுத்துவிட்டோம். நீங்கள் வேண்டுமானால் ராக்லைன் வெங்கடேஷிடமே கேட்டுக் கொள்ளலாம்.

வேந்தர் மூவிஸூக்கு ரஜினி ஒருபடம் நடித்துத் தருவார் என்று நீங்கள் வாய்மொழி உத்தரவாதம் கொடுத்ததாகச் சொல்லுகிறார்களே?

ரஜினி சாரும் அப்படிச் சொல்லவில்லை, நானும் அப்படி ஒரு வாக்குறுதி அவர்களிடம் கொடுக்கவில்லை, மொத்தமாகப் பொய் சொல்லுகிறார்கள். ரஜினி சார் என்றைக்குமே இப்படி வாக்குறுதிகள் தந்ததில்லை. வெறும் பப்ளிசிட்டிக்காக திரும்பத் திரும்ப இப்படி பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் சிங்கார வேலன். வந்த வரை லாரம் என்று அவருடன் இருக்கும் சிலரும் அமைதியாக அவருக்கு உடன்படுகிறார்கள். மீடியாக்கள் இதற்கு முக்கியத்துவம் தருவதுதான் வருத்தமாக உள்ளது.

 

நடிகர் சங்கத்துடன் மீண்டும் மோதும் விஷால்... தலைவர் பதவிக்கு குறி?

புதுக்கோட்டை: நடிகர் சங்க கட்டடம் சொந்தமாக கட்டப்படாவிட்டால், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர, வேறு வழியில்லை என, நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர் சங்க உறுப்பினர்களை, நடிகர் விஷால் மற்றும் கருணாஸ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

Actor Vishal raise his Voice against South india Film actors association

பின்னர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது....

சென்னையில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடம் ஒரு திரைப்பட நிறுவனத்துக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்திற்கு சொந்த கட்டடம் கட்டடப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றால், நடிகர் சங்க தலைவர் பதவிக்கு தங்கள் தரப்பில் இருந்து போட்டியிட நேரிடும்.

இவ்வாறு நடிகர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தயாராகும் இளம் நடிகர் பட்டாளம்

பட வாய்ப்பே இல்லாத ஓய்வுபெற்ற நடிகர்கள், சினிமாவிலேயே நடிக்காதவர்கள், சங்கத்தில் அமர்ந்து கொண்டு எந்த பிரச்சினையாக இருந்தாலும் இளம் நடிகர்களை அழைத்து மிரட்டும் பாணியில் விசாரிப்பது இளம் நடிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால் இளம் நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து நடிகர் சங்கத்துக்கு எதிராக ஒரு இளம் தலைமையை உருவாக்க தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த வேலையை முன்னால் நின்று செய்வது விஷால் என்கிறார்கள் திரைப்படத்துறையில். அதனால் அவரையே வரும் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நிறுத்துவது என்று முடிவு செய்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஒரு செய்தியாக சரத்குமார் வகிக்கும் நடிகர்சங்கத் தலைவர் பதவிக்கு இளைஞர் பட்டாளம் சார்பில் நடிகர் சிவக்குமாரை நிறுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.

பொதுச் செயளலாளர் பதவியில் நீடிக்கவே ராதாரவியும் விரும்புகிறார்.

 

மாசு படத்தில் இரண்டு சூர்யா.. ஒருவர் ஈழத் தமிழர்!

மாசு என்கிற மாசிலாமணி படத்தில் இரு வேடங்களில் தோன்றும் சூர்யா, ஒன்றில் ஈழத்து இளைஞராக நடித்துள்ளாராம்.

சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி' படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

Surya appears as Eelam Tamil in Massu

இப்படத்தில் சூர்யா அப்பா-மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்பட்டது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, 'மாசு படத்தில் சூர்யா இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அதில் ஈழத் தமிழனாக ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். ஒரு ஈழத்தமிழனாக சூர்யா நடிப்பது இதுதான் முதல் முறை. அதனால், படத்தை மகிழ்ச்சியோடு பாருங்கள்," என்று கூறியுள்ளார்.

‘மாசு' படம் பேய் படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். பிரேம்ஜி, சமுத்திரகனி, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

விநாயகர் சதுர்த்திக்கு விஜய் படம்... தீபாவளிக்கு அஜீத் படம்!

விஜய்யின் புலி படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கும், அஜீத் படம் தீபாவளிக்கும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் இப்போது சிம்பு தேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். ஹன்சிகா, ஸ்ருதிஹாஸன் ஜோடியாக நடிக்க, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Vijay, Ajith movies release date

இந்தப் படத்தை விஜய்யின் மேனேஜர் பிடி செல்வகுமாரும் தமீம் பிலிம்ஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.

படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

தலை 56

அடுத்து அஜீத் படம். இந்த ஆண்டின் பெரிய ரிலீசாக வரவிருக்கும் அஜீத்தின் 56வது படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போது கோடையை முன்னிட்டு படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள அஜீத், அடுத்த வாரம் மீண்டும் தொடங்குகிறார்.

சிவா இயக்கும் இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை ஏஎம் ரத்னம் தயாரிக்கிறார்.

 

ஒரே நேரத்தில் ரஜினி, விஜய் படங்களைத் தயாரிக்கும் கலைப்புலி தாணு!

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் ஹாட்டஸ்ட் தயாரிப்பாளர் என்றால் அவர் கலைப்புலி தாணுதான்.

ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்களைத் தயாரிக்கிறார் தாணு. ஒரு படம் ரஜினி நடிக்க ரஞ்சித் இயக்குவது.

Thanu's projects with Rajini, Vijay

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் முதல் வாரம் வெளியாக உள்ளது. இயக்குநர் ரஞ்சித் மலேசியாவில் லொகேஷன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்த படம் விஜய் நடிக்க, அட்லீ இயக்குவது.

