கன்னடத்தில் நடித்து வரும் மலையாள நடிகை பாமா, கூறியதாவது: கன்னடத்தில் 'மைனா' ரீமேக்கில் நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து நிறைய கன்னட படங்கள் ஒப்பந்தமானது. அதேவேளையில், மலையாளத்திலும் நடித்து வருகிறேன். கேரளாவில் அடுத்தடுத்து என் படங்கள் ரிலீசாக உள்ளன. தமிழில் 'சேவற்கொடி' எனக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்பினேன். அந்த ஆசை நிறைவேறவில்லை. இப்போது மலையாளம், கன்னடத்தில் மட்டுமே நடிக்கிறேன். தமிழில் சிறப்பான வேடம் கிடைக்கும் என்று காத்திருக்கிறேன். கன்னடப் படங்களில் நடிப்பதால் பெங்களூரில் செட்டிலாகிவிட்டதாக சொல்வது தவறு. கேரளாவில்தான் இருக்கிறேன்.
Post a Comment