ஆக்ஸிஜன் பற்றாக்குறை மயங்கினார் சுவாசிகா

|

சென்னை : 'ரணம்' பட ஷூட்டிங்கில் ஹீரோயின் சுவாசிகா மயங்கி விழுந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி சுவாசிகாவிடம் கேட்டபோது, கூறியதாவது:
இயக்குனர் விஜயசேகரன், குரங்கனி மற்றும் டாப் ஸ்டேஷன் பகுதிக்கு மேலிருக்கும் கொழுக்குமலை என்ற லொகேஷனில் எனது அறிமுக பாடல் காட்சியை படமாக்க நினைத்தார். அங்கு செல்ல ரோடு வசதி கிடையாது. கழுதை அல்லது குதிரையில்தான் செல்ல வேண்டும்.

சின்ன பேக்கில் என் துணிமணிகளை எடுத்துக் கொண்டு, படப்பிடிப்புக் குழுவினருடன் நடந்து சென்றேன். பல மணி நேரம் நடந்து ஸ்பாட்டுக்கு போனேன். உடனே ஷூட்டிங் ஆரம்பமானது. என்னை அறியாமல் மயங்கிவிழுந்தேன். அங்கு ஆக்ஸிஜன் குறைவு என்பதால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பிறகு அங்கேயே சிகிச்சை அளித்து ஷூட்டிங்கை தொடர்ந்தனர். இங்கு நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
 

Post a Comment