இந்தப் படத்தில் சமந்தாவுடன் மீண்டும் ஜோடி போடுகிறார் விஜய்.

இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரிக்கிறார் தாணு என்பதுதான் இதில் விசேஷம்.

தமிழ் சினிமாவில் எந்தத் தயாரிப்பாளரும் இதுவரை இப்படி, ஒரே நேரத்தில் இரு பெரும் படங்களைத் தயாரித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்.. நேரம் ஹீரோவுக்கு "நேரம்" கைகொடுக்குமா?

திருவனந்தபுரம்: நடிகர் நிவின் பாலியின் படங்களான பிரேமம் மற்றும் இவிடே ஆகிய இரண்டு படங்களும் சொல்லி வைத்தது போல ஒரே நாளில் நாளை வெளியாகின்றன இது நிவினுக்கு அதிர்ஷ்டத்தைத் தருமா அல்லது அவரது மார்க்கெட்டை சரித்து விடுமா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

Actor Nivin Paulys two movie’s releasing tomorrow

இப்போது இருக்கிற சூழ்நிலையில் நிவினின் நேரம் நன்றாகத் தான் உள்ளது ஆனால் இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாவது கண்டிப்பாக அவரது நேரத்தை பதம் பார்க்கக் கூடியஒருசெயல்தான்என்பதில்சந்தேகமில்லை,இவிடேபடத்தில்பிரித்விராஜ்ஹீரோவாகவும் நிவின் வில்லனாகவும் நடித்துள்ளனர் பிரேமம் படத்தில்நிவின்சிங்கிள்ஹீரோ, ஆனால் ஒரு படம் நன்றாக இருக்கிறது என்று செய்தி பரவி விட்டால் மற்றொரு படத்தின் வசூல்கண்டிப்பாக பாதிக்கும்.

எப்போதாவது ஹீரோயின்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதுண்டு ஆனால் பொதுவாக படங்களை பொறுத்த வரை ஹீரோக்களின் மார்க்கெட்டைதான் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள், எந்த ஒரு ஹீரோவுக்கும் இந்த மாதிரி விஷப்பரிட்சையில்இறங்க மனம் வராது தான் ஆனால் நிவின் என்ன வேண்டுமென்றேவா செய்கிறார், படங்கள் வெளியாவது இயக்குனர் மற்றும்தயாரிப்பாளர்களின் கையில் அல்லவா உள்ளது எனவே பட வெளியீட்டில் அவர் தலையிட முடியாது, ஒன்று செய்யலாம்கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கலாம்.

ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் நிவினுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு சொல்ல ஆசைதான்...பாக்கலாம்

 

கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் இயக்கும் த்ரில்லர் படம் '54231'!

மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் '54231' .

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ளார்.

'ரம்மி', 'தாண்டவக்கோனே' படங்களில் நடித்த ஜி.ஆர். அர்வின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி கன்னட வரவு பவித்ரா.

54321.. A new Thriller from Karthik Subbaraj's assistant

'நெருங்கிவா முத்தமிடாதே' நாயகன் சபீர் வில்லனாக இருக்கிறார். மேலும் ரோகிணி, ரவி ராகவேந்தர், 'பசங்க' சிவகுமார் நடித்துள்ளனர்.

படக் கதையில் இரண்டு மணி நேரம் நடக்கும் கதையைத் திரையில் இரண்டு மணி நேரம் நடக்கும் காட்சிகளாக உருவாக்கி உள்ளது படத்தின் சிறப்பு.

அதென்ன 54321?

"படத்தில் 5 பாத்திரங்கள், 4 விதங்களில் 3 கொலைகளை 2 மணி நேரத்தில் செய்து பழி தீர்த்தல் என்கிற 1 விஷயத்தை எப்படி நிறைவேற்றி முடிக்கிறார்கள் என்பதே கதை," என்கிறார் இயக்குநர் ராகவேந்திர பிரசாத்.

'காதல்' புகழ் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் பாலசுப்ரமணியெம்மின் உதவியாளர்

எடிட்டிங்- ரஜீஷ், ஸ்டண்ட் -திலிப் சுப்பராயன், கலை -ராம், நடனம் -ஷெரீப், பாடல்கள் - நா, முத்துக்குமார்.

படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்த மாதம் வெளிவரவுள்ள' 54321' படத்துக்கு இப்போதே 5..4..3..2..1 என்று கவுண்ட் டவுன் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்!

 

சிம்பு படத்தில் டிஷ்கியான், டிஷ்கியான் செய்யும் டாப்ஸி

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கான் படத்தில் போலீஸ் அதிகாரியாக டாப்ஸி நடிக்கிறார்.

தனுஷின் நண்பேன்டாவான சிம்புவை வைத்து செல்வராகவன் இயக்கி வரும் படம் கான். கான் என்றால் காடு என்று அர்த்தம். இந்த படத்தின் பட்பிடிப்பு துவங்கி முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டார்கள்.

Taapsee turns police officer for Selvaraghavan

சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். கான் படத்தில் சிம்பு முருக பக்தராக வருகிறார். டாப்ஸியோ முதல் முதலாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். காஞ்சனா 2 படத்தில் பேயாக வந்த டாப்ஸி தற்போது போலீஸ் அதிகாரியாக ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

கான் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை காட்டுப்பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். டாப்ஸி திரு இயக்கத்தில் ஜெய் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் தமிழ்ச்செல்வி என்ற குடும்பத்து பெண்ணாக வருகிறாராம்.

கான் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது. அண்ணன் இயக்கத்தில் நண்பன் நடிக்கும் படத்தில் தனுஷ் கௌரவத் தோற்றத்தில் வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.