கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் சமீபத்தில் கேன்ஸ் பட விழாவுக்கு பின்னழகும், முன்னழகும் பளிச்சிடும் வகையில் படுகவர்ச்சியாக உடை அணிந்து சென்றார். பட விழாவில் பங்கேற்றது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டார். அதில் வெளிநாட்டு தொழில் அதிபர் டோமினிக் டெஸிக்வுடன் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இது மல்லிகாவுக்கு தலைவலி ஏற்படுத்தி உள்ளது. மல்லிகா ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போதும் அதற்கான செலவை டோமினிக்தான் ஏற்கிறார். இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது என்று பேச்சு எழுந்துள்ளது. இதுபற்றி கேள்விப்பட்ட மல்லிகாவுக்கு விர்ரென கோபம் தலைக்கேறியது. அவர்கூறும்போது, 'இது சரியான கேலிகூத்து. என்னை ஸ்பான்ஸர் செய்வதற்கு இன்னொரு ஆள் தேவை இல்லை. டோமினிக்கின் சொந்த விமானத்தில் நானும் எனது சகோதரரும் வெளிநாடு சென்றதை விமர்சிப்பதும் எனக்கு எதிரானவர்கள் செய்யும் வேலைதான். அவரை இந்தியாவுக்கு வரும்படி அழைத்திருக்கிறேன்ÕÕ என்றார்.
Post a Comment